Saturday, April 21, 2018

கல்விக் கடன் மறுப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் : உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஏப் 21, 2018 05:24

மதுரை: கல்விக் கடனை வங்கிமறுப்பதுநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை புதுவிளாங்குடி ஹரிகரசுதன்,'பி.எல்.,படிக்க கல்விக் கடன் கோரி மதுரை புதுவிளாங்குடி இந்தியன் வங்கி கிளையில்விண்ணப்பித்தேன். உரிய நேரத்தில் வங்கி பரிசீலிக்கவில்லை. கடன் வழங்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். வங்கி நிர்வாகம்,'மனுதாரர் 2016 ல் பிளஸ்2 முடித்துள்ளார். தாமதமாக 2017ல் பி.எல்.,சேர்ந்துள்ளார்.இதற்கு தகுந்தகாரணங்களை தெளிவுபடுத்தவில்லை. மனுதாரரின் தந்தை பற்றிய கடன் அறிக்கையானது (சிபில் ரிப்போர்ட்), சாதகமாகஇல்லை,' என தெரிவித்தது.நீதிபதி: சாதாரண வலுவற்ற காரணங்களைக்கூறி, கல்விக் கடன் மறுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் பலவழக்குகளில்தெளிவுபடுத்தியுள்ளது. அதை மீறி நிராகரிப்பது வேண்டுமென்றே நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். மேற்கண்டகாரணங்களைக்கூறி கல்விக் கடன் மனுவைநிராகரிக்கக்கூடாது என தனது அனைத்து கிளைகளுக்கும் இந்தியன் வங்கி சென்னைதலைமை அலுவலகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர் மனுவை சாதகமாக பரிசீலித்து, கடன் வழங்க கிளை மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...