Saturday, May 5, 2018

முதுமையைப் போற்றுவோம்!

By ச. முத்துக்குமார்  |   Published on : 04th May 2018 01:39 AM  | 
மனிதர்கள் தவிர்க்க நினைப்பதும், தள்ளிப்போட முடியாத விஷயமாகவும் உள்ளது முதுமை. குழந்தையாக பிறந்து முதுமையில் இறப்பது இயற்கையின் நியதியாக உள்ளபோதிலும், முதுமைப் பருவம் என்பது எளிதில் கடந்து செல்லக் கூடியதல்ல. மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய பருவத்தில் இருக்கும் முதியவர்கள் அனுபவிக்கும் இன்னல்களை காது கொடுத்துக் கூட கேட்காத சூழலில் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். 
முதியவர்களின் அனுபவம் நமக்குப் பல்வேறு விஷயங்களில் கை கொடுத்தபோதிலும் அவர்களுக்கு கை கொடுத்து உதவி செய்யவும் நம்மில் பலர் தயாராக இல்லை. அவ்வாறான முதிய பருவத்தில் அவர்கள் என்னவிதமான வேதனைகள், மனத் துன்பங்களை இன்றைய சமூகத்தில் பெறுகின்றனர் என்பதை ஓர் ஆய்வின் முடிவு நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
கடலூரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனம் சென்னை, புதுதில்லி, கொல்கத்தா, மும்பை, ஆமதாபாத், பெங்களூரு, புவனேசுவரம், குவாஹாட்டி, ஹைதராபாத், லக்னௌ, ஷில்லாங் உள்ளிட்ட 19 நகரங்களில் 4,615 முதியோர்களை சந்தித்துப் பேட்டி கண்டுள்ளது. இதில் கிடைத்த தகவல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும், சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். 53% பேர் தங்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், 61 சதவீதத்தினர் தங்களின் பொறுமையான செயல்பாட்டால் சமூகம் தங்களை புறக்கணிப்பதாகவும், 52 சதவீதத்தினர் தங்களிடம் மக்கள் அதிக கடுமையாக நடந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். வாகனங்களை பொதுமக்கள் அலட்சியமாக பயன்படுத்துவதால் தங்களுக்கு சாலை விபத்துகள் தங்களுக்கு நேர்வதாக 38சதவீதத்தினரும், இதன் காரணமாகவே 42 சதவீதத்தினர் தங்களது வீட்டைவிட்டே வெளியே வர தயங்குவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளைக் கொண்டு ஆராய்ந்தால், நவீன சமூகத்தை முதியோர் மிரட்சியுடனே அணுகுகிறார்களா அல்லது முதியவர்களை அலட்சியத்துடன் இளைய தலைமுறை அணுகுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன.
சமூகத்தில் ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்தவர்கள் தற்போது தங்களது கால் தடத்தை சாலையில் பதிக்கவே அச்சப்படும் சூழல் உள்ளது. இன்றைய பரபரப்பான வாழ்வில் அனைத்துக்கும் வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும் நிலையில், தங்களின் உடல் இயலாமையால் மெதுவாக நடந்து செல்லும் ஒருவரைக் காணும் போது ஒருவிதமான கோபம் ஏற்படுவது இயற்கையானதுதான். 
ஆனால், ஓடிக்கொண்டே இருக்கும் நாமும் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க முடியுமா? இந்தக் கேள்வியை மனதில் கொண்டு, முதியவர்களை நோக்கினால் அங்கே நமது முதிய உருவத்தை காணலாம். அவர்கள் மீது கருணை மழையைப் பொழிய வேண்டியதில்லை. ஆனால், நாமும் இதே தள்ளாமையை கண்டிப்பாக அடைவோம் என்பதை மனதில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே அவர்களின் வலியும், வேதனையும் புரியும்.
முதியோர் என்போர் ஒன்றுக்கும் முடியாதவர்கள் அல்ல. இந்த சமுதாயத்துக்கு தங்களது உடல் உழைப்பை வழங்கிவிட்டு, இப்போது தங்களது அனுபவத்தையும், அறிவையும் வழங்கத் தயாராக நமக்காக காத்திருப்பவர்களே முதியவர்கள். தங்களது அனுபவத்தை வளரும் தலைமுறையினர் பகிர்ந்து கொண்டு, அதன் மூலமாக அவர்கள் முன்னேற்றமடைய வேண்டுமென்ற எண்ணத்துடனே தங்களது அனுபவங்களை பிறருக்கு பகிர்கிறார்கள். 
முதுநெல்லியும், முதியவர்களின் பேச்சும் கசக்கும் என்ற முதுமொழிக்கு ஏற்ப, அவர்களது பேச்சை இன்று காது கொடுத்து கேட்காததால், நெல்லிக்காயை சுவைத்த பின்னர் கிடைக்கும் இனிப்பை புறக்கணிக்கிறோம் என்றே கொள்ள வேண்டும்.
வாழ்வின் கடைசிப் பருவத்தில் இருக்கும் முதியவர்களுக்கு எந்தவிதமான சிறப்புச் சலுகைகளையும் யாரும் காட்டுவதில்லை. அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்களில் முதியவர்கள் எளிதில் சென்று வரும் வகையில் எந்தவிதமான சிறப்பு ஏற்பாடுகளும் கிடையாது. பேருந்தில் முதியவர்களுக்கான இருக்கை ஒதுக்கீட்டைக் கூட அவர்களால் பெற முடியாத நிலையே உள்ளது. 
முதியவர்கள் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் எவ்வளவு பெரிய பிரச்னையையும் சர்வ சாதாரணமாக கையாண்டு, அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு, அதனையே சாதனையாக மாற்றுவதை நமது வாழ்வில் பல்வேறு கட்டங்களில் பார்த்து உணர்ந்திருப்போம். அவர்கள் அந்தக் குடும்பத்தின் அறிவு பொக்கிஷமாக இருந்து தங்களது அனுபவங்கள் மூலமாக பிரச்னைகளுக்குத் தீர்வு காண்கின்றனர். 
தற்போது இளைய வயதினரை அதிகமாகக் கொண்ட நாடாக விளங்கிவரும் இந்தியா, முதியவர்களின் அறிவுரைகளைக் கேட்டு, அதை தங்களது செயல் திட்டத்தில் இணைத்து பணியாற்றினால் வியத்தகு வெற்றிகளைப் பெறலாம். 
பொது வெளியில் அவர்களது இயலாமையை விமர்சிக்கும் வகையிலான நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். உதவியை நாட விரும்பாத அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் இளைய தலைமுறையினருக்கு உள்ளது.
சமுதாயத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான முதியவர்களை ஒதுக்கிவிட்டு எந்த சாதனையையும் யாராலும் நிகழ்த்த முடியாது.

SC nod to counselling rule changes for PG medical
05.05.2018

NEW DELHI, DHNS: The Supreme Court has approved the changes in the counselling rules introduced by the Medical Council of India this year to check the “blocking” of seats by doctors aspiring to pursue postgraduate courses.
“Devious methods were adopted by certain candidates to block the seats in the all-India quota and resign thereafter from those seats later, which resulted in the reversion of the all-India quota seats to the state quota,” a bench of justices S A Bobde and L Nageswara Rao said.
Notably, admission to postgraduate courses is undertaken on the basis of National Eligibility-cum-Entrance 
Test.
50% of the seats are earmarked for all India quota and the remaining 50% for the state quota. A group of postgraduate courses aspirants, led by Rachit Sinha, contended the changes brought in by the MCI on April 9 stated that even if a candidate is allotted a seat in the first round of counselling in the all-India quota but did not report, he/she would be entitled to participate in the second round. 
A candidate who had reported but resigned was also made eligible to participate in the second round.
The petitioner claimed it would increase competition as candidates who were not eligible to participate in the second round of counselling earlier were permitted to compete for admissions in the second round.
The top court, however, rejected their contention, saying, “the MCI made changes to arrest the blocking of seats by certain candidates which was detrimental to the interest of meritorious candidates in the all-India quota”.
It also noted that the medical counselling committee identified about a thousand candidates who were indulging in such illegal practice and proposed to take action against them after a thorough inquiry. The court said there is no infringement of any legal right of the petitioners.
Reduction of the chances of admission does not entail the violation of any right, it said.
The top court also took exception to the fact that some states and deemed/central institutions completed the second round of counselling without waiting for the reversion of the unfilled seats in the second round of counselling of the all-India quota.
It directed that such states and deemed/central institutions shall conduct the second round of counselling again after reversion of the unfilled seats in the second round of counselling of the all-India quota.
The court said the concerned authority will report the unfilled seats in the second round of the all-India counselling to the respective states by May 5.
The second round of counselling for the state quota shall be conducted and completed by May 10. The mop-up round for the state quota, scheduled to be completed by May 8, is extended to May 15, the court ordered.

STATISTICS NEET 2018


WhatsApp - பில் சத்தமின்றி இணைக்கப்பட்டுள்ள ஒரு புதிய அம்சம்; அட்மின்கள் செம்ம குஷி.!  05.05.2018


பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான, உலகின் மிகப்பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப் - பாரபட்சம் இன்றி அதன் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும்விண்டோஸ் பயனர்கள் என அனைவர்க்கும் - பொதுவான முறையில், எளிமையான அம்சங்களை வழங்குவதில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறது.

  அதிலும், கடந்த ஒரு மாத காலமாக வாட்ஸ்ஆப்பில், பல புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


அதில் மிகவும் குறிப்பிட்டு கூறவேண்டிய அம்சங்கள் என்று பார்த்தால், ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்த பின்பும் கூட, இரண்டாம் முறை மீடியா பைல்களை டவுன்லோட் செய்யக்கூடிய திறன்மற்றும் இரண்டிற்கும் மேற்ப்பட்ட அட்மின்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கான 'டிஸ்மிஸ் ஏஸ் அட்மின்'ஆகியவைகளை கூறலாம். அதற்கு அடுத்தபடியாக, வாட்ஸ்ஆப் அதன் 'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சத்தை உருட்டியது.

இதன் நன்மை என்ன.? இதை எதெற்கெல்லாம் பயன்படுத்தலாம்.? இந்த வரிசையில் தற்போது வாட்ஸ்ஆப், அதன் க்ரூப் அட்மின்களுக்கான சக்தியை (கட்டுப்பாட்டை) அதிகரிக்கும் ஒரு அம்சத்தை அதன் அனைத்து தளங்களிலும் உருட்டியுள்ளது. அதாவது, வாட்ஸ்ஆப், அதன் அனைத்து ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு குறிப்பிட்டுள்ள அம்சத்தை இணைத்துள்ளது, அது என்ன அம்சம்.? இதன் நன்மை என்ன.? க்ரூப் அட்மின்கள் இதை எதெற்கெல்லாம் பயன்படுத்தலாம்.?

மெம்பர்களை கட்டுப்படுத்தும் அதிகாரங்கள்.!

"ரெஸ்ட்ரிக்ட் க்ரூப்" (Restrict Group) என்கிற பெயரை கொண்டுள்ள இந்த புதிய அம்சமானது, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பின் அட்மினுக்கு, மெம்பர் ஒருவர் அனுப்பும் குறிப்பிட்ட டெக்ஸ்ட் மெசேஜை, புகைப்படங்களை, வீடியோக்களை,கிப் பைல்களை, டாகுமெண்ட்ஸ்களை அல்லது வாய்ஸ் மெசேஜைகட்டுப்படுத்தும் சக்தியை வழங்கும். எளிமையாக கூறவேண்டும் என்றால், ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது க்ரூப்பின் மெம்பர்களை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அட்மின்களுக்கு வழங்கும்.

வாட்ஸ்ஆப் 2.18.132 ஆண்ட்ராய்டு அப்ட்டேட்டில் அணுக கிடைக்கும்.!

புதிய வாட்ஸ்ஆப் அம்சங்களை பொது தளத்திற்கு உருட்டும் முன்னர், அதை பரிசோதிக்கும் தளமான வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோவின் (WABetaInfo) கூற்றுப்படி, இந்த புதிய அம்சம் ஆனது, வாட்ஸ்ஆப் 2.18.132 ஆண்ட்ராய்டு அப்ட்டேட்டில் அணுக கிடைக்கும். இந்த ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது, கடந்த 2017 டிசம்பரில் மாதத்தில் பரிசோதனை தளத்தின் ப்ரைவஸி செட்டிங்ஸ்-ல் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஒரு க்ரூப்பின் அனைத்து மெம்பர்களுக்கு,க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்,ஐகான் மற்றும் சப்ஜெக்டை திருத்தும் அனுமதி இருந்தது. ஆனால் இனி அதை அட்மினால் மட்டுமே நிகழ்த்த முடியும் (குறிப்பாக க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்) என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே ஒரு முறை மட்டுமே டவுன்லோட்.!

முன்னதாக, வாட்ஸ்ஆப்பின் வழியாக நாம் டவுன்லோட் செய்யும் போட்டோக்கள், GIFகள் மற்றும் ஷார்ட் கிளிப்புகள் ஆனது, டவுன்லோட் செய்த நாளில் இருந்து அடுத்த 30 நாட்கள் வரை, வாட்ஸ்ஆப் சேவையகத்தில் சேமித்து வைக்கப்ப்பட்டு இருக்கும். ஒருமுறை டவுன்லோட் செய்து ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் டெலிட் செய்யாத பட்சத்தில் மட்டுமே, இந்த 30 நாட்கள் என்கிற கணக்கு செல்லுபடியாகும். ஒருவேளை டெலிட் செய்து விட்டால் மறுமுறை டவுன்லோட் செய்ய கிடைக்காது என்கிற நிலைப்பாடு இருந்தது.

ஒரு பயனரை தவிர, வேறு யாராலும் அணுக முடியாது.!

அதாவது, ஒரு முறை டவுன்லோட் செய்யப்பட்ட பைலை, ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் இருந்து டெலிட் செய்து விட்டால், அதை மீண்டும் வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியாது. ஆனால், அதை சாத்தியமாகும் வண்ணம் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதற்காக, வாட்ஸ்ஆப் சேமிப்பக நெறிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆக, இனிஒரு பயனரால் டவுன்லோட் செய்யப்பட்டு டெலிட் செய்யப்பட்டாலும் கூட, வாட்ஸ்ஆப்பின் சர்வரில் கிடைக்கப்பெற்ற அனைத்து செய்திகளும், மல்டிமீடியா உள்ளடக்கங்களும், மீண்டும் அணுகுவதற்காக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். இந்த இடத்தில் வாட்ஸ்ஆப் சேவையகம் மறைகுறியாக்கப்பட்டது (என்க்ரிப்ட்ட்) என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். அதாவது இந்த பைல்களை ஒரு பயனரை தவிர, வேறு யாராலும் அணுக முடியாது.

எந்த வாட்ஸ்ஆப் வெர்ஷனில் கிடைக்கும்.?

 வாட்ஸ்ஆப் பீட்டா இன்ஃபோவின் அறிக்கையின் படி, இப்போது வரையிலாக ​​இந்த புதிய அம்சமானது, ஆண்ட்ராய்டு பதிப்பிற்கான வாட்ஸ்ஆப் பதிப்பில் (2.18.113) கிடைக்கிறது மற்றும் மிக விரைவில் ஐஓஎஸ் தளத்திற்கு,ம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிகழ்த்த தனிப்பட்ட பொத்தான் எதுவும் இணைக்கப்படவில்லை. ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்தும் நீக்கப்பட்ட மீடியா உள்ளடக்கத்தை, குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட் சென்று, மீண்டும் அந்த குறிப்பிட்ட மீடியா பைலை பதிவிறக்கம் செய்ய டாப் செய்யவும், அவ்வளவு தான்.

சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் எப்படி வேலை செய்கிறது.?

இதற்கு முன்னதாக வெளியான 'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சத்தை பொறுத்தவரை, முன்னதாக, ஒரு பயனர் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் அம்சத்தை பயன்படுத்தும் போது அவர் குறிப்பிட்ட சாட்டை விட்டு வெளியேற முடியாது. ஆனால் இனி ஒரு வாய்ஸ் மெசேஜை பதிவு செய்யும், அதே நேரத்தில் அழைப்புகள் அல்லது பேட்டரி தீர போகிறது அல்லது வேற ஆப்பிற்குள் நுழைய வேண்டும் என்றால், தாராளமாக வாட்ஸ்ஆப் சாட்டை விட்டு வெளியேறலாம்.

சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால்.?

நீங்கள் பதிவு செய்த வரையிலான வாய்ஸ் மெசேஜ் ஆனது வாட்ஸ்ஆப்பில் சேமிக்கப்பட்டு இருக்கும். எனவே நீங்கள் மீண்டும் மற்றொரு முறை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இப்படி சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் வேலை செய்யும். பாதியில் விட்டுச்சென்ற வாய்ஸ் மெசேஜ் ஆனது சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால், அதற்கும் ஒரு வழி இருக்கிறது. வெறுமனே ஹோம் ஸ்க்ரீன் செல்வதின் வழியாக வாய்ஸ் மெசேஜை கேட்க முடியும் என்று வெளியான WaBetaInfo அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக்கொள்கைகளை மேம்படுத்தல்.!

வாட்ஸ்ஆப் பீட்டாவில், இந்த அம்சம் முன்னிருப்பாக ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு விட்டதால், வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்கள், உள்நுழையவும் இதை உடனடியாக பயன்படுத்தத் தொடங்கலாம். இதற்கிடையில், மே 25 அன்று ஐரோப்பாவில் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ், வாட்ஸ்ஆப் அதன் சேவை விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கைகளையும் மேம்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும்.!

நடைமுறைக்கு வரும் புதிய கொள்கைகளோடு சேர்த்து, Request Account info என்கிற ஒரு அம்சமும் இடம் பெற உள்ளது. வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் அடுத்த பதிப்பானது, மே 25-ல் வெளியானால், இந்தஅம்சத்தினை அனைவராலும் பார்க்க முடியும். இந்த அம்சமானது வாட்ஸ்ஆப் மூலம் சேகரிக்கப்படும், பயனர் ஒருவரின் சிறிய அளவிலான டேட்டாவை டவுன்லோட் செய்ய உதவும். இந்த அம்சமானது, உலகம் முழுவதும் உள்ள எல்லாபயனர்களுக்கும் உருட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர்.!

"ரெக்வஸ்ட் அக்கவுண்ட் இன்ஃபோ" என்கிற இந்த புதிய அம்சமானது, வாட்ஸ்ஆப்பின் செட்டிங்ஸ்-ல் காணப்படும். அதை கிளிக் செய்து பின்னர் 'அக்கவுண்ட்' என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய "ரெக்வஸ்ட் அனுப்பட்டது" என்கிற நோட்டிபிகேஷன் கிடைக்கும். கோரிக்கை நிகழ்த்தப்பட்ட தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்குள் வந்து சேரும். ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர் நடுவில் ரத்து செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும்.!

ஒருவேளை கண்டிப்பாக அனுப்பிய ரெக்வஸ்ட்டை கேன்சல் செய்ய வேண்டும் என்றால், ஒன்று உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும் அல்லது, வாட்ஸ்ஆப் நம்பரை மாற்ற வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை செய்வதின் விளைவாக, அனுப்பட்ட கோரிக்கையை ரத்து செய்யலாம். உங்கள் அக்கவுண்ட் சார்ந்த விவரங்கள் டவுன்லோட் செய்ய திறந்து விடப்பட்டுள்ளது என்கிற தகவலை வாட்ஸ்ஆப் உங்களுக்கு அனுப்பி வைக்கும். அந்த அறிவிப்பு கிடைத்த அடுத்த சில வாரங்களுக்குள் அதை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும். இல்லையெனில் அது வாட்ஸ்ஆப் சேவையகங்ளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்படும்.

சுவாரசியம் என்னவெனில்.!

மேற்குறிப்பிட்ட அதே வழிமுறைகளை பின்பற்ற இறுதியாக "டவுன்லோட் ரிப்போர்ட்" என்கிற ஒரு விருப்பம் உங்களுக்கு கிடைக்கும். அதை டாப் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். டவுன்லோட் செய்யப்பட்ட டேட்டா ஆனது ஸிப் பைல் வடிவத்தில் அணுக கிடைக்கும்என்பது குறிப்பிடத் தக்கது. சுவாரசியம் என்னவெனில், டவுன்லோட் செய்த ரிப்போர்ட்டை நிரந்தரமாக டெலிட்செய்யும் ஒரு அம்சத்தையும் வாட்ஸ்ஆப் வழங்குகிறது.
`டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுத இருந்த இடம், நீட் தேர்வுக்கு இல்லையா..?' - தலைவர்கள் கேள்வி
MUTHUKRISHNAN S


vikatan  



நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் சீட் ஒதுக்கி இருப்பது கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ அலுவலகத்தையே முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனாலும், அவர்களிடம் இருந்து எந்த பலனும் இல்லை; சரியான பதிலும் இல்லை. நேற்று முன் தினம், '' ஒரே நேரத்தில் 12 லட்சம் பேர் எழுதும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வசதிகள் இருக்கும் தமிழ்நாட்டில் லட்சம் பேர் நீட் தேர்வு எழுத மையங்களை அமைக்க முடியாதா?'' என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கேள்வி எழுப்பி இருந்தார். இந்தக் கருத்து வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் சுனில் ராஜா நம்மிடம் கூறுகையில், ''தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வெழுத கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இடம் ஒதுக்கீடு செய்தது குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கு, பி.ஜே.பி-யை சேர்ந்த தமிழகத் தலைவர்கள் நியாயப்படுத்தி வருகிறார்கள். ரூ.1,000 ரொக்க பணமும் ரயில் அல்லது பஸ் கட்டணம் திருப்பி தரப்படும் என்று தேர்வுக்கு முந்தைய நாள் அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. இது தேர்வெழுதும் மாணவர்களுக்கு நிச்சயமாக பயன்படப்போவதில்லை.

ஏனென்றால், இது கோடை விடுமுறை காலம். அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல் ஆக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த அவரச கதியில் ராஜஸ்தான் செல்வது எப்படி? விமான வசதி செய்து கொடுப்பார்களா? கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்ல பல பஸ்களை பிடித்துத்தான் போக வேண்டும். வெளிமாநிலங்களில் தங்கும் செலவு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாயாவது ஆகும். சாப்பாடு, உள்ளூர் செலவு எல்லாம் இன்னும் இருக்கிறது. இதைப்பற்றி ஆட்சியாளர்களும் சி.பி.எஸ்.இ நிர்வாகிகளும் யோசித்தார்களா? தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பிரச்னைகள் எல்லாம் கூடுதல் சுமையாக ஆகி விட்டது.

இந்த ஆண்டு நீட் தேர்வை தமிழகத்தில் எழுத விண்ணபித்தவர்களில், சுமார் 5,000 பேருக்கு மேல், இங்கு இடமில்லை என்று வேறு மாநிலத்துக்கு மாற்றி இருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 போட்டித்தேர்வை 6 ஆயிரத்து 962 மையங்களில் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் எழுதினார்கள். சென்னையில் மட்டும் 1 லட்சத்து 24 ஆயிரத்து 894 பேர் தேர்வு எழுதினர். ஆனால்,இப்போது நீட் தேர்வெழுத தமிழ்நாடு முழுவதும் 170 மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 பேருக்கு தேர்வு எழுத இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத இருந்த இடம் இப்போது நீட் தேர்வுக்கு இல்லையா?



சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் 100 சி.பி.எஸ்.இ பள்ளிகளும் கோவை பகுதியில் 80 சி.பி.எஸ்.இ பள்ளிகளும் என்று தமிழகம் முழுவதும் 580 சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளன. இவற்றில் 250 பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள். இங்கெல்லம் தேர்வு மையம் போட்டிருந்தாலே தமிழக மாணவர்கள், தமிழகத்திலேயே தேர்வெழுதி இருக்க முடியும். இன்னும், தமிழக அரசு பள்ளிகளை நாடி இருந்தால் பல லட்சம் பேர் தேர்வெழுத கூடுதல் இடம் கிடைத்திருக்கும். ஆனால், இடமில்லை என்று பொத்தம் பொதுவாக சி.பி.எஸ்.இ சொல்லும் காரணம் காமெடியாக உள்ளது. எதற்கெடுத்தாலும், டிஜிட்டல் இந்தியா சர்க்கார் என்று சொல்லும் மத்திய அரசு, இதற்காக வெட்கப்பட வேண்டும். கடந்த பிப்ரவரியில் 17 லட்சம் பேர் குரூப்-4 தேர்வெழுத ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் உதவியை கேட்டிருந்தாலே தேர்வு மையம் அமைக்க தேவையான உதவிகளை வழங்கி இருப்பார்கள்'' என்றார்.
`ஆயிரம் ரூபாய் சென்ட்ரலில் காப்பி குடிக்கக்கூட போதாது' - பாரதிராஜா ஆதங்கம்! 

அலாவுதின் ஹுசைன்

vikatan  

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் மே 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்கள் ஏராளமானோருக்குக் கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால், மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.



இது குறித்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையை சேர்ந்த இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், ``நீட் தேர்வு முறையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நீட் தேர்வினை மே 6-ம் தேதி நடத்தியே ஆகவேண்டும் என்ற நிலையில், எங்களது பிள்ளைகள் இந்தத் தேர்வினை ராஜஸ்தான், கேரளா, அஸ்ஸாம் ஆகிய வெளிமாநிலங்களில் சென்று எழுத வேண்டும் எனக் கடைசி நிமிடத்தில் அறிவித்திருக்கிறார்கள். தமிழ் பிள்ளைகள் தமிழ் நாட்டில் தேர்வு எழுத விடப்படாதது ஏன் என்று தெரியவில்லை. எங்கள் மாணவர்கள் தேர்ந்தவர்கள். நடுத்தட்டு, அடித்தட்டு மாணவன் இப்படி வேறு மாநிலங்களுக்குச் செல்ல குறைந்தபட்சம் தாயோ, தந்தையோ ஒருவருடன் செல்ல போக்குவரத்து செலவு, அங்கே தங்கும் செலவு இப்படிப் பல சிக்கல் இருக்கிறது.

மாணவனின் பொருளாதார அடிப்படையைத் தெரிந்து கொள்ளாமல், அவனை ஒதுக்கணும், ஒரங்கட்டணும் என்ற எண்ணத்துடனேயே இந்த மாதிரி ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளதா அரசு என்று தெரியவில்லை. இந்த மாணவர்களைப் போகாதீர்கள் என்று தடுக்க முடியும். வெளி மாநில மாணவர்களைக் இங்கு வராதீர்கள் என்று தடுத்த நிறுத்த முடியும். ஆனால், எங்கள் போராட்டத்தினால் தகுதியுடைய எங்கள் மாணவர்கள் தங்கள் இடங்களை இழப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்த முறை அவர்கள் நீட் தேர்வு எழுதி வரட்டும். இந்தத் தேர்வுக்கு நாம் போகவில்லையென்றால் நஷ்டம் நமக்குத்தான். நம் மாணவன் இடத்தில் வேறு மாநிலத்தவருக்கு அந்த இடத்தில் உட்காரக் கூடும்.

அதனால், மற்ற மாநிலங்களுக்குச் சென்று வரும் எங்களது மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என அரசை வலியுறுத்த நாளை முதலவர் அல்லது சுகாராத்துதுறை அமைச்சரைச் சந்திக்கவுள்ளோம். அரசு அளிக்கும் ஆயிரம் ரூபாய் சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் காப்பிகூட குடிக்கக்கூட போதாது. வசதியில்லாத மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுதச் சென்று வரும்வரையில் தேவைப்படும் முழு பொருளாதார உதவியையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும். நீட் தேர்வை இந்தத் தடவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தால் இதை முழுமையாக ஆதரிக்கின்றோம் என்று அர்த்தமில்லை. இதற்குப்பிறகு நீட்டை எதிர்த்து கடுமையாக போராடி நீட் தேர்வினை ரத்து செய்வோம்" என்றார்.
தாயின் கம்மலை அடகு வைத்து நீட் தேர்வுக்கு கேரளா செல்லும் ஏழை மாணவி..!
எம்.திலீபன்

vikatan  05.05.2018

நீட் தேர்வை எழுதுவதற்காகத் தாயின் கம்மலை அடகு வைத்து விட்டு எர்ணாகுளம் செல்கிறார் அரியலூர் மாணவி ஹேமா. பேருந்து நிலையத்திற்கே தனியாக செல்லாத நான் எப்படி வெளிமாநிலத்திற்குச் சென்று தேர்வை எழுதப் போகிறேன் என்று தெரியவில்லை எனப் புலம்புகிறார் ஏழை மாணவி.



தமிழகத்தில் நீட் தேர்வு எழுத திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்விற்கான மையங்கள் வெளி மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார் செய்யப்பட்டது. இதில் நீட் தேர்விற்காக ஒதுக்கப்பட்ட மையங்களில் தான் நீட் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றத் உத்தரவிட்டதையடுத்து வெளிமாநிலத்தில் நீட் தேர்விற்கான பயிற்சி மையங்கள் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் தற்போது வெளிமாநிலங்களுக்கு சென்று கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் தவுத்தாய்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஹேமா. இவருக்கு 3 தங்கைகள் உள்ளனர். அப்பா, அம்மாவும் தினம் வேலைக்குச் சென்று தான் தங்களுடைய வாழ்வாதாரத்தை நடத்திவருகின்றனா். இவருக்கும் கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு கடும் மன உளைச்சலுடன் எர்ணாகுளம் புறப்பட்டுக்கொண்டிருந்த மாணவி ஹேமாவிடம் பேசினோம்., ”நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கடந்தாண்டு போராடினார்கள். ஆனால் இவ்வாண்டு நீட் தேர்வை இங்கு நடத்துங்கள் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

நீட் தேர்விற்கு ஆன்லைனில் அப்ளை செய்யும் போது முன்னுரிமை மையமாகத் தமிழகத்தில் உள்ள மையங்களைத்தான் குறிப்பிட்டேன். ஆனால் எங்களுக்குக் கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த நான் அறிமுகமில்லாத, தெரியாத மொழி பேசக்கூடிய நகரில் தேர்வு எழுதச் செல்வது எனக்குள் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

எனக்கு எர்ணாகுளத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் தேர்வு மையம் ஒதுக்கியிருக்கிறார்கள். நான் தனியாக அரியலூர் பேருந்து நிலையத்திற்கே செல்லாதவள். ஆனால் எர்ணாகுளம் எப்படி செல்லப்போகிறேன் என்றுதெரியவில்லை, அதுமட்டுமில்லாமல், எங்கள் அப்பா அம்மா ஊர் உலகம் தெரியாது. அவர்களை அழைச்சிட்டு எப்படி போகப்போகிறேன் தெரியவில்லை. இவ்வளவு பிரச்னைகள் மத்தியில் என்னுடைய அம்மாவின் கம்மலை அடகு வைத்துவிட்டுத் தேர்வு எழுதச் செல்கிறேன். என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை என்று ஆதங்கத்தோடு முடித்தார்.




 அவரைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் கூறும் போது., ”தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் படிக்க வைப்பதே மிகவும் கஷ்டமாக உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்ள பயிற்சி மையங்களில் சேருவதற்கு அதிகளவில் பணம் செலவு செய்துள்ளோம். ஆனால் தற்போது தேர்வு எழுதச் செல்லவும் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எர்ணாகுளத்திற்கு செல்லச் செலவிற்கு பணம் இல்லாமல் அணிந்திருந்த தோடை அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு தான் செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம் எனக் கூறினார்.

Man waits 5 hours, catches runaway wife at polling booth

Man waits 5 hours, catches runaway wife at polling booth  24.04.2026 Jalpaiguri : A tense domestic drama unfolded at booth no. 25/238 in Pha...