Saturday, May 5, 2018

பாஸ்வேர்டை மாற்ற பயனாளர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் பரிந்துரை

2018-05-04@ 10:09:22



சான் பிரான்சிஸ்கோ: டுவிட்டர் பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றும்படி அந்த நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. 330 மில்லியன் பயனாளர்களை கொண்ட டுவிட்டர் வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயனாளர்களின் பாஸ்வேர்டுகள் அந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்வேர்டுகள் அனைத்தும் டுவிட்டரில் பணி புரியும் ஊழியர்களுக்கு தெரிந்துவிட்டது.

தொழில்நட்ப கோளாறுகளை சரிசெய்துவிட்டதாக தெரிவித்துள்ள டுவிட்டர் நிறுவனம், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து பயனாளர்களும் உடனடியாக தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுமாறு பரிந்துரை செய்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கோளாறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ள டுவிட்டர் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று உறுதியளித்துள்ளது.
மனசு போல வாழ்க்கை 26: உங்களுக்கு நன்றி

Published : 15 Sep 2015 12:01 IST


டாக்டர். ஆர். கார்த்திகேயன்





நன்றி கூறுதல் ஒரு நல்ல பழக்கம் என்று மட்டும் நினைத்துக் கொள்கிறோம். “தேங்க்ஸ்” என்பதை மேலோட்டமாக உதிர்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறோம். அதற்கும் மேலாக, நன்றி பாராட்டுதல் எவ்வளவு பெரிய உளவியல் சிகிச்சை தெரியுமா?

நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால் நீங்கள் பிறந்து, வளர்ந்து, படிப்பறிவு, வசதி பெற எவ்வளவு பேர் உதவியிருப்பார்கள் என்று பட்டியல் போடுங்கள். பெற்றெடுத்த அம்மா, அப்பா, வளர்த்த பாட்டி, தாத்தா, மருத்துவர்கள், எழுத்தறிவித்த ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், காதல் கொண்டவர்கள், அக்கம்பக்கத்தினர், வேலைக்குத் தேர்ந்தெடுத்தவர், பயிற்சி கொடுத்தவர், திருமணம் முடிக்க உதவியவர், உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், தூர இருந்து ஆறுதலும், அறிவும், அன்பையும் தரும் எண்ணற்றவர்கள்...!

இவர்கள் இல்லை என்றால் இன்று நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்க முடியாது. இவர்களை எத்தனை முறை நாம் நன்றியோடு நினைக்கிறோம்? மாறாக பல நேரங்களில் இவர்களில் பலரை குற்றம் சொல்கிறோம். எப்படிப்பட்ட நன்றியில்லாத செயல் பாருங்கள்!

பெத்த மனம் பித்து

குறிப்பாக பெற்றவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மேலதிகாரிகள். அதிகமாக தூற்றப்படும் உறவுகள் இவர்கள் எனலாம். ஒரு தாய் படும் வலியும் வேதனையும் எந்த உறவும் பட முடியாது. ஆனாலும் தாயிடம் தான் ஆயிரம் குறைகள் கண்டுபிடிப்போம். நமக்கு அள்ளித் தரும் கைகளைத்தான் அதிகம் கடிக்கிறோம். ‘பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு’ என்ற பழமொழி எவ்வளவு செறிவானது என்று உட்கார்ந்து யோசித்தால் புரியும்.

“எனக்கு பெரிசா எதுவும் எங்கப்பா செய்யலை!” என்று பேசத் துவங்குவதற்கு முன் அப்பா இல்லை என்றால் இந்த உயிரே இல்லை என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு தகப்பனும் தனக்குத் தெரிந்ததைத் தன்னால் முடிந்ததைத் தன் பிள்ளைக்கு செய்கிறான். தந்தையின் பொருள் உதவி இல்லாமல் யாரும் பிழைத்திருக்க முடியாது.

அதே போல ஆசிரியர்கள். ஒரே நேரத்தில் 50 குழந்தைகளுக்குப் பெற்றோராகவும் போதகராகவும் செயல்படுகிறார்கள். அவர்கள் அறிவில் குறை இருக்கலாம். வழிமுறைகளில் தவறுகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் பங்களிப்பில்லாமல் யாரும் ஒரு பைசா சம்பாதித்திருக்க முடியாது. உங்கள் விரல் பிடித்து முதல் எழுத்து எழுதிய ஆசிரியர், முதல் வேலை சொல்லித்தந்த ஆசிரியர் வரை எத்தனை ஆசிரியர்கள் நம்மைச் செதுக்கியிருப்பார்கள்? ஆசிரியர்களை கேலி செய்த அளவுக்கு நன்றி கூறியிருக்கிறோமா?

மறைமுக உதவி

செய்கிற வேலை தப்பு என்று எடுத்துரைக்கிற போது வருகின்ற கோபம் இயல்பானதுதான். ஆனால் உங்கள் திறனை நுட்பமாக வடிவமைக்க, உங்கள் தொழிலில் நீங்கள் பிரகாசிக்க உங்கள் மேலதிகாரி தரும் நெருக்கடிகள் அனைத்தும் பாடங்கள்தானே? உங்களை உயரத்துக்கு இட்டுச் செல்லும் முதலாளிகள், மேலாளர்கள், மேலதிகாரிகள் என எத்தனை பேர்? அத்தனை பேரை நினைவுகூருகிறோமா?

பிரிவிலும் மறைவிலும் மட்டும் உணரும் வாழ்க்கைத் துணையின் அருமையை வாழ்கின்ற காலத்தில் உணர்ந்து நன்றி பாராட்டுபவர்கள் எத்தனை பேர்?

இவர்களைத் தவிர நம் வாழ்க்கையில் முகம் தெரியாத பலர் நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு உதவியிருப்பார்கள். பிரசவ நேரத்தில் உதவுவார் ஆட்டோக்காரர். வேலை கிடைத்தும் ஒருவர் சேராததால் ‘வெயிட்டிங் லிஸ்ட்’டில் அந்த வேலை உங்களுக்கு கிடைக்கிறது. இப்படி நிறைய நடந்திருக்கும்.

அது மட்டுமா? உங்களை ஒவ்வொரு நாளும் பத்திரமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் ஒவ்வொரு ஓட்டுநருக்கும் நன்றி சொல்ல வேண்டுமே? ஒரு விபத்து நடக்க இருக்கையில் அதைத் தடுத்த ஓட்டுநருக்கு நன்றி சொல்வோம். ஆனால், தினம் ஒழுங்காக ஓட்டிச்சொல்லும் ஓட்டுநருக்கு சொல்வோமா?

பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். எங்கோ வளர்ந்த கீரை உங்கள் தட்டுக்கு வரும் வழியில் எத்தனை கைகளை கடந்து வந்திருக்கிறது? உங்கள் பத்து ரூபாயையும் மீறி எத்தனை பேரின் உழைப்பால் அது உங்களுக்கு கிடைக்கிறது? உங்கள் உணவுக்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்றால் எத்தனை பேர் இருப்பார்கள் யோசியுங்கள்!

உங்கள் பட்டுப்புடவைக்காக உயிர் தந்த பட்டு பூச்சிகள் முதல் உங்களின் அழகு சாதனங்களைத் தயாரிப்பதற்காகச் செய்யப்படுகிற சோதனைக்காக உயிர் விட்ட எண்ணற்ற பறவைகள், மிருகங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி சொல்லுங்கள்

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பல மனிதர்களின் பங்களிப்பு உள்ளது. உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக பலர் வலியையும் வேதனையையும் அனுபவிக்கிறார்கள். அவர்களை ஒரு முறையாவது நினைக்கிறோமா?

இன்று இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்: உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவிய அனைவரையும் பட்டியலிட்டு ஒவ்வொருவருக்கும் மானசீகமாக நன்றி சொல்லுங்கள். இத்தனை நாள் நினைக்காததற்கு மன்னிப்பு கேளுங்கள்.

அதன் பிறகு உங்கள் உடலுக்கு நன்றி செலுத்துங்கள்.

நன்றி கூறுகையில் நீங்கள் கொடுத்தது எவ்வளவு, எடுத்தது எவ்வளவு என்று புரியும். இந்த உலகில் நீங்கள் மட்டுமே தனியாக எதையும் செய்து விட முடியாது என்று தெரியவரும். பணிவும் அன்பும் பெருகும். அகந்தை அழியும்.

கடைசியாக இத்தனை பேரை உங்கள் வாழ்க்கையில் இணையச் செய்த அந்த மகா சக்திக்கு நன்றி கூறுவீர்கள்.

பெருங்கடலில் சிறு துளி நாம். கடலை உணர்கையில் துளி தொலைந்து போகும். ஆழ்கடலாய் மனம் அமைதி கொள்ளும்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

Keywords மனசு போல வாழ்க்கை தோல்வி

தமிழ்நாட்டு மாணவர்களை ஏன் வேறு மாநிலத்துக்கு மாற்றினோம்? சிபிஎஸ்இ பதில்
 
விகடன் 23 hrs ago




தமிழ்நாட்டைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் நீட் (NEET) தேர்வு எழுதுபவர்களுக்கு அந்தந்த மாநிலத்திலேயே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ.

இந்தத் தகவலை நேற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள சி.பி.எஸ்.இ நிர்வாகம், தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டில் 82,272 பேர் நீட் தேர்வை எழுதி உள்ளனர். இந்த ஆண்டு 10 சதவிகிதம் மட்டுமே அதாவது, 90,000 மாணவர்கள் மட்டும் நீட் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தோம். இதற்காக 170 தேர்வு மையங்களை ஏற்படுத்தி இருந்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட 25,206 பேருக்குக் கூடுதலாக தமிழ்நாட்டில் தேர்வு மையத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். இது கடந்த ஆண்டை விட 31 சதவிகிதம் அதிகம்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 09.04.2018. ஆனால், உச்சநீதிமன்றம் ஆதார் இல்லாத மாணவர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நான்கு நாட்களை நீட்டித்தது. இதனால் எங்களுக்கு முன்னேற்பாடுகள் செய்ய போதுமான கால அவகாசம் குறைந்தது. இதனால் தமிழ்நாட்டில் கூடுதல் மையங்களை ஏற்படுத்த முடியவில்லை. நீண்ட தூரத்தில் உள்ள ராஜஸ்தானில் நாங்களாகத் தேர்வு மையத்தை ஒதுக்கவில்லை. மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்திருந்தால் மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்க முடியும். நாங்களாக எந்த மையத்தையும் ஒதுக்கீடு செய்யவில்லை. கணினி வழியாகவே எல்லா மையங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே 8 முதல் 10 சதவிகித கூடுதல் இடங்களுடன் இந்த ஆண்டுக்கான தேர்வு மையங்களை அமைக்க முடிவு செய்தோம். இதில் தேர்வு மையத்தின் உள்கட்டமைப்பு, போதுமான தேர்வு அறைகள், தேர்வு பணிக்கான ஆசிரியர்கள், சுற்றுச்சுவர் உள்ள பள்ளியின் அமைப்பு, போதுமான இருக்கைகள் என எல்லாவற்றையும் கணக்கீட்டுத்தான் மையத்தை ஏற்படுத்தி உள்ளோம். இதற்காக வரிசை எண், தேர்வுத்தாள் என அனைத்தையும் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்துக்கு அனுப்பி விட்டோம்.

இந்த ஆண்டு கால்நடை அறிவியல், மீன்வளம், சித்தா, ஹோமியோபதி எனப் பிற படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் என மாற்றி இருப்பதால் நிறைய மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தேர்வு மையங்களும் நிறைந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களை அருகில் உள்ள தேர்வு மையமாக எர்ணாகுளத்துக்கு மாற்றி உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளது சி.பி.எஸ் இ.

நீதிமன்றத்துக்குத் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் நகரங்களில் மையங்களை அமைத்துள்ளோம். இதில் சென்னையில் 49 மையங்களில் 33,842 மாணவர்கள், கோவையில் 32 மையங்களில் 15,960 மாணவர்கள், மதுரையில் 20 மையங்களில் 11,800 பேர், நாமக்கல்லில் 07 மையங்களில் 5,560 பேர், சேலத்தில் 26 மையங்களில் 17,461 பேர், திருச்சியில் 12 மையங்களில் 9,420 பேர், திருநெல்வேலியில் 10 மையத்தில் 4,383 பேர், வேலூரில் 14 மையத்தில் 9,054 பேர் என மொத்தமாக 170 மையங்களில் 1,07,480 பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுத உள்ளனர் என்று சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது.

கடைசி வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எவ்வளவு பேர் வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுதுகின்றனர் என்ற விவரத்தை மட்டும் வெளியிடவில்லை.

கோவை-சென்னை இண்டர்சிட்டி விரைவு ரயில் நாளை ரத்து: தெற்கு ரயில்வே

 
சென்னை: கோவை-சென்னை இண்டர்சிட்டி விரைவு ரயில்(12680) நாளை ரத்து என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரக்கோணத்தில் நடைபெறும் பராமரிப்பு பணியால் கோனை- சென்னை ரயில் ரத்து என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
விருந்தோடு முடிந்த நிர்மலா தேவி விவகாரம்! 

எஸ்.மகேஷ்



அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்துக்குக் கல்லூரி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்துள்ளது. அதில் கலந்துகொண்டவர்களுக்குக் கல்லூரி நிர்வாகம் விருந்து அளித்துள்ளது.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு, ஆரம்பத்தில் அனல் பறந்தது. பல்வேறு தகவல்கள் வெளியாகின. சி.பி.சி.ஐ.டி போலீஸாரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தின் விசாரணைக் குழுவினரும் விசாரித்துவருகின்றனர். இந்த வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் மூன்று பேரிடமும் சந்தானம் விசாரணை நடத்தியுள்ளார். விரைவில் ஆளுநருக்கு விரிவான அறிக்கையை சந்தானம் சமர்ப்பிக்க உள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீஸாரும், இந்த வழக்கை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையில் உள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் என போலீஸார் பிஸியாக இருக்கின்றனர்.




 இந்தச் சூழ்நிலையில் நிர்மலா தேவி, வேலைப்பார்த்த கல்லூரி மூடப்படுவதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியானது. அது வதந்தி என்றாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க கடந்த 3ம் தேதி கல்லூரி நிர்வாகம் தரப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் பேசிய செயலாளர் ராமசாமி, கல்லூரி குறித்து பல்வேறு தகவல்கள் வதந்தியாகப் பரப்பப்படுகின்றன. சமூக வலைதளத்தில் இந்தத் தகவல்களைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். மேலும், நிர்மலா தேவி விவகாரத்தில் எங்களுடன் பேரம் பேசிய பத்திரிகையாளர்கள் மீதும் போலீஸில் புகார் கொடுத்துள்ளோம். அவர்கள் எங்களுடன் பேசிய ஆதாரத்தை போலீஸில் வழங்கியுள்ளோம். எனவே, எங்களின் கல்வி சேவையைத் தொடர வழிவிடுங்கள் என்று கூறினார். பிரஸ் மீட் முடிந்ததும் பத்திரிகையாளர்களுக்கு விருந்தோம்பல் நிகழ்ச்சி நடந்துள்ளது. தற்போது, கல்லூரியில் தேர்வு நடப்பதால் நிர்மலா தேவி விவகாரத்தை யாரும் பேசுவதில்லையாம்.

எர்ணாகுளத்தில் கொட்டித் தீர்க்கும் மழை: நீட் தேர்வுக்குச் சென்ற தமிழக மாணவர்கள் தவிப்பு!

பி.ஆண்டனிராஜ்  VIKATAN 


நீட் தேர்வுக்காக தமிழக மாணவர்கள் கேரளாவின் எர்ணாகுளம் சென்றுள்ள நிலையில் அங்கு கோடை மழை கொட்டித் தீர்த்தது. அதனால், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாகச் சென்றவர்கள் தங்குமிடத்துக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.



எம்.பி.பி.எஸ்., பி.டிஎஸ். உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்காகத் தமிழகத்தில் மையங்களைத் தேர்வு செய்திருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், கேரளாவின் பத்தனம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய நகரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டன. இதனை மாற்ற சி.பி.எஸ்.சி மறுத்துவிட்ட நிலையில், தற்போது மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக கேரளாவுக்குச் சென்று தங்கியிருக்கிறார்கள்.

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சில மாணவர்கள் இன்று பகலில் ரயில் மற்றும் பேருந்துகள் மூலமாக கேரளாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். சுமார் 8 மணிநேரப் பயணத்துக்குப் பின்னர், கேரளாவின் எர்ணாகுளம் நகரில் இறங்கிய நிலையில், அங்கு சுமார் ஒரு மணி நேரமாகக் கொட்டித் தீர்க்கும் மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் தாங்கள் எங்கு செல்ல வேண்டும் என்கிற இடமும் தெரியாமல், புரியாத மொழி பேசும் மாநிலத்தில் தவித்து வருகிறார்கள்.

பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் சேவை மையங்களை கேரள மாநில அரசு அமைத்துள்ளது. அந்த மையத்தில் இருப்பவர்கள் தங்குமிட வசதி உள்ளிட்டவற்றை தெரிவித்த போதிலும், மழையின் காரணமாக அந்த இடத்துக்குச் செல்ல முடியாமல் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மாணவ, மாணவியருடன் பெற்றோரும் உடன் சென்றுள்ள நிலையில் அந்தந்த இடங்களிலேயே அவர்கள் காத்திருக்கிறார்கள்.



அத்துடன், ஞாயிற்றுக் கிழமை காலையில் 7.30 முதல் 8.30 மணிக்குள் ‘ஏ சிலாட்’ மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் வந்து விட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பி சிலாட்’ மாணவர்கள் 8.30 முதல் 9.30 மணிக்குள் தேர்வு அறைக்குள் சென்றுவிட வேண்டும். அதன் பின்னர் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிப்பட்டுள்ளது. அதனால் நாளை மழை பெய்து விடக் கூடாதே என்கிற கவலையும் கூடுதலாக தமிழக மாணவர்களிடம் ஒட்டிக் கொண்டுள்ளது.


வெளி மாநிலங்களில் நீட் தேர்வெழுதச் செல்லும் மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் வழங்கப்படுமா?


neet_answer

சென்னை: தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைப் போலவே, நீட் தேர்வால், மருத்துவம் படிக்கும் கனவோடு இருந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது.
வெளி மாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பதால், ஏராளமான மாணவர்கள் தேர்வுக்கு முன்தினம் படிக்க முடியாமல், வெளி மாநிலத்துக்கு பயணம் செய்து, அங்கு மொழி தெரியாமல், தங்கும் வழி தெரியாமல் அலைய நேரிடுமே என்ற கவலையில் ஆழ்ந்திருந்தனர். பண வசதி இல்லாத ஏழை மாணவர்களின் குடும்பத்தினர் செய்வதறியாது போயினர்.
வெளி மாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பதால் வெறும் அலைச்சல், பணச் செலவு, மன உளைச்சல் என பல சிக்கல்கள் எழுந்தாலும், அதோடு பிரச்னை முடியவில்லை என்கிறது மேலதிகத் தகவல்கள்.
அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு வெளி மாநிலங்களில் இருக்கும் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போது நீட் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மராத்தி, ஒரியா, தமிழ், தெலுங்கு, உருது மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஹிந்தி மற்றும் உருது ஆகிய உள்ளூர் மொழிகளைத் தவிர மற்ற மொழிகளில் வினாத்தாள்கள் அந்தந்த மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே வழங்கப்படும்.
இதில் சிக்கல் என்னவென்றால், தமிழ் வினாத்தான் தமிழத்தில் உள்ள தேர்வு மையங்களில் மட்டும்தான் வழங்கப்படும். எனவே, வெளி மாநிலங்களில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் வழங்கப்படுமா? என்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் இருந்த எந்த பதிலும் இல்லை. 
எனவே, மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தமிழக அரசுப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடக்கும் தேர்வை எதிர்கொள்ள கடந்த ஒரு மாத காலத்தில் சிபிஎஸ்இ பாடத்தைப் படித்து தேர்வுக்கு தயாராகி வருவதே மிகப்பெரிய சவால்.
இதில், தெரியாத இடம், புரியாத மொழி என பல தடைகளை மத்திய அரசு ஏற்படுத்தி, தேர்விலும் தமிழ் மொழியில் வினாத்தாளை பெற முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கியுள்ளது.
இந்தியாவிலேயே அதிகமான மருத்துவக் கல்லூரிகளையும், மருத்துவ மாணவ சேர்க்கையையும் கொண்டிருக்கும் தமிழகத்தில் பிறந்த மாணவ, மாணவிகள், மருத்துவ மாணவ சேர்க்கைக்கு அடிப்படையான நீட் தேர்வைக் கூட வெளி மாநிலத்தில் சென்று எழுத வேண்டிய கட்டாயமும், பல தடைகளை சந்திக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
இது தமிழர்கள் மீது மத்திய அரசால் தொடுக்கப்படும் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலாகவே பார்க்க வேண்டிய நிலை உள்ளது.
இதற்கெல்லாம் மேலாக, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகி, தமிழக மாணவர்களின் நிலையை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எடுத்துக் சொல்ல தமிழக அரசு சார்பில் எந்த மூத்த வழக்குரைஞரும் நியமிக்கப்படாமலேயே, தமிழக அரசு கண் மூடி மௌனியாய் இருந்துவிட்டது.
அதனால்தான் சிபிஎஸ்இயின் வாதத்தை ஏற்றுக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
மத்திய அரசின் அடக்குமுறைகளை கண்டும் காணாமலும் இருக்கும் மாநில அரசின் நிலையைக் கண்டு மனம் வெதும்பிய ஏராளமான சமூக அமைப்புகளும், பொதுமக்களும், முக்கியப் பிரமுகர்களும், வெளி மாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வந்தனர். அதனால் வெளி மாநிலம் செல்லும் மாணவர்களில் சிலராவது எளிதாக தேர்வு மையங்களை கண்டடைய வழி ஏற்பட்டது.

Man waits 5 hours, catches runaway wife at polling booth

Man waits 5 hours, catches runaway wife at polling booth  24.04.2026 Jalpaiguri : A tense domestic drama unfolded at booth no. 25/238 in Pha...