Saturday, May 12, 2018

Blocked windpipes in kids on rise: Docs

TIMES NEWS NETWORK

Chennai: 12.05.2018

As a group of parents waited for doctors to troop in to attend a programme at a city hospital on Friday, their ears pricked up every time they heard a slight hoarseness in the childlike voices around them. They knew what this meant: these were children who knew what it felt like to have a noose around their neck even without having one.

Blocked airways among children are on the rise, say doctors. And at least 80% of these cases require endoscopy or open surgery.

On Friday, doctors at Kanchi Kamakoti CHILDS Trust Hospital (KKCTH) met the families of children who had undergone treatment for blocked trachea (windpipe), many of who were brought back from the brink of death.

Aarthi, a Class IX student from Salem, was one of them. Upset after being chided by her parents, she consumed poison three years ago. “She was in coma for close to a month and required external assistance to breathe,” said Dr S Thirunavukkarasu, consultant airway surgeon at the hospital. While the ventilator helped her breathe as she recovered, what doctors didn’t anticipate is her trachea constricting once the ventilator was removed. “We had to undertake an open surgery. We cut the blocked part and sutured the healthy halves,” he said, describing Aarthi’s case as one of the hospital’s most challenging.

Airways in children can be blocked because of accidental ingestion of toxic substances, accidents, congenital conditions and low birth weight.

Doctors say one of the reasons for the increase in airway obstruction among children could be because of more pre-term and low weight babies being saved with advancement in medical technology. “We now save children who weigh even 700 grams. These children are on ventilators for two months or more. This could lead to narrowing of airways,” said Dr S Balasubramanian, director of KKCTH. Over the last five years, the hospital has done 182 surgeries on children with blocked or constricted trachea, 60 of which were complicated. One of them was operated after he accidentally inhaled a button battery.

Children present had symptoms like rapid, noisy or high-pitched breathing, gagging and difficulty in swallowing or complete inability to swallow, pain in the neck, chest or abdomen.

However, not all children who face this problem have access to adequate healthcare. Doctors said high cost of management, lack of awareness among healthcare professionals, and limited availability of equipment in the country continue to be a challenge for doctors and patients at various facilities in the country.
Anna univ to accept DDs for engg counselling

TIMES NEWS NETWORK

Chennai: 12.05.2018


Students seeking admission to engineering courses can pay the fee for counselling by demand draft, Anna University informed the Madras high court on Friday. This is in addition to payments through credit, debit cards and internet banking, it said.

The entire admission process will be online this year.

The university arrived at the decision after the high court made it clear that the university could not expect rural students who might not have bank accounts to make the payment only through credit and debit cards or via internet banking.

“We will accept payment through demand draft and in turn remit the fee online from the university’s current account,” additional advocategeneral C Manishankar said.

Several petitioners, including DMK’s Kancheepuram MLA C V M P Ezhilarasan, filed a batch of PILs seeking a court direction to the university to conduct both online and offline counselling. The university initially said it could not accept other payment modes because of the online counselling system.

When the pleas came up for hearing on Friday, Manishankar filed an affidavit stating that registration and payment had been online only for the past two years. This year, the university would make provision for payment by DD in addition to the online payment facility, he said.

“Since the online registration is already in progress,” he said, it would require “one week for testing, validation and security checks” for the university to offer payment by demand draft without interfering with the process that is already underway. The DD payment option will be avaliable at 2,580 counters in 42 facilitation centres across the state, he said.

A vacation bench of Justice V Parthiban and Justice P D Audikesavalu recorded the statement and said it would soon pass a detailed order.
Court orders Pondy univ to file criminal plaint against college

TIMES NEWS NETWORK

Chennai: 12.05.2018


The Madras high court on Friday directed the Pondicherry University to register a criminal complaint for cheating against Usha Lachumanan College of Education, Thirukkanur, which admitted andcollectedfeesfrom students without possessing a valid recognition.

Justice S M Subramaniam passed the order on a plea by a group of students who were cheated by the institution.

“The university registrar and controller of examinations are directed to lodge a police complaint against the college in respect of the cheating committed against the students as well as the society at large and set the law in motion. The competent authority, on receipt of such complaint, shall register the same and investigate the matter in a manner known to law and proceed with all further action,” Justice S M Subramanian said.

Noting that writ petitioners or all other similarly placed students, who were admitted in the BEd degree course in the academic year 2017-2018 are entitled to claim exemplary compensation from the institute, the judge said, the quantum of compensation to be awarded to the studentswillbedecided atthe time of final hearing on June 11.

However, the court refused to permit students to appear for university examinations, noting that it cannot allow an illegality to continue.
முதல் பார்வை: இரும்புத்திரை

Published : 11 May 2018 18:41 IST

உதிரன் சென்னை



டிஜிட்டல் இந்தியாவின் போதாமைகளையும், குற்றங்களையும் சொல்லும் படமே 'இரும்புத்திரை'.

சாமானிய மனிதர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் திடீர் திடீரென்று காலியாகிறது. வங்கியிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டால் பதில் இல்லை. இதனால் தற்கொலை உள்ளிட்ட சில அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. இந்த சூழலில் ராணுவ அதிகாரியான விஷால் வங்கிக்கடன் வாங்க படாதபாடு படுகிறார். அலைச்சல், மன உளைச்சலுடன் ஒரு போலி முகவரியில் வங்கிக் கடன் வாங்க அடுத்த நாளே அவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் காணாமல் போகிறது. தங்கையின் திருமணம் தடைபடுமே என கலங்கும் விஷால் அதற்குப் பிறகு என்ன செய்கிறார்? பணம் எப்படிக் காணாமல் போகிறது? அந்தக் குற்றத்தின் பின்னணி என்ன? என்பது மீதிக் கதை.

தகவல் தொழில்நுட்பத் திருட்டின் பின்புலத்தை விரிவாகப் பதிவு செய்து ஆச்சர்யத்துக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்குகிறார் இயக்குநர் மித்ரன். ஆதார் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களிலிருந்தும் தகவல் திருடப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கும் இயக்குநரின் அக்கறைக்கு மதிப்பளித்து வரவேற்கலாம்.

'துப்பறிவாளன்' படத்தில் அதிகம் பேசாமல் அலட்டிக்கொள்ளாமல் மௌனகுருவாக இருந்து சாதித்த விஷால் 'இரும்புத்திரை' படத்தின் அறிமுகக் காட்சிகளில் காமெடி பண்ண முயற்சித்திருக்கிறார். அது எடுபடவில்லை. அப்பா மீதான கடுப்பை, கோபத்தைக் காட்டியிருக்கும் விதமும், அதற்கு தர்க்க ரீதியாகத் தரும் விளக்கமும் நம்பகத்தன்மையை வரவழைக்கின்றன. சண்டைக் காட்சிகளில் விஷால் காட்டியிருக்கும் மெனக்கெடல் கவனிக்க வைக்கிறது. ஆனால், கோபாவேசம் கொள்ள வேண்டிய சில முக்கியமான காட்சிகளில் வறட்சியான நடிப்பைத் தந்திருக்கிறார். மற்றபடி கமர்ஷியல் நாயகனுக்கான அம்சங்களை தவறாமல் பின்பற்றி இருக்கிறார்.

முகம் முழுக்க சிரிப்பைத் தூவியபடி சமந்தா எனர்ஜி ஏஞ்சலாக வலம் வருகிறார். கதையின் நீக்கு போக்கான இடங்களுக்கும், தடம் மாறும் பயணத்துக்கும் கிரியா ஊக்கியாக சமந்தா சம பங்கு வகிக்கிறார். டெல்லி கணேஷ் பிரமாதமான நடிப்பைத் தர, ரோபோ ஷங்கரும், காளி வெங்கட்டும் உள்ளேன் ஐயா அட்டெனன்ஸ் போட்டிருக்கிறார்கள்.

எந்தவித பில்டப் கொடுத்தாலும் அது அர்ஜூனுக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது. அதற்கான நியாயத்தையும் அவர் செய்திருக்கிறார். நுணுக்கமான அசைவுகளில், பேச்சில் சவாலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். 'என்னைப் பொறுத்தவரைக்கும் நீ ஒரு நம்பர்தான், ஆளாகணும்னு நினைக்காதே' என்று பஞ்ச் வசனம் பேசி மிரள வைக்கிறார்.

கமர்ஷியல் படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு அளப்பரியது. அதன் வலிமை உணர்ந்து ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் தனித்துவம் கடைபிடித்து காட்சிகளுக்கு வண்ணம் சேர்த்திருக்கிறார். சேஸிங் காட்சிகளில் கேமரா நம் தோள்களில் பயணிப்பதைப் போல பரபரப்பை ஏற்படுத்துகிறார். யுவன் பின்னணி இசையில் விரும்பித் திரும்பிப் பார்க்க வைக்கிறார். ரூபன் கச்சிதமாக கத்தரி போட்டிருக்கிறார்.

ஒரு காட்சியில் ஓரிடத்தில் பேசிக்கொண்டிருப்பவரின் புகைப்படமே அவர் தொடர்பான தகவல்களைத் திருடும்போது திரையில் தெரிகிறது. அடிவாங்கிய விஷாலுக்கு காயம் ஆறிய நிலையில், அடிகொடுத்த மற்ற ராணுவ வீரர்கள் மட்டும் காயங்களோடு இருப்பது லாஜிக் மீறல். சமந்தாவும்- விஷாலும் நடந்துகொண்டே பேசுவது விடியும் வரை பேசுவதாக கன்வே செய்யவில்லை. இதுபோன்ற சின்னச் சின்னக் குறைகள் உள்ளன. முதல் பாதி சுற்றி வளைத்து ஆரம்பித்த இடத்துக்கே வந்ததைப் போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது. படத்தின் நிதானமான போக்கும் அதற்கான காரணம்.

ஆனால், இவை எல்லாவற்றையும் மறந்து நேரத்தைப் பற்றி எல்லாம் யோசிக்க விடாமல் இரண்டாம் பாதி முழுக்க நம்மை முழுவதுமாக இழுத்துக்கொள்வது திரைக்கதையின் பலம் என்று சொல்லலாம். அர்ஜூனும் விஷாலும் ஒருவருக்கொருவர் பதிலடி கொடுக்கும் விதத்தில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கிறார்கள். இந்த இணையர்களின் திரை ஆக்கிரமிப்பு சுவாரஸ்யமாக உள்ளது. அதுவும் குருநாதா, பிக் பாஸ் என்று போகிற போக்கில் விஷால் அர்ஜூனை கலாய்ப்பதெல்லாம் ரசிகர்களிடம் நன்றாகவே எடுபடுகிறது.

தகவல் தான் அறிவு, தகவல்தான் வியாபாரம், தகவல்தான் பணம் பண்ணும் வழி என்று அதன் பாதகங்களை பக்குவமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மித்ரன் செல்போனில் ஊடுருவது முதல் கணினியில் நுழைவது வரை நடக்கும் முறைகேடுகளை, அதன் இருட்டுப் பக்கங்களை சொன்ன விதத்தில் 'இரும்புத்திரை' முக்கியமான சினிமாவாக உருமாறுகிறது.

ஷங்கர், முருகதாஸ் போன்ற இயக்குநர்கள் ஊழல், கறுப்புப் பணம் குறித்து படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களைத் தாண்டி சமகாலப் பிரச்சினையை பக்குவமாக அலசிய விதத்திலும், விழிப்புணர்வை விதைத்த விதத்திலும் 'இரும்புத்திரை' தவிர்க்க முடியாத படமாகிறது.

முதல் பார்வை: ‘நடிகையர் திலகம்’

சாதாரண கிராமத்தில் பிறந்த சாவித்ரி, மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, சினிமாவில் நடிகையானார். அவருக்கும் ஜெமினி கணேசனுக்குமான காதல், கல்யாணம், பிரிவு, இறுதி வாழ்க்கை என சாவித்ரியின் ஒட்டுமொத்த வாழ்க்கைதான் ‘நடிகையர் திலகம்’ படத்தின் கதை.

சாவித்ரி குழந்தையாக இருக்கும்போதே அவர் அப்பா இறந்துவிடுகிறார். இதனால், சிறு வயதிலேயே தன் பெரியம்மா வீட்டில் அம்மாவுடன் தஞ்சம் புகுகிறார் சாவித்ரி. அவரின் சுட்டித்தனத்தைப் பார்த்து, ‘சாவித்ரியை நாட்டியத்தில் சேர்த்து விட்டால் நன்றாக சம்பாதிக்கலாம்’ என்று ஒருவர் சொல்ல, சாவித்ரியின் பெரியப்பா அவரை நாட்டியம் கற்றுக் கொடுக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். அவரின் குறும்புகளைப் பார்த்து, ‘உன்னால் நாட்டியம் கற்றுக்கொள்ள முடியாது’ என்கிறார் வாத்தியார். அவர் ‘முடியாது’ என்ற சொன்ன ஒரு வார்த்தைக்காகவே தூரத்தில் இருந்தே அவர் கற்றுக் கொடுப்பதைப் பார்த்தும், தன் தோழி சுசீலாவிடம் இருந்தும் நாட்டியம் கற்றுக் கொள்கிறார் சாவித்ரி.
சாவித்ரியை சினிமாவில் நடிக்க வைப்பதற்காக சென்னை அழைத்து வருகிறார் அவருடைய பெரியப்பா. ஆனால், முதல் படத்தில் அவருக்கு ஒழுங்காக டயலாக் பேசி நடிக்கத் தெரியவில்லை. ‘உனக்கு நடிப்பே வராது’ எனத் திட்டுகிறார் அந்தப் படத்தின் இயக்குநர். ‘உன்னால் முடியாது’ என்று யாராவது சொன்னால், உடனே அதை செய்து காட்டுவதுதான் சாவித்ரியின் பிடிவாதமாயிற்றே... அதே ஸ்டுடியோவில் வேறொரு படத்தில் நடைபெற்ற ஆடிஷனில் செலக்ட் ஆகி, சிறிய வேடத்தில் நடிக்கிறார். அவரின் நடிப்பைப் பார்த்து அசந்து, எந்த இயக்குநர் ‘உனக்கு நடிப்பு வராது என்று திட்டினாரோ, அதே இயக்குநரே ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறார். ஜெமினி கணேசனும் ஹீரோவாகிவிடுகிறார். தெலுங்கு மட்டுமே தெரிந்த சாவித்ரி, தமிழ் வசனங்களைப் பேச சிரமப்படுகிறார். ‘தெலுங்கு - தமிழ் புத்தகத்தைப் படிப்பதைவிட, மனிதர்களிடம் இருந்து மொழியை கற்றுக்கொள்’ என்று அவரைப் பல இடங்களுக்கும் அழைத்துப் போகிறார் ஜெமினி கணேசன்.
நாளடைவில் இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. அந்தக் காதல், கல்யாணத்திலும் முடிகிறது. ஆனால், நாளடைவில் அவர்கள் இருவருக்குள்ளும் இடைவெளி விழுகிறது. இந்த இடைவெளி எப்படி அதிகமானது? ஜெமினியை விட்டு சாவித்ரி பிரிந்ததற்கு என்ன காரணம்? குடிக்கு அடிமையாகி, தன் சொத்துக்களை எல்லாம் சாவித்ரி இழந்தது எப்படி? என்பதெல்லாம் மீதிக்கதை. இந்தக் கதை, சாவித்ரி கோமாவில் விழுந்தபிறகு ரிப்போர்ட்டரான சமந்தா, தேடித்தேடி சேகரித்தது.

நடை, உடை, பாவனை என அச்சு அசல் சாவித்ரியாகவே வாழ்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவருடைய சினிமா வாழ்க்கையில் இந்த ஒரு படமே போதும் என்று சொல்லும் அளவுக்கு, ஒவ்வொரு அசைவிலும் சாவித்ரியை நினைவுபடுத்துகிறார் கீர்த்தி. இதற்காக அவர் செய்த ஹோம்வொர்க் ஏராளம். குறிப்பாக, கீர்த்தியின் மேக்கப்மேனுக்கு மிகப்பெரிய பாராட்டு. இளமை சாவித்ரி, உடல் எடை கூடி பெருத்த கொஞ்சம் வயதான சாவித்ரி என கொஞ்சம் கூட குறைசொல்ல முடியாத அளவிற்கு கீர்த்தியை சாவித்ரியாகவே மாற்றியிருக்கிறார்.

ஜெமினி கணேசன் எப்போது இவ்வளவு ஒல்லியாக இருந்தார் என்ற கேள்வி எழுந்தாலும், தன் நடிப்பில் கொஞ்சமும் குறை வைக்காமல் அவரைப் போலவே நடித்திருக்கிறார் துல்கர் சல்மான். ஆரம்பத்தில் வரும் சமந்தா காட்சிகள் கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், க்ளைமாக்ஸில் ஸ்கோர் செய்திருக்கிறார். சின்னச் சின்ன வேடங்களில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே, பானுப்ரியா, பிரகாஷ் ராஜ், நாக சைதன்யா என எல்லாருமே அருமையாக நடித்திருக்கின்றனர்.
மிக்கி ஜெ மெயர் இசையில், பின்னணி இசை அருமை. தமிழில் ‘தந்தாய்... தந்தாய்...’ பாடல் கேட்க கேட்க இதமாக இருக்கிறது. டேனி சஞ்செஸ் - லோபெஸ் ஒளிப்பதிவில் அத்தனை பிரம்மாண்டம். குறிப்பாக, கீர்த்தி சுரேஷ் கோபத்துடன் வந்து மது குடிக்கிற காட்சியில், பின்னால் இருந்து தலைக்கு மேலே வந்து முன்புறம் கேமரா வரும் ஷாட், சிறப்போ சிறப்பு. அந்தக் காலத்தை அப்படியே செட்டில் கொண்டுவந்த கலை இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் ஹேட்ஸ் ஆஃப்!

ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தாலும், பெரும்பாலும் அது போரடிக்கும் டாக்குமென்ட்ரி போல இருக்கும். ஆனால், ஒரு இடத்தில் கூட அப்படித் தோன்றாதபடி இயல்பாக எடுத்திருக்கிறார் நாக் அஸ்வின். குறிப்பாக, சாவித்ரியின் உதவும் உள்ளத்தைப் பல இடங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார். சாவித்ரியைப் பற்றி பல விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் எனப் பலரிடம் பேசி இந்தக் கதையை உருவாக்கிய இயக்குநரின் உழைப்பு, நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.
‘என் அம்மாவின் உண்மைக்கதை முதன்முதலில் வெளியாகியுள்ளது’ என சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி கூறியிருப்பதில் இருந்தே, உண்மைக்கு நெருக்கமாக இந்தப் படம் இருக்கிறது எனத் தெரிகிறது. எப்போதுமே உண்மைக்கு மிகப்பெரிய வலிமை இருக்கிறது. அந்த வலிமை, இந்தப் படத்தில் இருக்கிறது.
எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது: திவாகரனுக்கு சசிகலா தரப்பு நோட்டீஸ்

Published : 11 May 2018 20:57 IST

சென்னை

 

திவாகரன், சசிகலா | கோப்புப் படம்.

எனது பெயரையோ, புகைப்படத்தையோ திவகாரன் பயன்படுத்தக்கூடாது என்று சசிகலா தரப்பிடமிருந்து திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் திவாகரனுக்கு அனுப்பிய நோட்டீஸில் தெரிவித்துள்ளதாவது:

''தாங்கள் சசிகலாவின் உடன் பிறந்த சகோதரர். உங்கள் மீது சசிகலா அதிக பாசம் கொண்டவர் என்பது தாங்கள் அறிந்ததே. ஆனாலும், தங்களின் முரண்பட்ட செயல்பாடுகளும் வெளிப்பாடுகளும் சசிகலாவை கனத்த மனதுடன் இந்த அறிவிப்பை தங்களுக்கு அனுப்பும் சூழலுக்கு தள்ளியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரைப் புகழ்ந்தும் அவர்களது துரோகச் செயல்களை மறைக்கும் வண்ணமாக தாங்கள் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதலாக தொடர்ந்து பத்திரிகைகள், காணொளிகள், சமூக வலைதளங்களில் தவறான விஷயங்களை பேட்டிகள் கொடுத்து வருகிறீர்கள்.

அதிமுகவில் உள்ள தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக சசிகலா பல வழக்குகளை சென்னை மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களில் வழக்குகளாக தொடுத்துள்ளார். மேலும், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும் மேற்படி நீதிமன்றங்களில் எதிர்கொண்டு வருகிறார். அவை அனைத்தும் தற்போதும் நிலுவையில் இருந்து வருகிறது. வழக்குகளின் அனைத்து விவரங்களும் வழக்காடும் தன்மையும் சசிகலாவின் ஆலோசனையின்படியே நடந்து வருகின்றன. அதே போல சசிகலாவால் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராய் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனும் என் கட்சிக்காரரிடம் அவ்வப்போது உரிய ஆலோசனைகளைப் பெற்று கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

தினகரன் கடும் இன்னல்களுக்கிடையே அதிமுகவின் பெருவாரியான உண்மைத் தொண்டர்களை ராணுவம் போன்று கட்டுக்கோப்புடன், கட்சியை அனுதினமும் பலப்படுத்தி வருகிறார். நிலவரங்கள் இவ்வாறு இருக்க, உண்மைக்கு மாறாக காழ்ப்புணர்வுடனும், இல்லாததையும் பொல்லாததையும் தாங்கள் பொதுவெளியில் பேசி வருவது சசிகலாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத தாங்கள், அதிமுகவின் பொதுச் செயலாளராகிய சசிகலா பற்றி அவதூறாகப் பேசி வருவது சட்டத்தின் பார்வையில் சரியானதல்ல. எனது கட்சிக்காரர் சசிகலாவின் நிர்வாகத் திறமை, தலைமை சார்ந்த பண்பு, கட்சிப் பணி மற்றும் அவருக்கும் அதிமுகவின் தொண்டர்களுக்கும் இடையே இருக்கும் பாசப் பிணைப்புக்கு எதிராக தாங்கள் உள்நோக்கத்துடன் பேட்டிகள் கொடுத்து வருவதை சசிகலா இந்த சட்ட அறிவிப்பின் வாயிலாக கண்டிக்கிறார்.

தினகரன் குறித்து தாங்கள் பொதுவெளியில் உண்மைக்கு மாறாகப் பேசி வரும் விஷயங்கள் தங்கள் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்குதல் உணர்வை வெளிப்படுத்துகின்றன. தங்களின் பேட்டிகள் சசிகலாவின் தலைமை மாண்புக்கும் ஆளுமைக்கும் குற்றம் கற்பிக்க, யாரையோ திருப்திப்படுத்த முயன்று வருகிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்துவதாக அவரே தெரிவிக்கிறார்.

என் கட்சிக்காரர் சசிகலா அதிமுகவும் அதன் ஒன்றரை கோடி தொண்டர்களுமே பிரதானம் என்றும் அவரது குடும்பம் அவருக்கு இரண்டாவது பட்சம் என்பதையும் தெரிவிக்கிறார்.

தாங்கள் எந்த ஒரு பெயரிலும் அரசியல் ரீதியாக செயல்படுவது தங்களின் சொந்த விருப்பம் என்றும், ஆனால் என் கட்சிக்காரர் சசிகலாவின் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த வகையிலும் தாங்கள் பயன்படுத்தக் கூடாது என்பதனை இந்த சட்ட அறிவிப்பின் மூலமாக தெரிவிக்கிறார்.

அதேபோல் என் கட்சிக்காரர் உயிருக்கும் மேலாக நினைத்து வணங்கும் ஜெ.ஜெயலலிதாவை ஒருமையிலும், தரக்குறைவாகவும், அவரது நற்புகழை களங்கப்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருவதை எள்ளளவும் என் கட்சிக்காரரும், கட்சித் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, அதை மனதில் கொண்டு அதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் தாங்கள் இனிமேல் எவ்வகையிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்யக்கூடாது, பேசக்கூடாது.

எனது அக்கா, என் உடன் பிறந்த சகோதரி எனும் உரிமையைக் கோரி தாங்கள் எனது கட்சிக்காரரைப் பற்றி ஊடங்களில் பேசி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த சட்ட அறிவிப்பினை அனுப்புவதன் நோக்கமே, உண்மைக்கு மாறாக தவறாக தொடர்ந்து ஊடகங்களில் பேசி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்த சட்ட அறிவிப்பைனைப் பெற்ற பிறகும் தாங்கள் தொடர்ந்து பொய்யான விஷயங்களைப் பேசும் சூழலில் ரத்த சம்பந்த உறவு என்பதை ஒதுக்கிவைத்துவிட்டு தங்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவீர்கள்.''

இவ்வாறு ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சசிகலா சிறைக்குச் செல்லும்போது தனக்கு அடுத்த நிலையில் தினகரனை நியமித்தார். அதற்கேற்ப ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தினகரன் தனது அரசியல் திறமையை நிரூபித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான தினகரன், அமமுக என்ற கட்சியைத் தொடங்கினார். பி.வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் உள்ளனர்.

ஆனாலும், சசிகலா குடும்பத்தில் திவாகரன் உள்ளிட்டோருக்கும் தினகரனுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு தினகரனின் கை ஓங்கியதால் திவாகரனால் கட்சியில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. தனது கணவர் ம.நடராஜன் இறந்தபோது 15 நாட்கள் பரோலில் வந்த சசிகலா, தினகரன் - திவாகரன் இடையே சமாதானம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

அரசியலில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில் குடும்பத்துக்குள் மோதல் என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, எதிர்காலம் கருதி அமைதியாக இருக்குமாறு சசிகலா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் மோதல் ஓய்ந்த பாடில்லை.

இந்நிலையில் எனது பெயரையோ, புகைப்படத்தையோ திவகாரன் பயன்படுத்தக்கூடாது என்று சசிகலா தரப்பிடமிருந்து திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. சிறுமி பலாத்கார வழக்கு: பாஜக எம்எல்ஏ செங்கார் மீதான குற்றச்சாட்டு உறுதி

Published : 11 May 2018 21:03 IST

புதுடெல்லி



உன்னாவ், சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜகவின் குல்தீப் சிங் செங்கார். - படம். | ராஜீவ் பட்.

உத்தரபிரதேசத்தில் சிறுமி பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீதான குற்றச்சாட்டினை சிபிஐ உறுதி செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தன்னை பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏவான குல்தீப் சிங் செங்கார், பலாத்காரம் செய்ததாகவும் மிரட்டுவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தகவலறிந்த எம்எல்ஏ குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள், புகாரை திரும்பப் பெறக் கோரி, சிறுமியின் தந்தை பப்பு சிங்கை கடுமையாக தாக்கினர்.

ஆனால், அங்கு வந்த போலீஸார், தாக்குதலில் படுகாயமடைந்த பப்பு சிங்கை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே சிறைக்குள் பப்பு சிங் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எம்எல்ஏ குல்தீப் சிங், அவரது உதவியாளர் சாஷி சிங் உள்ளிட்டோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், எம்எல்ஏ குல்தீப் சிங் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ உறுதி செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சிபிஐ உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

எம்எல்ஏ குல்தீப் சிங் மீது சிறுமி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கில் குல்தீப் சிங்கை காப்பாற்றுவதற்காக போலீஸார் பல முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான சிறுமியின் வாக்குமூலத்தை நீதிபதியின் முன்னிலையில் சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த பலாத்கார வழக்கைப் பயன்படுத்தி சிபிஐ அதிகாரிகள் போல நடித்து, குல்தீப் சிங்கின் மனைவியிடம் ரூ.1 கோடி பணம் பறிக்க முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.

NEWS TODAY 24.4 2026