Wednesday, November 22, 2017


இறுதி கட்டத்தை எட்டியது வழக்கு : தி.மு.க., 'மாஜி' மந்திரி கலக்கம்


Added : நவ 21, 2017 22:16

ஐநுாறு கோடி ரூபாய், வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர், ஜெகத்ரட்சகன் மீதான விசாரணை, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தி.மு.க., சார்பில், மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தவர், ஜெகத்ரட்சகன். அவர், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, 2016 ஜூலையில், வருமான வரித்துறையினர், அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள அவருக்குச் சொந்தமான மருத்துவ கல்லுாரி, பொறியியல் கல்லுாரிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்கள்...
சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள வீடு, அலுவலகம், தி.நகரில் உள்ள அவரது நட்சத்திர ஓட்டல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 'எலைட்' மதுபான ஆலை என, 35க்கும் மேற்பட்ட இடங்களில், சோதனை நடந்தது. அதில், கோடிக்கணக்கில் பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம், 400 கோடி ரூபாய்க்கு அதிகமான, வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டது. அந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களை, வரித்துறையினர் ஆய்வு செய்து வந்தனர். தற்போது, அந்த வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை தொடர்பாக, வாக்குமூலம், விசாரணை போன்ற நடைமுறைகள் முடிந்தன.
அதைத் தொடர்ந்து, இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. அது, தற்போது, வரி மதிப்பீட்டுக்காக, சென்னையில் உள்ள புலனாய்வுப் பிரிவின், மத்திய பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள், இறுதி அறிக்கையை மதிப்பீடு செய்து வருகின்றனர். விரைவில், மத்திய பிரிவினர் மதிப்பீடு அறிக்கையை தயாரித்து முடிப்பர். பின், அது தொடர்பான, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யக் கூறி, ஜெகத்ரட்சகனுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்படும். அவர் ஆஜராகி அளிக்கும் பதிலை பொறுத்து, வழக்கின் திசை தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல் நோக்கமா? : வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: அரசியல் பின்னணி காரணமாக, சோதனைகள் நடத்துவதாக, வருமான வரித்துறையினர் மீது, சில அரசியல் கட்சியினர் புகார் கூறுகின்றனர். நாங்கள், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., என, பிரித்து பார்ப்பதில்லை. அதனால் தான், தி.மு.க., பிரமுகரான ஜெகத்ரட்சகனின் வீடுகளில் சோதனை நடத்தினோம்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, முன்னாள் அமைச்சர், விஸ்வநாதன் வீட்டிலும் சோதனை நடந்தது. அங்கெல்லாம், பல நுாறு கோடி ரூபாய் ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஆதாரம் இல்லாமல், நாங்கள் சோதனை நடத்துவதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சவுதி அரேபியாவில் கனமழை; சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது

Added : நவ 22, 2017 06:42
 

ஜெட்டா: சவுதி அரேபியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜெட்டா நகரில் இடி, மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்நிலையில் மெக்கா பகுதியிலுள்ள அனைத்து பள்ளி, பல்கலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் அரசு கட்டிடத்தில் தீ; விலையில்லா மிக்சி, கிரைண்டர்கள் எரிந்து நாசம்





தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூரில் அரசு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் எரிந்து நாசமாயின.

நவம்பர் 22, 2017, 04:30 AM

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட அரசு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் சுமார் 4 ஆண்டுகளாக தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வருவாய்துறையினரால் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அவ்வப்போது பயனாளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த பல மாதங்களாக விலையில்லா பொருட்கள் வினியோகம் செய்யப்படாததால் ஆயிரக்கணக்கான மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு அந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளில் இருந்து திடீரென தீப்பிடித்து புகை வந்தது. சிறிது நேரத்தில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் எரியத்தொடங்கின. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.

தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் தாம்பரம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். 3 தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஏராளமான தண்ணீர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சுமார் 4,500 மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் எரிந்து நாசமாயின.

இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

விபத்து ஏற்பட்ட பகுதியில் தாம்பரம் தாசில்தார் சுப்புலட்சுமி தலைமையில் வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.

தாசில்தார் சுப்புலட்சுமி கூறுகையில், ‘‘சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை விலையில்லா பொருட்கள் வினியோகிக்கப்பட்டன. தேர்தலுக்கு பிறகு வினியோகம் செய்யப்படாத பொருட்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தது. பொருட்கள் இருந்த கட்டிடத்தில் மின் இணைப்பு கிடையாது. தீ விபத்துக்கு என்ன காரணம் என தெரியவில்லை. இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் பீர்க்கன்காரணை போலீசில் புகார் செய்துள்ளார். விபத்திற்கான காரணத்தை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்’’ என்றார்.

பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் அரசு கட்டிடங்களில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி பள்ளிகளிலும் பல அறைகளில் இதுபோன்று பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சேலையூர் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் இதேபோல தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்புள்ள மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வீணாக எரிந்து சாம்பலானது.

இந்நிலையில் பெருங்களத்தூர் பகுதியில் 2–வது முறையாக தீ விபத்து ஏற்பட்டு விலையில்லா பொருட்கள் வீணாகி உள்ளன. இதுவரை விலையில்லா பொருட்கள் பெறாதவர்களுக்கு இனியாவது வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றியது என்ன? வருமானவரி அதிகாரி விளக்கம்




ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றியது என்ன? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

நவம்பர் 22, 2017, 05:30 AM சென்னை

சோதனையின்போது ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றியது என்ன? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர்காந்தி சாலையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு சசிகலாவின் குடும்பத்தினர் ஆஜராகி அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளித்தும், உரிய ஆவணங்களை அளித்தும் செல்கின்றனர்.

இந்தநிலையில் அங்கு பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவரை, பத்திரிகையாளர்கள் நேற்று சந்தித்து வருமான வரிசோதனை குறித்து கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்தார். அவர், தன்னுடைய பெயரையும், வகிக்கும் பதவியையும் கூற மறுத்துவிட்டார்.

நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சசிகலா குடும்பத்தினரிடம் சோதனை நடத்தியதில் உள்நோக்கம் உள்ளதா?

பதில்:- எந்த உள்நோக்கமும் கிடையாது. பொருளாதார உளவு பிரிவினர் அளித்த தகவலின் அடிப்படையில் சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் நடத்தி வரும் நிறுவனங்கள் பல மாதங்களாக வரி ஏய்ப்பு செய்வதை ரகசியமாக கண்காணித்து வந்தோம்.

உறுதியான தகவல்கள் கிடைத்ததால், சசிகலா குடும்பத்தினர் நடத்தி வரும் நிறுவனங்களில் வருமானவரித்துறை சார்பில் சோதனை நடத்தினோம்.

கேள்வி:- தற்போது நடந்த வருமானவரி சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், நகை மற்றும் சொத்து ஆவணங்கள் எவ்வளவு?

பதில்:- 187 இடங்களில் நடந்த சோதனையின் போது ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்பில் தங்க நகைகள், ரூ.1,430 கோடி மதிப்பில் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதவிர 70-க்கும் அதிகமான போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றின் மூலம் கோடிக் கணக்கான பணம் பரிமாற்றம் நடந்ததும் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் 15 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பல இடங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள இடங்களை படிப்படியாக திறந்து சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

கேள்வி:- போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் என்ன? என்ன? பொருட்கள் கைப்பற்றப்பட்டன?

பதில்:- மறைந்த ஜெயலலிதா வீட்டில் ஆவணங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினோம். அங்கு சசிகலா பயன்படுத்தி வந்த 4 அறைகள் மற்றும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனின் அறை உள்பட 5 அறைகளில் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று சோதனை நடத்தினோம். இந்த சோதனையில் 1 லேப்-டாப், 2 செல்போன் டேப், மற்றும் ஏராளமான பென்டிரைவ்கள் கைப்பற்றினோம். இதுதவிர ஒரு சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளோம்.

கேள்வி:- போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மூலம் வரிஏய்ப்பு குறித்து ஏதாவது துப்பு கிடைத்துள்ளதா?

பதில்:- போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட லேப்-டாப், செல்போன் டேப் மற்றும் பென்டிரைவ்கள் உள்பட மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் சசிகலா உறவினர்கள் நடத்தி வந்த போலி நிறுவனங்களின் குறியீட்டு எண்கள் (டின் நம்பர்) கிடைத்தன. அவற்றின் மூலம் நடத்தப்பட்ட பணபரிவர்த்தனை விவரங்கள் தெரியவந்துள்ளது. அவற்றின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

போயஸ் கார்டனில் உள்ள அறைகளின் சாவியை, இளவரசியின் மகள் ஷகிலாவின் கணவர் ராஜராஜனிடம் இருந்து பெற்றோம்.

கேள்வி:- இந்த சோதனையையொட்டி எவ்வளவு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது?

பதில்:- சோதனை நடத்தப்பட்ட இடங்களில் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்பதற் காக சசிகலா குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி உள்ளோம். அவர்களும், பல நிறுவனங்களை நடத்தி வருவதால், நாங்கள் கேட்கும் தகவல்களை எங்களிடம் அளித்து வருகிறார்கள்.

கேள்வி:- அடுத்த கட்ட விசாரணை எந்த அளவில் இருக்கும்?

பதில்:- தேவைப்படும் பட்சத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம் நீதிமன்ற உத்தரவை பெற்று விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

கேள்வி:- சசிகலா குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட சோதனையில், குறிப்பாக பினாமிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் யார்? யார்?

பதில்:- முன்பெல்லாம் வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள் மற்றும் நண்பர்களை தான் பினாமிகளாக நியமிப்பார்கள். ஆனால் தற்போது பெரிய பணக்காரர்களே பினாமிகளாக இருந்து வருகின்றனர். சசிகலா குடும்பத்தில் யார்? யார் பினாமிகளாக இருக்கின்றனர்? அவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்கள்? அவர்களுக்கு எங்கெல்லாம் சொத்துகள் இருக்கிறது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கண்டுபிடிக்கப்பட்ட உடன் பினாமி சட்டத்தின் படி அவர்கள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கேள்வி:- அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய போது துணை ராணுவத்தினர் அழைக்கப்பட்டிருந்தனர், ஆனால் தற்போது ஏன் துணை ராணுவத்தினர் அழைக்கப்படவில்லை?

கேள்வி:- சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்துவது வழக்கம். வடமாநிலங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் துணை ராணுவத்தினர் பலர் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருந்தாலும் மாநில போலீசார் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி பாதுகாப்பு அளித்து வருவதால் துணை ராணுவத்தினர் தற்போது அழைக்கப்படவில்லை.

கேள்வி:- அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிசோதனை தற்போது எந்த நிலையில் உள்ளது?

பதில்:- முதல்கட்ட சோதனை முடிவடைந்து உள்ளது. ஆவணங்களின் அடிப்படையில் அவருடைய சொத்துகளின் மதிப்பு மதிப்பிடப்பட்டு உள்ளது. எந்த வருமானவரி சோதனை முடிவுகளும் சோதனை முடிந்து உடனடியாக முடிவு தெரிவதில்லை. இதுபோன்ற வழக்குகளை முடிக்க 2 ஆண்டுகள் வரை கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டத்திலேயே கூறப்பட்டு உள்ளது.

கேள்வி:- வெளிநாடுகளில் உள்ள சசிகலாவின் சொத்துகள் குறித்து விசாரணை செய்யப்படுமா?

பதில்:- சசிகலாவுக்கு வெளிநாட்டில் சொத்துகள் இருப்பது குறித்து நீங்கள் (பத்திரிகையாளர்களுக்கு) உள்பட யார் வேண்டுமானாலும் ஆதாரபூர்வமாக தெரிவிக்கலாம். உறுதி செய்யப்பட்டால் சோதனை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கேள்வி:- வருமானவரி ஏய்ப்பு குறித்து விசாரணை உறுதி செய்யப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- கைது செய்யும் அதிகாரம் நீதிமன்ற உத்தரவை ஏற்று செயல்படுத்தப்படும்.

கேள்வி:- வருமானவரி ஏய்ப்பு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வளவு ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது?

பதில்:- கருப்புபண நடவடிக்கை மற்றும் பணபரிவர்த்தனையில் மோசடிகள் தெரியவந்தால் 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் நீதிமன்றம் தான் இதுகுறித்து இறுதி முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tuesday, November 21, 2017


Rajasthan HC: Docs responsible, compensate strike victims

Joychen Joseph | TNN | Nov 17, 2017, 08:35 IST



 JAIPUR: The Rajasthan High Court on Thursday asked the state government how it plans to compensate the families of 30 dead patients and the general public who suffered during the recent statewide agitation by in-service doctors. The court also asked the government to make doctors accountable for the strike, which led to a huge medical and healthcare crisis in the state.

The single bench of Justice Sanjeev Prakash Sharma's direction followed a petition by Dr Kusum Sanghi, whose application seeking voluntary retirement from service was rejected by the health department on the grounds that the general public requires medical care.

Dr Kusum is currently working as additional director in the medical and health department.

The court noted that the strike by medical officers had resulted in the death of 30 people, according to the admission by medical and health minister Kalicharan Saraf himself.

At a recent meeting in Sikar, the minister had put the blame of 30 deaths on the doctors' strike, though he officially denied any deaths. The strike was called off after certain demands relating to pay and allowances were accepted by the state.

However, the court asked who will compensate the public, who were at the receiving end due to the strike, and the families of the dead for the absence of medical facilities. "Redress the grievance of the general public as death of 30 persons need to the compensated and compensation must be granted by the state by putting accountability on the doctors," the court said.

The court directed advocate general Narpatmal Lodha, "to submit an affidavit on the behalf of the state as to how they propose to grant compensation to unattended patients who suffered during the strike period by putting accountability on the doctors".

State Government doctors want pay anomalies rectified

Facilities provided by the Centre should be incorporated, they say

The Joint Action Committee of all government doctors’ associations of Tamil Nadu (JAC-GDA) submitted a memorandum to the government for correcting the anomalies and requesting for pay and promotions on par with Union Government doctors. The committee submitted a detailed

memorandum to the health secretary on Monday. The committee has representation from Tamil Nadu Government Doctors’ Association, Tamil Nadu Medical Officers’ Association, Government Doctors’ Association, and Civil Surgeons’ Association.

The memorandum said that various schemes of Union and State Governments such as maternal and child healthcare, tuberculosis and leprosy control programmes, immunisation programmes, communicable and non-communicable disease control and epidemic control are done because of hard work and commitment of government doctors of Tamil Nadu. Moreover, the maternal and infant mortality rates have come down drastically because of their efforts. Also, college teachers and doctors in other States get the salary equal or above the salary paid to Central government doctors. Sources with JAC-GDA said that the committee discussed the issues with the health secretary, who has assured to look into them. JAC-GDA has decided to create an awareness among its members in Madurai, Cuddalore, Coimbatore, Tirunelveli, and Dharmapuri in the coming days.

PG Medical students stage protest

Service postgraduate students of medicine staged a protest at the Directorate of Medical Education on Monday, following a protest on Friday at the Health and Family Welfare Training Centre in Egmore where counselling for the appointment of assistant professors to medical colleges was in progress, a PG student said.

The postgraduates submitted a letter to the Director of Medical Education detailing their demands. They wanted counselling for service PGs for postings to be conducted before the Medical Recruitment Board’s written recruitment; direct walk-in interviews for general/speciality postings to be abolished; all temporarily appointed candidates’ posts to be showed as vacancies during the counselling for service PGs.

Later on Monday, the service PG students met the Health Secretary too, one of them said. Director of Medical Education A. Edwin Joe said he would try and accommodate the service PG candidates.

NEWS TODAY 06.07.2026