Sunday, May 6, 2018

நீட் தேர்வுக்கு நெடிய பயணம்; உதவிக்கரம் நீட்டும் தன்னார்வலர்கள்

Published : 06 May 2018 07:55 IST
 



திருநெல்வேலியில் இருந்து நீட் தேர்வு எழுதுவதற்காக சிறப்பு பேருந்து மூலம் எர்ணாகுளம் சென்ற மாணவ, மாணவியரை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழியனுப்பினார்.

மருத்துவ கல்விக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து இந்த நுழைவுத் தேர்வை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் சிலருக்கு தமிழகத்தில் தாங்கள் விண்ணப்பித்த ஊர்களில் தேர்வு மையங்கள் கிடைக்காமல் வெளி மாநிலங்களில் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகாவில் பெங்களூரு என்று பல வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


இந்த திடீர் அறிவிப்பால் மாணவர்கள் பலரும் குழப்பத்துக்கு ஆளாகினர். புது இடங்களுக்குச் சென்று தேர்வு எழுதுவதில் உள்ள சிரமம் குறித்து அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இவ்வாறு வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் உதவ தமிழக அரசு சில சலுகைகளை அறிவித்தது. அதேசமயம் பெரும் பங்களிப்பாக தன்னார்வலர்கள் பலர் தங்களால் ஆன உதவிகளை மாணவர்களுக்கு செய்துள்ளனர்.

வாகன ஏற்பாடு, வெளி ஊர்களில் தங்குவதற்கு வசதி என தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர். இந்த உதவி வெளியூர் செல்லும் தமிழக மாணவர்களுக்கு பெரிய ஆறுதலைத் தந்துள்ளது.

சிறப்பு பேருந்துகளில் மாணவர்கள் கேரளா பயணம்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதும் , தூத்துக்குடி, கோவில்பட்டி மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் சிறப்பு பேருந்துகளில் நேற்று புறப்பட்டு சென்றனர்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 800 முதல் ஆயிரம் மாணவ, மாணவியருக்கு கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் எர்ணாகுளம் செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று காலை 7.30, 8.30, 9 மணிக்கும், இரவு 8.05, 8.30, 8.45, 9, 10.05 மணிக்கும் சிறப்பு பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட்டன. மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் பேருந்துகளும் எர்ணாகுளம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருநெல்வேலியில் இருந்து சிறப்பு பேருந்துகளில் நீட் தேர்வுக்கு சென்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார். ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா, அரசு போக்குவரத்து கழக நிர் வாக இயக்குநர் மோனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது

சிறப்பு பேருந்தில் பயணம் செய்த மாணவி நர்மதா கூறும்போது, “தமிழ்நாட்டுக்கு உள்ளேயே தேர்வு மையத்தை ஒதுக்கியிருந்தால் இவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்காது. அரசு உதவித் தொகை கொடுத்தாலும், தேர்வு மையங்களை இங்கேயே ஒதுக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எங்களுக்கு மட்டுமல்ல, எங்களது பெற்றோருக்கும் பெரும் அலைச்சல். வெளிமாநிலத்துக்கு செல்வதால் மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. மொழிப்பிரச்சினையும் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

சொந்த செலவில் சென்றனர்

திருநெல்வேலியில் இருந்து நேற்று காலை எர்ணாகுளத்துக்கு புறப்பட்டு சென்ற பேருந்துகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 110 மாணவ, மாணவியரும், அவர்களது பெற்றோரும் புறப்பட்டுச் சென்றனர்.

இதுபோல் இரவில் சென்ற பேருந்துகள், திருநெல்வேலியில் இருந்து சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவிலில் இருந்து சென்ற எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றிலும் மாணவ, மாணவிகள் சென்றனர். பலர் நேற்று முன்தினமே ரயில்களிலும், பேருந்துகளிலும் தங்கள் சொந்த செலவில் எர்ணாகுளத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். இதுபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தவர்களில் ஒருசிலர் கடந்த சில நாட்களுக்கு முன்னரே ஜெய்பூருக்கு விமானத்தில் சென்றதாகத் தெரிகிறது.

எர்ணாகுளத்தில் உதவி மையம்

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்தில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் போன்ற பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு 66 மாணவ, மாணவியர் பேருந்துகள், ரயில்களில் அவர்களாகவே நேற்று அதிகாலையிலேயே புறப்பட்டுச் சென்ற னர். எர்ணாகுளத்தில் அங்குள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையம் மற்றும் தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் குறித்து உதவி வேண்டுவோருக்கு இந்த மையங்களில் உள்ளவர்கள் உதவிகள் செய்தனர்.

‘அனிதாவின் கனவை நனவாக்குவோம்’

புதுக்கோட்டை, ஆலங்குடி, கல்லாலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 21 மாணவர்கள் உட்பட 25 பேர் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இருந்து சமூக ஆர்வலர்கள் ஏற்பாடு செய்த வேனில் எர்ணாகுளம் தேர்வு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் 'அனிதாவின் கனவை நனவாக்குவோகும்' என்ற பேனரை ஏந்தியவாறு புறப்பட்டனர்.

இது குறித்து ராயவரத்தைச் சேர்ந்த கணேசன் கூறியபோது, 'ராயவரத்தில் படித்த எனது மகள் அபிநயாவுக்கு தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய தேர்வு மையங்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்கித் தருமாறு கேட்டிருந்தோம். ஆனால், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்துக்கு மாற்றித் தருமாறு ஆட்சியர் சு.கணேஷிடம் கோரிக்கை மனு அளித்தேன். அவர் மனுவை நிராகரித்துவிட்டார்' என்றார்.
நீட் தேர்வுக்கு மாணவர்களை சொந்த காரில் அனுப்பிய பூ வியாபாரி: தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவியும் அளித்தார்

Published : 06 May 2018 08:07 IST

ஜெ.ஞானசேகர்
 


வறுமை காரணமாக நீட் தேர்வு எழுத எர்ணாகுளத்துக்கு செல்ல வழியின்றி தவித்த 2 மாணவிகள் உட்பட 3 பேர், ஸ்ரீரங்கம் பூ வியாபாரி மற்றும் சமூக ஆர்வலர் அளித்த உதவியால் நேற்று காலை எர்ணாகுளத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

திருச்சியில் தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருபவர் மோகன். அதேபோல், ஸ்ரீரங்கத்தில் பூ மற்றும் நெய் வியாபாரம் செய்து வருபவர் கனகராஜ் (56).

“வெளி மாநிலங்களில் நீட் தேர்வுக்கு செல்ல விரும்பும் மாணவ- மாணவிகள் உதவி தேவைப்பட்டால் என்னை அணுகலாம்” என்று சமூக வலைதளத்தில் 2 நாட்களுக்கு முன் மோகன் பதிவு செய்திருந்தார். அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை திருச்சியைச் சேர்ந்த நித்தீஷ், ராஜேந்திரன் ஆகிய 2 மாணவர்கள் அவரை அணுகி, தலா ரூ.2,500 பெற்றுக்கொண்டு எர்ணாகுளத்துக்கு ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில், மேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் சக்தி முருகன், நேற்று காலை மோகனைத் தொடர்பு கொண்டு எர்ணாகுளம் செல்ல உதவி கோரினார். இதையடுத்து, மோகன் அங்கு சென்று சக்தி முருகனுக்கு ரூ.2,500 கொடுத்து உதவினார். அந்த நேரத்தில் பெல் பகுதியைச் சேர்ந்த பிலவேந்திரன் மகள் ஜெஸ்லின், மோகனைத் தொடர்பு கொண்டார். அதற்கு, மேல சிந்தாமணி பகுதிக்கு வருமாறு மோகன் கூற, ஜெஸ்லினோ, தனது தோழியும், புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகேசனின் மகளுமான மித்ரஜோதியையும் உடன் அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.

தொலைக்காட்சியில் இதுபற்றிய செய்தியைப் பார்த்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பூ- நெய் வியாபாரியுமான கனகராஜும் அங்கு வந்தார். அவர், 3 பேருக்கும் தலா ரூ.10,000 வழங்கியதுடன், தனது சொந்த காரில், மூவரையும் எர்ணாகுளத்துக்கு அனுப்பி வைத்தார். இது, மாணவ, மாணவிகளுக்கு மட்டுமன்றி அவர்களது பெற்றோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மாணவ, மாணவிகள் 3 பேரும் தங்கள் தந்தையுடன் காரில் எர்ணாகுளம் புறப்பட்டனர்.

IRCTC

குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க 


தமிழ்

எல்.ராஜேந்திரன்



அருவி என்றால், என் போன்ற ‘இளசுகளுக்கு’ இப்போதெல்லாம் ‘அருவி’ ஹீரோயின் அதிதிதான் ஞாபகத்துக்கு வருகிறார். டூர் பார்ட்டிகளுக்கு என்றால் சாய்ஸே இல்லை; குற்றாலம்தான். ‘பப்பரபப்பப்பப்பேங்..’ என்று ‘அருவி’ பட தீம் மியூசிக் பேக்ரவுண்டோடு குற்றாலத்துக்குப் போனால், வெயிலுக்கு எல்லோரும் எண்ணெய்க் குளியல் போட்டு அருவியை அதகளம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ‘கூட்டம் என்றால் அலர்ஜி’ என்று நினைப்பவர்களுக்கு, குற்றாலத்தை விட்டால் இன்னொரு ஆப்ஷன் இருக்கிறது. அது, குண்டாறு.

குண்டாறு என்பது நீர்த்தேக்கம். பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் இல்லை என்பதால், நிறையப் பேருக்கு குண்டாறு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், இங்கே கூட்டமும் அவ்வளவாகக் கும்மியடிக்க வாய்ப்பில்லை. தென்காசியிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் குண்டாறுக்கு நிறையப் பேருக்கு வழியே தெரியவில்லை. ‘‘இங்க,அணைக்கட்டு ஒண்ணு இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கோம்’’ என்று சந்தேகத்தோடு தாடையைச் சொறிகிறார்கள். ‘‘செமையா இருக்கும்ணே... தண்ணி எப்பவுமே விழும்! போய் ஜில்லுனு குளிச்சிட்டு வாங்க!’’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.



வெளியூர்க்காரர்கள் என்றால், தென்காசியிலோ குற்றாலத்திலோ ரூம் எடுத்துத் தங்கிவிடுவது பெஸ்ட். தென்காசியில் மட்டும் ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள். ‘பசிக்கலை; கொஞ்சம் லேட்டா சாப்பிட்டுக்கலாம்’ என்று காலை உணவை ஸ்கிப் பண்ணினால், பன்னும் பட்டர் பிஸ்கட்டும் மட்டும்தான் கிடைக்கும். 10 மணிக்கு மேல் தென்காசியில் டிஃபனைத் தேடியபோது, வடிவேலு போல கையை விரித்து பெப்பே காட்டிவிட்டார்கள். பசி தாங்கும் பார்ட்டிகள் என்றால், நேரடியாக 1.30 மணி வாக்கில் மதிய உணவில்தான் கை வைக்க முடியும்.

குண்டாறுக்கு, தென்காசி வழியாக பண்பொழிச் சாலை வழியாகத்தான் பயணிக்க வேண்டும். இங்குள்ள திருமலைக் கோயில் எனும் இடம் ஆன்மிக அன்பர்களுக்கு சரியான ஆப்ஷன். பார்க்கிங் 50 ரூபாய் கட்டிவிட்டு திருமலைக் கோயிலுக்கு வண்டியை விட்டால்... அற்புதமான அனுபவமாக இருக்கிறது. ஊட்டி மலை, வால்பாறை, மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் பாதையெல்லாம் தோற்றுவிடும் அளவுக்கு பாதை செம போதையாக இருக்கிறது. குட்டிக் குட்டி ஹேர்பின் பெண்டுகளைத் தாண்டிப் போனால், டைம் மெஷினில் ஏறி நம்மை அழைத்துச் சென்றதுபோல இருந்தது. கோயிலில் அத்தனை பழைமை வாசம். 625 படிகள் ஏறித்தான் கோயிலுக்குள் நுழைய முடியும். இந்தக் கோயிலின் ஸ்பெஷல் - ஆளையே தள்ளிவிடும் அளவுக்கு ‘பரான் பரான்’ என்று சுழற்றியடிக்கும் காற்று. அடிக்கும் காற்றில் ஒரு ஸ்கார்ப்பியோவே ஆடியது என்றால் கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள்.



மலை இறங்கி குற்றாலத்துக்குத் திரும்பும் பாதையில் முன்கூட்டியே வளைய வேண்டும். கண்ணுப்புளி மெட்டு எனும் இடம் வருகிறது. இங்கேதான் குண்டாறு நீர்த்தேக்கம் இருக்கிறது என்றார்கள். மற்ற அணைகள், அருவிகளில் மீன் வறுவல் ஸ்பெஷல் என்றால், இங்கே ஸ்டார் ஃபுரூட், பனிக் கொய்யா, அன்னாசி போன்ற பழங்கள்தான் ஃபேவரைட். ‘‘எல்லாமே எங்க தோட்டத்துல விளைஞ்சதுங்க’’ என்றார் பழம் விற்கும் பாட்டி.

/

குண்டாறு அணையின் ஆழம் 36.6 அடி என்றார்கள். நெல்லை மாவட்டத்திலேயே குறைந்த அளவு அடி கொண்ட, ஒல்லியான அணை இதுதானாம். மதிய வெயிலுடன் இதமான தென்றல் காற்று போட்டி போட்டுக்கொண்டிருந்தது. வெயில் அவ்வளவாகத் தெரியவில்லை. குண்டாற்றில் இப்போதுதான் படகுச் சவாரி ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், டாஸ்மாக்கைப்போல இதை தமிழக அரசு நடத்தவில்லை. ‘‘தனியார் போட்டிங் சார்.. எத்தனை பேரா இருந்தாலும் 300 ரூபாய்தான்’’ என்றார் படகோட்டி ஒருவர். கூட்டமும் அவ்வளவாக இல்லை. ‘300 ரூபாய் போனாப் போகுது’ என்று படகு சவாரி செய்தால், அற்புதமான அனுபவம் கிடைக்கும்.



‘‘அருவின்னாங்களே... காணுமே’’ என்று தேடினால், ஜீப் டிரைவர் ஒருவர் அப்ரோச் செய்தார். ‘‘குண்டாறு அருவிக்கு மேல போகணும் சார்... ஒரு ட்ரிப்புக்கு 2,000 ரூபாய் சார்... இருந்து கூட்டிட்டு வந்துடுவோம்’’ என்றார். இங்கேயும் எத்தனை பேர் என்றாலும் அதே கட்டணம்தான். அதனால், குண்டாறுக்கு நண்பர்கள் குழுவுடன் 8 பேர் பேக்கேஜா வந்தால், நமக்குத்தான் செமத்தியான லாபம். இப்போது சீஸன் டைம் என்பதால், பேரம் பேச யாருமே முன் வரவில்லை. குண்டாற்றின் ஸ்பெஷல் என்னவென்றால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஜீப் சவாரிசெய்து அருவியை அடையலாம். ‘‘நைட் 2 மணிக்கு கூப்பிட்டாக்கூட நாங்க ரெடியா இருப்போம்’’ என்றார் ஜீப் டிரைவர். (ஜீப் சவாரிக்கு: 07639065883, 08122102300).



நாலரை கி.மீ கடுமையான காட்டுப் பாதை வழியாகத்தான் ஜீப் போனது. திடும்மென பாறைகள்... சலசலக்கும் ஓடைகள்... காலைப் புதைக்கும் மணல்திட்டுகள் வழியாக ஜீப் சவாரி செம த்ரில்லிங். ஜீப்பைத் தவிர இங்கே வேறு வாகனங்களை நினைத்தே பார்க்க முடியாது. 1.3 கி.மீ தாண்டி வருவது நெய்யருவி. ‘‘ஜீப் கட்டணம் அதிகமா இருக்கே’’ என்று ஃபீல் செய்பவர்கள், 1. கி.மீ தூரம் நடந்து வந்து நெய்யருவிக்கு வரலாம். நெய்யருவிக்கு இன்னொரு பெயர் ‘பப்ளிக் ஃபால்ஸ்’. அதாவது, பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நெய்யருவிக்கு நடந்து வந்து குளிக்கலாம். தனிக்குடித்தனம் புகுந்த கப்புள்ஸ் மாதிரி, கூட்டம் ரொம்ப சிக்கென இருந்தது. ஆள் அரவம் அவ்வளவாக இல்லை. அருவித் தண்ணீர் செம ஜில்..! நெய்யருவியில், ஒகேனக்கல் மாதிரி ஆயில் மசாஜெல்லாம் செய்து விடுகிறார்கள். ‘‘இப்போதாண்ணே எங்களுக்கு டைம்... அதான் 150 ரூபாய்’’ என்று கொழுக் மொழுக்கென ஆயில் மசாஜ் நடந்துகொண்டிருந்தது. நெய்யருவிக்குப் பக்கத்தில் ஒரு மளிகைக் கடை உண்டு. சாப்பாடுகூட இங்கேயே சிம்பிளா சாப்பிட்டுக்கொள்ளலாம். செம ஜில்லென்ற குளியல், வெயிலுக்கு ஆனந்தமாக இருந்தது.



நெய்யருவியைத் தாண்டி ஜீப் பயணத்துக்கு மட்டும்தான் அனுமதி. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அடுத்து வருவது எல்லாமே தனியார் அருவிகளாம். 1 கி.மீ தூரத்தில், தன்னந்தனியாக ஓர் அருவி விழுந்துகொண்டிருந்தது. ‘அருண்பாண்டியன் அருவி’ என்கிறார்கள் இதை. இங்கே தங்கும் வசதியும் உண்டு. ஒரு நாள் வாடகை, ரூ.2,000. சமைத்துச் சாப்பிடவும் ஆப்ஷன் உண்டாம். மேலே போகப்போக, போன் நெட்வொர்க்கெல்லாம் காலியானது. ஆனால், மனசு நிறைவாக இருந்தது. ‘‘BSNL மட்டும் கிடைக்கும் சார்’’ என்றார் ஜீப் டிரைவர் விஷ்ணு. மனித நடமாட்டமே இல்லை. ஜீப் பயணம் மேலும் த்ரில்லிங்கைக் கூட்டியது.



மாலை 6.30 மணிக்கு மேல் விலங்குகளைப் பார்க்கலாம் என்றார் டிரைவர். ‘‘யானை, சிறுத்தை, காட்டெருமை எல்லாமே இருக்கு. கரடியும் இருக்குங்கிறாங்க... ஆனா, நான் இதுவரை பார்த்ததே இல்லை’’ என்றார். நடுநடுவே குட்டிக் குட்டியாய் அருவிகள். எங்கு வேண்டுமானாலும் ஜீப்பை நிறுத்தி குளிக்கலாம். மேலே போகப் போக, குண்டாறு அருவி வந்தது. பெரிதாகக் கூட்டம் இல்லை. ஒரே ஒரு குடும்பம் மட்டும் என்ஜாய் பண்ணிக்கொண்டிருந்தது. அருவி அமைந்திருந்த இடமே அதகளமாய் இருந்தது.



‘இசை’ பட ஹீரோயின் மாதிரி தன்னந்தனியாய் அருவியில் ஃப்ரீடம் பாத் எடுத்துவிட்டு, கொண்டுவந்த கட்டுச்சோற்றைப் பிரித்துச் சாப்பிட்டால்... வெயிலை நினைத்து சிரிப்புத்தான் வந்தது. குற்றாலத்துக்குக் கிளம்புபவர்கள், அப்படியே குண்டாறு பக்கமும் வண்டியைத் திருப்பினால், ஓர் அற்புதமான அனுபவம் கிடைக்க வாய்ப்புண்டு.

'மலேசியா டூ லண்டன்... விமானத்தில் பறந்த முதலைக்குட்டிகள்..!''

MUTHUKRISHNAN S

 
06.05.2018



லண்டன் ஹித்ரு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து ஓர் சரக்கு விமானம் சென்றது. அந்த விமானம் லண்டன் ஹித்ரு விமான நிலையத்தில் தரை இறங்கியதும், அங்கு வழக்கம்போல சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் இருந்த சரக்கு பெட்டிகளை ஆய்வு செய்து விமானநிலையத்தில் உள்ள குடோனுக்கு அனுப்பிக் கொண்டு இருந்தனர். இந்நிலையில், அங்கிருந்த மரத்தாலான ஐந்து பெட்டிகளுக்குள் இருந்து வித்தியாசமான சத்தம் வந்தது. அதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்தப் பெட்டியை உடைத்து ஆய்வு செய்ய மேலதிகாரிகளிடம் உத்தரவு பெற்றனர். அதன்பின்னர், அந்தப் பெட்டிகள் உடைக்கப்பட்டது. அப்போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் தலா 10 வீதம் 49 முதலைக்குட்டிகள் உயிருடன் இருந்தன. ஒரு முதலைக்குட்டி இறந்த நிலையில் கிடந்தது.



இதுகுறித்து விமான நிலையத்தின் அதிகாரிகள் கூறுகையில், ''இந்த முதலைகளுக்கு ஒரு வயது இருக்கும். இது கடல் நீர் முதலைகள். சிறிய பெட்டி என்பதாலும் நீண்ட தூர பயணத்தினாலும் பசி எடுத்து அவை அங்கும் இங்கும் செல்ல முயன்றிருக்கும்; குரல் எழுப்பி இருக்கும். அவைகளுக்குள் சண்டை போட்டதாலும் அதன் கோபக் குரல் அதிகமாகி வெளியே கேட்டிருக்கலாம். முதலைக் குட்டிகள் உயிரோடு விமானத்தில் கடத்தி வரப்பட்டது ஹித்ரு விமான நிலைய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது'' என்றார்கள்.
நீட் தேர்வு..! கடுமையான சோதனைகளுடன் மாணவர்கள் தேர்வு அறைக்கு அனுமதி 

கார்த்திக்.சி

நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களில் ஏ-பிரிவு ஹால் டிக்கெட் பெற்றவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.



மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்த‍த் தேர்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்த‍த் தேர்வுக்காக நாடு முழுவதும் 2,255 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் ஏ-பிரிவு, பி-பிரிவு என்று வழங்கப்பட்டுள்ளது.



ஏ-பிரிவு மாணவர்கள் காலை 7.30 மணி முதல் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். காதணிகள், கொலுசுகள் அணிந்திருந்த மாணவிகள், அவற்றை கழற்றிய பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கான சோதனைகள் கடுமையாக நடைபெற்றுவருகிறது.

NEET-2018: Delhi HC Allows Sikh MBBS Aspirants To Wear Kara And Kirpan; Directs Them To Appear An Hour Before For Screening [Read Order] | Live Law

NEET-2018: Delhi HC Allows Sikh MBBS Aspirants To Wear Kara And Kirpan; Directs Them To Appear An Hour Before For Screening [Read Order] | Live Law: The Delhi High Court on Thursday permitted Sikh medical aspirants to carry a kirpan and wear a kara for the National Eligibility cum Entrance Test (NEET), which is scheduled for May 6,  opining that CBSE’s “lack of accommodation for Sikh candidates is unjustified”. The Bench comprising Justice S. Ravindra Bhat and Justice A.K. Chawla however …

NEWS TODAY 24.4 2026