Sunday, April 15, 2018


சிங்கப்பூர் விலங்குத் தோட்டப் பனிக்கரடி Inuka கருணைக்கொலை செய்யப்படலாம் 

12/4/2018 14:29 Update: 12/4/2018 15:10

சிங்கப்பூர் விலங்குத் தோட்டப் பனிக்கரடி Inuka-வின் உடல்நலம் குன்றிவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மூட்டுவலி, பற்கள் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றுடன் எப்போதாவது காதில் கிருமித்தொற்று ஏற்படுவதால் Inuka சிரமப்படுவதாகக் கூறப்பட்டது.

மூப்படைவதால் Inukaவின் தசைகள் செயல் இழந்துவருகின்றன. அது நடப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகிறது.

இம்மாதக் கடைசியில் அதற்கு கூடுதல் உடல்நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

தீவிர சிகிச்சைக்குப் பிறகும் Inuka-வின் உடல்நலம் முன்னேறாவிட்டால், கருணைக்கொலை செய்ய முடிவெடுக்கப்படலாம்.

பொதுவாக மனிதப் பராமரிப்பில் இருக்கும் பனிக்கரடிகளின் சராசரி-ஆயுள் 25 ஆண்டு என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் Inuka-வின் தற்போதைய வயது 27.

ஏப். 16-இல் தாம்பரம் - கொச்சுவேலி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்


15.04.2018

சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தாம்பரம் - கொச்சுவேலி இடையே திங்கள்கிழமை (ஏப். 16) முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்தது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை தாம்பரத்தில் இருந்து திங்கள்கிழமை (ஏப்.16) மாலை 5.30-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் அடுத்த நாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11.45-க்கு கொச்சுவேலி சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலில் 20 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இணைக்கப்படும். செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், சாத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

Dailyhunt

அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைபெற வசதி இல்லை: ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைபாடுகள் நீக்கப்படுமா? 



15.04.2018  dinakaran
நாகர்கோவில்: ஓய்வூதியர் காப்பீடு திட்டத்தில் குறைபாடுகளை நீக்க வேண்டும், அரசே இத்திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்று ேகாரிக்கை வலுத்து வருகிறது. தமிழகத்தில் 2016ம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி 4 லட்சத்து 78 ஆயிரத்து 581 ஓய்வூதியர்களும், 2 லட்சத்து 31 ஆயிரத்து 396 குடும்ப ஓய்வூதியர்களும் உள்ளனர். 4 ஆண்டு காலத்திற்கு இவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை 455 கோடி ஆகும். இவர்களின் 4 ஆண்டு கால மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக 100 கோடி கூட செலவு செய்யப்படவில்லை என்று ஓய்வூதியர் சங்கங்கள் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளன. ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு யுனைடெட் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு முழுமையான செலவு தொகை காப்பீடு நிறுவனம் மருத்துவமனைக்கு வழங்குவது இல்லை. ஓய்வூதியர்கள் கூடுதல் செலவு தொகையை செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. பெரும்பாலான மருத்துவமனைகள் காப்பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதில்லை. இதனால் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் உடனுக்குடன் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை பெறும் வசதி இருக்கிறது.

ஆனால் ஓய்வூதியர்கள் தங்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழிவகை இல்லை. வெளிமாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் இல்லை. முன்பணம் இல்லாத சிகிச்சை என்பதாலேயே மருத்துவமனைகளில் அளிக்கின்ற நெருக்கடியாலும், நோயின் தீவிர தன்மையாலும் மருத்துவ செலவு தொகையை ஓய்வூதியர்கள் முன்னரே செலுத்திவிடுகின்றனர். அப்படிப்பட்ட செலவுத்தொகை ஓய்வூதியர்களுக்கு திரும்ப முழுமையாக வழங்கப்படுவது இல்லை. அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்படுவது இல்லை. மேலும் அடையாள அட்டை வழங்கும் பொறுப்பை காப்பீடு நிறுவனம் வைத்துள்ளதால் அனைவருக்கும் கிடைப்பது இல்லை என்பது போன்ற குறைபாடுகள் ஓய்வூதியதாரர்களால் பட்டியலிடப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் புதிய ஒப்பந்தம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு 1.7.2018 முதல் 30.6.2022 வரை ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. அப்போது இந்த குறைபாடுகளை களைய வேண்டும், மருத்துவ காப்பீடு தொகை அளவை நான்காண்டு காலத்திற்கு 5 லட்சமாக உயர்த்த வேண்டும், கேன்சர் போன்ற நோய்களுக்கு 7.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் சங்கத்தினர் அதிகாரிகளை சந்தித்து பேரணியாக வந்து மனுக்களை அளித்திருந்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், 'மெடிக்கல் அட்டென்டன்ஸ் சட்டப்படி மருத்துவ செலவுத்தொகை முழுவதையும் அரசோ, காப்பீட்டு நிறுவனமோக வழங்க வேண்டும். செலவு தொகை மறுக்கின்ற அங்கீகாரம் நிறுவனத்திற்கும் அரசுக்கும் இருக்க கூடாது. தற்போது நீதிமன்றத்தை நாடியே செலவுத்தொகையை பெற்றுக்கொள்ளும் நிலை ஓய்வூதியர்கள் பலருக்கும் இருக்கிறது. ஓய்வுகாலத்தில் நோய் பாதிப்பு, சிகிச்சைக்கான அலைச்சல், பண விரயம் என்பது மட்டுமின்றி நீதிமன்றத்திற்கு அலைய வேண்டிய வகையில்தான் தற்போதைய காப்பீடு திட்டம் உள்ளது. எனவேதான் தமிழக அரசே அரசு துறை ஓய்வூதியர்களின் காப்பீடு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் நோய்களுக்கான பட்டியலுக்கு அதற்கு மட்டுமே காப்பீடு பொருந்தும் என்று இல்லாமல் எல்லா மருத்துவமனைகளிலும் எல்லா நோய்க்கும் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். கேன்சர், சர்க்கரை நோய், ரத்த அழுதம், டயாலிசிஸ் போன்றவற்றுக்காக மாதம்தோறும் அதிக தொகையை ஓய்வூதியர்கள் செலவு செய்கின்றனர். தமிழக அரசு இந்த வைக்கும் செலவு தொகையை காப்பீடு திட்டத்தில் அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ குழு ஏற்படுத்த வேண்டும். அதில் காப்பீடு நிறுவனம், ஓய்வூதியர்கள் சங்க பிரதிநிதிகளும், அரசு மருத்துவர்களும் இடம்பெற வேண்டும். இதற்கு மாவட்ட கருவூல அதிகாரி வழிநடத்துபவராக இருத்தல் வேண்டும். மாதம்தோறும் கூட்டங்களை கூட்டி மருத்துவ காப்பீடு திட்டம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். புதிய காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும்போது இந்த குறைபாடுகளை களைய வேண்டும்' என்றனர்.


Dailyhunt
எதிர்கால மருத்துவரா? பிடி 300% கட்டண உயர்வு!

Published : 13 Apr 2018 09:14 IST


எந்த ஒரு துறையிலும் தனியார்மயத்தை அனுமதிப்பதும் அதிகாரமளித்தால் முதலாளிகளின் லாப வேட்கை எங்கு இட்டுச்செல்லும் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் உத்தராகண்ட் மாநிலத்தில் மருத்துவக் கல்வி விவகாரத்தின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்கான கட்டணங்களை தாங்களே நிர்ணயித்துக்கொள்ள வழிவகுக்கும் சட்டத்தை சமீபத்தில் நிறைவேற்றியது உத்தராகண்ட் பாஜக அரசு. விளைவு உடனேயே தெரிய ஆரம்பித்துவிட்டது. ஸ்ரீ குரு ராம் ராய் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் & ஹெல்ட் சயின்ஸஸ் எனும் தனியார் கல்லூரியும் எம்.டி படிப்புக்கான கட்டணத்தை 300% வரை அதிகரித்தது. கொந்தளித்துப்போனார்கள் மாணவர்கள். விளைவாக அரசு தலையிட்டு முட்டுக்கட்டை போட்டது. ஆனால், சட்டம் ஒன்றை இயற்றிவிட்டு எப்படி எல்லாவற்றையும் தடுக்க முடியும்? அடுத்து, ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் என்ற கல்லூரி, மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான கட்டணத்தை 300%-க்கு மேல் உயர்த்தியுள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். ஏற்கெனவே அரசு நிர்ணயித்திருந்த கட்டணமான ரூ.7,38,835-ஐக் காட்டிலும் அதிகமான கட்டணத்தைக் கல்லூரி நிர்வாகம் பெற்றுவந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது மேலும் அது அதிகரித்து ரூ.30 லட்சம் ஆகியிருக்கிறது என்கின்றனர். இதேபோல, குரு ராம் ராய் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பின் முதலாமாண்டுக் கட்டணம் கடந்த ஆண்டு ரூ.19.76 லட்சமாக இருந்ததாகவும் இப்போது அது ரூ. 26.6 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரசு தங்களுக்கு எந்த நிதி உதவியும் செய்வதில்லை என்றும், தாங்கள் நிகர்நிலைப் பலகலைக்கழகங்களுக்கு தங்கள் கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை உண்டு என்றும் இந்தக் கல்லூரி நிர்வாகங்கள் அலட்சியமாகப் பதில் சொல்கின்றன. அரசோ வேடிக்கை பார்த்து நிற்கிறது!
சிறுவனுக்கு பாலியல் தொல்லை; இங்கிலாந்து போதகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி

Published : 14 Apr 2018 08:23 IST 
 


ஜோனதான் ராபின்சன்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்திலிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, இங்கிலாந்து கிறிஸ்தவ போதகர் ஜோனதான் ராபின்சன் (70) என்பவருக்கு, வள்ளியூர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வள்ளியூர் அருகே சின்னம்மாள்புரத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து `கிரேல் டிரஸ்ட்’ என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோனதான் ராபின்சன் நடத்தி வந்தார்.

இந்த இல்லத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுவனை சென்னை, புதுடெல்லி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஜோனதான் ராபின்சன் மீது, பெங்களூரிலுள்ள ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வள்ளியூர் போலீஸில் புகார் அளித்தது.

இதன்பேரில் ஜோனதான் ராபின்சன் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.

இதையறிந்த ஜோனதான் ராபின்சன் இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார். பின்னர் அவரை சர்வதேச போலீஸாரின் துணையுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் வள்ளியூர் நீதிமன்றத்தில் கடந்த 26.11.2015-ல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவர் சரணடைந்தார்.

விசாரணை முடிந்து, இவ்வழக்கில், ஜோனதான் ராபின்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து, மாஜிஸ்திரேட் செந்தில்குமார் நேற்று தீர்ப்ப ளித்தார்.
Tamil Nadu: 12 registration officials booked for taking bribe

By Bagalavan Perier B | Express News Service | Published: 15th April 2018 05:27 AM |

VILLUPURAM: In a major anti-corruption drive, the Vigilance and Anti-Corruption wing of the police has booked a district registrar and 11 sub-registrars in the district on bribery charges. The move comes hours after anti-corruption sleuths raided the premises of district registrar office in the Master Plan Complex in Villupuram on Friday. The raids were conducted based on information that the district registrar was collecting bribe from sub-registrars.

During a raid conducted at a sub-registrar office in Villupuram last month, the sleuths had seized unaccounted money and received information that bribery did not stop even after online registration of documents came into effect. They also got startling information that the sub-registrars were giving a portion of the collected bribe to the district registrar during the monthly meeting of registration officials. Based on this information, the sleuths had been waiting for the next monthly meeting to take place.

On Friday, as planned, a police team under DSP Ashok Kumar went to the district registration office during the monthly meeting. They locked the gates and doors of the premises and started a raid. During the raids, they seized Rs 42,630 from District Registrar Kumaresan’s office and another Rs 50,000 from his official car.

Upon inquiry, Kumaresan could not give a satisfactory explanation for the source of the cash. The officials reportedly seized some documents as well, vigilance sources said. The sub-registrars were also questioned during the raids. Based on preliminary inquiries, the district registrar has been booked for receiving bribes and the 11 sub-registrars for giving bribes. Sources said that Kumaresan would be arrested soon and department-level action be taken against him.
Ex-Union min booked for abusing collector 

TIMES OF INDIA 15.04.2018

Hyderabad: A criminal case was registered against senior Congress leader and former Union minister Sarve Satyanarayana on Saturday on the charges of abusing Medchal district collector Prabhakar Reddy and attacking a revenue official at an official function got up to celebrate the birth anniversary of BR Ambedkar in Kukatpally.

While making a speech, Satyanarayana turned towards the collector and rained abuses on him saying the IAS babus will have to face the consequences once the Congress government comes to power in the next elections.

As Satyanarayana kept verbally attacking the collector, revenue inspector Ashwin Kumar objected to his behaviour. At this stage, the former minister lost his cool and pushed away Ashwin causing an injury on his nose.

Police, who were present, intervened and controlled the situation before followers of Satyanarayana and TRS cadre charged at each other. TNN

NEWS TODAY 27.06.2026