Thursday, February 1, 2018

Kochi beef row: University campus shut down indefinitely

Kochi: With increased tension at Cochin University College of Engineering Kuttanad (CUCEK) campus over the ‘beef row’, authorities have decided to indefinitely close down the campus. North Indian students had alleged that they were fed beef and when they protested, they were assaulted inside the campus.

“We have decided to indefinitely close down the campus from today (Wednesday). Meanwhile, we are also trying to resolve the issue,” said Cochin University of Science and Technology (Cusat) vice-chancellor J Letha. The decision was taken after the talk between Cusat and striking north Indian students failed on Wednesday. Of the 3,500 plus students at CUCEK, around 500 are north Indians.

At the meeting, Letha said an inquiry will be conducted and the report will be submitted within four days based on which action will be taken. The students were told that if they had missed any exam over the past few days, then the university would conduct a re-exam after the inquiry.

“To ensure a safe environment for students, they were also promised police security on campus,” said an official who was present at the meeting.

However, the students didn’t agree and insisted that college principal Sunil Kumar should be immediately suspended for ‘hurting the religious sentiments of the north Indian students’. Cusat authorities rejected this demand and said action will initiated only after an inquiry is conducted.
At a camp inaugurated by the principal last Thursday, organisers offered tea and cutlets. North Indian students alleged that they were misled into eating beef cutlets by saying that the item was vegetarian.
View on page

IN THE COURT

‘Dean gets threat for case against govt’

Madurai: The Madras high court Madurai bench was on Wednesday told that dean-cummedical officer of the Government Medical College in Karur, S Revwathy, has been threatened by officials for opposing the government's action to appoint another person as the DME. Revwathy has been fighting for her right to get the promotional post of state’s director of medical education (DME).

Her counsel, S Alagarsamy told the court that the petitioner has been threatened by top officials of the health and family welfare department. They had allegedly threatened her saying, “You moved the court against the government’s action appointing government medical college (Coimbatore) dean A Edwin Joe as the DME, due to which we (the officials) had to drop him from the post of DME. Thus, you (petitioner Revwathy) will not retire peacefully?" Revwathy is going to retire on February 28 this year.

Med college opens genomics centre

Chennai: Sri Ramachandra Medical College and Research Institute and MedGenome launched a genomics centre here on Wednesday . The centre will offer a research platform for scientists and help doctors translate cutting edge Next Generation Sequencing-based genomic solutions into new and actionable patient services. A genetic health clinic will be set up that will offer counselling to patients on hereditary cancers, pregnancy-related matters and genetic and neurological disorders.

Forget easily? Put things in visual context: Expert


TIMES NEWS NETWORK

Chennai: Imagine a loaf of bread soaked in milk, grains of rice bouncing off an umbrella or a hot boiling cup of coffee being poured over your mobile phone. Instead of remembering these objects mentioned individually in the form a list, placing them in a visual and spatial context makes it automatically easier for your brain to remember them, according to international memory athlete Daniel Kilov who interacted with students at Anna University on Wednesday.

Kilov, who has won several memory championships, spoke during theinternational techno-management fest of Anna University, Kurukshetra, on the campus.

“The language of memory is association. There are two ways to remember – one is through memory for things and other being memory for words. Don’t treat your memory as a filing cabinet but as a laboratory where alchemy takes place,” said Kilov. He stated that practising recalling and testing ourselves over and over again was a better technique for embedding long-term memory rather than even writing. He also encouraged using mnemonic techniques like the ‘method of loci’ which is based on linking something to a place you are familiar with toembeditin your memory.

The fest was inaugurated by governor Banwarilal Purohit who said the fest will help bring about more industry-academia exchanges. Higher education minister K P Anbazhagan, who was also present, said the university was taking up all preparations to conduct the Tamil Nadu Engineering Admissions online for the first time this academic year.

This 12th edition of the fest which will continue till February 3 will feature more than 35competitive event.
திருப்பதியில் பக்தர்கள் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே தரிசிக்க அனுமதி? அமைச்சர் மாணிக்கயால ராவ் அதிரடி பேட்டி

By DIN | Published on : 31st January 2018 08:59 AM



திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும் ஆந்திர மாநில அமைச்சர் மாணிக்கயால ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தினந்தோறும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் நிற்காமல் சென்றால் அரை மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யக் கூடிய நிலை உள்ளது.

மேலும் ஒருவரே பல முறை தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்தால் சாமி தரிசனம் செய்து வைக்க முடியாமல் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.

எனவே, ஆதார் அட்டை மூலம் இணைத்து முதல் முறை வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து பின்னர் வாய்ப்பு இருந்தால் கூடுதல் தசரிசனத்திற்கு அனுமதிக்க உள்ளதாக அவர் தெரித்தார்.

இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மேலும் பல பக்தர்கள் பயனடைவார்கள் என்றும் இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளதாகவும் அமைச்சர் மாணிக்கயால ராவ் தெரிவித்தார்.
அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகள் செல்லாது: குடும்ப அட்டைதாரர்களே வைத்துக் கொள்ளலாம்

By DIN | Published on : 01st February 2018 01:20 AM

கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகள் இனி செல்லாது. மின்னணு குடும்ப அட்டைகள் பெற்றுள்ள அனைவரும் தங்களிடம் உள்ள அச்சிடப்பட்ட பழைய அட்டைகளை அவர்கள் வசமே வைத்துக் கொள்ளலாம் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதற்கு முன்பாக, சுமார் 2 கோடி அட்டைகள் புழக்கத்தில் இருந்தன. ஆதார் தகவல்களின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் தயாரிக்கப்பட்ட காரணத்தால் போலி குடும்ப அட்டைகள் பெருமளவு தவிர்க்கப்பட்டு வருகின்றன. இதனால், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையும் 1.94 கோடியாகக் குறைந்துள்ளது.
99 சதவீதப் பணிகள்: தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மின்னணு குடும்ப அட்டை கிடைக்கப் பெற்றவர்கள் ஏற்கெனவே தங்கள் வசம் வைத்துள்ள அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகளை என்ன செய்ய வேண்டுமென்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் அளித்த விளக்கம்:-

தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் மூலமாகவே நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கப்படும். மின்னணு குடும்ப அட்டைகளின் விவரங்களை நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிந்து கொள்ள தனித்துவமான கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், இயந்திரங்கள் பழுதானாலும் 10 சதவீதம் அளவுக்கு மாற்று இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்ட பிறகு, அவற்றின் மூலமாக மட்டுமே பொருள்கள் அளிக்கப்படும்.

எனவே, அச்சிடப்பட்ட பழைய குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருக்காது. அவை செல்லாது என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த அட்டைகளை குடும்ப அட்டைதாரர்களே தங்கள் வசம் வைத்துக் கொள்ளலாம்.

முகவரி மற்றும் இருப்பிடச் சான்றுக்கான ஆவணமாக புதிதாக வழங்கப்பட்டுள்ள மின்னணு குடும்ப அட்டைகளையே காண்பிக்கலாம். மாநிலம் முழுவதும் இதுவரை 99 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள ஒரு சதவீதம் பேருக்கு விரைவில் வழங்கப்படும் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வானில் இரண்டு சூப்பர் நீல நிலாக்கள்

By நெல்லை சு. முத்து  |   Published on : 31st January 2018 11:02 AM
muthu
வானத் திரை அரங்கில் சூரிய விளக்கு அணைந்த பிறகுதான் நட்சத்திரங்கள் கண் சிமிட்டும். நிலாவும் அதே ரகம். ஆனாலும், இந்த நிலாவையும் நட்சத்திரங்களையும் ரசிப்பவர்கள் ஏராளமம். காவிய ரசம் சொட்டச் சொட்ட எத்தனையோ பக்தர்கள், ஜென் சித்தர்கள், கவிக் கொத்தர்கள், சொற் குயவர்கள், சிறுகதைத் தச்சர்கள் பலரும் படைப்புகள் தயாரித்து உள்ளனர்.

சுய ஒளி அற்ற நிலா, பிற ஒளியை ஏற்றுத்தானே 'நீல வான ஆடைக்குள் முகம் மறைத்து' இரவில் எட்டிப் பார்க்கிறது?

கவிதையும், ஆன்மிகம் மாதிரிதானே? உள்ளத்தால் உணரப்படுவது. எதையும் கூட்டம் திரட்டி, பொருள் ஈட்டி, வார்த்தைகளில் பிறர்க்கு உபதேசிக்க முற்பட்டால் அது நிச்சயம் உணர்வை ஊட்டுவதாக இருக்கவே முடியாது.
சூப்பர் ஸ்டார் என்றால் தெரியும். சூப்பர் நிலா என்றால் என்ன என்றுதானே கேட்கிறீர்கள்?

முப்பது ஆண்டுகளுக்கு முன்னம், அமெரிக்க சோதிடர்கள் பேரவையின் சிறப்புச் சான்றிதழ் பெற்ற ரிச்சர்ட் நோல்வி என்பவர்தான் இந்தக் கலைச் சொல்லினை அறிவித்தவர்.

கடந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில் முக்கிய 'சூப்பர் நிலா' சந்திர கிரகணம் இன்று (2018 ஜனவரி 31) கீழை - வடகிழக்கு வானில் நிகழ்கிறது.

இன்று வழக்கத்திற்கு மாறாக, சந்திரன் சராசரி அளவினைக் காட்டிலும் எட்டில் ஒரு பங்கு (12 சதவீதம்) பெரிதாகத் தோன்றும். பொலிவும் மூன்றில் ஒரு பங்கு (30 சதவீதம்) கூடுதல்.

இருள் கவ்விய நிலாவின் ஒரு பகுதி இலேசான சிவப்பு வண்ணம் படிந்தது போல இருக்கும். அதனால் இதற்கு, 'சூப்பர்', 'குருதி', 'ரத்த' நிலா போன்ற 'விருதுப் பெயர்கள்' சேர்த்து அழைக்கிறோம்.

சந்திர கிரகணம் என்பது நிலாவில் விழும் சூரிய ஒளியினை நமது பூமி மறைப்பதால் ஏற்படும் இயல்பான வானவியல் நிகழ்வு. இதனையே 'திங்களைப் பாம்பு கொண்ட' நிகழ்ச்சியாக வள்ளுவரும் (குறள் 1146) ஏற்றுப் பாடுகின்றார்.

திருமால் மோகினி வடிவில் தோன்றித் தேவர்களுக்கு அமுது பகிர்ந்து அளித்தார். அப்போது தேவர் வேடத்தில் சூரிய, சந்திரர் இருவருக்கும் நடுவில் இராகு புகுந்து அமுது வாங்கினார்.

சூரிய, சந்திரர்கள் அது குறித்துத் திருமாலிடம் புகார் கூறினர். அதனால் மோகினியான திருமால் தனது கையில் இருந்த சட்டுவத்தால் இராகு தலையில் அடித்தார். தலை இராகு என்றும், தேகம் கேது என்றும் பிளந்தது. இராகு கரும்பாம்பு. கேது செம்பாம்பு. இவர்கள் தங்களைத் திருமாலிடம் காட்டிக் கொடுத்த சந்திர, சூரியர்களை அவ்வப்போது மறைப்பதுதான் சந்திர, சூரிய கிரகணங்களாம்.

'பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்...' (நற்றிணை 128), 'அரவு நுங்கு மதி' (குறுந்தொகை 395), 'பாம்பு சேர் மதி போல' (கலித்தொகை 15), 'திங்களை உறின்' (கலித்தொகை 140), 'பால் மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும்' (கலித்தொகை 104) - எனப் பல பாடல்களில் சங்கப் புலவர்களும் குறிப்பிடுகின்றனர்.

அதனால்தானே கிரகண வேளைக்குச் சில உணவுக் கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டன. எதிலும் உடனடியாக மெய்ப்பொருள் காண்பதைவிட 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்ற சமரசத்தையும் புத்திசாலி வள்ளுவரே வகுக்கிறார்.

கிரகண வேளையில்மட்டும் அல்ல, மற்ற நேரம் கெட்ட நேரங்களில் கூட உண்பதும், நீர் அருந்துவதும் குளிப்பதும், குளிக்காததும் அவரவர் விருப்பம்.
போகட்டும். நளாயினி சூரியனை 'நில்' என நிறுத்தியது போன்ற புராண, கர்ண பரம்பரைக் கதைகள் நம் நாட்டிலும் உண்டு. பாரதப் போரின்போது சூரியனை கிரகண இருள் கவ்விய இதிகாசக் கதைகளும் நாமறிவோம்.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பாட்ரிக் துறவியார் அயர்லாந்து நாட்டு மக்களை தெய்வ விசுவாசிகளாக மாற்றிடவும் சூரிய கிரகணங்கள் உதவியுள்ளன!

அது சரி... நீல நிலா என்றால் புரியவில்லையா? நிலா, பூமியைச் சுற்றி வரும் கால அளவினை வெறுமனே மாதம் என்கிறோம். ஆனால், வானவியலில் பல வகை மாதங்கள் உள்ளன.

விண்வெளியில் ஒரு குறித்த விண்மீன் திசையினைப் பொருத்தமட்டில், ஒரு தடவை சுற்றும் சராசரி காலம் 'திசை மாதம்' (சைடீரியல்' மாதம்). இது 27.32 நாட்கள். இலத்தீன் மொழியில் 'சைடஸ்' என்றால் விண்மீன்.

இரண்டு பௌர்ணமிகளுக்கு இடையே 29.531 நாட்கள் இடைவெளி வரும். இதுவே ஆங்கிலத்தில் 'சைனோடிக் மாதம்'. தமிழில் 'திங்கள் மாதம்' ('லூனார்' மாதம்) என்று கூறலாம். 'சைனோடிக்' என்றால் சந்திப்பு.

அதனால் ஒரு சில ஆங்கில மாதங்களில் இரண்டு முறை பெளர்ணமி தோன்றினால், யாரும் வருத்தப்பட வேண்டாம். இரண்டாம் தடவை காட்சி தரும் முழு நிலவுக்கு 'நீல நிலா' என்பதுதான் பட்டப் பெயர்.

யாரேனும் ஆபாசப் படம் மாதிரி என்று நினைத்துவிட வேண்டாம். பச்சையான (பாட்டு), மஞ்சள் (பத்திரிகை), சிவப்பு (விளக்கு விவகாரம்), கருப்பு (பணம்) போல சில திரைப்படங்களுக்கு 'நீலம்' என்பது 'கெட்ட' வார்த்தை!

நமக்கு என்னவோ இந்தியாவில் ஒருவர் சொன்னார் என்பதை விட, எஸ்கிமோ சொன்னால்தான் ஏற்றுப் பதிவு செய்வோம். நியூஃபவுண்ட்லாந்து நாட்டுப்புற வழக்கு மற்றும் மொழி ஆவண நினைவுப் பல்கலைக்கழகத்தினர் நீல நிலா குறித்துப் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

1985-ஆம் ஆண்டு 'உலக நாட்காட்டிப் பதிப்பக'த்தின் வழி மார்கோ மக்லூன்-பஸ்டா மற்றும் ஆலிஸ் சீகல் தொகுத்து வெளியிட்ட 'குழந்தைகளுக்கான உலக சாதனைகள் மற்றும் உண்மைகள் நாட்காட்டி' (World Almanac of Records and Facts, World Almanac Publications, New York, 1985)  என்கிற நூலில் நீல நிலா பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன.

1883-ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் கிரக்கதோவா எரிமலை வெடித்தது. அதில் இருந்து சீறிப் படர்ந்த சாம்பல் புகை மூடி, அந்திவானம் பச்சை நிறம் பூண்டது. இரவில் முழு நிலாவும் நீல நிறமாகத் தோன்றியதாம்.

1951-ஆம் ஆண்டு மேற்கு கனடாவில் காடு தீப்பற்றி எரிந்தது. வட அமெரிக்காவின் வட கிழக்கு வானில் சாம்பல் திரைமறைவில் நிலவு நிறமாகக் காட்சி அளித்தது.

எப்போதாவது நிகழும் இத்தகைய சம்பவங்களால் மேனாட்டில் உதித்தது ஒரு பழமொழி. 'நீல நிலா உதித்தால்தான் நமக்குத் திருமணம்' என்கிற சொலவடை.
'அத்தி பூத்தாற்போல' என்பது போல... 'நீல நிலாக் காலம் வந்தால்தான் கட்சி தொடங்குவோம்' என்பது இங்கு நம் புது மொழி!

எப்படியோ, இத்தகைய மாதமிரு முழு நிலாக் காட்சியினை ஒரு நாட்டுப் புறக் கதையோடு இணைத்து மேனாட்டில் வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகள் அலைபரப்பாயின.

நமக்கு வந்த சோதனை, இங்கு ஊடகங்களில் இன்னமும் தமிழர்களை ஆற்றுப்படுத்த ஏதேனும் இருட்டு அரங்கின் நட்சத்திரம் உதிக்காதா என்றே விவாதங்கள்.

துயரச் சூழலில்தான் 'நீல நிலா கருக்கிறதே' என்று மேலைநாட்டவர் பாடுவார்களாம். முன்பு 'வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு' என்று பாடும்போது சோக நிலா, வெள்ளி ஆன காலம் காலாவதி ஆயிற்று.

இந்த ஆண்டு வேறு பல வானியல் நிகழ்வுகளும் அரங்கேற இருக்கின்றன. பண்டைக் காலத்தில் வானில் இருந்து விண்மீன் விழுந்தால் தீ நிமித்தம் என்று கருதப்பட்டது.

கோச்சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறப்பிற்கான தீ நிமித்தம் கருதினார் கூடலூர் கிழார்.

கார்த்திகை, அனுஷம், உத்திரம், மிருகசீரிஷம் ஆகிய விண்மீன்கள் இடையே 'கனை எரி பரப்பக் கல் எதிர்பு பொங்கி ஒரு மீன் விழுந்தன்றால்' (புறநானூறு 229: 11, 12) என்று பாடுகிறார்.

உண்மையில், நட்சத்திரங்கள் தரை இறங்கி வந்து விளம்பரம் நாடுவது இல்லை. வந்தவை எல்லாம் விண்கற்கள், அவ்வளவுதான்.

இப்போதைய 2018-ஆம் ஆண்டிலும் திசைதோறும் விண்கற்கள் பறக்க இருக்கின்றன. யாழ் ஒத்த உடுகணத்தின் பின்னணியில் லிரிட்டுகள் (ஏப்ரல் 22, 23); கும்ப உடுக்கணத்தில் ஈடா அக்வாரிட்டுகள் (மே 6, 7); டெல்டா அக்வாரிட்டுகள் (ஜூலை 27, 28); பெர்சியஸ் உடுக்கணப் பிராந்தியத்தில் பெர்சியடும் (ஆகஸ்ட் 12, 13); ட்ரக்கோனிடுகள் (அக்டோபர் 8); வேட்டைக்கார உடுக்கணத்தில் ஓரியனிடுகள் (அக்டோபர் 21, 22); மேட உடுக்கணத்தில் டாரிடுகள் (நவம்பர் 5, 6 ); சிம்ம உடுக்கணத்தில் லியோனிடுகள் (நவம்பர் 17, 18); மிதுன உடுக்கணத்தில் ஜெமினிடுகள் (டிசம்பர் 13, 14); சப்தரிஷி மண்டலத்தை ஒட்டி உர்சிடுகள் (டிசம்பர் 21, 22) என்று ஆண்டு நெடுகிலும், அதிகாலையிலோ பின்னிரவிலோ அடிவானில் சகட்டுமேனிக்கு விண்கல் மழைதான் போங்கள்!

ஆதலால், தெருவோரப் பலகைக்கு பாலபிஷேகம் செய்யும் நட்சத்திர ஆர்வலர்களே, பிறகு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்! திருமண மண்டபங்கள், நினைவு மண்டபங்கள் போன்ற பொது இடங்களில் திரண்டு நேரத்தையும் உழைப்பையும் வீண் அடிக்காதீர்.

குழந்தைகளுடன் அருகிலுள்ள அறிவியல் மையங்களுக்குச் சென்று சூப்பர் நிலா அற்புதங்களை தரிசியுங்கள். அடுத்த தலைமுறைக்கேனும் அறிவியல் தேடலில் ஆர்வம் ஊட்டுங்கள்.

NEWS TODAY 14.02.2026