Sunday, January 14, 2018

Immigration holds up flyers at airport 

Less Staff, More Bags Add To Problems

TIMES NEWS NETWORK

Chennai: Flying into Chennai from abroad has become ahassle, as long queues at immigration and baggage delays irk passengers at the city airport. If the flight lands during peak hours, people spend a long time at immigration counters and baggage claim. It often takes more than an hour or sometimes two hours, for a passenger to complete formalities and walk out after the flight touches down. Departing passengers suffer delay at security check, forcing airlines asking passengers to reach the airport well in advance.

Immigration and baggage delays have become routine during peak hours at night especially after an increase in passenger traffic due to festive season. Air Passengers Association of India (APAI) national president, D Sudhakara Reddy said, “It takes 30 to 90minutes for immigration clearance based on flight movements. Airport says there is a staff shortage, but why should passengers suffer? It takes a minimum of 30 to 45minutes for baggage claim due to bunching of flights.”

A senior official of Airports Authority of India (AAI) said, “There has been a sudden rush of travellers in the past one week, probably due to the travel season. The long queues at the immigration counters were discussed with officials. They have added 12 extra people and are also planning to get another 30 people to man the counters. But they may have to keep all the counters open and keep the passenger flow steady.”

AAI is planning to redesign the existing counters to make more space. “If airlines can scatter their schedule in a span of four hours, the queues can be eliminated. But the schedules are back to back and departing passengers too do not come to the airport three hours in advance. The bunching of flights and bunching of passengers cause immigration delays. We will be able to open 40 to 50 counters when the new terminal is ready.”

As more than 27 flights from abroad land in Chennai between 11.30pm to 8am, there is pressure on baggage handlers. Each wide-body flight will have at least 500 bags. Passengers have to wait for more than an hour after immigration to get the bags.
Bhogi smog delays flights for six hours, train services too hit

TIMES NEWS NETWORK

Chennai: Travel plans of thousands of people went awry on Saturday as smog triggered by Bhogi bonfires reduced visibility and affected flights and train services. Traffic on the roads too was thin and the few motorists on them drove with headlights on.

At the airport, where visibility was less than 50 metres, 16 flights, including nine international services, were diverted to Bengaluru, Hyderabad, Trichy and Coimbatore. Services resumed at 9.10am, but delays continued throughout the day.

Southern Railway officials said most inter-city and inter-state trains arrived late by “an average of 40 minutes,” while outbound trains ran slow. Suburban rail services were also delayed by about half an hour.

The burning of old articles on Bhogi is a symbolic gesture of bidding adieu to the old and welcoming the new, but those affected were not amused. Domestic flights could not leave Chennai airport till 9am, while many incoming ones were delayed at places like Kochi and Bengaluru as clearance was not given.

Though there were 73 departures and 45arrivals slotted between 3am and 9.10am, most flights departed only after 11am as arriving flights needed priority. Air congestion led to further delays that lasted between three hours and six hours through the day.



While an IndiGo flight from Dubai, an Air Arabia flight from Sharjah, a Gulf Air plane from Bahrain and an Air India aircraft from Dubai were diverted to Bengaluru, a British Airways flight from London, an Etihad Airways flight from Abu Dhabi, SpiceJet flights from Pune and Colombo and a Jet Airways flight from Mumbai flew to Hyderabad. A Sri Lankan flight from Colombo returned midway. An Air Australia flight from St Denis and a Batik Air flight from KL were diverted to Trichy. An Airport Authority of India official said smog this year was severe. ‘After 3am, visibility began to dip and stayed low till 9am’

Chennai:“After 3am, visibility began to dip and stayed low till 9am. Usually, smog lifts by 7.30am or 8am. This year it stretched till 9am,” the AAI official said. A senior pilot said AAI authorities should issue a notam (notice to airmen) to expect smog or delays before Bhogi. “This will help foreign airlines to take precautions and carry more fuel for diversions and to remain on hold. It is usual to have mist in Chennai in January but foreign pilots may not know about the custom followed on the festival day. A met report may not forecast smog.” However, fog warnings don’t often lead to airlines rescheduling flights as they hope visibility will improve soon. “We have a system to intimate airports of delays and poor visibility but international flights would have departed 5 hours-14 hours earlier. Domestic flights try to delay their departures at Bengaluru, Kochi and to an extend in Mumbai,” he added. Former pilot and air safety expert Captain Mohan Ranganathan said airlines should anticipate such a situation. “Diversions show pilots these days do not study weather. In the 1980s and 1990s pilots used to study the wind pattern and presence of water body near airport

மருத்துவர்கள் பற்றாக்குறை!

By ஆசிரியர் | Published on : 12th January 2018 01:07 AM | 


 | ஒருபுறம் சர்வதேச அளவிலான வசதிகளைக் கொண்ட கார்ப்பரேட் மருத்துவமனைகள் மாநகரங்களில் உருவாகி வருகின்றன. இன்னொரு புறம் ஊரகப் பகுதிகளில் அடிப்படைத் தேவைகளுக்குக்கூட மருத்துவரோ, மருத்துவமனையோ இல்லாத அவலம் காணப்படுகிறது. 

இந்தியாவில் 10,189 பேருக்கு ஓர் அரசு மருத்துவர் என்கிற நிலைதான் காணப்படுகிறது. 2,046 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனையின் படுக்கை வசதி என்பதுதான் இப்போதைய நிலைமை. அதேபோல 90,343 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனை என்கிற விகிதம்தான் காணப்படுகிறது. இந்தியாவின் 70 கோடி மக்கள் வாழும் கிராமங்களில் 11,054 மருத்துவமனைகள்தான் இருக்கின்றன.


இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும், மருத்துவர்களுக்கும் இடையேயான விகிதம் என்பது வியத்நாம், அல்ஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருப்பதைவிடக் குறைவாகக் காணப்படுகிறது என்றும், மருத்துவர்கள் பற்றாக்குறைதான் இந்தியாவின் சுகாதார நிர்வாகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்றும், 2016-இல் நாடாளுமன்றத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.


உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி 1,000 பேருக்கு ஓர் அலோபதி மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால், 11,097 பேருக்குத்தான் ஓர் அலோபதி முறை மருத்துவர் என்கிற விகிதம் இந்தியாவில் காணப்படுவதாக 2017 தேசிய சுகாதார விவரக் குறிப்பு தெரிவிக்கிறது. ஊரகப் புறங்களில் இந்த விகிதம் இதைவிட மோசம். 130 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 60% மக்கள் ஊரகப் புறங்களில்தான் வாழ்கிறார்கள். அங்கே நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்குப் போதிய மருத்துவர்கள் இல்லாத அவலம் நீண்ட காலமாகவே தொடர்கிறது. 2017-இல் நடத்தப்பட்ட ஆய்வின்படி உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையான 1,000 பேருக்கு ஓர் அலோபதி மருத்துவர் என்கிற நிலைமை ஏற்பட வேண்டுமானால், 2030-குள் இந்தியாவுக்குக் குறைந்தது 20 லட்சம் மருத்துவர்கள் கூடுதலாகத் தேவைப்படுவார்கள்.
மருத்துவப் பற்றாக்குறைதான் இந்தியாவின் பொது சுகாதார அமைப்புகள் முறையாகச் செயல்பட முடியாமல் முடக்குகிறது. குறிப்பாக, ஊரகப் புறங்களில், ஆதிவாசிகள் வாழும் மலைப்பிரதேச கிராமங்களில் மருத்துவ வசதி என்பது இன்னும் கானல் நீராகவே காணப்படுகிறது. 


'இந்தியாஸ்பென்ட்' என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கைபடி, ஊரகப் புறங்களில் உள்ள அரசின் பொது சுகாதார மையங்களில் 30,000க்கும் அதிகமான மருத்துவர்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. பல பொது சுகாதார மையங்களில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் மட்டுமே செயல்படும் அவலம் தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் இல்லாத சுகாதார மையங்களில் 200% அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


அரசின் தேசிய அளவிலான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும் உண்மை நிலைக்கும் இடையேயான இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது. தேசிய சுகாதாரக் கொள்கை 2017 பல உயரிய இலக்குகளை நிர்ணயிக்கிறது. இதன்படி பொது சுகாதாரத்திற்கான இந்திய அரசின் ஒதுக்கீடு இப்போது இருக்கும் 1.4% லிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் (ஜி.டி.பி.) 2.5%ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.


மத்திய அரசின் தேசிய சுகாதார உறுதியளிப்புத் திட்டம் (நேஷனல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன்) ரூபாய் 1லட்சத்து 60 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் 50க்கும் மேற்பட்ட மருந்துகளையும், 12க்கும் மேற்பட்ட பரிசோதனைகளையும் இலவசமாக வழங்கவும், 2019-க்குள் இந்தியாவிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவக் காப்பீட்டை உறுதிப்படுத்தவும் முனைகிறது. இந்தத் திட்டத்தின் இன்னொரு பகுதியாக சிசு மரண விகிதத்தை 1000 பிரசவத்துக்கு 40 என்றிருப்பதை 30ஆகக் குறைப்பது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


அரசின் முனைப்பும், இலக்கும் பாராட்டுக்குரியது என்றாலும் அதை எட்டுவது என்பது சுலபமானதாக இருக்காது. ஒவ்வொரு கிராமத்துக்கும் 3 கி.மீ. சுற்றளவில் போதிய மருத்துவ வசதி உருவாக்கப்பட வேண்டும். நமது மக்கள் தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மருத்துவ வசதிகளை உருவாக்குவது என்பது தனியார் மருத்துவ சேவைகளையும் சேர்த்துக் கணக்கிட்டாலுமேகூட எட்டுவது கடினம். இதை 2020-க்கான நிதி ஆயோகின் செயல் திட்டம் சுட்டிக்காட்டாமல் இல்லை.


இந்தியாவின் மிக முக்கியமான தேவை கூடுதலான மருத்துவர்கள். மருத்துவக் கல்விக்கு மிக அதிகமான முதலீடு தேவைப்படுகிறது. இந்தியாவில் உள்ள 462 மருத்துவக் கல்லூரிகள் 56,748 மருத்துவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆண்டொன்றுக்கு 2.6 கோடி மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில் கல்லூரி எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் சில பகுதிகளில் அதிகமான மருத்துவக் கல்லூரிகளும், சில பகுதிகளில் மருத்துவக் கல்லூரிகளே இல்லாத நிலையும் காணப்படுகின்றது. இந்திய மக்கள் தொகையில் 46% மக்கள் வாழும் எட்டு மாநிலங்களில் மொத்த மருத்துவக் கல்வி இடங்களில் 21%தான் உள்ளன. 31% மக்கள் தொகை உள்ள ஆறு மாநிலங்களில் 21% மருத்துவக் கல்வி இடங்கள்தான் காணப்படுகின்றன. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய பல மாநிலங்களில் போதுமான மருத்துவக் கல்லூரிகள் இல்லாததால் மருத்துவர்களுக்கான குறைபாடு அதிகமாக இருக்கிறது.
தரமான மருத்துவக் கல்வி, தரமான மருத்துவர்கள், தரமான மருத்துவ வசதிகள் இவையெல்லாம் ஒரே நாளில் உருவாகிவிடக் கூடியவை அல்ல. சாமானியனுக்கு மருத்துவ வசதி என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் மட்டும் போதாது. அதை எட்டுவதற்கான முனைப்பும் இருக்க வேண்டும். ஊரகப் புறங்களில் பணியாற்ற அடுத்த தலைமுறை மருத்துவர்கள் முன்வந்தால் மட்டுமே இந்தச் சவாலை இந்தியா எதிர்கொண்டு வெல்ல முடியும்!

அணுகுமுறை ஏற்புடையதல்ல!

By ஆசிரியர் | Published on : 13th January 2018 12:47 AM


| நீதித்துறை வரலாறு காணாத சோதனையை எதிர்கொள்கிறது. நீதிபதிகளே நீதித்துறையின் மாண்பையும் கெளரவத்தையும் குலைத்துவிடுகின்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகவே தொடர்ந்து வரும் இந்த மோதல் இப்போது பகிரங்கமாகப் பொதுவெளியில் வெடித்திருக்கிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் வெளிப்படையாகவே போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகிய மூவரும், உச்ச நீதிமன்றத்தில் பணி மூப்பு அடிப்படையில் தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக இருக்கும் நீதிபதி ஜெ.செலமேஸ்வரின் துக்ளக் சாலை இல்லத்தில் பத்திரிகையாளர்களிடம் தங்கள் அதிருப்தியையும் மனக்குமுறலையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நான்கு நீதிபதிகளும் கையொப்பமிட்டு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தைப் பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படுத்தி, நீதிபதிகளுக்கு இடையேயான பிரச்னையை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச்செல்ல முற்பட்டிருக்கிறார்கள்.


நீதித்துறை பாதுகாக்கப்படாவிட்டால் இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படாது என்றும், இதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா புரிந்துகொள்ள வைக்கத் தங்களால் இயலவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள் அந்த நீதிபதிகள். அதனால் பொதுவெளியில் தங்களது கருத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும், இதன் மூலம் மட்டுமே நீதித்துறையைக் காப்பாற்ற முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, நீதிபதிகளுக்கு இடையேயான வெளிப்படையான மோதலை உச்ச நீதிமன்றம் எதிர்கொண்டது. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகளுக்கு இடையே ஏற்பட்ட அந்த வெளிப்படையான மோதல் கூச்சலிலும் வாக்குவாதத்திலும் வெளிப்பட்டபோது, தேசமே அதிர்ந்தது.


தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு, முந்தைய நாள் அவருக்கு இரண்டாமிடத்தில் இருக்கும் நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வின் முடிவை நிராகரித்தது. நீதிபதி செலமேஸ்வரின் ஆத்திரத்துக்கு அதுதான் காரணம்.
வழக்குகளை இன்னின்ன நீதிபதிகள் அடங்கிய அமர்வுகளுக்கு ஒதுக்குவது, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தனி உரிமை. இதற்கு 'ரோஸ்ட்டர் தயாரிப்பு' என்று பெயர். உச்ச நீதிமன்றத்தில் அமர்வுகளைத் தீர்மானிப்பதும், எந்த அமர்வுக்கு எந்த வழக்குகளை ஒதுக்குவது என்பதும், தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் முடிவில் தவறு காணமுடியாது. இதுதான் கடந்த பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் பின்பற்றி வரப்படும் மரபு. 


நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நேர்மையையும் நாணயத்தையும் மறைமுகமாகக் கேள்வி கேட்க முற்பட்டிருக்கிறார்கள். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது நாடாளுமன்றம் 'இம்பீச்மென்ட்' நடவடிக்கையை முடுக்கிவிட்டு அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமா என்கிற கேள்விக்கு, 'தேசம் தீர்மானிக்கட்டும்' என்று நீதிபதி செலமேஸ்வர் கூறுவதிலிருந்து நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதியின் நேர்மையை சந்தேகிக்கிறார்கள் என்பது தெரிகிறது.
'மிக முக்கியமான பல வழக்குகளில் எந்தவித காரணமும் இல்லாமல் சில குறிப்பிட்ட நீதிபதிகள் தொடர்ந்து அமர்வுகளில் சேர்க்கப்படுகிறார்கள் என்றும் அது தேசத்துக்கு நன்மை பயக்காது' என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


தாங்கள் இந்த முடிவை எடுக்காமல் போனால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் சமூகம் தங்களை கேள்வி கேட்கும் என்றும், ஆன்மாவையே விற்றுவிட்டவர்களாகக் கருதும் என்றும் அவர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. நீதிபதிகளுக்கு இடையேயான இந்தப் பிரச்னையின் அடிப்படை 'ரோஸ்ட்டர் தயாரிப்பில்' ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுதான் என்பதை அவர்கள் தலைமை நீதிபதிக்கு அளித்திருக்கும் கடிதம் வெளிப்படுத்துகிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த நீதிபதிகளுக்கு விசாரணைக்காக ஒதுக்கும் வழக்குகள்தான் அவர்களது அதிருப்திக்குக் காரணம் என்பதையும் அந்தக் கடிதம் தெளிவுபடுத்துகிறது.


இதுபோல நீதிபதிகள் பொது வெளியில் அதிருப்தியை வெளிப்படுத்துவது வியப்பை அளிக்கிறது. உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது புதிதல்ல. அதேபோல தலைமை நீதிபதியின் மீது அதிருப்தி ஏற்படுவதும் புதிதல்ல. ஆனால், நீதித்துறையின் மாண்பு கருதி, எந்தவொரு நீதிபதியும் அதைப் பொதுவெளியில் தெரிவிப்பது கிடையாது.


உச்ச நீதிமன்றத்தின் 14ஆவது தலைமை நீதிபதியாக அஜீத் நாத் ரே, 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போது பணி மூப்பு கருதப்படாமல் மூன்று மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் பதவி விலகித் தங்களது எதிர்ப்பைக் காட்டினார்களே தவிர, பத்திரிகையாளர்களைச் சந்தித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யவில்லை. அதேபோல 1977-இல் நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னா பதவி மூப்பு உரிமை மறுக்கப்பட்டபோது பதவி விலகினாரே தவிர, நீதிபதியாக இருந்து கொண்டு விமர்சனத்தில் இறங்க முற்படவில்லை.


நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான நான்கு நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதியின் செயல்பாடு குறித்தும் அணுகுமுறை குறித்தும் கருத்து வேறுபாடும், விமர்சனமும் இருக்கலாம். அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உடன்படவில்லை என்றால், அவர்கள் குடியரசுத் தலைவரிடம் முறையிட்டிருக்க வேண்டும். அப்படியும் நியாயம் கிடைக்கவில்லை என்றால், பதவி விலகி தங்களது எதிர்ப்பையும் மனக்குமுறலையும் வெளிப்படுத்தி இருக்க வேண்டும். நீதிபதிகளின் அணுகுமுறை ஏற்புடையதல்ல!

உடலை இரும்பாக்கும் கரும்பு!


Published : 13 Jan 2018 09:41 IST

டாக்டர் பி. திருவருட்செல்வா


பொங்கல் பண்டிகை என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது கரும்பல்லவா. பொங்கல் பண்டிகையும் கரும்பும் பிரிக்க முடியாதவை. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை தை மாதம் பிறந்துவிட்டாலே காத்தாடியும் கரும்புமாகத்தான் குழந்தைகள் திரிவார்கள். இன்றைக்கு அது தலைகீழாக மாறி, கையில் பதப்படுத்தப்பட்ட நொறுக்குத்தீனிகளுடன் தொலைக்காட்சி முன்பு சரணாகதி அடைந்துவிட்டனர்.

முன்பெல்லாம் பொங்கலன்று மட்டுமாவது கரும்பு சாப்பிடும் வழக்கம் இருந்துவந்தது. தற்போது சம்பிரதாயத்துக்கு இரண்டு கரும்புத் துண்டுகளை வைத்து வணங்க மட்டுமே செய்கின்றனர். கரும்புச் சாறு உடல்நிலை சரியில்லாதவர் சாப்பிட வேண்டியது என்கிற நிலையே தற்போது நிலவிவருகிறது.

பல்லுக்கு உறுதி

செங்கரும்பினில் முழுமையாக குளுக்கோஸ் மட்டுமே நிறைந்திருக்கும். வெண் கரும்பில் சுக்ரோஸ் எனும் கூட்டுச் சர்க்கரை அதிகம் உள்ளது. ஆக வெண்கரும்பு, நீரிழிவு நோயாளிகள் உட்பட எல்லோருக்குமான தேர்வாக இருக்கும். செங்கரும்பு, சிறுவர்களுக்கும் நீரிழிவு நோய் இல்லாதவர்க்கும் ஏற்றது என்பதால் பொங்கல் நேரத்தில் உட்கொள்ளலாம்.

கரும்பில் வைட்டமின் சத்தும் கனிமச் சத்தும் பெருமளவில் இல்லை என்றாலும் நம் உடலுக்குத் தேவையான அளவு கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன. இவை தவிர, உடலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கரும்பில் அதிக அளவில் உள்ளன. ஃபீனால் சத்தும் ஃபிளேவனாய்டு சத்துமே அவை. உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில், கரும்பு போன்ற ‘ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்’ நிறைந்த பொருட்களை உட்கொள்ளத் தவறக்கூடாது.

ஆலும் வேலும் மட்டுமல்ல… கரும்பும் பல்லுக்கு உறுதிதான். அதனால் கரும்பை, சிறுவர்கள் மென்றே சாப்பிடலாம். இதனால் பற்கள் உறுதிபெறும். பல்லால் கடித்து மென்று சாப்பிட முடியாதவர்கள் சாறாக அருந்தலாம்.



சர்க்கரைக்குச் சத்தான கரும்பு

வெண்கரும்பு இனிப்பாக இருந்தாலும், இதிலிருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டுச் சர்க்கரை, உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும்போது செயல் புரியும் நொதிகள் காரணமாக, ரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்காது. இது ‘லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்’ உணவு வகையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒரு முறை அளவாக அருந்தலாம். நல்ல பலனைத் தரும்.

இதிலிருக்கும் ஃபீனால் சத்தும் ஃபிளேவனாய்ட் சத்தும் புற்றுநோயைத் தடுக்கும் காரணிகளாக விளங்குகின்றன. உடல் செல்களுக்குத் தீமையை ஏற்படுத்தும், புற்றுநோய் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கும் ‘ஃபிரீ ராடிக்கல்ஸ்’ உருவாக்கத்தை இது பெரிதும் தடுக்கிறது.

கொழுப்பைக் குறைக்கும் கரும்பு

மஞ்சள் காமாலை நோய்க்குக் கரும்புச் சாறு அருந்தச் சொல்வது தொன்றுதொட்டு பின்பற்றப்படுகிறது. ‘கரும்பு கசத்தால் வாய்க்குற்றம்’ எனும் வழக்கு மொழியே உண்டு. அதாவது, கரும்புச் சாறு இனிப்பாக இருக்க, அதைச் சுவைக்கும்போது கசப்புச் சுவை தட்டினால் செரிமான சுரப்புகளின் செயலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனப் பொருள். பெரும்பான்மையான செரிமானச் சுரப்புக்கள் சுரக்க, கல்லீரலே முதல் காரணமாய் இருக்கும். கல்லீரல் நன்கு செயல்புரியவும், செரிமானச் சுரப்புக்கள் நன்கு சுரக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது.


மேலும், கரும்பில் உள்ள ‘பாலிகோ சனால்’ எனும் இயற்கையான வேதிப்பொருள் ரத்தத் தட்டணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய ரத்த உறைவைத் தடுப்பதுடன், ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் பண்பையும் கொண்டுள்ளது.

சித்த மருத்துவத்தின்படி, உடலில் அதிகரித்த பித்தத்தை கரும்பு சமநிலைப்படுத்தும். சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும். உடல் சூட்டைக் குறைக்கும் குணம் உடையது கரும்பு.

கரும்பென்றால் இனிப்பு, இன்பம் எனப் பொருள்படும். அதன் பொருளுக்கேற்றாற் போலவே உடல்நலத்திலும் இன்பத்தை விளைவிக்கும் பண்புகளை உடைய கரும்பைத் தின்னக் கூலி வேண்டுமா? கரும்பு சாப்பிடுவோம். கரும்புச் சாறு அருந்துவோம். வாழ்க்கை தித்திக்கட்டும்!

கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: siddhathiru@gmail.com
வாசிப்போம் சுவாசிப்போம் நேசிப்போம்

By உதயை மு. வீரையன்  |   Published on : 11th January 2018 01:53 AM  | 

அறிவுடையார் எல்லாம் உடையார் என்று திருக்குறள் கூறுகிறது. அறிவில்லாதவர் வேறு எத்தனை செல்வம் பெற்றிருந்தாலும் ஏதும் இல்லாதவரே என்றும் விளக்குகிறது. அந்த அறிவு கல்வியறிவு என்றும், பட்டறிவு என்றும் இரு வகைப்படும். கல்வியறிவுக்குப் புத்தகங்களே துணை செய்கின்றன. புத்தகக் கண்காட்சிகளின் வளர்ச்சிக்கு அதுவே காரணம்.


புத்தகங்கள் அறிவை ஏந்திச் செல்லும் ஏவுகணைகள்; அறிவுக்கும், அறியாமைக்கும் போர் ஏற்படும் போதெல்லாம் இந்த ஏவுகணைகளே ஏவப்படுகின்றன. இங்கே அழிவு ஏற்படுவதில்லை. அறிவே ஏற்படுகிறது; புதிய உலகம் உருவாகிறது; புதிய மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர்; புதிய பாதைகள் போடப்படுகின்றன.

குடியேற்ற நாடுகளையெல்லாம் இழப்பதற்குக் கவலைப்படாத மாபெரும் இங்கிலாந்து பேரரசு, மாமேதை ஷேக்ஸ்பியரின் இலக்கியங்களை இழந்திட சம்மதிக்காத நிலைக்குக் காரணம் என்ன? ஒரு நாட்டின் பெருமையை இழந்திட யாராவது சம்மதிப்பார்களா? சாகாத இலக்கியங்கள் ஒரு நாட்டின் மதிப்புமிகு கருவூலங்கள்; செல்வங்கள் ஒருநாள் அழிந்து போகும்; இவை அழியாதவை.

அந்த ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளே ஏப்ரல், 23 உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1995-ஆம் ஆண்டு ஐ.நா. அவையின் கல்வி, கலாசார நிறுவனம், உலக மக்களிடம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக இந்த நாளைக் கொண்டாடும்படி அறிவுறுத்தியது.
தோழர்களே, இது ஓர் புத்தகம் மட்டுமே என நினைக்காதீர்! இதைத் தொடுகிறவன் இதை எழுதிய ஆசிரியரையே தொடுகிறான் என்றார் அமெரிக்கக் கவிஞன் வால்ட் விட்மன். ஆம், நூல்கள் வெறும் காகிதங்கள் அல்ல, அவை அச்சடிக்கப்பட்ட ஆயுதங்கள்; அதுவும் அறிவாயுதங்கள்.

நூல்கள் என்பவை ஒரு மொழியின் பிள்ளைகள்; ஓர் இனத்தின் வாரிசுகள்; ஒரு நாகரிகத்தின் தொட்டில்கள்; ஒரு தேசத்தின் சொத்துகள்; அறிவுக்கடலில் மூழ்கி எடுக்கப்பட்ட முத்துகள்; அவற்றைப் பாதுகாக்க வேண்டியது மனித குலத்தின் கடமை.
புத்தகங்கள் இப்போதைய நிலையை அடைவதற்கு அவை கடந்து வந்த பாதைகளும் நெடியவை. அக்கால அரசர்களின் காலத்தில் கல்வெட்டுகளாக வடிக்கப்பட்டன; பின்னர் செப்பேடுகளாகவும், ஓலைச்சுவடிகளாகவும் மாற்றம் பெற்றன. அறிவியல் வருகையால் காகிதங்களும், அச்சு எந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
1445-ஆம் ஆண்டில் ஜெர்மனியில் புத்தகம் அச்சிடும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டது. அதனைக் கண்டுபிடித்த அறிவியல் மேதை கூடன்பர்க் உலகத்தில் சிறந்த 10 சாதனையாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.
புத்தகங்கள் உருவாக புதிய முறையைக் கண்டுபிடித்த ஜெர்மனியில்தான் ஏராளமான புத்தகங்களும் அழிக்கப்பட்ட சோக நிகழ்வுகளும் நடந்தேறின. இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது ஜெர்மனி புத்தக எதிர்ப்பிலும், எரிப்பிலும் முனைந்து நின்றது. நாஜிகளின் கொள்கைகளுக்கு எதிரான புத்தகங்கள் பொது இடங்களில் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. ஹிட்லர் காலத்தில் இப்படி எரிப்பது தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

புகழோடு வாழ முடியாதவர்கள் தங்களை நொந்து கொள்ளாமல், அவர்களை இகழ்பவர்களை நொந்து கொள்வதால் பயன் என்ன? என்று கேட்டார் திருவள்ளுவர். சர்வாதிகாரியான ஹிட்லர் போன்றவர்கள் மாறாத பழியை அவர்களாகவே வேண்டி விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள்.

அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி, ஒரு தேசத்துக்குப் பெருமை சேர்ப்பது மன்னர்களும், சாம்ராஜ்யங்களும் அல்ல. மாமுனிவர்களும், சித்தர்களும், மாமேதைகளும், சிந்தனையாளர்களும், அவர்களது கருத்துகளும், கருத்துகளின் வடிவங்களான இறவா இலக்கியங்களுமே! அவையே மொழி, இனம், நாகரிகம் இவற்றின் அடையாளங்களாகும். பண்பட்ட சமுதாயத்தின் முதல் முகவரியாகும்.

உலகில் தலைசிறந்த நாகரிகமாகப் போற்றப்படும் கிரேக்க நாகரிகம் சிந்தனையின் பிறப்பிடமாக இருந்தது. கிரீஸ் நாட்டின் முதல் நூலகம் பிஸிஸ்டிராடஸ் என்ற கிரேக்கரிடம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. கி.மு.4ஆம் நூற்றாண்டில் ரோமாபுரியில் 28 நூலகங்கள் இருந்தனவாம்.

நினிவா என்ற இடத்தில் இருந்த ஆசிய நாட்டு நூலகத்தில் 10 ஆயிரம் களிமண் பட்டயங்களின் வடிவில் நூல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. உலகம் போற்றும் அரசியல் தத்துவ மேதை பிளேட்டோ ஏராளமான நூல்களைச் சேமித்து வைத்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. மற்றோர் அரசியல் மேதை அரிஸ்டாடில் தாம் உருவாக்கி வைத்திருந்த நூலகத்தை தம் சீடருக்கு அன்பளிப்பாகத் தந்துள்ளார்.
இந்தியாவில் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் நாகார்ச்சுனன் என்ற அரசன் உருவாக்கிய நூலகம் நாகார்ச்சுன வித்யா பீடம் என்பதாகும். இப்போதைய ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் இருந்திருக்கிறது. கி.பி. 399 முதல் 414 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த பாஹியான் என்னும் சீனப் பயணி தனது நூலில் நாகார்ச்சுன வித்யா பீடம் பற்றியும், அன்றைய இந்தியாவில் பல புத்த மடாலயங்களில் நூலகங்கள் செயல்பட்டு வந்தது பற்றியும் எழுதியுள்ளார்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் 68,700 பனை ஓலைகளில் எழுதப்பட்ட நூல்களும், 36,058 பாபிரஸ் புல் சுருள்களில் எழுதப்பட்ட நூல்களும் இருந்தனவாம். அவற்றுள் 3,100 பனை ஓலைகள் மட்டும் நமக்குக் கிடைத்துள்ளன.
சமண சமயம் சார்ந்த அறுபெரும் திருமறைகள் தொக்கப்பட்டு, உரைகளும் எழுதப்பட்டன. இத்தகைய தொகை நூல்களைச் சேர்த்து வைத்த இடங்கள். ஞான பண்டாரங்கள் எனப்பட்டன. நூலக இயக்கத்திற்கு பங்காற்றிய மற்றொரு சமயம் புத்தமதமாகும். பெளத்த மத நூலகத்திற்கு செழுங்கலை நியமம் என்று பெயர். சைவக் கோயில்களின் ஒரு பகுதியில் சரசுவதி பண்டாரம் என்ற பெயரில் நூலகங்கள் இருந்தனவாம். தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் வரலாற்றுப் புகழ்பெற்றது.

இக்காலத்தில் இந்தியாவில் நூலகங்கள் இல்லாத இடங்களே இல்லை எனலாம். தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை முதலிய நகரங்களில் புகழ்பெற்ற நூலகங்கள் இயங்குகின்றன.
காலங்களையும், தேசங்களையும் கடந்து உலக மக்களை ஒன்றுபடுத்தவும், சிந்திக்கவும் செய்யும் ஆற்றல் புத்தகங்களுக்கே இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த சான்றோர்களுடன் உறவாடுவதற்கும் நூல் உதவி செய்கிறது. திருவள்ளுவர் காலம் வேறு; ஆயினும் காலத்தின் இந்தத் தடைகளைக் கடந்து ஆசிரியருடன் உறவு கொள்ள வைக்கிறது. அறிவியலால் முடியாத அரிய பெரிய பயனை நல்ல நூலால் பெற்று மகிழ்கிறோம்... என்று டாக்டர் மு.வ. கூறுவது சிந்திக்கத்தக்கது.

1981-ஆம் ஆண்டு ஆசியாவிலேயே பெரியதோர் நூலகங்களின் ஒன்றான யாழ்ப்பாணம் நூலகம் இலங்கையில் சிங்களவர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இலட்சக்கணக்கான நூல்களும், ஓலைச்சுவடிகளும் சாம்பலாயின. மிச்சம் மீதி இருந்தவர்களை ஹிட்லரின் வாரிசான இராசபக்ச இனப்படுகொலை செய்தான்.தேனீக்கள் சுறுசுறுப்புடன் நிறைய பூக்களுக்குப் பறந்து சென்று தேனைச் சேகரிப்பது போன்று நீங்களும் நிறைய புத்தகங்களைப் படித்து நிறைய நல்ல செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள் என்றார் மார்க்சிம் கார்க்கி. கல்விக்கும் நூல்களுக்கும் செலவழிப்பது செலவினம் ஆகாது. அவை மூலதனம் என்றே அறிஞர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் 2000க்கும் மேற்பட்ட ஊர்ப்புற நூலகங்கள், 2500க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள், மாவட்டம் தோறும் மாவட்ட மைய நூலகங்கள் செயல்படுகின்றன. இவை தவிர, அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் 12,000 கிராமப்புற உள் நூலகங்களும் அரசினால் உருவாக்கப்பட்டுள்ளன.எனினும் நூலாசிரியர்களும், நூல் வெளியீட்டாளர்களும் மகிழ்ச்சியாக இல்லையே ஏன்? கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் நூலகத்துறை நூல்களை வாங்காமல் புறக்கணித்து வருகிறது. இதனை அரசு புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுசார் மக்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

ஒரு மிகப்பெரிய நூலகத்துறை தனித்துறையாக மாற்றப்படாமல் கல்வித்துறையின் ஓர் அங்கமாகவே இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருப்பது? பொது நூலக இயக்குநர் என்னும் தலைமைப் பொறுப்புக்கு நிரந்தர இயக்குநர் இதுவரை நியமிக்கப்படவில்லை. கிளை நூலகங்களுக்குக் கேட்க வேண்டுமா? தமிழகம் முழுவதும் நூலகர் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

வளமான நிலமே செழிப்பாகப் பயிர்கள் வளர உதவும். நலமான நூலகத் துறையே எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் வளரத் துணை செய்யும். நாம் உயிர்வாழ சுவாசிப்பது போலவே வாசிப்பதும். வாசிப்பவர்களே உலகை நேசிக்கிறவர்களாக இருக்கின்றனர். எனவே வாசிப்போம் வாருங்கள்.
கல்லூரிக்கான இணைப்பு ரத்து பல்கலை உத்தரவுக்கு தடை
Added : ஜன 14, 2018


சென்னை:திருப்பூர் மாவட்டத்தில், தனியார் கல்லுாரிக்கான இணைப்பை ரத்து செய்து, பாரதியார் பல்கலை பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், பிஷப் தார்ப் கல்லுாரி உள்ளது. இதன் செயலர், டாக்டர் பால் வசந்தகுமார் தாக்கல் செய்த மனு:


குறைந்த கட்டணம்


எங்கள் கல்லுாரிக்கு, அரசின் நிதி உதவி கிடையாது; சுயநிதி கல்லுாரி. பட்டப் படிப்பு மற்றும் முதுகலை படிப்பில், 469 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள், ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 35 ஆசிரியர்களும், 17 அலுவலர்களும் உள்ளனர். இவர்களுக்கான சம்பளத்தை, நிர்வாகம் வழங்குகிறது.கல்லுாரிக்கு, பாரதியார் பல்கலை வழங்கிய இணைப்பு, ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த கல்வியாண்டு முதல், மாணவர்களை சேர்க்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. இணைப்பு குறித்து, மூன்று பேர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது. 


அதன்பின், எங்களுக்கு, 'நோட்டீஸ்' எதுவும் தரப்படவில்லை. விளக்கம் அளிக்க, சந்தர்ப்பமும் தரவில்லை. இணைப்பு ரத்துக்கான காரணமும் கூறப்படவில்லை.எனவே, பாரதியார் பல்கலை உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


நோட்டீஸ்


மனு, நீதிபதி, மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், ஐசக் மோகன்லால், வழக்கறிஞர், காட்சன் ஆஜராகினர். மனுவை விசாரித்த, நீதிபதி, மகாதேவன், ''எந்த விசாரணையும் இல்லாமல், நேரடியாக இணைப்பை ரத்து செய்யும் விதத்தில், பாரதியார் பல்கலை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு, மூன்று வாரங்களுக்கு, தடை விதிக்கப்படுகிறது,'' என, உத்தரவிட்டுள்ளார்.மனுவுக்குப் பதிலளிக்க, சிறப்பு பிளீடர் முனுசாமிக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, மூன்று வாரங்களுக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

NEWS TODAY 11.06.2026