Wednesday, May 9, 2018

PhD from open varsities at par with regular ones

NEW DELHI, DHNS: The Supreme Court has held that a PhD degree conferred by an open university would be treated at par with the one granted by the regular and conventional varsity.
A bench of Justices S A Bobde and L Nageswara Rao relied upon the University Grants Commission’s notifications issued in 2004 and 2013 stating that degree, diploma, certificates awarded by open universities in conformity with the UGC would be equivalent to the ones granted by the traditional universities in the country.
“We are of the view that as a consequence, PhD degree issued by an open university and another PhD degree issued by a formal conventional university must, therefore, be treated at par having been so issued under the uniform standards prescribed by University Grants Commission Act,” the court said.
The court passed its order, allowing an appeal by Abdul Motin against Calcutta High Court judgements that had held a PhD degree obtained by him from Netaji Subhas Open University cannot be accepted as a valid degree for the post of principal.
The top court said in the case of ‘Annamalai University’ (2009) the Supreme Court had already said this the UGC Act was passed for effectuating co-ordination and determination of standards in Universities. “Its provisions are binding on all universities whether conventional or open and its powers are very broad. The regulations framed under that Act apply equally to open universities as well as also to formal conventional universities,” the court had then said.
 
சவுதியில் ஜூன் 24 முதல் பெண்கள் கார் ஓட்டலாம்
 
தினமலர் 8 hrs ago

 


ரியாத்: வளைகுடா நாடான, சவுதி அரேபியாவில், ஜூன், 24 முதல், பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கடும்கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த நாட்டு பட்டத்து இளவரசராக, முகமது பின் சல்மான், 32, பொறுப்பேற்ற பின், பல சமூக மாறுதல்கள் செய்யப்பட்டன.அதன்படி, பெண்கள் கார் ஓட்டுவதற்கும், பொது நிகழ்ச்சிகளில், ஆண்களுடன் பங்கேற்பதற்கும், ஆண்களின் அனுமதியின்றி தொழில் துவங்கவும், அனுமதி வழங்கப்பட்டது.இந்நிலையில், ஜூன், 24 முதல், சவுதி பெண்கள் கார் ஓட்ட, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, சவுதி போக்குவரத்து துறை இயக்குனர் முகமது அல் பசாமி கூறியதாவது:சவுதியைச் சேர்ந்த, 18 வயது நிரம்பிய பெண்கள், 'டிரைவிங் லைசென்ஸ்' பெற்று, கார் ஓட்டலாம். லைசென்ஸ் பெறுவதற்கு வசதியாக,ஐந்து முக்கிய நகரங்களில், ஓட்டுனர் பயிற்சிபள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. சவுதியில் வசிக்கும், டிரைவிங் லைசென்ஸ் பெற்ற வெளிநாட்டு பெண்
நலம் தரும் நான்கெழுத்து 24: பழகப் பழக... எல்லாம் எளிது!

Published : 03 Mar 2018 13:12 IST


டாக்டர் ஜி. ராமானுஜம்






மனிதன் எந்தச் செயலைத் தொடர்ந்து செய்கிறானோ, அதுவாகவே ஆகிறான். ஒரு செயலில் உன்னதம் அடைவது என்பது தனித்த ஒரு செயலல்ல. அது பன்னெடுங்காலப் பழக்கத்தின் விளைவே

- அரிஸ்டாட்டில்

மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பவர்கள், இருக்க நினைப்பவர்கள். ‘முன்னைவிடச் சிறப்பாக’ என்பதே அவர்களின் தாரக மந்திரம். தாங்கள் வகுத்த எல்லைகளையே அடிக்கடி மீறி மீறிப் புதுப்புது எல்லைகளை விரிவுபடுத்திச் சாதனை புரிபவர்கள். நெருப்பை வசப்படுத்தியதில் தொடங்கி நிலவில் காலடி வைத்ததுவரை மனிதர்கள் புரிந்த சாதனைகள் பலப்பல!

அறிவியல், கலை , விளையாட்டு என எந்தத் துறையாக இருந்தாலும் அதில் உன்னதம் தொடுவதற்குப் பயிற்சி முதல் காரணம். சாதாரணமாக ஒருவர் புல்லாங்குழலில் ஊதும்போது ‘தேவர் மகன்’ படத்தில் ரேவதி சொல்வதுபோல் வெறும் காற்றுதான் வருகிறது. அதுவே ஹரிபிரசாத் சவுராஸ்யா ஊதும் காற்றானது கானடா ராகமாக வெளிப்படுவதற்குப் பயிற்சியே காரணம். இதையேதான் ‘சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம். வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்’ என்கிறது பைந்தமிழ்ப் பாடல்.

பயிற்சியால் வசமாகும் பழக்கம்

ஒரு செயல் பழக்கமாகும்போது மூளையில் என்ன நடக்கிறது? மீண்டும் மீண்டும் ஒரு செயலைச் செய்துகொண்டே இருக்கும்போது மூளையில் அச்செயலுடன் தொடர்புடைய நரம்புகளின் இணைப்புகள் வலுவடைகின்றன. இன்னும் வேகவேகமாகச் செயல்படத் தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் நம்முடைய கவனம் தேவைப்படாமலேயே தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்குகின்றன.

முதன்முதலில் சைக்கிள் அல்லது கார் ஓட்டத் தொடங்கும்போது எப்படி இருக்கும்? முழுக் கவனமும் சாலை மீதும் வாகனம் மீதும் மட்டுமே பதிந்திருக்கும். எதிரே ஒரு கிலோமீட்டர் தொலைவில் யாராவது ஒருவர் சாலையைக் கடக்கிறார் என்றால், இங்கிருந்தே பிரேக்கைப் பிடிக்க ஆரம்பித்திருப்போம்.

ஆனால், அதுவே நன்கு பழகியவுடன் ஸ்டைலாகக் கையை விட்டுவிட்டு ஓட்டுவது, தொலைபேசியில் கடன் அட்டை வேண்டுமா எனக் கேட்பவர்களைத் திட்டிக்கொண்டே எதிரே வந்த லாரியிடமிருந்து லாகவமாக ஒதுங்குவது என அலப்பறை செய்கிறோம் அல்லவா? எப்படி இந்த மாற்றம் நடக்கிறது? மேலே சொன்னதுபோல் மூளையின் நரம்புகளின் இணைப்புகளில் ஏற்படும் மாறுதல்களால் முழுக் கவனமும் தேவைப்பட்ட ஒரு செயல், தீ சுட்டதும் உடனே கை பதறி விலகுவதுபோல் அனிச்சையாக நடைபெறத் தொடங்குகிறது.

பாவ்லோவ் ‘பழக்கம்!’

நாம் தொடர்ந்து செய்யும் செயலின் விளைவுகள் மட்டுமல்ல. சில நேரம் நம்மையறியாமல் நடக்கும் தொடர்பில்லாத செயல்களும் அதன் விளைவுகளுக்கும் நமது உடல் பழகிவிடுகிறது. ரஷ்யாவின் மிகப் பெரிய அறிவியலாளர் பாவ்லோவ். அவர் ஒரு நாயைப் பாடாய்ப்படுத்திப் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தினார். அந்த ஆராய்ச்சி முடிவுகள் மருத்துவ உலகையே புரட்டிப் போட்டன.

அந்த நாய்க்கு உணவு வைக்கும் முன், ஒரு மணியடிப்பதை வழக்கமாக்கினார். பின்னர் அவர் உணவை வைக்காமல் வெறுமனே மணியை மட்டும் அடித்தார். அப்போதும் நாயின் உடலில் எச்சில், உணவை ஜீரணிக்க உதவும் சுரப்பிகளும் சுரப்பதைக் கண்டறிந்தார்.

இதிலிருந்து, ‘கொஞ்ச நாள் பழகியவுடன் ஒரு பொருளுக்கு மட்டுமல்ல, அதனுடன் பழக்கப்படுத்திய வேறொரு பொருளுக்கும் நமது உடல் அதேபோல் வினையாற்றுகிறது’ எனும் உண்மையை அவர் வெளிக்கொணர்ந்தார். இதை ஆங்கிலத்தில் ‘கண்டிஷனிங்’ என்பார்கள்.

வெற்றியின் முதல் படி

சிலருக்கு நாள்தோறும் செய்தித்தாளில் திடுக்கிடும் செய்திகளைப் படித்தால்தான் காலைக் கடனே கழிக்க முடியும். வேறு சிலருக்கு இரவில் மெகா சீரியல்களில் வசைபாடுவதைக் கேட்டால்தான் தூக்கமே வரும். இதெல்லாமே ‘கண்டிஷனிங்’ எனப்படும் பழக்கமே. ஓர் இடத்தில் நமக்கு நல்ல நிகழ்வுகள் நடந்திருந்தால், அந்த இடத்துக்கு வந்தவுடனேயே எதுவும் நடக்காமலேயே நம்மை அறியாமல் உற்சாகம் பிறப்பதற்கும் , நமக்கு உற்சாகமூட்டும் விதமாகவும் கலகலப்பாகவும் பேசும் ஒருவர் வந்ததும் அவர் எதுவும் சொல்லாமல், செய்யாமல் நமக்கு உற்சாகம் கொப்பளிப்பதற்கும் இந்தப் பழக்கமே காரணம்.

‘இயல்பாக இருப்பற்குப் பல வருட ஒத்திகை தேவைப்படுகிறது’ என்று ஒரு பொன்மொழி இருக்கிறது. நமது கவனத்தைக் கோராமல் நம் உடல் தானாகச் செயல்படும்போது செயலின் விளைவைப் பற்றிப் பதற்றம் எதுவும் நமக்கு ஏற்படுவதில்லை. நன்கு பழகியபின் வண்டி ஓட்டுவதைப் போன்றது இது. எத்தனை கடின இலக்காக இருந்தாலும் விராட் கோலி விரட்டி விரட்டி அடித்து ஜெயிப்பது, தீவிர பயிற்சியால் அவர் வெற்றிபெறுவதைப் பழக்கமாக்கிக்கொண்டார் என்பதையே காட்டுகிறது. ஆக, வெற்றிக்கு முதல் படி பயிற்சியே!

சாதகமில்லாத சூழலைக்கூட நேர்மறையான எண்ணங்களுடன் பழக்கப்படுத்தினால், நம்மால் நிறைய சாதிக்க முடியும். ஆனால், சில இடங்களில் பழக்கமே நமக்கு ஊறு விளைவிக்கும் விதமாகவும் மாறுகிறது. எப்படி?

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
‘எனக்கு எஸ்.பியைத் தெரியும்!’ - ஈரோட்டில் மோசடி செய்த போலி நிருபர் மீது புகார்! 09.05.2018

நவீன் இளங்கோவன் ரமேஷ் கந்தசாமி

Erode:

போலீஸாரிடம் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைக் காட்டி, ஈரோட்டில் போலி நிருபர் ஒருவர், பொதுமக்களிடம் பல்வேறு சலுகைகளை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம், வளையக்கார வீதி பகுதியைச் சேர்ந்த பெண்கள் 10-க்கும் மேற்பட்டோர் இன்று ஈரோடு எஸ்.பி அலுவலகத்துக்குப் புகார் மனு ஒன்றை ஏந்திவந்தனர். என்ன பிரச்னை என அவர்களிடம் பேசினோம். “எங்கள் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், ‘நான் பத்திரிகை ஒன்றில் நிருபராகப் பணியாற்றி வருகிறேன். எனக்கு எஸ்.பி, கலெக்டர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளிடம் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நான் நினைத்தால் இலவச வீட்டுமனை, அரசு வேலை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு சலுகைகளை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக பெற்றுத்தர முடியும்’ எனக் கூறினார். மேலும், அதிகாரிகளைச் சரிக்கட்ட இலவச வீட்டுமனைக்கு 8 ஆயிரம் ரூபாய் ஆகுமென்றும், உதவித்தொகைகளைப் பெறுவதற்கு 5 ஆயிரம் ரூபாய் வரை ஆகுமெனக் கூறினார். முன்பணமாக 3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றார். மோகன்ராஜின் மனைவியான கிரிஜாவும் எங்களிடம் இதுசம்பந்தமாக தொடர்ந்து மூளைச்சலவை செய்தார். எனவே, அவர்களுடைய ஆசை வார்த்தைகளை நம்பி நாங்கள் பணத்தைக் கொடுத்தோம்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாகியும், மோகன்ராஜ் மற்றும் கிரிஜாவிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. விசாரித்தபோது தான், அவர்கள் இதுபோன்று பலரிடமும் நிருபர் எனக்கூறி மோசடி செய்தது தெரியவந்தது. நாங்கள் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டபோது, ‘போலீஸ்ல உள்ள பெரிய ஆளுங்க எல்லாம் எனக்கு தெரிஞ்சவங்கதான். நான் நினைச்சா, அந்த அதிகாரிகளை வச்சி உங்க மேல பொய் வழக்கு போட்டு உள்ள தள்ளிடுவேன்’ என மிரட்டினார். எனவே, எங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்த மோகன்ராஜ் மற்றும் கிரிஜா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

போலி நிருபரான மோகன்ராஜ் ஈரோடு எஸ்.பி சிவக்குமார் மற்றும் டி.எஸ்.பி பலருடன் நெருக்கமாக எடுத்த போட்டோக்களைக் காட்டி பலரிடமும் லட்சக்கணக்கில் கைவரிசை காட்டியுள்ளார். ஏற்கெனவே இந்த மோகன்ராஜ் மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்ட போதும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கின்றனர். மோகன்ராஜ் போல ஈரோட்டில் பல போலி நிருபர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் பலரையும் மிரட்டி பணத்தை பறித்து வருகின்றனர். ஈரோடு எஸ்.பி இனியாவது இதனைக் கருத்தில் கொண்டு இந்தப் போலி நிருபர்களைக் களையெடுப்பாரா எனப் பார்ப்போம்.



இதுகுறித்து ஈரோடு எஸ்.பி சிவக்குமார் அவர்களிடம் பேசினோம். “பலபேர் தான் நிருபர் என என்னிடம் வந்து போட்டோ எடுத்துச் சென்று, இப்படி ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியான போலி நிருபர்கள் மீது வரும்காலங்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

Breaking: Ph.D Issued By Open University And That By Formal Conventional University Must Be Treated At Par: SC [Read Order] | Live Law

Breaking: Ph.D Issued By Open University And That By Formal Conventional University Must Be Treated At Par: SC [Read Order] | Live Law: The Supreme Court, in Abdul Motin Vs. Manisankar Maiti, has held that Ph.D degree issued by an open university and that issued by a formal conventional university must be treated at par.
College student held under POCSO Act

THENI, May 09, 2018 00:00 IST

L. Surya of Thadicherry, a college student, was arrested on the charge of assaulting an eight-year old girl at Thadicherry near here on Tuesday.

The accused abducted the girl while she was playing near her house and assaulted her sexually.

Later, he threatened to murder her if she exposed the assault to others.

Cases were registered against him under Section 6 of POCSO Act and 506 (i) of IPC in this connection.
Power shutdown

SALEM, May 09, 2018 00:00 IST

There will be no power supply in the following areas from 10 a.m. to 3 p.m. on May 9 due to maintenance works on the power lines passing from Hasthampatti: Yercaud town, Ondikadai, Kovilmedu, Vazhavanthi, Nagalur, Semmanatham, Kottacheri, Maramangalam, Pattipadi, Velur, Kondaiyanur, Karadiyur, Kolagur and surrounding areas.

NEWS TODAY 24.4 2026