Saturday, April 21, 2018

Now, take direct trains from Chengalpet to Gummidipoondi
S Rly Launches Four Suburban Services To Up Patronage


TIMES NEWS NETWORK 21.04.2018

Chennai: Commuters heading from Chengalpet or Tambaram to Gummidipoondi need not change trains at Beach railway station as Southern Railway will from April 23 operate four new cross-sectoral nine-car EMU train services between Gummidipoondi and Tambaram/ Chengalpet.

Aimed at meeting passenger demands, these services will be operated from Monday to Friday and will not be available during the weekends, Southern Railway said.

Train no. GC2 will leave Gummidpoondi at 6am to reach Chengalpet at 9.50am via Chennai Beach and Tambaram. In the return direction, train no. CG1will leave Chengalpet at 10.30am to reach Gummidipoondi at 1.55pm via Tambaram and Chennai Beach stations.

Train no.GT2 will leave Gummidipoondi at 2.25pm to reach Tambaram at 4.55pm via Chennai Beach. In the return direction, Train No.TG1 will leave Tambaram at 6.05pm to reach Gummidipoondi at 8.40pm via the Chennai Beach station.

In addition to these, a passenger special will be operated on weekends. The special will leave Gummidipoondi at 8.50pm on Fridays to reach Velachery at 11.15pm, starting from April 27 via Beach. In the return direction, the special will leave Velachery at 7.40pm on Sundays to reach Gummidipoondi at 10.15pm starting from April 22 via Beach station.

Sources say there are a number of passengers who travel up to Park station and then walk across Poonamalee High Road, to take trains towards Gummidipoondi on the northern line from Moore Market Complex (MMC) as the frequency of trains to Gummipoondi from Beach station is poorer. Introduction of the through trains will cut the need to make the detour.

For S Balaji, who travels from Ennore to Guindy, this cross sectoral service will come as a boon. “I won’t need to change trains at Chennai Central anymore. It will be a comfortable ride,” he said.

Railway sources say that the frequency of these through services can be increased further if another line is constructed between Park and Chennai Beach stations. Currently, there are only three lines which are used for suburban and passenger train services.

However, this will mean the state government has to give a portion of the Rajiv Gandhi Government General Hospital (RGGGH) for the fourth line. Railways is trying out more through trains as similar services from Tiruvallur and Gummidipoondi to Velachery pushed up patronage.

BETTER WEEKDAY COMMUTE


சிறுமியரை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை அளிக்க முடிவு 

dinamalar

புதுடில்லி: சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, துாக்கு தண்டனை கிடைக்கும் வகையில், 'போஸ்கோ' சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.



ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சமீபத்தில், 8 வயது சிறுமி, ஒரு கும்பலால் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உ.பி., மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், கடந்த ஒரு வாரத்தில், மூன்று சிறுமியர், பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர்.சிறுமியர் பாலியல் கொடுமைக்கு ஆளாவது தொடர்பாக, வழக்கறிஞர்,

அலோக் ஸ்ரீவத்சவா, உச்ச நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்தார்.

'போஸ்கோ':

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர், அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணு கோபால் ஆஜரானார்.அப்போது, அவர் கூறியதாவது: பாலியல் கொடுமைகளுக்கு சிறுமியர்ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதையடுத்து, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு, துாக்கு தண்டனை கிடைக்கும் வகையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் எனப்படும், 'போஸ்கோ' சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, இந்தவழக்கு விசாரணை, வரும், 27க்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச் சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மேனகா, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், இதை எதிர்கொள்வது குறித்து, போலீசாருக்கு பயிற்சி அளிக்க வேண்டிய அவசியம் உருவாகி உள்ளது.

முன்னுரிமை

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணைக்கு, முன்னுரிமை தரும்படி, அனைத்து போலீஸ் அதிகாரிகளும் அறிவுறுத்தபட வேண்டும்.இந்தவிசாரணைக்கு தடையாக இருக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதிப்பெண் பிழை இருந்தால்தலைமை ஆசிரியருக்கு அபராதம்

Added : ஏப் 21, 2018 00:21

போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருப்பதாக, மனுக்கள் பெறப்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியருக்கு, அபராதம் விதிக்கப்படும் என, அரசு தேர்வுகள் துறை எச்சரித்து உள்ளது.பொதுத்தேர்வு எழுதிய, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின், பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள, மூன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.மாணவர்களின் இனிஷியல், பெயரில் திருத்தம் இருந்தால் மாற்றி தர, தற்போது கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதன்படி வரும், 23ம் தேதிக்குள், மாணவர்களின் விபரங்களை சரிபார்த்து, முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு தேர்வுகள் துறைஇயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிக்கையில், 'மதிப்பெண் சான்றிதழ்களில், பிழை இருப்பதாக மனுக்கள் அனுப்பப்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியருக்கு அபராதம் விதிக்கப்படும்.'இத்தொகையை, சொந்த பணத்தில் இருந்து செலுத்த வேண்டியிருக்கும். மேலும், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்படும்' என, கூறியுள்ளார்.

- நமது நிருபர் -
 எதற்கெடுத்தாலும், போராட்டத்தில் ,குதிப்போரால் ,மக்கள்,எரிச்சல்!
தமிழகத்தில், எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிப்போரால், மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில், எதிர்மறை கருத்துக்கள் பரப்புவதை பார்த்து, கடும் கோபம் அடைந்துள்ளனர். அவசியமற்ற போராட்டங் களால், அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதால், வெறுப்படைந்துள்ள மக்கள், அரசு கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.




தமிழகத்தில் போராட்டம் நடத்துவது, சமீப காலமாக, 'பேஷன்' ஆகி வருகிறது. எதற்கு போராட்டம் நடத்த வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல், எதற்கெடுத்தாலும் ரோட்டை மறிக்க இறங்கி விடுகின்றனர்.

தாமதம்

காவிரி பிரச்னையில், மேலாண்மை வாரியம் அமைக்காமல், மத்திய அரசு தாமதம் செய்வதை எதிர்த்து, மாநில அரசு, உச்ச நீதிமன்றம் சென்றுஉள்ளது. உச்ச நீதிமன்றம், மத்திய அரசை கண்டித்ததுடன், செயல் திட்டம் சமர்ப்பிக்க, கெடு விதித்துள்ளது.காவிரி பிரச்னையில், நம் உணர்வை வெளிப்படுத்த, அனைவரும் இணைந்து, அமைதி வழியில் போராடினால் வரவேற்கலாம்.

ஆனால், ஒவ்வொரு கட்சியினரும், தங்க ளுடைய செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தனிப்பட்ட முறையில், கடையடைப்பு, பந்த், பஸ் உடைப்பு, மறியல், நடைபயணம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என, பல்வேறு போராட்டங்களை நடத்து கின்றனர்.காவிரி போராட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில், ஐ.பி.எல்., கிரிக்கெட்

போட்டி நடத்த, எதிர்ப்பு தெரிவித்து போராடினர். பாதுகாப்புக்கு வந்த போலீசாரை தாக்கினர். அதைத்தொடர்ந்து, பிரதமர் வருகையை எதிர்த்து, கறுப்புக் கொடி காட்டினர். தற்போது, கவர்னருக்கு எதிராக போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

பாதிப்பு

திடீர் போராட்டங்களால், ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்படுகிறது; பதற்றம் ஏற்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதால்,அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இதற்கிடையில், சமூக வலைதளங்களில், போராட்டக்காரர்களை துாண்டும் விதமாக, சிலர் பிரச்னைக்குரிய கருத்துக்களை பதிவிடுகின்றனர். அதற்கு பலர் எதிர்வினையாற்ற, தேவையற்றபிரச்னை வெடிக்கிறது.

ஏதாவது ஒரு விதத்தில், எதிர்மறை கருத்துக்களை பரப்பி, பிரச்னையை துாண்டி விடுவ தையே, சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுவும், மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.சிலர் தங்களுடைய கருத்துக்கு, யாரும் எதிர் கருத்தே கூறக்கூடாது என, நினைக்கின்றனர். நாகரிகமற்ற விதத்தில், தரம் தாழ்ந்த விமர்சனங்கள் அடங்கிய, 'மீம்ஸ்' போட்டு, அசிங்கப்படுத்துகின்றனர்.

அதுபோன்றவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்காமல், 'ஆண்மை இருந்தால், முகவரி யோடு விமர்சியுங்கள்' என, அமைச்சர் ஜெயகுமார் சவால் விடுவது, அரசின் இயலா மையை தான் காட்டுகிறது.எனவே, சமூக வலைதளங்களில், தேவையின்றி, எதிர்மறை கருத்துக்களை பரப்புவோர் மீதும், மக்களை பாதிக்கும் விதமான போராட்டங்களில் ஈடுபடுவோர் மீதும், இனிமேலாவது, அரசும், போலீசும், கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த மாநிலத் தின், ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழகத்தில், 'நாங்களும் இருக்கிறோம்' என, மக்களிடம் காட்டிக்கொள்ள, பெரிய கட்சிகள் மட்டுமின்றி, துக்கடா கட்சிகளும், போராட்டத் தில் குதிக்கின்றன. திடீரென,புதுப்புது பெயர்களுடன், பல அமைப்புகள் வீதிக்கு வருகின்றன. இந்த சுயநல போராட்டத்தால், மக்களிடம், அவர்களுக்கான செல்வாக்கு நிச்சயம் குறையும்.

-அரவிந்த், பட்டுக்கோட்டை

இன்றைக்கு போராட்டம் நடத்தி, தங்களை பெரிய ஆளாக காட்டினால், நாளை, 'கல்லா' கட்டலாம் என்ற எண்ணத்தில் தான், பலரும் போராட்டத்தில் குதிக்கின்றனர். தமிழக மக்கள் மிகவும் தெளிவானவர்கள். இது போன்றவர் களை நம்ப மாட்டார்கள். போராட்டங்களால், தாங்கள் படும் அவதியை மறக்க மாட்டார்கள்.

-இம்ரான், திருவாரூர்

போராட்டம் என்றால், மதிப்பு, மரியாதை இருந்த காலம், மலையேறி வருகிறது. நியாய மான காரணத்திற்கு போராடலாம். எதற் கெடுத்தாலும் போராட்டம் என்பது சரியான நடைமுறையல்ல. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் படுகிறது. இதுபோன்ற செயல்களுக்கு, அரசு ஊக்கம் அளிக்கக்கூடாது; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபாகரன், கீழ்ப்பாக்கம், சென்னை

தமிழகத்தில் நடக்கும் கலவர போராட்டங் களால், முதலீட்டாளர்களுக்கு, தமிழகத்தின் மீதான, நம்பிக்கை போய் விட்டது. அதனால், இங்கு வர வேண்டிய முதலீடுகள், சத்தமில்லாமல், மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றன. இது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பு.

-செந்துார்பாண்டி, துாத்துக்குடி

அரசியல் கட்சிகள், அடிக்கடி அர்த்தமற்ற போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால்,மக்களின் அடிப்படை பிரச்னைகள் மறைக்கப்படுகின்றன.

-அன்வர், நாகை- நமது நிருபர் -
கல்விக் கடன் மறுப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் : உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஏப் 21, 2018 05:24

மதுரை: கல்விக் கடனை வங்கிமறுப்பதுநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை புதுவிளாங்குடி ஹரிகரசுதன்,'பி.எல்.,படிக்க கல்விக் கடன் கோரி மதுரை புதுவிளாங்குடி இந்தியன் வங்கி கிளையில்விண்ணப்பித்தேன். உரிய நேரத்தில் வங்கி பரிசீலிக்கவில்லை. கடன் வழங்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். வங்கி நிர்வாகம்,'மனுதாரர் 2016 ல் பிளஸ்2 முடித்துள்ளார். தாமதமாக 2017ல் பி.எல்.,சேர்ந்துள்ளார்.இதற்கு தகுந்தகாரணங்களை தெளிவுபடுத்தவில்லை. மனுதாரரின் தந்தை பற்றிய கடன் அறிக்கையானது (சிபில் ரிப்போர்ட்), சாதகமாகஇல்லை,' என தெரிவித்தது.நீதிபதி: சாதாரண வலுவற்ற காரணங்களைக்கூறி, கல்விக் கடன் மறுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் பலவழக்குகளில்தெளிவுபடுத்தியுள்ளது. அதை மீறி நிராகரிப்பது வேண்டுமென்றே நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். மேற்கண்டகாரணங்களைக்கூறி கல்விக் கடன் மனுவைநிராகரிக்கக்கூடாது என தனது அனைத்து கிளைகளுக்கும் இந்தியன் வங்கி சென்னைதலைமை அலுவலகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர் மனுவை சாதகமாக பரிசீலித்து, கடன் வழங்க கிளை மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நீதிமன்ற உத்தரவுகள் தாமதம் : அறிக்கை அளிக்க நீதிபதிகள் குழு

Added : ஏப் 21, 2018 01:48

சென்னை: நீதிமன்ற உத்தரவுகள் கிடைக்க, காலதாமதம் ஆவதாக கூறப்படும் புகார் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, நீதிபதிகள் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர், சரவணகுமார் தாக்கல் செய்த மனு:கீழமை நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளில், இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்; வழக்குகள் முடிவுக்கு வந்து, இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படும்.உத்தரவின் நகல்கள் பெற, நீதிமன்றங்களில் உள்ள, சம்பந்தப்பட்ட துறையில் விண்ணப்பிக்க வேண்டும். உத்தரவின் நகல்கள் கிடைப்பதில், காலதாமதம் ஏற்படுகிறது.நீதிமன்ற ஊழியர்களை கேட்டால், வழக்கு தொடர்பான ஆவணங்களை, கண்டுபிடிப்பதில் உள்ள சிரமங்களை குறிப்பிடுகின்றனர். போதிய அளவில், பீரோ, இரும்பு அலமாரிகள் இல்லை.நீதிமன்றத்தில், வழக்கு ஆவணங்கள் தரையிலும், மேஜையிலும் அடுக்கி வைக்கப்படுகின்றன. முறையான பாதுகாப்பு இல்லை. ஆவணங்கள் இருக்கும் அறை, காற்றோட்டமாக இல்லை. போதிய இடவசதி இல்லாததால், துாசு ஒவ்வாமையினால், பாதிப்பு ஏற்படுகிறது.உத்தரவுகள் காலதாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி, பதிவாளர் ஜெனரல், உள்துறை செயலருக்கு மனுக்கள் அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. என் மனுவை, பைசல் செய்யும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.இந்தப் பிரச்னை குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, நீதிபதிகள், சத்தியநாராயணன், கிருபாகரன், சிவஞானம், புஷ்பா சத்தியநாராயணா மற்றும் பதிவாளர் ஜெனரல் உள்ளிட்ட பதிவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை, முதல் பெஞ்ச் நியமித்தது.அறிக்கையை, ஜூன் மூன்றாம் வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


மருத்துவ மாணவர்களுக்கு 3 ஆண்டு பணி கட்டாயம்

Added : ஏப் 21, 2018 00:38

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், மருத்துவ படிப்பை முடிக்கும் மாணவர்கள், அரசு மருத்துவமனைகளில் மூன்று ஆண்டுகள் பணிபுரிவதை கட்டாயமாக்க, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஜார்க்கண்டில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, மாணவர்கள் இடை நிற்றலை தடுக்கவும், புதிய விதிமுறைகளுக்கு, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, மாநில சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர்கள் சேரும் போது, படிப்பை பாதியிலேயே கைவிட்டால், 15 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும், படிப்பை முடித்ததும், ஓராண்டு காலம், அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணி புரிவதற்கும் ஒப்பந்தம் செய்யப்படுகிறது.எனினும், அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எம்.பி.பி.எஸ்., படிப்பை இடை நிறுத்தும் மாணவர்களுக்கான அபராதத் தொகையை, 20 லட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கும், முதுநிலை படிப்பில் இருந்து இடை நிறுத்தும் மாணவர்களுக்கான அபராதத் தொகையை, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், அரசு அனுமதி அளித்துள்ளது.படிப்புக்கு பின், அரசு மருத்துவமனைகளில் மூன்று ஆண்டுகள் கட்டாயம் பணி புரிய வேண்டும்; இல்லாவிட்டால், 30 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தும் விதிமுறைக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 28.06.2026