Friday, May 4, 2018

மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடக்கிறது மாணவ, மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்




மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு தமிழகத்தில் 10 மையங்களில் நாளை மறுதினம் நடக்கிறது. ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மே 04, 2018, 04:30 AM
சென்னை,

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (‘நீட்’) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்துகிறது.

அந்தவகையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாளைமறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தமிழக மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.எஸ்.இ. ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களில் தான் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

‘நீட்’ தேர்வுக்காக தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சீபுரம், மதுரை, நாமக்கல், சேலம், திருவள்ளூர், திருச்சி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 10 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும். ஆனால் மாணவர்கள் 9.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். 9.30 மணிக்கு பின்னர் தேர்வு மையத்துக்குள் வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். ‘நீட்’ இணையதள பக்கத்தில் உள்ள நேரம் எல்லா மையங்களிலும் பின்பற்றப்பட உள்ளது.

‘நீட்’ தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த விவரங்கள் வருமாறு:-

* வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், ஜாமெட்ரி மற்றும் பென்சில் பாக்ஸ் எடுத்துச்செல்லக்கூடாது.

* பிளாஸ்டிக் பை, கால்குலேட்டர், அளவுகோல், பரீட்சை அட்டை, பென் டிரைவ், ரப்பர், எலக்ட்ரானிக் பேனா, பேனா, ஸ்கேனர் எடுத்துச்செல்லக்கூடாது.

* கைப்பை, மணிபர்ஸ், பெல்ட், தொப்பி, கைக்கடிகாரம், கண்ணாடி, கேமரா, உலோக பொருட்கள், சாப்பிடும் உணவுகள், தண்ணீர் பாட்டில் அனுமதி கிடையாது.

* மோதிரம், காதணி, மூக்குத்தி, சங்கிலி, ஹேர் கிளிப், தலை முடியில் மாட்டும் பெரிய ரப்பர், வளையல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது.

* செல்போன், புளூடூத், ஹெட்செட், மைக்ரோபோன், பேஜர் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

* வெளிர் நிறத்திலான அரைக்கை ஆடைகள் அணிந்து வர வேண்டும். அதில் பெரிய பொத்தான், பேட்ஜ், பூ போன்றவை இடம் பெறக்கூடாது.

* சல்வார் மற்றும் பேண்ட் அணிந்து வரவேண்டும். குறைந்த உயரத்திலான செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும். மூடப்பட்ட நிலையில் இருக்கும் காலணிகளுக்கு, ஷூ-க்கு அனுமதி கிடையாது.

* தேர்வு எழுத வரும் மாணவர்கள் பொருட்களை வைப்பதற்கு எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருக்காது.

* கலாசாரம் மற்றும் நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணியும் மாணவர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும்.

* சேலை அணிந்து வரக்கூடாது.

மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றப்படாத மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவும் 12–ந்தேதி நடக்கப்போகும் கர்நாடக தேர்தலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

மே 04 2018, 03:00 AM

ஒட்டுமொத்த இந்தியாவும் 12–ந்தேதி நடக்கப்போகும் கர்நாடக தேர்தலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. காவிரிபிரச்சினையிலும் கர்நாடக தேர்தல் நிச்சயமாக முக்கிய பங்காற்றும் என்பதால் தமிழக மக்களுக்கும் கர்நாடக தேர்தலின் முடிவு பெரிய ஆவலை உருவாக்கி உள்ளது. முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் அதிக முனைப்புக்காட்டி வருகிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்கிறார். இப்போது பிரதமர் நரேந்திரமோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பலமுறை கர்நாடகத்தை சுற்றி வலம் வந்திருக்கிறார்.

கர்நாடகத்தில் நாங்கள் பெறப்போகும் வெற்றி தென்மாநிலங்களில் நுழைவதற்கான வாசலாக இருக்கும் என்று அமித்ஷா அறிவித்து விட்டார். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவரான தேவகவுடா எப்படியும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று அவரும் பலகணக்குகளை போட்டு வருகிறார். 224 தொகுதிகளைக்கொண்ட கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. 224 இடங்களிலும், காங்கிரஸ் 222 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 201 இடங்களிலும், அதன்கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ்கட்சி 18 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 19 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. தேர்தல் கணிப்புகள், எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது, பா.ஜ.க., காங்கிரஸ் இருகட்சிகளுமே தலா 90 இடங்களை சுற்றித்தான் வெற்றிபெறும். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 40 இடங்களைச் சுற்றி வெற்றி பெறும். ஆக, ஒன்று தொங்கு சட்டசபை அல்லது மதசார்பற்ற ஜனதாதள ஆதரவோடுதான் எந்தக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், மதசார்பற்ற ஜனதாதள முதல்–மந்திரி வேட்பாளரான தேவகவுடாவின் மகன், முன்னாள் முதல்–மந்திரி குமாரசாமி நான் கிங்மேக்கராக இருக்கமாட்டேன். கிங்காகத்தான் இருப்பேன் என்று, முதல்–மந்திரியாகும் ஆசையை வெளிப்படுத்திவிட்டார். ஆனால், அரசியல் நோக்கர்கள் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. தேர்தல் முடிவு வெளிவந்தபிறகு தான் யார் கிங்காக இருக்கப்போகிறார்கள்? யார் கிங்மேக்கராக இருக்கப்போகிறார்கள்? என்பது தெரியும் என்று கூறுகிறார்கள்.

மதசார்பற்ற ஜனதாதளம் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கலாக இருக்கிறது. ஏனெனில் ராகுல்காந்தி பல இடங்களில் பேசும்போது, மதசார்பற்ற ஜனதாதளம் பா.ஜ.க.வின் ‘பி’ அணி என்று பேசியிருக்கிறார். பிரதமர் நரேந்திரமோடி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசும்போது, தேவகவுடாவை மிகவும் புகழ்ந்து பேசினார். தேவகவுடா எப்போது டெல்லிக்கு வந்தாலும், நான் அவரை மிகவும் மரியாதையோடு வரவேற்பேன். எனது வாசலில் நின்று மட்டுமல்ல, அவரது கார்கதவை திறந்து வரவேற்பேன். அவர் போகும்போது கார்வரை சென்று வழியனுப்புவேன். ஆனால், தேவகவுடா பற்றி ராகுல்காந்தி பேசிவருவது வெட்கக்கேடானது. இவ்வாறு அவர் பேசுவது மற்றவர்களைவிட தான்–தான் மேலானவர் என்ற அவரது அகந்தையைக் காட்டுகிறது என்று பேசியிருக்கிறார். மதசார்பற்ற ஜனதாதளத்தோடு கூட்டணி வைத்து பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்குமா? அல்லது காங்கிரஸ் ஆட்சிஅமைக்குமா? என்பதுதான் அரசியல் உலகில் இப்போது பரபரப்பான எதிர்பார்ப்பாக இருக்கிறது. 15–ந்தேதி நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையின் முடிவில்தான் கர்நாடகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்? என்ற பரபரப்புக்கு விடை கிடைக்கும்.
தேசிய செய்திகள்

வருகிற 8-ந் தேதிக்குள் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு




வருகிற 8-ந் தேதிக்குள் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த உத்தரவை மதிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. #SupremeCourt

மே 04, 2018, 05:45 AM

புதுடெல்லி,

காவிரி பிரச்சினை தொடர்பான மேல் முறையீட்டு மனுக் களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கவேண்டிய நீரின் அளவை குறைத்ததோடு, நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (வரைவு செயல் திட்டம்) ஒன்றை 6 வாரத்துக்குள் ஏற்படுத்துமாறு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டு விதித்த 6 வார கால கெடு முடியும் வரை அமைதி காத்த மத்திய அரசு, மார்ச் மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் “ஸ்கீம்” என்பதற்கு விளக்கம் கோரியும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல்திட்டத்தை அமல்படுத்த மேலும் 3 மாதங் கள் அவகாசம் கேட்டும் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதே சமயம், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசு மீது தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதேபோல் புதுச்சேரி அரசும் வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பான மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு காவிரி நீர் பங்கீடு குறித்து வரைவு செயல்திட்ட அறிக்கைகளை மே 3-ந் தேதிக் குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்டார்.

அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

வரைவு செயல்திட்டம் தயாராகி விட்டது. அது மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டு உள்ளது. பிரதமரும் மற்ற மந்திரிகளும் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளதால் வரைவு செயல் திட்டத்தின் மீது மத்திய மந்திரிசபையின் ஒப்புதலை பெறுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் கர்நாடக முதல்- மந்திரி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், காவிரி மேலாண்மை வாரியம் தொழில் நுட்ப வல்லுனர் களை கொண்டு அமைக்கப்படாமல் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அமைச்சர்களை கொண்டு உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார். இதனாலும் வரைவு செயல் திட்டம் தாமதமாகி வருகிறது. எனவே, வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல் ஜி.உமாபதி ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சேகர் நாப்டே வாதாடுகையில் கூறியதாவது:-

கோர்ட்டுக்கு நாங்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கிறோம். கர்நாடக மாநிலத்தில் வருகிற 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடியும் வரை இப்படி அடிக்கடி கால அவகாசம் கோரி மத்திய அரசு எங்களை தொடர்ச்சியாக ஏமாற்ற முயற்சிக்கிறது.

மத்திய அரசு இப்படி அடிக்கடி கால அவகாசம் கோருவது அவர்களுடைய பாரபட்சமான அணுகுமுறையை காட்டுகிறது. ஒரு பொதுவான விஷயத்தில் மத்திய அரசு இப்படி ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுவது நாட்டில் சட்டரீதியான ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டு வரும் ஆபத்து உள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரான அணுகுமுறை ஆகும். கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு இப்படி நடந்து கொள்கிறது. இது மிகவும் தவறானதாகும்.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதற்கு, அக்டோபர் 4-ந் தேதிக்குள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி கோர்ட்டில் உறுதி அளித்தார்.

அப்போது அட்டார்னி ஜெனரல் அளித்த வாக்குறுதி உண்மையின் அடிப்படையில் அளிக்கப்பட்டது அல்ல என்று நாங்கள் கருதலாமா? இது குறித்து தமிழக மக்களுக்கு நாங்கள் என்ன கூறுவது? மத்திய அரசு தேவையற்ற அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறது. இது கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கையாகும். காவிரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியிட்டு 2 மாதங்களாகி விட்டன. ஆனால் தமிழகத்துக்கு அதனால் இதுவரை எந்த பயனும் கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறது மத்திய அரசு. தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவையும் கர்நாடகம் மதிப்பது கிடையாது.

இவ்வாறு சேகர் நாப்டே கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறுக்கிட்டு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவு என்ன? என்று கேட்டார்.

அதற்கு தமிழக அரசு தரப்பில், “இந்த 2 மாதங்களிலும் மாதம் ஒன்றுக்கு 2.5 டி.எம்.சி. வீதம் தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் வெறும் 1.1 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், மோகன் கத்தார்க்கி ஆகியோரிடம், “ஏன் இப்படி குறைவான அளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது?” என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு கர்நாடக தரப்பில், “எங்களால் இயன்ற அளவு முறையாக தண்ணீரை திறந்து விடுகிறோம். ஆனால் வறட்சி காலங்களில் கர்நாடக மாநிலத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய இருக்கிறது. அதனால் அதுபோன்ற நேரங்களில் சிரமம் ஏற்படுகிறது” என்று பதில் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கர்நாடகத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சில கருத்துகளை தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

இதற்குள் வரைவு செயல் திட்டம் தயார் ஆகி இருக்க வேண்டும். இந்த வரைவு செயல் திட்டம் தொடர்பாக மாநில அரசுகள் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. வரைவு செயல் திட்டம் தயாராக இல்லை என்றாலும் கர்நாடக மாநிலம், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இதுவரை தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும்.

அதுதான் அவர்களுடைய நல்ல நோக்கத்தை உறுதி செய்யும் செயலாக அமைந்திருக்கும். ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு நிர்ணயித்த தண்ணீரின் அளவில் இருந்து நாங்கள் 14 டி.எம்.சி. தண்ணீரை குறைத்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம். மழையின் அளவு, பாசனத்துக்கான தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தண்ணீரின் அளவு தீர்மானிக்கப்பட வேண்டும். இதனால் தான் உரிய செயல்திட்டம் தேவைப்படுகிறது. ஏற்கனவே கோடை காலத்தில் குறைந்த அளவு தண்ணீரே ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவசர அடிப்படையில் தண்ணீரை திறந்து விடாவிட்டால் இதற்கான விளைவுகள் கடுமையாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கு கர்நாடக தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், தற்போது விசாரிக்கப்படும் கோர்ட்டு அவமதிப்புக்கான வழக்கில் கர்நாடகம் ஒரு தரப்பு அல்ல என்றும், அதனால் தங்கள் தரப்பில் பதில் அளிப்பதற்கு எதுவும் இல்லை என்றும் கூறினார்.

உடனே தமிழக அரசின் சார்பில் ஆஜரான சேகர் நாப்டே, “தமிழகத்தில் கோடையின் வெப்பம் மட்டும் கடுமையாகவில்லை. மக்களின் மனநிலையும் பெருமளவில் கொதிப்படைந்து உள்ளது. எனவே, இப்படி கால அவகாசம் கோரும் விளையாட்டை நிறுத்திக் கொண்டு மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அறிவிக்கவும் கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றார்.

அதற்கு நீதிபதிகள் பிப்ரவரி 16-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சமத்துவத்தின் அடிப்படையை மையமாக கொண்டது என்றும், தமிழகத்துக்கு உரிய தண்ணீர் முறையாக கிடைப்பதற்கு வழி வகுக்கப்படும் என்றும் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து சேகர் நாப்டே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிடாமல் மத்திய அரசை தடுப்பது அரசியல் காரணங்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகளா? என தெரியவில்லை என்று கூறியதோடு, இதுபற்றி மத்திய அரசு கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை முறியடித்து வருவதாகவும், மத்திய அரசின் தயவில்தான் நாங்கள் வாழவேண்டி உள்ளது என்றும் கூறினார்.

அவர் இவ்வாறு கூறியதும், உங்களுக்கு செயல்திட்டம் முக்கியமா? அல்லது தண்ணீர் முக்கியமா? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை குறித்து மத்திய அரசிடம் கேட்டு அதுபற்றி கோர்ட்டில் வருகிற 8-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அட்டார்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டார்.

நேற்று வழக்கு விசாரணையின் போது முதலில் வருகிற 8-ந் தேதிக்குள் தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பின்னர் 2 டி.எம்.சி. திறந்துவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன்பிறகு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட நீரின் அளவு குறித்தும், எவ்வளவு தண்ணீர் திறந்துவிடமுடியும் என்பது குறித்தும் விளக்கமான அறிக்கையை 8-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கோர்ட்டு உத்தரவின்படி தண்ணீர் திறக்கப்படாவிட்டால் கர்நாடக தலைமைச் செயலாளர் கோர்ட்டுக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் வழக்கு விசாரணையை 8-ந் தேதிக்கு அவர்கள் ஒத்திவைத்தனர்.
‘நீட்’ தேர்வு மையங்களில் மாற்றம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு



தமிழக மாணவர்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள வெளி மாநில மையங்களில் தான் ‘நீட்’ தேர்வு எழுத வேண்டும் என்றும், தேர்வுக்கு குறைந்த காலமே உள்ளதால் புதிய தேர்வு மையங்களை அமைக்க உத்தரவிட முடியாது என்றும் நேற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. #NEET

மே 04, 2018, 05:30 AM

புதுடெல்லி,

இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கி, இந்த தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. உத்தரவிட்டு இருந்தது.

இதனை எதிர்த்து சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த வக்கீல் காளிமுத்து மயிலவன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் இதனை பொது அறிவிப்பாக கருதி தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையம் தொடர்பான விவரத்தை சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் ‘நீட்’ தேர்வு வரும் 6-ந் தேதியன்று நடைபெறுவதாகவும், தற்போது மிகவும் குறைந்த காலஅவகாசமே இருப்பதாலும் தேர்வு மையங்களை உடனடியாக மாற்ற முடியாது என்று சி.பி.எஸ்.சி. தரப்பில் கூறப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில் கடைசி நேரத்தில் தேர்வு மையங்களை மாற்றி அமைத்தால் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் குழப்பம் அடைவார்கள் என்றும், எனவே தேர்வு மையங்களை மாற்ற தேவை இல்லை என்றும் கூறி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

அத்துடன், மாணவர்கள் இந்த ஆண்டில் வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் தான் தேர்வு எழுத வேண்டும் என்றும், அடுத்த ஆண்டில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் சி.பி.எஸ்.இ. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Thursday, May 3, 2018

மருத்துவர்களுக்குத் தேவை அவசர சிகிச்சை

Published : 27 May 2017 13:03 IST

டாக்டர் ஆ. காட்சன்



மருத்துவர்கள்தான் அவசரச் சிகிச்சை செய்வார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் மருத்துவர்களுக்கும் மருத்துவ உலகத்துக்கும் அவசரச் சிகிச்சை தேவைப்படும் நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இது அதிகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத ஒரு நோய். அரசியல்வாதி என்றாலே ஊழல் செய்பவர்கள் என்ற நம்பிக்கை ஸ்திரமானதுபோல, மருத்துவர்கள் என்றாலே பணம் பிடுங்குபவர்கள் என்ற கருத்து மக்களிடையே அதிகரித்துவருகிறது. இந்தக் கருத்தைப் பொறாமையால் தோன்றியதாகச் சொல்ல முடியாது. இதை நிஜமாக்குவதற்குப் பல காரணங்களும் இருக்கின்றன. மருத்துவர்களுக்கும் அதில் முக்கியப் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

உறுதிமொழி என்ன சொல்கிறது?

எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் முதல் ஆண்டின்போது ‘ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழி’ எந்த இடத்தில் எழுதிப் போடப்பட்டிருக்கும் என்பது எல்லாப் பயிற்சி மருத்துவர்களுக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அதில் என்ன எழுதியிருக்கும் என்ற கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் மிகவும் சொற்பம்தான். ஏனென்றால், மனிதனுக்குச் சிகிச்சையளிப்பதைக் கற்றுக்கொண்டதைவிட, நோய்க்குச் சிகிச்சை அளிப்பதையே நம்மில் பெரும்பாலானோர் கற்றுக்கொண்டுள்ளோம். இரண்டுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்? ஒரு மனிதரைச் சிகிச்சை அளிப்பது என்பது அவனை மதிப்பதில் இருந்து தொடங்குகிறது. அவரது வலியையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இதில் நோய் அறிகுறிகளைத் தீர்ப்பது, நோய்க்குச் சிகிச்சையளிப்பது என்பதும் தானாகவே உள்ளடங்கிவிடுகிறது, தனித்துத் துருத்திக்கொண்டு இருப்பதில்லை.

இடைவெளி விழுந்த உறவு

“உங்கள் வயலில் விளைச்சல் எப்படி?” என்று விவசாயியிடமும், “பிளஸ் டூ எழுதிய உங்கள் மகள் எத்தனை மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாள்? அடுத்து என்ன படிக்கப் போகிறாள்?” என்று ஒரு பெற்றோரிடமும், “பணி நிறைவு பெற்ற பின் நேரம் எப்படிப் போகிறது?” என்று ஓய்வுபெற்ற ஊழியரிடமும் கேட்கும் மருத்துவர்களை மக்கள் இன்னமும் கொண்டாடத்தான் செய்கிறார்கள். அது சிகிச்சைக்கு நேரடி சம்பந்தமில்லை என்று நம்புகிறோம். ஆனால், தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுப்பவர் சொல்வதைப்போல ‘எத்தனை வேணும்?’ என்று கேட்டுவிட்டு மருந்துச் சீட்டை நீட்டும் தொழில் அல்ல மருத்துவம். கடைக்காரர்-வாடிக்கையாளர் உறவு என்பது வேறு, மருத்துவர்-நோயாளி உறவு என்பது நிச்சயம் வேறு.

நோயாளி உருவாக்கம்

நோயாளிகள் விவரிக்கும் நோய் அறிகுறிகளுக்கு அந்தந்த உறுப்பு சம்பந்தப்பட்ட நோயின் பெயரைக் கூறி நோய்த்தன்மைக்கு உள்ளாக்கிவிடுவது, மருத்துவ உலகைத் தாக்கியிருக்கும் மிகப் பெரிய வியாதியாக உருவெடுத்திருக்கிறது. வயிற்று வலித்துவிட்டாலே ‘அல்சராக இருக்கும்’ என்றும், கழுத்து வலியுடன் வந்தால் ‘தண்டுவட ஜவ்வு விலகியிருக்கும்’ என்றும், கோபப்படுகிறார் என்றாலே ‘பிரெஷராக இருக்கும்’ என்றும் எல்லோரையும் நோய் பீடித்தவராக மாற்றாமல் இருப்பது நிச்சயம் மருத்துவர்களின் கைகளிலும் உள்ளது. 40 வயது நிரம்பிய எல்லோரையும், நாளை எனக்கு என்ன நடக்குமோ என்று கத்திமேல் நடக்க வைக்கும் நெருக்கடியை மனதில் ஏற்ற வேண்டிய இடமல்ல மருத்துவமனை என்பதை எப்போது உணரப் போகிறோம்?

மனம் விட்டுப் பேசுங்கள்

‘நான் மருத்துவர், நோயைக் கண்டறிந்துவிட்டேன், மருந்து கொடுப்பேன், நீ சாப்பிட வேண்டும்’ என்ற மனநிலையிலிருந்து மருத்துவர்கள் விடுபடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை நோயாளிக்குமானதே தவிர, நோய்க்காக மட்டுமல்ல.

புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு மனநல மருத்துவப் புத்தகம் பின்வருமாறு கூறுகிறது: ‘ஒருவரை உடல் அளவில் தொடர்ந்து நோயாளியாகவோ, மனநோயாளியாகவோ மாற்றுவதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ மருத்துவர்களும் பங்குவகிக்கின்றனர். அதீத எச்சரிக்கைகள் மூலமாகவோ, தெளிவான விளக்கங்கள் மற்றும் ஆற்றுப்படுத்துதலை மருத்துவர் கொடுக்காததன் மூலமாகவோ இது நடக்கிறது’ என்பதே அது.

எந்தச் சிகிச்சை வெல்லும்?

நோய் அறிகுறிகளுக்குச் சிகிச்சை அளித்து நோயை நீக்கி விடுவது மட்டுமே ஒரு மருத்துவருக்கு முழு வெற்றியைத் தந்துவிடுவதில்லை. நோயால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கைத் தரத்தை நோயுற்ற நிலையிலிருந்து எந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. உடைந்த எலும்புகளை ஒட்ட வைப்பது அல்ல, ஒட்டவைக்கப்பட்ட எலும்புகளால் ஒரு நபர் எந்த அளவுக்குத் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது என்பதுதான் ஒரு சிகிச்சையின் வெற்றி. இல்லாவிட்டால் ‘அறுவைசிகிச்சை வெற்றி, நோயாளி மரணம்’ என்ற கதையே தொடரும்.

உடல்நோய் தரும் மனநோய்

‘எல்லாப் பரிசோதனைகளிலும் எந்தக் கோளாறும் இல்லை. மருத்துவரும் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார். ஆனால், எனக்கு இன்னும் நோய் அறிகுறிகள் ஏன் இருக்கின்றன?’ என்ற விடையளிக்க முடியாத கேள்விகளுடன் தினமும் பலர் மனநோயாளிகளைப்போல் மாறிவருகின்றனர். மனதுக்கும் உடலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல மருத்துவ உலகம் மாறிவருவதுதான் இதற்கு முக்கியமான காரணம்.

ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழியில் வரும் ‘Primum non nocere’ என்ற லத்தீன் வரிகளுக்கு ‘நோயாளிக்கு எந்தத் தீங்கும் செய்யாதிருப்பதே முதன்மையானது’ என்று அர்த்தம். ‘உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதே’ என்று சொல்வார்கள் இல்லையா, அதுபோன்றதுதான் இதுவும். மருத்துவ மாணவர்களுக்கு இந்த அம்சத்தைப் பாடமாகச் சொல்லிக்கொடுப்பதைவிட வாழ்க்கைக் கல்வியாக நடைமுறையில் செயல்படுத்திக் காட்ட வேண்டும். இனி வரும் தலைமுறைகளிலாவது மருத்துவர்-நோயாளி இடைவெளி குறைய வேண்டும்.

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பேராசிரியர்

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com
2500 டிகிரி வெப்ப கார் இன்ஜின்... தன்னை எப்படி குளிர்விக்கிறது தெரியுமா?

ராகுல் சிவகுரு  03.05.2018







வெயிலின் வெப்பம், நம்மை வதைத்துக்கொண்டிருக்கிறது. அந்த வெப்பம் போதாதென மேலும் வெப்பத்தை உருவாக்கி, உற்சாகப் பிரவாகத்துடன் ஒன்று இயங்கிவருகிறது என்றால், அதுதான் இன்ஜின்! ஆம், பெட்ரோல்/டீசலை எரியூட்டுவதால் உண்டாகும் வெப்பத்தால்தான் வாகனம் முன்னோக்கிச் செல்வதற்கான உந்துசக்தி கிடைக்கிறது. ஆனால், முன்னே சொன்ன நிகழ்வால் உற்பத்தியாகும் வெப்பத்தில் 30 சதவிகிதம் மட்டுமே இன்ஜின் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்கிறது. மீதம் அனைத்தும் வீணாகிறது என்றாலும், அது இன்ஜினிலிருந்து வெளியே செல்லும் வழியெங்கும் இருக்கும் அனைத்தையும் வெப்பமயமாக்கிவிடும் தன்மையைக்கொண்டுள்ளது. இது சரியாகக் கவனிக்கப்படாவிட்டால், அது இன்ஜின் பாகங்களை உருக்கி, உச்சபட்சமாக Engine Seize ஆவதில் முடிவடையும்.



ஏனெனில், Power Stroke சுழற்சியின்போது இன்ஜின் அதிகபட்சமாக 2500 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் இயங்கும் என்பதால், இன்ஜின் பாகங்களைக் குளிர்வித்தல் என்பது இன்ஜினின் நீடித்த ஆயுளுக்கு மிகவும் அவசியம். ஆனால், மனிதர்களைப்போலவே இன்ஜினும் குறிப்பிடத்தக்க வெப்பநிலையில் சிறப்பான பர்ஃபாமென்ஸைத் தரவல்லது. இன்ஜின் குறைவான வெப்பநிலையில் இருந்தால், பெட்ரோல்/டீசல் எரியூட்டப்படுவது சீராக இருக்காது. இந்நேரத்தில் இன்ஜின் ஆயிலும் தடிமனாக இருக்கும் என்பதால், அது Power Loss-க்கு வழிவகுக்கும். ஒருவேளை இன்ஜின் அதிகபட்ச வெப்பநிலையில் இருந்தால், பெட்ரோல்/டீசல் தானாகவே எரியூட்டப்படும் என்பதுடன், இன்ஜின் ஆயிலும் தனது மசகுத்தன்மையை இழந்திருக்கும். எனவே, இன்ஜின் பாகங்கள் செயல் இழப்பதற்கான சாத்தியங்கள் இங்கே அதிகம்.



ஒரு இன்ஜினின் கூலிங் அமைப்பின் பணி என்பது, இன்ஜினை அதன் சரியான வெப்பநிலையில் தொடர்ந்து இயங்கவைப்பதே. ஏர் கூல்டு மற்றும் லிக்விட் கூல்டு ஆகியவை, Engine கூலிங் முறையின் வகைகள். ஏர் கூலிங், மிகவும் எளிமையான வழிமுறை. இதில் எதிர் திசையில் வரும் காற்று, இன்ஜினைத் தாண்டிச் செல்லும். அப்போது Engine வெளியிடும் வெப்பத்தைத் தன்னகத்தே இழுத்துச் செல்வதால், இன்ஜினின் வெப்பநிலை தொடர்ந்து சம விகிதத்தில் இருக்கும். இந்த வகை இன்ஜின்களின் பாகங்களில், இதற்காக Fins இருக்கும். அவை Engine பாகங்களில் காற்று படர்வதை உறுதிசெய்யும். இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்ப்ளெண்டர், ஷைன் ஆகிய டூ-வீலர்கள், இந்த Natural ஏர் கூலிங் பாணியைத்தான் பின்பற்றுகின்றன.



இதுவே ஆக்டிவா போன்ற ஸ்கூட்டர்களில், Engine பகுதி, பாடி பேனல்களால் சூழப்பட்டிருக்கும். இதற்கான தீர்வாக, இன்ஜினுக்குக் குளிர்ந்த காற்றை வழங்கும் பொருட்டு, சிறிய ஃபேன் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். இதன் பெயர்தான் 'Forced ஏர் கூலிங்'. இதுவே பம்ப்பின் உதவியுடன், இன்ஜினின் மேல் பகுதியைச் சுற்றி திரவம் ஒன்று படரும். அது தண்ணீராகவோ, அடிட்டீவ்களுடன்கூடிய கூலன்ட்டாகவும் இருக்கலாம். பழைமையான லிக்விட் கூல்டு இன்ஜின்களில் தண்ணீர்தான் பயன்படுத்தப்பட்டது. சமீபத்திய பவர்ஃபுல் லிக்விட் கூல்டு இன்ஜின்களில், கூலன்ட்தான் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. அவை Engine பாகங்கள் துருப்படுவதைத் தவிர்ப்பதுடன், குளிர்க்காலங்களில் சீரான Engine இயக்கத்துக்கும் துணை நிற்பதே இதற்கான காரணம்.



பம்ப்பின் பணி என்பது, கூலன்ட்டை Engine பாகங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவதுடன், கூலன்ட்டின் வெப்பநிலையை 80 டிகிரி செல்சியஸ் முதல் 90 டிகிரி செல்சியஸ் வரை தக்கவைப்பதே ஆகும். எப்படி ஏர் கூல்டு இன்ஜின்களில் Fins இருந்ததோ, லிக்விட் கூல்டு இன்ஜின்களில் Jackets இருக்கின்றன. இதனுடன் டியூப்களுடன்கூடிய பெரிய Fin அமைப்பு இடம்பெற்றிருக்கும். இது முன்னோக்கிச் செல்லும்போது எதிர்வரும் காற்றை உள்வாங்கிக்கொண்டு, கூலன்ட்டின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும். அதில் கூடுதலாக இருக்கும் ஃபேன், ThermoStat உதவியுடன் இன்ஜினின் வெப்பநிலையை அறிந்து, தானாகச் செயல்பட்டு கூலன்ட்டைக் குளிர்விக்கும். இதுதான் ரேடியேட்டரின் பணி. கேடிஎம் டியூக் மற்றும் பஜாஜ் பல்ஸர் NS200 ஆகிய பைக்குகளில் இந்த பாணி கூலிங் அமைப்பைப் பார்க்கலாம்.







லிக்விட் கூலிங் அமைப்பின் விலை அதிகம் என்பதால், இதற்கான மாற்றாக வந்தவைதான் ஆயில் கூலர்கள். இவை இன்ஜினுக்குள் இருக்கும் ஆயிலை, வெளிப்புறத்தில் இருக்கும் காற்றின் உதவியுடன் குளிர்வித்து, Engine ஆயிலின் மசகுத்தன்மை குறையாமல் பார்த்துக்கொள்ளும். இது ஏர் கூலிங் செட்-அப்புடன் இணைந்தே செயல்படும் என்பது ப்ளஸ். பஜாஜ் பல்ஸர் 220 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 பைக்கை உதாரணங்களாகச் சொல்லலாம்.
Surat doctor saves US patient’s life at 35,000 feetTNN | May 1, 2018, 09:49 IST



 


Dr Aditya Shah stabilized him with medicines and first-aid kit in the plane

SURAT: Jim Rogers (76), a resident of Wisconsin in the US, owes his life to this young Surat doctor. 


Flying on the Delta Flight 11 London-Minneapolis flight, Rogers’s health suddenly deteriorated, triggering a medical emergency at an altitude of 35,000 feet over the Atlantic. His blood pressure suddenly shot up to dangerous levels of 200-120 and blood started to ooze out of his right eye. As he kept writhing in pain and panic, Dr Aditya Shah from Surat, who was also on the same flight, wasted no time in taking the case in his hands.

Along with a veteran nurse Anne Henson and Hennepin County EMT Blake Tyra, who were also on board, Shah gathered all the medical supplies from the plane’s first aid kit. He also quickly arranged for blood pressure medicines from a co-passenger for Rogers. Once his condition stabilized, the flight returned to Ireland where he was taken to the hospital. Rogers was detected of corneal melt and had to undergo several surgeries.

Though the incident happened in the first week of March, it came to light recently.

Shah, a student of St Xavier’s School in Surat, completed his MBBS from Mumbai. He went to the US five years ago and obtained his Doctor in Medicine (MD) degree from Chicago. At present, he is doing a fellowship at the famous Mayo Clinic, Rochester, in infectious diseases.

While Shah was returning via London after meeting his parents in Surat, Rogers was going home to Wausau, Wisconsin with his wife Margaret Sheilds.

Shah’s father Dr Sanjeev is a practising orthopaedic surgeon in Surat for the past 30 years. “We are proud of his timely gesture. My wife Radhika is responsible for our son’s upbringing and helping him imbibe Indian values. His brother is also an orthopedic surgeon,” said Sanjeev.

“I think that our team was God sent for Rogers on that particular day,” said a humble Shah.

NEWS TODAY 23.04.2026