Monday, May 14, 2018

கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்



கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அங்குள்ள பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்களை கண்டுகளித்து மகிழ்ச்சியடைகின்றனர்.

மே 14, 2018, 03:30 AM

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

எந்தவித தொழில்நுட்ப வசதியும் இல்லாத, 7–ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் தங்கள் கலைத்திறனை நிரூபிக்கும் வகையில் குடைவரை மண்டபங்களையும், குடைவரை கோவில்களையும் எழுப்பினார்கள்.

அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு சிற்பங்கள் உலகளவில் பல்லவர்களின் கலைத்திறனை கொண்டு சென்றுள்ளன. சைவ, வைணவ மதத்தை பின்பற்றி பல்லவர்கள் இங்குள்ள சிற்பங்களை வடிவமைத்துள்ளனர். ஒவ்வொரு குடைவரை கோவில்களும், சிற்பங்களும் மகாபாரத, ராமாயண கதைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை கோவில், ஐந்துரதம் ஆகியவை உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் உள்ள கோவிலாகும். இந்த 2 இடங்களையும் கண்டுகளிக்க மத்திய தொல்லியல் துறை உள்நாட்டு பயணிக்கு ரூ.30, வெளிநாட்டு பயணிக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கிறது.

அதேபோல் அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், திருமூர்த்தி மண்டபம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம், வெண்ணெய் உருண்டை கல் போன்றவற்றை கண்டுகளிக்க கட்டணம் கிடையாது.

ஆபத்து ஒரு பக்கம் இருந்தாலும், அர்ச்சுணன் தபசு பாறை சிற்பத்தின் மலைக்குன்றின் மீது ஏறி இளைஞர்கள் சிலர் ஆர்வ மிகுதியால் செல்பி எடுத்து மகிழ்வதை நாம் கண் கூடாக காணலாம்.

மேலும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தின் உச்சியின் மீது ஏறி பார்த்தால் மாமல்லபுரம் நகரின் அழகையும், கடற்கரையும் கண்டுகளிக்கலாம்.

இந்த கலங்கரை விளக்கத்தின் அருகில் சிற்ப நுணுக்கங்களுடன் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைய கலங்ரை விளக்கமும் சுற்றுலா பயணிகளை ரசிக்க தூண்டும்.

மாமல்லபுரம் மலைக்குன்றின் மீது அமைந்துள்ள இந்த 2 கலங்கரை விளக்கமும் இயற்கை எழில் கொஞ்சும், பசுமை காட்சிகளை சுற்றுலா பயணிகளுக்கு படம் பிடித்து காட்டுகின்றன.

பழைய கலங்கரை விளக்கம் மீது ஏற கட்டணம் கிடையாது. துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறையின் கீழ் இயங்கும் புதிய கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி நகரின் அழமை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இங்கு உலகப்புகழ் பெற்ற கடற்கரை கோவிலுடன் ஒட்டி கடற்கரை பகுதி அமைந்துள்ளதால் இக்கடற்கரை பகுதியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து செல்வதில் தவறுவது கிடையாது. குடும்பத்துடன் வருபவர்கள் அஙகு குளித்தும் மகிழ்கின்றனர்.

மாமல்லபுரத்திற்கு கோடை விடுமுறைக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மாநகர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

மேலும் கடற்கரை கோவில் மற்றும் ஐந்துரதம் பகுதியில் சரியான குடிநீர் வசதி இல்லாமலும், சுற்றிப்பார்த்த பிறகு நிழலில் அமர்ந்து இளைப்பாற நிழற்குடை வசதி இல்லாமலும் சுற்றுலா பயணிகள் அவதியுற்று வருகின்றனர்.
அழகு தரும் கொய்யா இலைகள்




கொய்யா இலைகளை பயன்படுத்தி பல்வேறு விதமான சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

மே 13, 2018, 04:36 PM

* சருமத்தில் நமைச்சல், ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்பட்டால் கொய்யா இலைகளை பயன்படுத்தி பாதிப்பை சரிபடுத்திவிடலாம். சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து சரும பாதிப்புக்குள்ளான இடங்களில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

* இயற்கையாகவே சருமத்திற்கு அழகிய நிறத்தை கொடுக்கும் தன்மை கொய்யா இலைகளுக்கு உண்டு. கொய்யா இலைகளை மிக்சியில் அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் பூசி வரலாம். அவை நன்கு உலர்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக இவ்வாறு செய்து வந்தால் சருமம் புது பொலிவு பெறும்.

* கோடை காலங்களில் சருமம் கருமை நிறத்திற்கு மாறத்தொடங்கும். கொய்யா இலைகளை பயன்படுத்தி கருமை நிற முகத்தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி வர வேண்டும். அது முகத்தில் உள்ள துளைகளில் படிந்திருக்கும் அழுக்கை அப்புறப்படுத்தி பளிச்சிட வைக்கும்.

* கொய்யா இலைகளை அரைத்து அடிக்கடி முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகப்பரு பிரச்சினையும் நீங்கும். சரும சுருக்கங்களை போக்கி இளமையை பாதுகாக்கவும் கொய்யா இலை உதவும்.

* அரைத்த கொய்யா இலையுடன் ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி கலந்து முகத்தில் பூசி வரலாம். இவ்வாறு தினமும் செய்துவந்தால் சருமத்தில் அழுக்கு படிவதை தவிர்த்துவிடலாம். சருமத்திற்கு கூடுதல் அழகும் சேர்க்கலாம்.

* பொடுகு பிரச்சினையால் அவதிப்படு பவர்கள் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இதன் மூலம் முடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

* எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கொய்யா இலைகளை பேஸ்ட் செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வர வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தினமும் இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.
மாவட்ட செய்திகள்

சென்னை சேலையூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்



சென்னை சேலையூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்கள்.

மே 14, 2018, 05:00 AM

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள மப்பேடில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் 10 நாட்களுக்கு முன் புதிததாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இங்குள்ள மதுபான பாரில் குடிக்க வருபவர்கள் அருகில் உள்ள வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் வம்பு செய்வது, வீடுகளில் உள்ள பொருட்களை திருடிச்செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த மதுக்கடையை மூடவேண்டும் என அப்பகுதியினர் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தங்களிடம் மதுக்கடை அமைக்க அனுமதி எதுவும் வாங்கவில்லை என்றும், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக வாரவிடுமுறை நாட்கள் என்பதால் அதிகமானவர்கள் வந்து மது அருந்திவிட்டு குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று பகல் 12 மணிக்கு மதுபான கடை திறந்ததும் கடைக்குள் புகுந்தனர்.

மதுபான கடைக்குள் கற்களையும் வீசி எறிந்தனர். பின்னர் மதுபான பாரில் மது அருந்த வந்தவர்களை விரட்டியடித்து அங்கிருந்த மேஜை, நாற்காலி ஆகியவற்றை அடித்து நொறுக்கினார்கள். உணவு பொருட்களையும் தூக்கி எறிந்தனர். இதைக் கண்டதும் மதுக்கடை ஊழியர்கள் கடையை மூடிவிட்டு ஓடிவிட்டனர். பாரில் இருந்த ஊழியர்களும், மது அருந்த வந்தவர்களும் அலறியடித்து ஓடினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த மதுக்கடையை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் அப்பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமலிருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
தேசிய செய்திகள்

1 ஆண்டுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: வெளிநாட்டு பயணிகளுக்கு ரெயில்வே வாரியம் சலுகை




வெளிநாட்டு பயணிகள் இனி 1 ஆண்டுக்கு முன்பாகவே இந்திய ரெயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என ரெயில்வே வாரியம் கூறியுள்ளது.

மே 14, 2018, 04:30 AM

புதுடெல்லி,


இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் வாயிலாக தினமும் லட்சக்கணக்கான உள்நாட்டு பயணிகள் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதற்காக ரெயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது வெளிநாட்டு பயணிகள் 120 நாட்களுக்கு முன்பு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதை 365 நாட்களுக்கு, அதாவது 1 ஆண்டுக்கு முன்பாகவே பதிவு செய்ய அனுமதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வெளிநாட்டு பயணிகள் இனி 365 நாட்களுக்கு முன்பே இந்திய ரெயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பாஸ்போர்ட் நம்பர், சர்வதேச மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டை ரத்து செய்யும் பட்சத்தில் 50 சதவீத கட்டணம் மட்டுமே திரும்ப வழங்கப்படும். பயணத்தின்போது அசல் பாஸ்போர்ட், விசா வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

Saturday, May 12, 2018

KGMU doctors demand 8-hour duty a day, weekly off
TNN | Updated: May 10, 2018, 05:55 IST





LUCKNOW: Following the suicide attempt by a junior resident of King George's Medical University (KGMU) allegedly due to work pressure on Monday morning, the Resident Doctor's Association (RDA) on Wednesday asked the vice-chancellor to fix a maximum of 48 hours of work per week for every resident doctor and also grant them a weekly off.

In a letter to the VC, the RDA also pointed out that after every night duty, a resident should be given a full day off from work the next day. Besides, they asked for one stretch of duty to be limited to eight hours and in an emergency situation, to 12 hours.

They said the demands, put forward by the RDA on behalf of all students and resident doctors, were necessary to create a healthy environment at work and for good mental health of the residents.

"Similar guidelines were maintained under an earlier Supreme Court order and the central government's residency scheme. Even then, it is not followed. We usually work for 30 hours straight. There is practically no off unless we take leave, which is very difficult to get. This is when the abnormal amount of work pressure, harassment and exploitation make someone take a drastic step," said RDA general secretary Dr Neeraj Mishra.

The letter, emailed to the official address of the VC, also mentions that if during work, a senior tortures or physically or verbally abuses a junior, it should be considered ragging and a case of mental harassment of a resident. It should be dealt with in the strictest manner, it added.

ஜியோ போஸ்ட்பெய்டு: என்னவெல்லாம் இருக்கிறது?


இந்தியாவின் தொலைத்தொடர்பு சந்தையின் இன்னொரு பிரிவை நோக்கி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முதல் படியாக, புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அனைத்து ஜியோ திட்டங்களுடனும் கிடைக்கவுள்ள இலவச வாய்ஸ் கால்ஸ், SMS மற்றும் ஜியோ அப்ளிகேஷன்களுக்கு பிரீமியம் சந்தாக்கள் இந்த போஸ்ட்பெய்டு திட்டத்திலும் கிடைக்கவுள்ளன. இந்தத் திட்டத்திற்கான சந்தா மே 15லிருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தின் குறைந்தபட்ச திட்டம் ஒரு மாதத்திற்கு 309 ரூபாய்.

ஜியோ போஸ்ட்பெய்டில் வாடிக்கையாளர்கள் சிம்கார்டை ஆக்டிவேட் செய்தவுடன் அனைத்து வசதிகளும்; அதாவது வாய்ஸ் கால், இணைய சேவை, எஸ்எம்எஸ், சர்வதேச அழைப்புகள் ஆகியவை முன்கூடியே செயல்பாட்டில் இருக்கும்.

இதற்காக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிப் பயனர்களின் வேலைப்பளுவைக் குறைத்திருக்கின்றனர். வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்காகப் புதிய ரோமிங் வசதியையும், திட்டத்தையும் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எந்தச் சேவையையும் பெற்றுக்கொண்டு, ஜியோ சேவைக்கு மாறிக்கொள்ள முடியும். மேலும் இந்தத் திட்டத்தின் கூடுதல் அம்சமாகத் தானியங்கி பணம் செலுத்தும் முறையுடன் வருகிறது. இதில் ஒவ்வொரு மாதம் முடிவிலும் அந்த மாதத்தின் பில் இ-மெயில் முலம் அனுப்பப்படும்.

சர்வதேச அழைப்புகளுக்கு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு 50 பைசா சீனா, பிரான்ஸ், இத்தாலி, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றிற்கு நிமிடத்திற்கு 2 ரூபாய். ஹாங்காங், இந்தோனேசியா, மலேசியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு நிமிடத்திற்கு 3 ரூபாயாகவும் அமைக்கப்பட்டுள்ளது.



சர்வதேச ரோமிங் திட்டம் 575 ரூபாயிலிருந்து தொடங்குகிறது, இதில் அன்லிமிடெட் கால்ஸ், SMS மற்றும் 250 GB டேட்டா ஒரு நாளுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல 2,198 ரூபாய்க்கும், 5,751 ரூபாய்க்கும் புதிய டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ.

Death Sentence A Measure Of Social Necessity For Deterring Other Potential Offenders: MP HC Confirms Death Penalty In Child Rape- Murder Case [Read Judgment] | Live Law

Death Sentence A Measure Of Social Necessity For Deterring Other Potential Offenders: MP HC Confirms Death Penalty In Child Rape- Murder Case [Read Judgment] | Live Law: While confirming death sentence to two men accused of rape and murder of an 11-year-old girl, the Madhya Pradesh High Court observed that it is immensely appalled by the alarming increase in the recent incidents of child rapes

NEWS TODAY 24.4 2026