Sunday, April 1, 2018

நாளை முதல் தாஜ்மகாலை ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பார்வையிட அனுமதி!

By DIN | Published on : 31st March 2018 07:30 PM  |


ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை நாளை முதல் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்று இந்தியாவின் தாஜ்மகால். காதலின் சின்னமான இது அனைத்து தரப்பையும் ஈர்த்து வருகிறது. தாஜ்மகாலை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு தொடர்ச்சியாக வருகை புரிகின்றனர்.

தாஹ்மஹாலுக்கு ஆண்டிற்கு சராசரியாக 80 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்வதாக சுற்றுலாத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தாஜ்மஹாலை பார்வையிட தினமும் சுமார் 50,000 சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இவர்களில் 5 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி இலவசம். இந்தியர்களுக்கும், வெளிநாட்டினருக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்ட போதிலும், நேரக்கட்டுப்பாடு என்பது இல்லை.

இந்நிலையில் தாஜ்மகாலை நாளை முதல் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ச்சியாக வரும் பார்வையாளர்களினால் உண்டாகும் மாசுக் கட்டுப்பாட்டில் இருந்து தாஜ்மஹாலை பாதுகாக்கும் வகையில், இவ்வாறு பார்வையாளர்களை அனுமதி நேரத்தில் மாற்றம் கொண்டு வர அதனைப் பாதுகாத்து வரும் தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் தாஜ்மஹாலை பார்வையிட 3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் சுற்றி பார்க்க விரும்புபவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கொலைக் களமாகும் காதல்!

By ஆர். வேல்முருகன் | Published on : 31st March 2018 01:25 AM

காதல் என்ற சொல்லை நினைத்தாலே அனைவருக்குமே குறிப்பாக இள வயதினருக்கு ஓர் இனம்புரியாத கவர்ச்சி மனதுக்குள் மத்தாப்புக் கோலம் போடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் சம்பவங்களைப் பார்த்தால் காதல் என்ற சொல்லுக்கான அர்த்தம் கொலைக்களம் என்று மாறிவிடுமா என்ற பயம் அனைவருக்குள்ளும் ஊசலாடி வருகிறது.

கடந்த சுமார் 15 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் காதல் பிரச்னைகளுக்காக சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் சுமார் 80 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் ஆணவக் கொலைகள் அரங்கேறி வருவதைப் பார்க்கிறோம். மூத்தோர் ஏற்காத காதலால்தானே இவை நிகழ்கின்றன. துர்மரணங்கள் மட்டுமே ஊடகங்கள் மற்றும் செய்தித் தாள்களில் வெளிவந்து பொதுமக்களின் கவனத்தைக் கவர்கின்றன.

ஆனால் காதலித்துத் திருமணம் செய்யும்வரை மானே, தேனே என்று கொஞ்சிப் பேசும் சில ஆண்மக்களின் உண்மை சொரூபம் திருமணத்துக்குப் பின் பெண்ணுக்குத் தெரிய வரும் தருணத்திலேயே அவள் மனதளவில் மாண்டுவிடுகிறாள். அப்போதுதான் பெற்றோரும் உற்றோரும் சொல்வது அவளுக்குப் புரியவரும்.

பொதுவாகவே வீடுகளில் பெண் பிள்ளைகளுக்குச் செல்லம் அதிகம். அதேபோல பெண்கள் வயதுக்கு வந்த பின் கட்டுப்பாடுகளும் அதிகம். ஆண்களுக்குச் செல்லமும் குறைவு, கட்டுப்பாடுகளும் குறைவு.
செல்லமாக வளர்க்கப்படும் பெண்கள் என்றாவது ஒரு நாள் தந்தையோ அல்லது தாயோ கடுமையாகப் பேசிவிட்டால் மனமுடைந்துவிடுகிறார்கள். இந்தப் பிரச்னையைத் தங்கள் தோழிகள் அல்லது தோழர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் நல்லவர்களாக இருந்தால் பிரச்னையில்லை. ஆனால் ஆறுதல் சொல்கிறேன் என்ற போர்வையில் இவர்கள் மீது உரிமை எடுப்பது போல நடித்து, காதலில் ஈடுபடுத்துவது மன்னிக்க முடியாத குற்றம்.
பொருத்தமில்லாத நபரை, வெறும் தோற்றத்தைக் கண்டு மயங்கி, காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து, காலம் கடந்து, தாங்கள் விழுந்த குழியிலிருந்து எவ்வாறு மீள்வது என அறியாத பெண்கள் எத்தனையோ. இது இப்படியென்றால் மதம் மாறித் திருமணம் செய்து கொண்டு வேதனைப்படுபவர்களை என்னவென்று சொல்வது?

பொதுவாக காதல் திருமணங்கள் அனைத்தும் தோல்வியில் முடிவதில்லைதான். ஆனால் பொருளாதார ரீதியாகப் பிரச்னை இல்லாத திருமணங்கள் மட்டுமே பெரும்பாலும் வெற்றி பெறுகின்றன என்பது கண்கூடு.
முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் அதிகமாக இருந்தன. தவறு செய்தால் சுட்டிக் காட்டுவதற்கு வீடுகளில் பெரியவர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது 95 சதவீத குடும்பங்களில் அந்த முறை சிதைந்துவிட்டது. இப்போதுள்ள ஒரு சில பெரியவர்கள் மகன், மகள் குழந்தைகளுக்கு இடையில் பிரிவினையைத்தான் விதைக்கின்றனர். இதனால் அன்பு, பாசத்துடன் வளர வேண்டிய அடுத்த தலைமுறை பிரிவினையைக் கற்றுக் கொள்கிறது.
இதுபோன்ற குழந்தைகள்தான் பெரும்பாலும் காதல் எனும் புனிதத்தைக் கெடுக்க வந்து, தம் வாழ்விலும் கேடு விளைவித்துக் கொள்கின்றனர். அவசரமாகக் கல்யாணம் செய்து கொண்டு, குழந்தையையும் பெற்றுக் கொண்டு, சாவகாசமாக சங்கடப்பட்டுக் கொண்டே வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் கடந்த சில மாதங்களுக்குள் 6-க்கும் மேற்பட்ட கொலைகள். அதன் பின்னணியில் இருப்பது பெரும்பாலும் ஒருதலைக் காதல்தான். சென்னையில் அண்மையில் கல்லூரி வாசலில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்குத் தேவையான செலவுகளைச் செய்து படிக்க வைத்த அவளுடைய காதலன், அப்பெண்ணின் பாராமுகத்தால் கொலை செய்ததாகக் கூறியிருக்கிறான். இவர்கள் விவகாரம் அனைவருக்குமே தெரியும் என்கிறார்கள். ஆனால் உண்மை என்பது இந்த சம்பவங்களில் மட்டும் அடங்கிப் போவதில்லையே. விசாரணை முடிந்து கொலையாளிக்குத் தண்டனை கிடைத்தாலும் போன உயிர் திரும்ப வருமா? அந்தத் தீர்ப்பினால் மட்டுமே சமூக நிலை மாறிவிடுமா? அமில வீச்சு ஒரு தனிக் கதை.

பெண்களைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் இதைப் போல காதலில் சிக்கி சின்னாபின்னமாகும்போது அல்லது காதல் திருமணம் செய்யும்போது உறவு மற்றும் ஊர்க்காரர்கள் பேசும் பேச்சு சொல்லி மாளாது. இதற்குப் பயந்துதான் பெரும்பாலானவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதில் நவநாகரிகப் பெருநகரம், சிற்றூர் கிராமம் என்ற பேதமில்லை.
மகளோ அல்லது மகனோ தவறு செய்யும்போது கண்டிக்கும் பெற்றோர், அவர்கள் நல்லது செய்யும்போது அதைப் பாராட்டவும் தயங்கக் கூடாது. அவரவரின் சிறு உலகில் குறுகி அடைந்துவிடாமல், குறைந்தபட்சம் விடுமுறை தினத்திலாவது வாரிசுகளின் மேல் தங்களுக்கு அக்கறை உண்டு என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போது எந்த விஷயமாக இருந்தாலும் அதைப் பகிர்ந்து கொள்வார்கள்.

இவ்வாறு தங்களின் அன்பை வாரிசுகளுக்குப் புரிய வைப்பதன் மூலம், இளையோருக்குத் தவறு செய்யத் தோன்றாது. பெற்றோர் தங்கள் மீது வைத்திருக்கும் அன்பை நினைத்தாவது பெற்றோருக்குத் தலைகுனிவை ஏற்படுத்தக் கூடாது என்ற மனநிலை குழந்தைகளுக்குத் தோன்றும். அப்போதாவது ஒருதலைக் காதலும் அதனால் விளையும் கொலைகளும் தடுக்கப்படும்.
வருமான வரி தாக்கல்: ஆணையர்கள் எச்சரிக்கை

Added : ஏப் 01, 2018 00:58 |

  சென்னை: 'வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, வருமான வரித்துறை ஆணையர்கள் கூறினர்.கடந்த, 2015 - 16, 2016 - 17ம் நிதியாண்டுகளுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, நேற்றுடன் நிறைவடைந்தது.வரி தாக்கல் செய்ய, காலக்கெடு நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்பதால், சென்னை, வருமான வரி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட, இணையதள சிறப்பு கவுன்டர்களில், ஏராளமானோர் வரி கணக்கு தாக்கல் செய்தனர். இணையதளம் வாயிலாக, வரி கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு, நேற்று இரவு, 12:00 மணி வரை அவகாசம் கிடைத்தது.

இது குறித்து, வருமான வரித்துறை ஆணையர்கள், சங்கரன், பழனிவேல்ராஜன் கூறியதாவது: இரண்டு நிதியாண்டுகளுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்தது. கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், இனிமேல் தாக்கல் செய்ய முடியாது. மேலும், அவர்கள் மீது, வருமான வரி சட்டப்படி, நடவடிக்கைகள் எடுக்கப்படும்.வருமான வரி, அதற்கான வட்டி, அபராதம் வசூலித்தல் போன்றவையும், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், கடந்த நிதியாண்டுக்கு என நிர்ணயிக்கப்பட்ட, 71 ஆயிரத்து, 500 கோடி ரூபாய், வரி வருவாய் இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகரிக்க வாய்ப்பு : வருமான வரித்துறை நடவடிக்கையால், 2016 - 17ம் ஆண்டுக்கான, வருமான வரி செலுத்துதல் மற்றும் கணக்கு தாக்கல் செய்ததில், புதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த, 2015 - 16, 2016 - 17ம் நிதியாண்டுகளுக்கான, வருமான வரி தாக்கல், நேற்றுடன் முடிந்தது. கூடுதலாக, வரி வசூலிக்க, வருமான வரித்துறை, புதிய வழிமுறைகளை கையாண்டுள்ளது. இதன் வாயிலாக, புதிதாக கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வருமான வரி வசூலில், ஆண்டுதோறும், பல உத்திகள் கடைபிடிக்கப்படும். அவை, சட்டத்திற்கு உட்பட்டு மாற்றப்படும். அதன்படி, நடப்பு ஆண்டில், வரி வருவாயை அதிகரிக்க, 10க்கும் மேற்பட்ட புதிய வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. இதன் வாயிலாக, மாத சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்களை தவிர்த்து, கூலி வேலை செய்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள் போன்ற பிரிவினருக்கும், வருமான வரி செலுத்தும்படி கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு, அவர்கள் தெரிவித்த பதிலில், குறிப்பிட்ட வருவாய் தவிர, இதர வருவாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கண்காணிக்க, தனி ஆணையர் நியமிக்கப்பட்டு, அவருக்கு கீழ், பல அதிகாரிகள் பணிபுரிகின்றனர். அதனால், இந்த ஆண்டு, புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அவர் கூறினார்.

எதிர்பார்ப்பு : கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர். நடப்பாண்டில், இந்த எண்ணிக்கை, சில தினங்களுக்கு முன்னரே, நான்கு லட்சத்தை எட்டியது; தற்போது, ஆறு லட்சத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு, முதல் முறையாக, வருமான வரித்துறை தலைமை ஆணையரின் கையெழுத்திட்ட, 20 லட்சம் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டதும்; வரித் தாக்கல் அவகாசம் குறைக்கப்பட்டதும், முக்கிய காரணம்.
கோடை சுற்றுலா அறிவிப்பு

Added : ஏப் 01, 2018 00:01

சென்னை: தமிழக சுற்றுலாத்துறை, கோடை கால சுற்றுலாக்களை அறிவித்துள்ளது.சுற்றுலா பயணி களின் வருகையில், தமிழகம், முதன்மை மாநிலமாக உள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு, ஏப்., முதல் ஜூன் வரை, பல்வேறு சுற்றுலாக்களை அறிவித்துள்ளது. இதன்படி, ஊட்டி, கொடைக்கானல், ஒகேனக்கல், பெங்களூரு, மூணாறு ஆகிய ஐந்து இடங்களுக்கு, வெள்ளி இரவு புறப்பட்டு, திங்கள் காலை திரும்பும் வகையில், மூன்று நாள் சுற்றுலா திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.சுற்றுலா செல்லும் இடம், பஸ் வசதியை பொருத்து, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதற்கான விபரங்களை, சென்னை, வாலாஜா சாலையில் உள்ள, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளரை நேரிலோ, 044 - 2533 3333, 2533 3857 ஆகிய தொலை பேசி எண்களிலும், 1800 425 31111 என்ற, கட்டணமில்லா தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.



Friday, March 30, 2018

2 months after fare hike, MTC’s commuter base shrinks by 30% 

R. Srikanth 

 
CHENNAI, March 30, 2018 00:00 IST

The corporation had projected Rs. 1 crore boost in daily collection but has achieved only Rs. 30 lakh

When the Metropolitan Transport Corporation (MTC) announced a steep fare hike on January 20, it projected a 40% increase in revenue. Officials at that time did not talk of commuters finding cheaper options to the State-owned buses. But two months on, the chickens have indeed come home to roost. The corporation’s customer base has shrunk by some 30%, leading to a dent in the hike in revenue.

A senior official of the MTC said that before the fare revision, the daily collection was Rs. 2.5 crore. This has increased to Rs. 2.8 crore. Officials had earlier claimed the increase would be Rs. 1 crore.

The suburban train services on all the four sections, with their lower fare and inexpensive monthly pass system, have been the principal beneficiary. The Tambaram/Chengalpattu line and the Mass Rapid Transit System have been big gainers. Share autos are filling the gap, especially where bus services are poor.

Holding its ground

The deluxe services seem to be particularly off-putting for commuters, who say that the old, creaky buses with seats that are peeling off in no way justify the premium fares. Where the MTC has been able to hold its ground are on arterial routes In these, it has increased the number of ordinary bus services and replaced the deluxe buses.

On some routes, the lack of viable alternatives has forced commuters to stay loyal to the MTC. Several bus services like 27 (Anna Square to Avadi), 29C (Besant Nagar to Perambur), D70 (Velachery to Ambattur Industrial Estate via Koyambedu), 583 (Tambaram Sanatorium to Sriperumbudur via Oragadam), and 66 (Keelkattalai to Poonamallee via Kundrathur) continue to be attractive.

S. Ranga, a resident of Nanganallur, said several bus services in the area, which were previously operated in the express or deluxe mode, had been converted to ordinary services. He pointed out that the MTC could do well by operating bus services from Nanganallur to Ambattur, as there are no direct services on this stretch.

The only saving grace for the MTC has been the monthly bus pass and Rs. 1,000 pass segments. Anxious commuters seem to find the discounts offered by these passes more attractive now. A senior official of the corporation said that in the past two months, the sale of the Rs. 1,000 bus passes had been increasing, with 85,000 passes sold in February, earning Rs. 8.5 crore, and 94,000 sold in March, earning Rs. 9.4 crore. The sale of the monthly season pass has also increased. February saw 39,906 passes sold (revenue Rs. 1.57 crore) and March saw 41,000 (revenue Rs. 1.61 crore).
Man drinks concoction to reduce weight, dies 

Special Correspondent 

 
CHENNAI, March 30, 2018 00:00 IST

He bought it from pushcart vendor

A 27-year-old man, who reportedly consumed a concoction to reduce his weight, died at the Rajiv Gandhi Government General Hospital on Thursday.

According to the police, Pradeep Kumar, 27, a resident of Tiruveedhi Amman Koil Street in Ayyapakkam, was in the real estate business.

Two days ago, he purchased the concoction from a pushcart vendor near his locality. “He consumed it on Wednesday morning,” said a police officer attached to the Thirumullaivoyal police station.

On feeling uneasy around noon, he went for a check-up to a private hospital near his house, the police said. “He returned home after being told everything was normal,” the officer said.

On Wednesday night, he complained of nausea and giddiness and was rushed to the GH. He died on Thursday morning.

Awaiting report

A senior police officer said that the exact cause of death would be known only after getting the post-mortem report.

Authorities in the GH said the concoction was a herbal preparation. “He was admitted on Wednesday night in a very critical condition after being referred from a nursing home at Ambattur. After six hours, he died,” said a doctor.
HC rejects DVAC’s plea in case against Ponmudi 

Special Correspondent 

 
CHENNAI, March 30, 2018 00:00 IST

Directorate wanted to cross-examine its own witness

The Madras High Court on Thursday rejected the Directorate of Vigilance and Anti Corruption’s (DVAC) plea to treat one of its witnesses in a disproportionate assets case booked against former DMK Minister K. Ponmudi and his wife as a “hostile witness” and consequently permit the prosecution to cross-examine him.

Justice G. Jayachandran, however, directed the trial court to take such a plea into account and also assess the credibility of the witness at the time of appreciating his evidence. He added that it would be open to the prosecution to express its disinclination to own the evidence of any of its witnesses.

The judge pointed out that the Code of Criminal Procedure permits the prosecution to examine its witnesses in chief and the accused to cross-examine those witnesses. The difference between them was that leading questions could not be posed to the witnesses during the examination in chief.

In so far as the present case was concerned, the DVAC had examined Swaminathan, a relative of Mr. Ponmudi as a prosecution witness. During such examination, the witness had feigned ignorance about sale of certain gold jewels and said that he was not aware as to whom and for how much those jewels were sold.

However, at the time of his cross-examination, he claimed to have initially sold 80 sovereign of jewels for a consideration Rs. 2.4 lakh and another 110 sovereign of jewels for Rs. 3.5 lakh and handed over the proceeds to his mother. This contradiction forced the DVAC to raise a plea for treating him as a hostile witness.

Court’s discretion

Objecting to his request, senior counsel R. Shunmugasundaram, representing the former Minister, contended that there was a difference between hostility and an unfavourable statement of a witness. He claimed that a witness could not be treated as hostile witness after the completion of cross-examination by the defence side.

After hearing both sides, the judge said it was up to the trial court to exercise its discretion under Section 154 of the Evidence Act.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...