Sunday, May 6, 2018

Zoo to be open through May, stress on animals may increase, say veterinarians

Oppili.P@timesgroup.com

Chennai:   06.05.2018


The animals at the Vandalur zoo will have no respite this month as the authorities have decided the facility will in May remain open on all the four Tuesdays that were until now holidays.

The decision has not gone down wellwithwildlife veterinarians with one of them saying the very idea of closing the zoo for a day was aimed at giving them rest and to relieve them from the stress they weresubjectedto. Nowthat there will be no holidays, the stress could lead to health problems and even affect their reproductive behaviour, he said.

Others said that that cleaning of enclosures, moats and surrounding areas and clearing of the tonnes of garbage left over by visitors, taken up on closed on holidays in a practice followed internationally, will no longer pe possible A wildlife official said that the reptiles, especially snakes, would be the worst affected as they move according to vibrations on land. The huge crowds that are now set to throng their enclosures, some of them resorting to uncalled for gestures like tappin gon the windows, will subject them to severe stress that could have a negative impact, he said.

Such warnings do not, however, seem to have been heeded by the zoo who appear only thrilled that in April the revenue was ₹1 crore and is expected to go up further. On an average, about 8,000 visitors including children make a beeline to the zoo on weekdays and this number is doubled on weekends, said officials.

They said that as part of the effort to bring down incidence of vandalism by visitors they had formed a cycle squad this year.

Each four-mebr team will move around the vast facility, educating those trying to create problem or throwing waste into the enclosures. The squad members will also carry first aid kit that could come in handy in an emergency, an official said. 


NEEDING A BREATHER: Since there will be no holidays, the stress on animals could lead to health problems and even affect their reproductive behaviour
Port engineer in hot water over MBA degree

Srikkanth.D@timesgroup.com

Chennai: 

 
06.05.2018
A Chennai port official has found himself in troubled waters days before his retirement. A departmental inquiry has found that the official, now a deputy chief mechanical engineer, had pursued a full-time MBA course at the University of Madras, 30 years ago, when he was an employee of the Chennai Port Trust, drawing full salary and all other monetary benefits. He was also promoted during this period, according to sources.

When a departmental inquiry was initiated , Dy CME KDorairaj had contended that the allegations against him were false. However, signature samples analysed by the Central Forensic Science Laboratory, Hyderabad, confirmed that the present signature of Dorairaj has tallied with the signature found in the records of the University of Madras, a disciplinary order by the Chennai Port Trust chairman dated January 31 stated.

Dorairaj is due for retirement on May 31. The University of Madras is located about 2km from the port trust office.

The chairman’s order also noted that the university’s controller of examinations, in three letters, had stated that Dorairaj had taken the MBA classes during 1985-1987. “He had appeared for final examination in April 1987. However, he got the MBA degree only in April 1989 as he had some arrears,” the order noted.

But, despite the allegations against him proved, the said official was handed only a minor punishment, according to port & dock labour union members.

“Just ₹1,500 was reduced from his basic pay from January 1 to the date of his retirement,” R Santhanam, general secretary of the BMS port and dock labour union, said.

The union on Thursday filed a police complaint seeking criminal action against Dorairaj and has also written to the shipping ministry and central vigilance commission seeking suspension of the official for cheating the organisation.


ஆறு ஜனாதிபதிகளை உருவாக்கிய சென்னை பல்கலை
60வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பாராட்டு


சென்னை : ''தகவல் தொழில்நுட்பத்திலும், 'டிஜிட்டல்' பொருளாதாரத்திலும், தமிழகம் போற்றத்தக்கதாக உள்ளது,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டினார். 06.05.2018
ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், சென்னை பல்கலை
சென்னை பல்கலையின், 160வது ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலை நுாற்றாண்டு விழா கலையரங்கில் நேற்று நடந்தது. பல்கலை வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோஹித், தலைமை வகித்தார்.
விழாவில், மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: சென்னை பல்கலை, நாட்டை கட்டமைக்கும் பணியில், ஒரு மைல்கல்லாக திகழ்கிறது. தென் மாநிலத்தில், அறிவை மேம்படுத்துவதிலும், அறிவு கருத்துக்களை உருவாக்குவதிலும், வலுவான அடித்தளமிட்ட நிறுவனங்களில், இப்பல்கலை, முக்கிய பங்கு வகித்துள்ளது.பல்கலையின் தாய்பல்கலைகளின் தாயாக, சென்னை பல்கலை போற்றப்படுகிறது. இப்பல்கலை, ஆறு ஜனாதிபதிகளை உருவாக்கி உள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோர், இங்கு படித்தவர்கள். நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, இப்பல்கலையின் பழைய மாணவர். நோபல் பரிசு பெற்ற, சர்.சி.வி.ராமன், டாக்டர் சுப்பிரமணியன் சந்திரசேகர், முன்னாள் தலைமை நீதிபதிகள் சுப்பாராவ், பதஞ்சலி சாஸ்திரி ஆகியோரும், இங்கு படித்தவர்களே.பெண் தலைவர்களான, சரோஜினி நாயுடு, துர்காபாய் தேஷ்முக், பசுமைப் புரட்சி ஏற்படுத்திய சி.சுப்பிரமணியம், விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், 'கார்ப்பரேட்' நிறுவன தலைவர் இந்திரா நுாயி போன்றவரும், இங்கு படித்து பட்டம் பெற்றவர்கள்.தகவல் தொழில்நுட்பத்திலும், 'டிஜிட்டல்' பொருளாதாரத்திலும், தமிழகம் போற்றத்தக்கதாக உள்ளது. தமிழ், தொன்மையான மொழிகளில் ஒன்று. பல மொழிகளுக்கும், பல நுாற்றாண்டுகளுக்கும் முன்னரே, தத்துவம், இலக்கியம் ஆகியவற்றை படைத்த மொழி.தற்போதைய சூழல்,


இந்தியாவின் முக்கியமான அத்தியாயமாகும். நாம் வளர வேண்டிய சமுதாயமாக, விஸ்வரூபம் எடுக்க வேண்டி உள்ளது. வறுமையை, அவசரமாக ஒழிக்க வேண்டும். மக்களின் நல்வாழ்வு, கல்வி, அனைவருக்கும் மின் சக்தி, வீட்டுவசதி கிடைக்க வேண்டும்.நான்காவது தொழில் புரட்சியில், நம் நாடு வாய்ப்புகளையும், சவால்களையும், எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு பல்கலைகள், வழிகாட்டியாக இருக்க வேண்டும். தகுதி படைத்த இளைஞர்களை, தொழில் முனைவோர்களாகவும், வேலைவாய்ப்பு அளிப்போராகவும் உருவாக்குவதற்கான சூழலை வளர்த்தெடுப்பதில், தமிழகம் சுறுசுறுப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது.இது, இளைஞர்களுக்குரிய சரியான பாதை. உயர் கல்வி மேன்மை பெறுவதற்காக, மத்திய அரசு, ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. நாடு முழுவதும், 20 உயர்நிலை கல்வி நிறுவனங்களின், திறன் மேம்பாட்டை அதிகரிப்பதே, இத்திட்டத்தின் நோக்கம். இது தொடர்பாக, விரிவான திட்டத்தை, சென்னை பல்கலை தயாரித்துள்ளது. அதற்கு என் வாழ்த்துகள். இங்கு படித்து, உலகம் முழுவதும் பரவியுள்ள, முன்னாள் மாணவர்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, அவர்களையும் செயல் திட்டங்களில் ஈடுபடுத்த வேண்டும். இங்கு பட்டம் பெறும் மாணவர்கள், இந்த வளாகத்திலிருந்து வெளியே செல்லும்போது, நீங்கள் படித்ததை, அடக்கத்துடன் எடுத்து செல்லுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழியில், சமுதாயத்திற்கு ஏதேனும் செய்யுங்கள். உங்களை விட, இயலாதவர்களுக்கு உதவுங்கள். டில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன், சிலருக்கு மட்டும் சொந்தமானது அல்ல; அனைவருக்கும் சொந்தமானது. அங்கு நீங்கள் வருவதை, நான் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பெண் கல்வி :

சென்னை, வேளச்சேரியில் அமைந்துள்ள, குருநானக் கல்லுாரியில், புதிய கட்டடங்கள், கலையரங்கம் திறப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. புதிய கட்டடங்களை திறந்து வைத்து, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி, ஜனாதிபதி பேசியதாவது: ஒரு பெண்ணுக்கு, நாம் கல்வி கற்றுக் கொடுத்தால், இரண்டு குடும்பங்கள் பயன் பெறும்.ஒரு பெண் கல்வி கற்றால், அவரது பெற்றோருக்கு உதவியாக இருப்பதுடன், திருமணமாகி செல்லும் போது, கணவர் வீட்டாருக்கும் உதவியாக இருப்பார். பொருளாதார வளர்ச்சிக்கும், பெண்கள் உதவியாக உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

உயர் கல்வி கற்போர் தமிழகத்தில் அதிகரிப்பு :

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:தமிழக அரசு, 2011ல், உயர் கல்வித் துறைக்கு, 1,737 கோடி ரூபாய் ஒதுக்கியது. 2017 - 18ல், 3,680 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 4,620 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தான், மிக அதிகமான உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன. மாணவர்கள் சேர்க்கையிலும், கல்வி தரத்திலும், தமிழகம் முன்னிலையில் உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு குறியீட்டில், தமிழகம் முந்தி வருகிறது. தமிழகத்தில், உயர் கல்வி கற்போர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழக மாணவர்கள், உயர் கல்வி கற்பதுடன், சமூக அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். பட்டம் என்பது வேலைவாய்ப்பிற்கான சாதாரண காகிதம் என, நினைத்து விடாதீர். இது, சரித்திர ஆவணம். சமூகத்திற்கு, உங்களுடைய பங்களிப்பை உயர்த்தி காட்டும் ஆதாரம்.இவ்வாறு அவர் பேசினார்.

552 பேருக்கு பட்டம்! :

சென்னை பல்கலை, 160வது பட்டமளிப்பு விழாவில், 582 பேர் நேரடியாக பட்டம் பெறறனர். இவர்களில், கல்பனா, தமிழ்செல்வி ஆகியோர், டி.லிட்., பட்டம் பெற்றனர். 410 பேர், முனைவர் பட்டம் பெற்றனர். 170 பேர், பரிசு மற்றும் தனிச் சிறப்புடன் முதல் நிலை தகுதி சான்றிதழ் பெற்றனர். நேரில் வராத நிலையில், 77 ஆயிரத்து, 350 பேர், பட்டம் பெற்றனர். தஞ்சை எஸ்.பி.,க்கு டாக்டர் பட்டம்தஞ்சாவூர் போலீஸ் எஸ்.பி., செந்தில் குமாருக்கு, டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இவர், 'காலந்தோறும் கருப்பர் நகரம்' என்ற தலைப்பில், மதராசபட்டினம், சென்னையாக மாறிய கதையை ஆய்வு செய்து, ஆங்கிலேயர் ஆட்சி துவக்கம், கோட்டை உருவான கதை, நிர்வாகம், மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலை, புகழ்பெற்ற சின்னங்களின் சரித்திரம், சென்னை, வால்டாக்ஸ் ரோடு, ஏழு கிணறு, ஆர்மீனியர் தெரு என, பல வரலாற்று சின்னங்களை ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.இவர், சென்னை, பூக்கடை பகுதியில், மூன்று ஆண்டுகள், துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர்.
கட்டணத்தை திரும்ப தராத கல்லூரிகள் மீது நடவடிக்கை

Added : மே 06, 2018 02:41

புதுடில்லி:ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து விலகி, வேறொரு கல்வி நிறுவனத்தில் சேர விரும்பும் மாணவர்களின் கட்டணத்தை திரும்பத் தராத உயர் கல்வி நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க, மத்திய மனித வள மேம்பாட்டுதுறை உத்தரவிட்டுள்ளது.
உயர் கல்வி பயிலும் மாணவர்கள், ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் கட்டணம் செலுத்தி சேர்ந்த பின், வேறொரு கல்வி நிறுவனத்தில், அவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைத்தால், அங்கு இடம் மாற விரும்புவது வழக்கம்.

அப்படிப்பட்ட நேரங்களில், அவர்கள் ஏற்கனவே செலுத்திய கட்டணத்தை திரும்பத் தர இயலாது என, பல உயர் கல்வி நிறுவனங்கள் கூறி வருகின்றன.
பெரும் தொகை

இதனால், மாணவர்களும், வேறு வழியின்றி, ஏற்கனவே செலுத்திய பெரும் தொகையை இழந்து, வேறு கல்வி நிறுனத்திற்கு மாறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.சிலர், வேறு வழியின்றி, அதே கல்வி நிறுவனத்தில் தொடருகின்றனர். கட்டணத்தை திரும்பத் தர மறுக்கும் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்திந்திய தொழிற்கல்வி கவுன்சில் மற்றும் பல்கலை மானியக் குழு ஆகியவற்றுக்கு, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:வேறு கல்வி நிறுவனத்துக்கு மாற விரும்பும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை திரும்ப தர வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சில உயர் கல்வி நிறுவனங்கள், பெரும் தொகையை அபராதமாக பிடித்து, மீதி தொகையை திரும்ப தருகின்றன. அப்படிப்பட்ட நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை பாயும்.
கண்டிக்கத்தக்கது

மாணவர்கள், தாங்கள் விருப்பப்பட்ட பாடத்திலோ அல்லது கல்வி நிறுவனத்திலோ சேரும் உரிமையை பறிக்கும் இது போன்ற செயல் கண்டிக்கத் தக்கது. இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் உயர் கல்வி நிறுவனங்களின் அனுமதி மற்றும் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு



திருவனந்தபுரம், எர்ணாகுளத்துக்கு ‘நீட்’ தேர்வு எழுத சென்றுள்ள தமிழக மாணவர்கள் தங்குவதற்கு கேரள அரசும், தமிழ்ச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

மே 06, 2018, 05:00 AM
திருவனந்தபுரம்,

மருத்துவ படிப்புக்கான தகுதி நுழைவு தேர்வான ‘நீட்’ தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள மையங்களில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு எழுத கேரளா செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தமிழ்ச் சங்கத்தினர், கேரள அரசுடன் இணைந்து திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் உள்ள ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் சிறப்பு தகவல் மையங்கள் அமைத்துள்ளனர்.

திருவனந்தபுரத்துக்கு சென்ற மாணவர்கள் தங்க வசதியாக தைக்காடு மாடல் மேல்நிலைப்பள்ளியிலும், மாணவிகள் தங்க வசதியாக மணக்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

மேலும் அங்கிருந்து மாணவ-மாணவிகள் சிரமமின்றி தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு தேவையான வாகன வசதியும் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு அமைப்புகள் சார்பில் இலவச ஆட்டோ சேவையும் நடத்தப்படுகிறது.

இதே போல் எர்ணாகுளத்திலும் தமிழ்ச் சங்கம் சார்பில் மாணவ, மாணவிகள் தங்குவதற்கும், அங்கிருந்து தேர்வு மையங்களுக்கு செல்லவும் வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம் செல்வோரின் வசதிக்காக ரெயில்களில் முன்பதிவு இல்லாமல் சாதாரண டிக்கெட் எடுத்தவர்கள் எர்ணாகுளம் வரை விரைவு மற்றும் அதிவிரைவு ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் செல்ல தெற்கு ரெயில்வே சார்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரத்தில் தமிழ்ச் சங்க தலைவர் நைனார் தலைமையில், செயலாளர் மோகன்தாஸ், நிர்வாகிகள் ஹாஜா, செந்திவேல், வீரணம் முருகன் மற்றும் இந்திய விண்வெளி மைய ஊழியர்களும், எர்ணாகுளத்தில் பாபு வெங்கட்ராமன் உள்பட பலரும் இணைந்து இந்த சேவையை செய்து வருவதாக தமிழ்ச் சங்கத்தினர் தெரிவித்தனர்.














மாநில செய்திகள்

தேர்வு மைய குளறுபடி: தமிழக அரசு பகிரங்க குற்றச்சாட்டு அரசுதான் காரணம் என்று சி.பி.எஸ்.இ. பதிலடி



தேர்வு மைய குளறுபடியால் 5,700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவதி: சி.பி.எஸ்.இ. ஒத்துழைக்க வில்லை என்று தமிழக அரசு பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது. ஆனால், இந்த குளறுபடிக்கு தமிழக அரசுதான் காரணம் என்று சி.பி.எஸ்.இ. பதிலடி கொடுத்து இருக்கிறது.

மே 06, 2018, 05:45 AM
சென்னை,

மருத்துவ படிப்புக் கான மாணவர்கள் சேர்க்கை, ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் மொத்தம் உள்ள 60 ஆயிரத்து 990 மருத்துவ இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 5 லட்சத்து 80 ஆயிரத்து 648 மாணவர்களும், 7 லட்சத்து 46 ஆயிரத்து 76 மாணவிகளும், ஒரு திருநங்கையும் விண்ணப்பித்து உள்ளனர். மொத்தம் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 136 நகரங்களில், 2,255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 10 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 170 மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 345 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 961 பேரும், அதற்கு அடுத்ததாக கேரளாவில் 226 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 792 பேரும், கர்நாடகத்தில் 187 தேர்வு மையங்களில் 96 ஆயிரத்து 377 பேரும், உத்தரபிரதேசத்தில் 171 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 306 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அசாம், வங்காளம், ஒரியா, குஜராத்தி, மராத்தி, உருது ஆகிய 11 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாட பிரிவுகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 180 கேள்விகள் கேட்கப்படும். காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மதியம் 1 மணிக்கு நிறைவடையும்.

தேர்வு மையங்களில் காலை 7.30 மணி முதல் மாணவ- மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள். 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் தேர்வர்கள் செல்ல அனுமதி கிடையாது. தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் தேர்வு அறைக்குள் ஹால் டிக்கெட்டுடன், அதில் ஒட்டப்பட்டு இருப்பதை போன்ற 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை மட்டும் கொண்டு செல்லவேண்டும். பேனா கொண்டு செல்லக்கூடாது. தேர்வு அறையிலேயே பேனா கொடுக்கப்படும். கைக்கெடிகாரம் அணிந்து செல்லக் கூடாது. மாணவர்கள் அரைக்கை சட்டைதான் அணிந்து செல்லவேண்டும். அதில் பொத்தான் பெரிதாக இருக்கக்கூடாது.

தேர்வு மையத்திற்குள் கால்குலேட்டர், செல்போன், கைப்பை, ஹெட்போன், பென்டிரைவ், கேமரா ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
மாணவிகள் சல்வார், பேண்ட் அணிந்து வரவேண்டும். சேலை அணிந்து வர அனுமதி கிடையாது. காதணி, மோதிரம், மூக்குத்தி, சங்கிலி, வளையல் போன்றவை அணிந்திருக்கக்கூடாது. குறைந்த உயரம் கொண்ட செருப்புகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாத மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இந்த தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 170 மையங்களிலும் தேர்வை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நேற்று நடைபெற்றன. தேர்வு மையத்தின் பிரதான நுழைவுவாயில் பகுதியில் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப் பாடுகள் குறித்த தகவல்கள் ஒட்டப்பட்டன. இதை தேர்வு எழுத வரும் தேர்வர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் பார்த்துவிட்டு சென்றனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ-மாணவிகளில் 5,700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற சில வெளிமாநிலங்களில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து, மாணவர்கள் அந்த மாநிலங்களில் உள்ள ஊர்களுக்கு செல்வதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுத்தது. மேலும் அரசியல் கட்சியினர், தமிழ்ச்சங்கத்தினர், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர். வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்கள் பெற்றோருடன் பஸ், ரெயில்களில் புறப்பட்டு சென்றனர்.

கேரளாவில் எர்ணாகுளத்தில் உள்ள மையங்களில் மட்டும் 5,300-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். கேரளா செல்லும் மாணவர்களின் வசதிக்காக நெல்லை, மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லையில் இருந்து மட்டும் 5 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கடந்த ஆண்டுதான் தமிழ்நாட்டில் முதன் முதலாக நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 82 ஆயிரத்து 272 மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதினார்கள். இதற்காக மாநிலம் முழுவதும் 149 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த ஆண்டில் அதை விட கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் பேர் எழுதலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 30 சதவீதம் பேர் கூடுதலாக விண்ணப்பித்து இருந்தனர். அதாவது இந்த ஆண்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் எழுதுகிறார்கள். இதனால்தான் கணிசமான மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதற்கு சி.பி.எஸ்.இ.தான் காரணம் என்று தமிழக அரசு பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது.

தமிழகத்தில் 170 மையங்களில் சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். அண்டை மாநிலங்களில் சில ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். அவர்களுக்கு எந்த மன உளைச்சலும் இருக்காது. வெளிமாநிலங்களில் எவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்ற விவரத்தை சி.பி.எஸ்.இ. தெரிவிக்கவில்லை. அவர்கள் எங்களுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை.

தமிழகத்தில் எவ்வளவு மாணவர்கள் எழுதுகிறார்கள் என்ற விவரத்தை முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து இங்கே தேர்வு மையங்களை அமைத்து இருப்போம். இந்த நிலைக்கு சி.பி.எஸ்.இ.தான் காரணம். இருந்தாலும் வெளிமாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் தமிழகத்தில் போதிய தேர்வு மையங்கள் அமைக்கப்படாததற்கு தமிழக அரசுதான் காரணம் என்று சி.பி.எஸ்.இ. பதிலடி கொடுத்து உள்ளது.
‘நீட்’ தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து சி.பி.எஸ்.இ. தரப்பு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது:-

மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக கூடுதலாக எந்தெந்த இடங்களில் தேர்வு மையங்கள் திறக்கவேண்டும் என்று குறிப்பிட்டு தமிழக அரசிடம் இருந்து எதுவும் கேட்கப்படவில்லை. அரசு முன்னதாகவே இவ்வளவு மையம் அமைக்கவேண்டும் என்று கேட்டு இருந்தால் நிச்சயமாக கூடுதல் மையங்களை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். மேலும் நீட் தேர்வு மையம் தொடர்பாக நாங்கள் கேட்ட பல தகவல்களுக்கு தமிழக அரசிடம் இருந்து பதில்கள் வரவில்லை.

தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. விண்ணப்பத்தில் இதை அவர்கள் வரிசைப்படி குறிப்பிடுகிறார்கள்.

விதிமுறைகளின்படி கம்ப்யூட்டர் மூலமே தேர்வு மையங் கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் ஊழியர்களின் பங்களிப்போ, குறுக்கீடோ எதுவும் கிடையாது. தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு விட்டால், பின்னர் எந்த சூழ்நிலையிலும் அதை மாற்ற முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

NEET UG 2018 EXAM


NEWS TODAY 24.4 2026