Friday, December 8, 2017

A month after Chintpurni medical college shut down, students take protest to Delhi 

Over 90 students and their parents protested outside the headquarters of the Medical Council of India in New Delhi on Monday, demanding early shifting of students to other colleges.
 punjab Updated: Dec 04, 2017 22:13 IST



Gagandeep Jassowal

Hindustan Times, Faridkot


Chintpurni Medical College students protesting outside the headquarters of the Medical Council of India in New Delhi on Monday.(HT Photo)

Over a month after Punjab government withdrew the essentiality certificate from the Chintpurni Medical College, Pathankot, owned by Bharatiya Janata Party (BJP) leader Swaran Salaria, on November 3, students are yet to be shifted to other government medical colleges as promised.

To take up the issue, over 90 students and their parents protested outside the headquarters of the Medical Council of India (MCI) in New Delhi on Monday, demanding early shifting of students to other colleges.

Members of their delegation also met officials of the health ministry, the MC and the oversight committee that the Supreme Court has formed in the case. The Punjab government says it has sent a proposal for approval to the MCI to shift all 249 students that took admission over various years. Sources said the Punjab government had also sent a reminder to the MCI.

What is the issue?

The college started admissions in 2011, in spite of the fact that the medical education regulator, the Medical Council of India (MCI), did not grant it the mandatory approvals. The 2011 batch of 150 students had earlier moved the Punjab and Haryana high court and have since been shifted to other colleges, students of 2014 and 2016 batches face a bleak future. On April 26, 2016, these students moved the high court seeking to shift to other colleges in the state claiming that their institute is “short of infrastructure”

On September 8 this year, the Punjab and Haryana high court had directed the state government to shift all students of 2014 batch of Chintpurni Medical College to other medical colleges across the state within two months.

File is now with the oversight committee

Even as state government sources had claimed, in the first week of November, that the process of shifting of students would be completed within a fortnight, nothing has moved since. “After the essentiality certificate of the college was withdrawn, students have been sitting at home since November 1. Their pre-final exams are pending,” said Dr Sushil Garg, member of Parents Welfare Association of the college, formed to take up the students’ cause.

He added, “We want that the oversight committee must consider our case on priority and give its approval order to the state government and the MCI for early shifting of students.”

MCI secretary Dr Reena Nayyar said, “We considered the proposal of the Punjab government in our executive committee and sent it to the oversight committee. As soon as we receive comments from the oversight committee, the matter will be communicated to the health ministry.” Dr Sanjay Srivastav, secretary, oversight committee, said, “We have received the reports on Friday and will consider it in the coming days.”
ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை கண்காணிப்பதற்காக, அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த, ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர்களில், நான்கு பேர், 'ஜெ.,வை பார்க்கவே இல்லை' என, விசாரணை கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால், விசாரணையின் போக்கில், சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது.





நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன், ஜெ., மர்ம மரணம் குறித்து, விசாரித்து வருகிறது. முதல் வாரம், தி.மு.க., பிரமுகர், சரவணன், முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனர்கள், விமலா, நாராயணபாபு ஆகியோரிடம், விசாரணை நடத்தப்பட்டது.

கைரேகை:

ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை கண்காணிப்பதற்காக, அரசு தரப்பில், மருத்துவ குழு அமைக்கப்பட்டது. அதில், சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவமனை மயக்கவியல் துறை பேராசிரியர், கலா, மருந்தியல் துறை துணை பேராசிரியர், முத்துசெல்வன், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர், தர்மராஜன்... பொது மருத்துவத் துறை பேராசிரியர், டிட்டோ, நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர், பாலாஜி ஆகியோர், இடம் பெற்றிருந்தனர்.

குழு ஒருங்கிணைப்பாளராக, பாலாஜி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தான் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் அங்கீகார படிவத்தில், ஜெ.,விடம் கைரேகை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குழுவில் இடம்பெற்று இருந்த மருத்துவர்களிடம், இந்த வாரத்தில் விசாரணை நடந்து வருகிறது.

முதல் நாள் விசாரணையில், கலா, முத்துசெல்வன் ஆகியோர் ஆஜராகினர். மறுநாள் விசாரணையில், மருத்துவர் டிட்டோ, ஜெ., அண்ணன் மகள், தீபாவின் கணவர், மாதவன் ஆகியோர் ஆஜராகினர். நேற்று, மருத்துவர்கள், பாலாஜி, தர்மராஜன் ஆகியோர், விசாரணைக்கு ஆஜராகினர். காலை, 10:30 மணி முதல், பகல், 12:00 மணி வரை

தர்மராஜனிடமும், பகல், 12:00 மணி முதல், 1:50 மணி வரை பாலாஜியிடமும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

விசாரணையின்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்களை, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெ.,க்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை கண்காணிக்கும் குழுவில் இருந்த, ஐந்து மருத்துவர்களில், பாலாஜி தவிர, மற்ற நான்கு பேரும், 'சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ.,வை சந்திக்கவே இல்லை' என, தெரிவித்து உள்ளனர்.

மேலும், அவர்கள் கூறியுள்ளதாவது: அப்பல்லோ மருத்துவ மனையில், எங்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது; தினமும், அங்கு வந்து அமர்ந்துஇருப்போம். அவ்வப்போது வெளியிடப்படும், மருத்துவ செய்திக் குறிப்பை, ஒருவர் படித்துக் காட்டுவார். தினமும், அந்த அறையில் அமர்ந்து விட்டு, மாலையில் திரும்பி விடுவோம். ஒரு நாள் கூட, ஜெ.,வை சந்தித்தது இல்லை. இவ்வாறு, அந்த நான்கு மருத்துவர்களும், விசாரணையில் கூறியதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சிறப்பு மருத்துவர்கள்:

அதேநேரத்தில், ஜெ.,விடம் கைரேகை பெற்றபோது, தானும், சசிகலாவும் மட்டுமே, அந்த அறையில் இருந்ததாக, மருத்துவர் பாலாஜி மட்டும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், எய்ம்ஸ் மருத்துவர்கள் மட்டுமின்றி, வேலுார், ஐதராபாத், பெங்களூரு பகுதியிலிருந்தும், சிறப்பு மருத்துவர்கள், ஜெ.,க்கு சிகிச்சை அளிக்க வந்ததாக, இவர்கள் கூறிஉள்ளனர்.

வெளியூர் மருத்துவர்களை அழைத்து வரும் பணியை, பாலாஜி மேற்கொண்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவர், கிலானியை, ஜெ.,விடம் அறிமுகப்படுத்தியதாக, பாலாஜி தெரிவித்துள்ளார். ஜெ.,விடம், மருத்துவ சிகிச்சைக்கு வெளிநாடு செல்லலாம் எனக் கூறியபோது, அவர் வர மறுத்ததாகவும், அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர் பாலாஜியை மட்டும், மீண்டும், 27ம் தேதி, விசாரணைக்கு வரும்படி, ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

ஜெ.,வை பார்க்க, அரசு நியமித்த மருத்துவர் குழுவினரை கூட அனுமதிக்காதது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது, அரசு தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ், அரசு ஆலோசகராக

இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த, விசாரணை கமிஷன் முடிவு செய்து உள்ளது.

தீபக்கிற்கு, 'சம்மன்':

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், முக்கிய நபர்களுக்கு, 'சம்மன்' அனுப்பி வருகிறது. 'அக்குபஞ்சர்' மருத்துவர் சங்கர், 12ம் தேதி; ஜெ., அண்ணன் மகள், தீபா, 13; அவரது தம்பி தீபக், 14; தீபாவின் கணவர் மாதவன், 15; மருத்துவர் மகேந்திரன், 19; முன்னாள் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், 20; முன்னாள் அரசு தலைமைச் செயலர், ராமமோகன ராவ், 21ம் தேதி, விசாரணைக்கு ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சொன்னது என்ன?

''நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு, பதில் அளித்தேன்,'' என, மருத்துவர் பாலாஜி தெரிவித்தார். அவர் கூறுகையில், ''விசாரணை கமிஷனில், நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும், பதில் கூறினேன். எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர், பீலே வருகை குறித்து கேட்டார். அதற்கு, பதில் அளித்தேன். ஜெ.,க்கு அளிக்கப்பட்ட உணவு குறித்து கேட்டதற்கும், பதில் கூறினேன்,'' என்றார்.ஆனால், ஜெ., கைரேகை குறித்து கேட்ட கேள்விக்கு, பதில் அளிக்க, பாலாஜி மறுத்து விட்டார். 



பதவிக்காலம் 6 மாதம் நீட்டிப்பு?

ஜெ., மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், கமிஷனின் பதவிக் காலம், இம்மாதம் நிறைவு பெற உள்ளதால், ஆறு மாதங்கள் நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது. ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, செப்., 25ல், தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை கமிஷன், மூன்று மாதங்களுக்குள், அறிக்கை அளிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டிருந்தது. விசாரணை கமிஷன், தற்போது தான் விசாரணையை துவக்கி உள்ளது; இன்னும் ஏராளமானோரிடம் விசாரணை நடத்த உள்ளது. இந்நிலையில், விசாரணை கமிஷனின் பதவிக்காலம், டிச., 24ல் நிறைவு பெறுகிறது. எனவே, விசாரணை கமிஷன் பதவி காலத்தை, மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்க கோரி, அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தமிழக அரசு, அதை ஏற்று, கமிஷனின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


- நமது நிருபர் -
மயிலை கபாலீஸ்வரருக்கு தங்க நாகாபரணம் சமர்ப்பிப்பு

Added : டிச 08, 2017 00:28



சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோவில் மூலவருக்கு, 2.75 கோடி ரூபாய் மதிப்பில், 7.5 கிலோ தங்கத்தாலான, நாகாபரணம் சமர்ப்பிக்கப்பட்டது.

சென்னை, மயிலாப்பூர் கோவிலில் உள்ள மூலவர் கபாலீஸ்வரருக்கு, சிறப்பு பூஜை செய்யப்படும் போது, செப்பில் தங்க முலாம் பூசிய, நாகாபரணம் சார்த்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், மூலவருக்கு சொக்க தங்கத்தாலான நாகாபரணம் வழங்க, கோவில் தக்கார், விஜயகுமார் ரெட்டி, பிரீத்தி ரெட்டி ஆகியோர் முன்வந்தனர். இதையடுத்து, 2.75 கோடி ரூபாய் மதிப்புள்ள, 7.5 கிலோ எடையுள்ள நாகாபரணம், உம்மிடி பங்காரு ஸ்ரீ ஹரி சன்ஸ் மூலம் செய்து முடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, மயிலாப்பூருக்கு வருகை தந்த, காஞ்சி மடாதிபதிகள், ஜெயேந்திரர், விஜயேந்திரருக்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, கிழக்கு ராஜகோபுரம் வாசலில், பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை, 11:15 மணிக்கு, அலங்கார மண்டபத்தில், விநாயகர் பூஜை, புண்யாகவசனம் நடந்தது. அதைத் தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 11:30 மணிக்கு, மூலவர் கபாலீஸ்வரருக்கு, தங்க நாகாபரணத்தை, ஜெயேந்திரர் சமர்ப்பித்தார். பின், மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் இணை கமிஷனர், காவேரி செய்திருந்தார்.

அஞ்சலக சேமிப்பு கணக்குடன் 'ஆதார்' இணைக்க வேண்டுமா?

Added : டிச 08, 2017 00:15

அஞ்சலக சேமிப்பு கணக்குடன், ஆதார் மற்றும் மொபைல் எண் இணைக்க, அது தொடர்பான விபரங்களை பேப்பரில் எழுதி, வரும், 31ம் தேதிக்குள் தபால் பெட்டி யில் போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'எல்லா வகையான அஞ்சலக கணக்குகளுடன், வாடிக்கையாளரின் ஆதார் மற்றும் மொபைல் எண்களை இணைக்க வேண்டும்' என்று, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தற்போது அதற்கான பணிகள், நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. ஆதார், மொபைல் எண்களை பெற்ற பிறகே, தற்போது அஞ்சலகங்களில் புதிய கணக்கு துவங்கப்படுகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்களுடைய அஞ்சல் கணக்குடன் ஆதார், மொபைல் எண்களை, வரும், 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.

இது குறித்து, அஞ்சல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முழுவதும் அஞ்சல கங்களில் கணக்கு வைத்திருப்பவர்களில், பெரும்பாலானவர்கள் தங்களது ஆதார், மொபைல் எண்களை இணைக்கவில்லை. எனவே, அவர்களுக்காக ஆதார், மொபைல் எண்களை இணைக்க, எளிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வெள்ளை பேப்பரில் சேமிப்பு கணக்கு எண், அஞ்சலகம் மற்றும் வாடிக்கையாளர் பெயர், ஆதார் மற்றும் மொபைல் எண்களை எழுதி, அருகிலுள்ள தபால் பெட்டிகளில் போடலாம். இதன் மூலம், சேமிப்பு கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படும். இதுதவிர, தலைமை தபால் நிலையம் மற்றும் கிளை தபால் நிலையங்களில், 'டிராப் பாக்ஸ்' வைக்கப்பட்டுள்ளது. அதிலும், அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் எண்களை பேப்பரில் எழுதி போடலாம்.


அஞ்சலக சேமிப்பு உள்ளிட்ட அனைத்து கணக்குகளுடன், ஆதார் மற்றும் மொபைல் எண்களை இணைப்பதற்கு, டிச., 31ம் தேதி கடைசி நாள் என்பதால், இந்த எளிய வழிமுறையை தபால் துறை அறிமுகப்படுத்திஇருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் --

போரூரில் சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்ட வணிக வளாகம் திறப்பு : சவரனுக்கு ரூ.1,000 தள்ளுபடி

Added : டிச 08, 2017 00:09



சென்னை: சென்னையின் முன்னணி வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ், ஜவுளி மற்றும் தங்க நகை விற்பனைக்காக, 'சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்' என்ற பெயரில், பிரமாண்ட வணிக வளாகத்தை, போரூரில் நேற்று திறந்து உள்ளது.

இந்த வணிக வளாகத்தை, லட்சுமி அம்மாள் திறந்து வைத்தார்; ரேவதி அம்மாள் குத்துவிளக்கேற்றினார்.

திறப்பு விழாவில், நிறுவனர் ராஜரத்னம் பேசியதாவது: சென்னை, தி.நகர் ரங்கநாதன் தெருவில், 1966ல், பாத்திர விற்பனை உடன் துவங்கிய சரவணா ஸ்டோர், தற்போது ஜவுளி, ரெடிமேடு, வீட்டு உபயோக பொருட்கள் என, அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.
மேலும் புரசைவாக்கம், குரோம்பேட்டையைத் தொடர்ந்து, போரூரில்,'சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்' திறக்கப்பட்டு உள்ளது. வெளியூர்களில் இருந்து எங்கள் கடைக்கு வருவோர், 'எப்போது நகைக்கடை திறக்க போகிறீர்கள்' என்ற கேள்வியை முன்வைப்பர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, இங்கு ஜவுளிக்கடை உடன் இணைந்த நகைக்கடையை திறந்து உள்ளோம்.


 இங்கு, டிச., 7 முதல், 11 வரை, அனைத்து நகைகளுக்கும், கிராமுக்கு, 125 ரூபாய் வீதம், சவரனுக்கு, 1,000 ரூபாய் சலுகை வழங்கப்படும். இங்கு, மூன்று லட்சம் சதுரடி பரப்பளவில்,எஸ்கலேட்டர் வசதிடன், 10 தளங்கள் உள்ளன. ஜுவல்லரி, ஜவுளி, பட்டு, ரெடிமேடு, அழகு சாதன பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், எலக்ட்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் என, அனைத்தும் சில்லரை விலையில் கிடைக்கும்.

விரைவில், அனைத்து சரவணா ஸ்டோர்ஸ் கடைகளிலும், தங்க நகை கடை திறக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்கு னர், சபாபதி, சுனிதா சபாபதி, ரோஷன் ஸ்ரீ ரத்னம், யோகேஷ் ஸ்ரீ ரத்னம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


ஆதார் இணைப்புக்கான காலக்கெடு   மார்ச் 31 வரை நீட்டிக்க அரசு தயார்

புதுடில்லி : 'பல்வேறு சமூக நலத் திட்டங்கள், மானியங்களைப் பெறுவதற்காக, ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை, 2018, மார்ச், 31 வரை நீட்டிக்கத் தயாராக உள்ளோம்' என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.



'மொபைல் போன் எண், வங்கிக் கணக்கு போன்றவற்றுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். 'பல்வேறு சமூக நலத் திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கும் ஆதார் குறிப்பிடுவது கட்டாயம்' என்பது போன்ற மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ஆதார் தொடர்பான வழக்கில், 'தனிநபர் சுதந்திரம், ஒருவரது அடிப்படை உரிமை' என, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சமீபத்தில் தீர்ப்பு அளித்திருந்தது.

'ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரிக்கும்' என, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது:

பல்வேறு சமூக நல திட்டங்களைப் பெறுவதற்காக ஆதார் எண்ணைக் குறிப்பிடுவதற்கான காலக்கெடுவை, 2018 மார்ச், 31 வரை நீட்டிக்க, மத்திய அரசு தயாராக உள்ளது. அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, 2018 பிப்., 6ம் தேதி என்பதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

ஆதார் எண் இல்லாதவர்கள், அதை பெறுவதற்கு அவகாசம் அளிக்கும் வகையில், அவர்கள் மீது, 2018 மார்ச், 31 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, இந்த வழக்குகளை விசாரிக்கும், அரசியலமைப்பு சட்ட அமர்வு, அடுத்த வாரத்தில் அமைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பான் கார்டு, மொபைலுக்கான காலக்கெடுவில் மாற்றமில்லை

ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: வங்கிக் கணக்கு, பான் கார்டு மற்றும் மொபைல் எண்களுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான உத்தரவுக்கு, நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. அந்த உத்தரவு சட்டப்பூர்வமானது; நடைமுறையில் உள்ளது. அதன்படி, வங்கிக் கணக்கு மற்றும் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, டிச., 31ல் முடிகிறது. மொபைல் எண்ணுடன், ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு, 2018, பிப்., 6ம் தேதியோடு முடிகிறது. இந்தக் காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை.
Salem: Government hospital nurses take ill after ‘bad’ dinner

DECCAN CHRONICLE. | ZAKEER HUSSAIN

Published Dec 8, 2017, 6:53 am IST

As the health condition of 13 nurses worsened due to continuous vomiting, they were admitted as in-patients and are being treated.



Even as some of them suffered from diarrhea, a few hours after the meal, the affected nurses were all rushed to the government hospital early today. (Representational Image)

Salem: Just recovering from a scary dengue sweep, this time it was ironically the turn of nurses to turn 'patients' at the Mohan Kumaramangalam government hospital in Salem. A good number of a group of 50 trainee-nurses of the government hospital turned in-patients on Thursday, with symptoms of vomiting and giddiness after they had taken dinner at the hostel mess, sources said.

About 300 trainee-nurses are staying in the hostel attached to the Salem government hospital. But 50 of the nurses suddenly took ill after they had taken dinner at the hostel mess late on Wednesday evening. Even as some of them suffered from diarrhea, a few hours after the meal, the affected nurses were all rushed to the government hospital early today.

As the health condition of 13 nurses worsened due to continuous vomiting, they were admitted as in-patients and are being treated. Nurses alleged that food poisoning in the hostel dinner possibly caused the illness and based on their complaint, officials have begun an inquiry with the hostel authorities.

NEWS TODAY 26.01.2026