Wednesday, May 9, 2018

கமல் பித்தலாட்டக்காரர் : வைகோ சான்றிதழ்

Added : மே 08, 2018 23:41 | 

தஞ்சாவூர்: ''நடிகர் கமலின் பித்தலாட்டம் தற்போது வெளிப்பட்டு வருகிறது,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தஞ்சாவூர், திருநாகேஸ்வரத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், வைகோ பேசியதாவது:மகனுடன், 'நீட்' தேர்வுக்கு சென்ற கிருஷ்ணசாமி, எர்ணாகுளத்தில் மாரடைப்பில் இறந்தார். இந்த தகவல், காலை, 10:20 மணிக்கு எனக்கு வந்தது; 10:30 மணிக்கே, கேரளா கவர்னர் சதாசிவத்திடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டேன். அவர் உத்தரவை அடுத்து, எர்ணாகுளம் கலெக்டர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இதை நான், காலை, 10:45 மணிக்கு பேட்டியாக தெரிவித்தேன்.ஆனால், நடிகர் கமல் மதியம், 2:21 மணிக்கு ஒரு, 'டுவிட்' போடுகிறார். அதில், 'கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஐ.ஜி.,யிடம் பேசினேன். இறந்த கிருஷ்ணசாமியின் உடலை அனுப்ப, கேட்டுக் கொண்டேன். அந்த குடும்பத்திற்கான செலவை ஏற்றுக் கொள்வேன்' என கூறியுள்ளார்.அவர் பேசியிருக்கலாம்; ஆனால் காலை, 10:30 மணிக்கு கவர்னரிடம் பேசி, நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. அதை மறைத்து, தானே அனைத்து ஏற்பாடுகளை செய்வதற்கு காரணம் என்பது போல், பித்தலாட்டத்தில் கமல் இறங்கிஉள்ளார்.அரசியலில், இவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி. ரஜினியை தனிப்பட்ட முறையில், நல்ல மனிதர் என மதிக்கிறேன். ஆனால், கமலின் பித்தலாட்டம் தற்போது வெளிப்பட்டு வருகிறது.இவ்வாறு வைகோ பேசினார்.


மாவட்ட செய்திகள் 

ராஜபாளையத்தில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு





ராஜபாளையத்தில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகைகளை திருடிச் சென்றவர்களை போலீீசார் தேடி வருகின்றனர்.

மே 08, 2018, 03:00 AM
ராஜபாளையம்,

ராஜபாளையம் சத்திரப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பி.எஸ்.கே.நகரைச் சேர்ந்த வர் கணேசன (வயது55)். இவர் தனியார் ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் வசித்து வரும் மகனின் புதிய வீட்டின் திறப்பு விழாவிற்காக மனைவி, மகளுடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை ஊர் திரும்பிய கணேசன் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 18 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

தகவல் அறிந்து சென்ற தெற்கு போலீீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங் களைச் சேகரித்து வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர். மேலும் மோப்ப நாய் அலெக்ஸ் வரவழைக்கப்பட்டது. அது திருடு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி அங்கேயே நின்று விட்டது.














தாம்பரம் அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது டிரைவர் உள்பட 4 பேர் உயிர்தப்பினர்



தாம்பரம் அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 4 பேர் உயிர்தப்பினர்.

மே 08, 2018, 04:00 AM

படப்பை,

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் குகன். இவர் தனக்கு சொந்தமான காரை சென்னையில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் வாடகைக்கு விட்டுள்ளார். இந்த காரை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 27) என்பவர் ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் தாம்பரத்தை அடுத்த கிஷ்கிந்தா சுற்றுலா பூங்காவில் இருந்து ஒரு குழந்தை உள்பட 3 பேரை காரில் ஏற்றிக்கொண்டு வண்டலூர் பூங்கா நோக்கி செந்தில்குமார் சென்றுகொண்டு இருந்தார்.

வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தாம்பரம் அருகே உள்ள எருமையூர் அருகே வந்தபோது, நடுரோட்டில் திடீரென காரில் இருந்த ‘ஹாரன்’ தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த டிரைவர், உடனே காரை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கியபோது காரில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

கார் தீப்பிடித்து எரிந்தது

பதற்றம் அடைந்த டிரைவர், காரில் இருந்தவர்களை உடனடியாக கீழே இறக்கி விட்டார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதுகுறித்து சோமங்கலம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காரில் புகை வந்ததும் உடனே கீழே இறங்கியதால் டிரைவர் உள்பட 4 பேரும் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தலையங்கம்
பேச்சுவார்த்தைதான் தீர்வு   09.05.2018




தமிழ்நாட்டின் மக்கள்தொகை 2011 கணக்கெடுப்பின்படி, 7 கோடியே 21 லட்சமாகும். இதில் அரசு ஊழியர்கள் 12 லட்சம் பேர் மற்றும் அரசில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் 7.42 லட்சம் பேர்.

மே 09 2018, 03:00 அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையான சமவேலைக்கு சமஊதியம் என்பதை அமல்படுத்தவேண்டும்.

ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுனர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும்.

பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் அமல்படுத்துதல், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், தொகுப்பூதியம், கணினி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படவேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடன் ரொக்கமாக வழங்கிடவேண்டும் என்பதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

இப்போது இறுதியாக நேற்று தலைமை செயலகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார்கள். இதையொட்டி, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தலைவர்களை கைது செய்திருந்தது.

இந்தநிலையில், அரசின் சார்பில் தங்கள் நிதிநிலையை விளக்கி அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளார்.

2017–2018–ம் ஆண்டில் அரசின் மொத்த வரிவருவாய் ரூ.93,795 கோடியாகும். இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பளச்செலவு மட்டும் ரூ.45,006 கோடியாகும். இதுதவிர ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கும் ஓய்வூதிய தொகை ரூ.20,397 கோடி. ஆகமொத்தம் ரூ.65,403 கோடி நிர்வாகத்தை நடத்தும் அரசு ஊழியர்களுக்காக சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது. அதாவது மொத்த வரிவருவாயில் சுமார் 70 சதவீதம் இவ்வாறு செலவு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சிபணிகளுக்காக பெற்றுள்ள கடனுக்கான வட்டிசெலவு 24 சதவீதம். மீதமுள்ள 6 சதவீதம் மாநில வரிவருவாயுடன், மத்திய அரசிடமிருந்து பெறப்படும் வரிபகிர்வு உள்பட ரூ.41,600 கோடியைக்கொண்டு தான் தமிழ்நாடு அரசு மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று அதில் தெள்ளத்தெளிவாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று போராட்டம் நடத்த திட்டமிட்டு சேப்பாக்கம் வந்தநேரத்திலும், வரும் வழியிலும் ஏராளமான ஆண்–பெண் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் கண்காணிப்பு, தடையையும் மீறி பலர் ஆங்காங்கு குவிந்தனர். இதுபோன்ற நிலையை அரசும் சரி, ஊழியர்களும் சரி தவிர்த்து இருக்கலாம்.

அரசு எந்திரம் என்ற சக்கரத்துக்கு அச்சாணி போன்றவர்கள் அரசு ஊழியர்கள். இந்த சக்கரம் இலகுவாக சத்தமில்லாமல் சுழல துணைபுரியும் உராய்வை தடுக்கும் மசகு எண்ணெய் போன்றது இருவருக்கும் இடையே உள்ள நல்லுறவு. எனவே, இத்தகைய போராட்டங்கள், கைது நடவடிக்கைகள் போன்ற நல்லுறவை கெடுக்கும் முயற்சிகளை இருசாராரும் தவிர்த்து, பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
மாநில செய்திகள் 

முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த அப்பல்லோ மருத்துவர் மீண்டும் விசாரிக்க ஆணையம் முடிவு




ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவர் விசாரணை ஆணையத்தில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

மே 09, 2018, 05:00 AM

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீகோபால், மருத்துவர் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று காலை 10.30 மணிக்கு ஆணையத்தில் ஆஜர் ஆகினர்.

அவர்கள் இருவரும் சர்க்கரை நோய் (நீரிழிவு) தடுப்பு சிறப்பு மருத்துவர்கள் ஆவர். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே போயஸ்கார்டனில் 20 மருத்துவர்கள் அவருக்கு பல்வேறு காலகட்டங்களில் சிகிச்சை அளித்ததாக சசிகலா தாக்கல் செய்த வாக்குமூலத்தில் கூறி அந்த மருத்துவர்களின் பெயர்களையும் கூறி உள்ளார். அந்த அடிப்படையிலேயே ஜெயஸ்ரீகோபால் உள்பட இருவருக்கும் ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் இருவரிடமும் நீதிபதி பல்வேறு கேள்விகள் கேட்டார். நீதிபதி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு தெரியாது என்றும், முன்னுக்கு பின் முரணாகவும் ஜெயஸ்ரீகோபால் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆணைய தரப்பு வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் ஜெயஸ்ரீகோபாலிடம் குறுக்கு விசாரணை செய்தனர்.

ஜெயஸ்ரீகோபால் தனது வாக்குமூலத்தில், ‘அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்பு 2015-ம் ஆண்டில் இருந்து 10-க்கும் மேற்பட்ட முறை போயஸ்கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவுக்கு சர்க்கரை(நீரிழிவு), தைராய்டு நோய் பிரச்சினைக்கு சிகிச்சை அளித்துள்ளேன். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அனைத்து நாட்களும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளேன். ஒருமுறை பிசியோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டியது குறித்து கேட்ட போது தலையை அசைத்தபடி பதில் அளித்தார். சிகிச்சையின் போது ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு ஏற்ற, இறக்கமாகவே இருந்தது. டிசம்பர் 5-ந் தேதி மாலை 4.15 மணிக்கு ஜெயலலிதாவுக்கு திடீர் இருதய அடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை’ என்று கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

மருத்துவர் ராமச்சந்திரன் தனது வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவரது குடும்ப மருத்துவர் சிவக்குமார் அழைத்ததன் பேரில் 2016-ம் ஆண்டு மே மாதம் போயஸ் கார்டனுக்கு நேரில் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டேன். அப்போது, ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சில மருந்து, மாத்திரைகளை பரிந்துரை செய்தேன். இதன்பின்னர் என்னை அவர்கள் அழைக்கவில்லை. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு அவருக்கு நான் எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை’ என்று கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் இருவரிடமும் குறுக்கு விசாரணை செய்வதற்காக அவர்கள் அளித்த வாக்குமூலத்தை ஆணையத்தில் ஆஜராகி இருந்த சசிகலா தரப்பு வக்கீல் ராஜ்குமார்பாண்டியன் பதிவு செய்து கொண்டார்.

இன்று (புதன்கிழமை) அப்பல்லோ மருத்துவர் சாந்தாராம் ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார்.

Tuesday, May 8, 2018


மனசு போல வாழ்க்கை 34: அறிவுரைகளும் அனுபவங்களும்

Published : 17 Nov 2015 11:32 IST
 
டாக்டர். ஆர். கார்த்திகேயன்





பெற்றோர்களின் வாழ்க்கையைப் பிள்ளைகள் வாழ்கிறார்கள். கொஞ்சம் கூட்டல் கழித்தலோடு. சிற்சில மாறுதல்களோடு. கொஞ்சம் வேறுபாடுகளுடன். ஆனால் ஆதார வாழ்க்கை நம் பெற்றோர்களுடையதுதான். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பெற்றோர்களிலிருந்து தொடங்கி நம் முன்னோர்கள் வரை பலரிடமிருந்து பெற்றிருக்கிறோம்.

இதை விஞ்ஞானம் மரபணுக்களின் காரணம் என்கிறது. முன்னோர் செய்த வினை என்று ஆன்மிகம் சொல்கிறது. குறிப்பாக, இந்து மதம் பூர்வ ஜென்மம் என்றும் ஜென்மங்கள் என்றும் சொல்லும். உளவியலாளர்களில் ஒரு சாரார் தட்டையாக நாம் எல்லாவற்றையுமே பெற்றோரைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். இதில் உங்கள் நம்பிக்கைகளும் சார்பு நிலைகளும் மாறுபடலாம். ஆனால், பெற்றோர்களின் வாழ்க்கையை ஆதாரமாக வைத்துத்தான் குழந்தைகள் வாழத் தொடங்குகிறார்கள் என்பதைப் பொதுவாக யாரும் மறுக்கமாட்டார்கள்.


யாரோட ஜெராக்ஸ்?

அப்பா, அம்மா, தாத்தாக்கள், பாட்டிகள் என நிறைய மனிதர்களின் பங்களிப்பு இருப்பதால் நாம் ஒரு கார்பன் காப்பியாகயாகவோ ஜெராக்ஸ் நகலாகவோ மட்டும் இல்லாமல் ரசமான கலவையாக இருக்கிறோம். ஒவ்வொருவரிடமிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கியிருக்கிறோம். சில பண்புகள் தூக்கலாகத் தெரியும். பல உள்ளார்ந்து இருக்கும். மிகச் சில பண்புகள் நமக்கே தெரியாமல் என்றோ ஒரு நாள் பீறிட்டுக்கொண்டு வரும்.

இந்த ஒற்றுமைகளைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். பிறந்த குழந்தையின் உருவ ஒற்றுமைகளில் இது ஆரம்பமாகும்.

“அப்படியே அம்மா தான்” , “நெத்தி மட்டும் தாத்தா. மத்தபடி அவங்க பக்கம்தான்”, “ அப்படியே டிட்டோவா பொள்ளாச்சி ஃபீச்சர்ஸ்”, “மீசையை ஒட்ட வச்சா அப்படியே அவள் அவங்கப்பாதான். அப்படியேதான் வருவா.” என்று குழந்தையைப் பார்த்து அடிக்கப்படும் டயலாக்குகள் நமக்குத் தெரியும்தானே!

உருவ ஒற்றுமைகளுக்குப் பிறகு சுபாவங்கள் அலசப்படும்.

“அப்படியே அப்பனை உரிச்சு வச்சிருக்கு. என்ன கோபம் பாரு!” “என்னா அழுத்தம் பாரு. அவ அம்மாவே தான்.” “எப்படி மழுப்பறா பாரு. அவ அத்தை இப்படித்தான் நழுவுவா எதைக் கேட்டாலும்!”

வாழ்க்கையை கூர்ந்து நோக்கினால் வாழ்வின் நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் நடப்பதையும் உணரலாம். தாயின் அதே துயரம் மகள் வாழ்விலும் நடக்கும். தந்தை செய்த அதே தவறை மகனும் செய்வார். வாழ்வின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தினால் இப்படிப்பட்ட பல ஒற்றுமைகளைக் பார்ப்பீர்கள். இவை யதேச்சையானவை அல்ல.

அறிவுரைகளும் அனுபவங்களும்

பாஸ்ட் லைஃப் ஹீலிங் என்று ஒன்று உண்டு. கடந்த காலத்தின் கர்ம வினைகளைக் களைவதற்கான சிகிச்சை முறை. மதங்கள் அனைத்துமே கர்மவினைகளைப் போக்கத்தானே முயல்கின்றன?

கர்ம வினை என்பதை முதலில் எளிமைப்படுத்துவோம். ஒரு செயலைச் செய்து அதிலிருந்து கற்றுக்கொண்ட பிறகு அதைத் தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்கிறோம். ஆனால் செயல் ஏற்படுத்திய பாதிப்பு நமக்கு வந்து விடுகிறது. அந்த பாதிப்பைப் பிறகு குறைக்கப் பார்க்கிறோம். அதன்பின் அந்த அனுபவத்தால் மற்றவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளிடம் அதைச் செய். இதைச் செய்யாதே. இது பாவம். அது புண்ணியம் என்று அறிவுரை சொல்கிறோம்.

ஆனால் அறிவுரைகளை விட அனுபவங்கள்தான் சக்தி வாய்ந்தவை. அப்பாவின் தவறு மகனுக்குப் புரியாது, பட்டுத் தெரியும் வரை. படுவதற்கு முன் தெரிந்து கொள்ள முடியாதா என்பதுதான் ஒவ்வொரு தகப்பனின் ஏக்கமும். ஆனால் தீ சுடும் என்று எவ்வளவு சொன்னாலும் தொட்டால் தானே தீயின் குணம் தெரியும்? இதனால் தான் எவ்வளவு சொல்லியும் தவிர்க்க இயலாமல் பெற்றோர்களின் தவறுகள் பிள்ளைகளால் மீண்டும் செய்யப்படுகின்றன.

அறிவுரைகள் எந்தக் காலத்திலும் பெரிய பலனை அளித்ததில்லை. அறிவுரைகள் சொல்வதை விட நம் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்வதுதான் முக்கியம்.

பிள்ளைகள் பார்த்துத் தெரிந்துகொள்கின்றன. கேட்டுத் தெரிந்து கொள்வதல்ல. பெற்றோர்கள் சொல்வது முக்கியமில்லை. செய்வது தான் முக்கியம்.

“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்று சொல்லிவிட்டு போன் வரும் போது “நான் வீட்டில் இல்லைன்னு சொல்லு” என்று சொல்லும் அப்பாவிடம் குழந்தை எதைக் கற்றுக்கொள்ளும்?

“பொய் சொல்லலாம்; ஆனால் பொய் சொல்லக் கூடாது என்று பேசிக்கொள்ள வேண்டும்!” என்றுதான் குழந்தை கற்றுக்கொள்ளும்.

மோசமான கருத்துள்ள திரைப்படத்தையோ தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ எந்த மறுப்பும் விமர்சனமும் இல்லாமல் பெற்றோர்கள் பார்க்கும்போது குழந்தைகள் அதை சம்மதமாகவே என எடுத்துக்கொள்வார்கள்.

தேர்வு அவர்கள் கையில்

நம் பழக்கங்கள், நாம் பயன்படுத்தும் சொற்கள், நாம் வாழ்வில் எடுக்கும் முடிவுகள் எனக் குழந்தைகள் நம்மை நகல் எடுக்கின்றன.

“ நான் அதிகாலை எழுந்திருக்கிறேன். அவன் அப்படி இல்லையே. இதையெல்லாம் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?” என்று நீங்கள் கேட்கலாம். உங்களிடமிருந்து இதைத்தான் குழந்தைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. தேர்வு செய்வது அவர்கள் கையில். ஆனால் உங்கள் வாழ்க்கையை ஆதாரமாக வைத்துத்தான் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையோ அவர்கள் தங்களின் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். நீங்கள் காட்டும் உலகம்தான் அவர்களுக்கு முதல் உலகம். பிறகுதான் அவர்கள் வாழ்வில் நண்பர்கள், ஊடகம், பயணங்கள் என மற்ற வகையான தாக்கங்கள் நிகழ்கின்றன.

பெற்றோர்களின் வாழ்வுக்கு நன்றி செலுத்திவிட்டு, உங்கள் வாழ்வைச் சீராக்குங்கள். அவைதான் அடுத்த சந்ததிக்கு நீங்கள் செய்யும் மூலதனம். என் வாழ்க்கையை என் பிள்ளை அப்படியே பெறட்டும் என்று சொல்ல முடிந்தால் நல்ல வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று பொருள்.

உங்கள் வாழ்வைச் செப்பனிடும்போது உங்கள் பிள்ளைகள் வாழ்வு சீராகும். அதனால் மனசு போல வாழ்க்கை என்பது உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் மனசு தான் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நலம் தரும் நான்கெழுத்து 23: பெருந்துயில் தரும் பேராபத்து!

Published : 24 Feb 2018 11:11 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்




காலையிலேயே ஒரு மணி நேரத்தைத் தவறவிட்டால், நாள் முழுதும் அதைத் தேடிக்கொண்டே இருப்பீர்கள்.

– ரிச்சர்ட் வார்ட்லி

மனித உடலுக்குத் தூக்கம் மிக முக்கியம்தான். ஆனால், அதே அளவு முக்கியம் எழுந்துகொள்வதும். சென்ற வாரக் கட்டுரையில் பார்த்ததுபோல் சூரியன் மறைந்த பின்பு எவ்வளவு சீக்கிரம் தூங்கச் செல்வது நல்லதோ, அவ்வளவு நல்லது சூரியன் உதித்தவுடன் விழிப்பது.

வின்ஸ்டன் சர்ச்சில், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் தொடங்கி பராக் ஒபாமாவரை, வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்கள் பலரிடம் இருக்கும் குணங்களை ஆராய்ந்ததில் முக்கியமான ஒரு விஷயத்தைப் பல ஆய்வுகளும் வெளிப்படுத்தின. காலையிலேயே எழுந்துகொள்வதுதான் அது. தினமும் ஒரு மணிநேரம் முன்னதாகவே எழுந்தால், ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட ஒரு முழுநாள் நமக்குக் கிடைக்கிறது.

உடற்பயிற்சி செய்வதற்கு, வாசிக்காமல் விட்டவற்றை வாசிப்பதற்கு, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கு, பல நாட்களாகச் செய்யாமல் தள்ளிப் போட்ட செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு எனத் தினமும் காலைப் பொழுதைக் கையகப்படுத்தினால் நமக்கு நிச்சய வெற்றி கிடைக்கும். பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவைப் பற்றிப் பல விஷயங்கள் அறிந்த நம்மில் எத்தனை பேருக்குப் பல ஆண்டுகளாக அதிகாலை நான்கு மணிக்கு எழுபவர் அவர் என்ற தகவல் தெரியும்?


பெரும் பசி… பெருந்துயில்…

அளவுக்கு அதிகமாகத் தூங்குவது சில நேரம் நோய்களின் பாதிப்பால்கூட நிகழலாம் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆங்கிலத்தில் ‘ஹைப்பர் சாம்னியா’ என்றழைக்கப்படுகிறது இப்பெருந்துயில். ‘சோம்னஸ்’ என்பது ரோமானியர்களின் தூக்கத்துக்கான கடவுள். ‘ஹிப்னோஸ்’ கிரேக்க தூக்கக் கடவுள்.

அதிகாலையிலேயே எழுந்திருப்பது நம் சமூகத்தில் தொன்றுதொட்டு மதிப்புக்குரிய பழக்கமாகக் கருதப்படுகிறது. பாவை நோன்பிருக்கும் பூவையரை எழுப்பும் ஆண்டாளும், அவர்களைக் கிண்டல் செய்ய ‘உனக்குக் கும்பகர்ணன் பெருந்துயில்தான் தந்தானோ?’ எனக் கேட்கிறாள்.

கும்பர்கணன்போல சிலருக்கு அதீதப் பசியும் பெருந்துயிலும் மூளையில் ஏற்படும் சில பாதிப்புகளால் வரக்கூடும். குறிப்பாக, மூளையிலே ஹைப்போதலாமஸ் என்னும் பகுதி பசி, தூக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இந்தப் பகுதி பாதிக்கப்பட்டால் அதீதத் தூக்கமும் அதிபயங்கரப் பசியும் ஏற்படும். ‘கிளைன் லெவின் சின்ட்ரோம்’ என அழைக்கப்படுகிறது, இந்த வகைப் பாதிப்பு.


‘அமுக்கும்’ தூக்கம்

பல அபூர்வமான நோய்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. அப்படித் தமிழ் கூறும் நல்லுலகம் தெரிந்துகொண்ட நோய்களில் ஒன்று ‘நார்கோலெப்ஸி’. இது விஷால் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படம் மூலம் பிரபலமானது. அதாவது அதீதத் தூக்கம். பேசிக்கொண்டே இருக்கும்போது, படித்துக்கொண்டிருக்கும்போது ஏன் சில நேரம் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போதுகூடத் தூங்கி விழுந்துவிடுவார்கள். இப்பெருந்தூக்கம் மட்டுமன்றி உணர்ச்சி வசப்படும்போது அப்படியே நெடுஞ்சாண்கிடையாக தொபுக்கடீர் எனக் கீழே விழுவதும் இந்த நோயில் அடங்கும்.

‘அமுக்குவான்’ என பாட்டிகள் சொல்வார்கள். அதாவது தூக்கத்தில் இருக்கும்போது நமக்கு விழிப்பு ஏற்படும். ஆனால், நமது கை கால்களை அசைக்க முடியாது. யாரோ அமுக்குவதுபோல் தோன்றும். மூளையில் விழிப்புணர்வுக்கு உரிய இடங்கள் செயல்படத் தொடங்கி, ஆனால் கை கால் அசைவுகளுக்குரிய இடங்கள் செயல்பட ஆரம்பிக்காமல் போன சில நொடித் தாமதமே இந்த அமுக்குவானுக்குக் காரணம்.

ஆனால், பல வருடங்களுக்கு முன்பு பாயசம் சாப்பிட முடியாமல் அற்ப ஆசையுடன் மடிந்த பாட்டியின் ஆவிதான் இதற்குக் காரணம் எனக் கூறிப் பரிகாரம் சொல்பவர்களும் உண்டு. எப்போதாவது இதுபோல் அமுக்குவான் ஏற்படுவது இயல்பானதே. ஆனால், மேற்படி நார்கோலெப்ஸி நோயில் அடிக்கடி இதுபோன்ற அமுக்குவான் தாக்குதல் ஏற்படும்.

விழிப்புக்கு அலாரம் வேண்டாம்

‘குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்’ என பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியதுபோல் அதீத உடல்பருமன், தொண்டை, மூச்சுக் குழாயில் ஏற்படும் பாதிப்புகளாலும் மூச்சுத்திணறலும் குறட்டையும் ஏற்பட்டு இரவில் தூங்க முடியாமல் பகலெல்லாம் தூக்கக் கலக்கத்தில் கழிக்கும் நோய்க்கு ‘ஸ்லீப் ஏப்னியா’ என்ற பெயருண்டு.

அதிகாலையில் விழிக்க வேண்டும் என்பதற்காக அலாரம் வைத்து எழுவதும் நல்ல பழக்கம் அன்று. நம் உடலின் தேவைக்கான தூக்கத்தைப் பெறாமல் இடையிலேயே அலாரம் வைத்துத் தொந்தரவுசெய்வது காலப் போக்கில் உடலுக்கு ஊறுவிளைவிக்கவே செய்யும். சீக்கிரம் எழுவதற்கான ஒரே ஆரோக்கியமான வழி சீக்கிரம் தூங்கச் செல்வதே. இந்தச் சமநிலையே நலம் தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

NEWS TODAY 24.4 2026