Monday, May 14, 2018

Soon, train to connect Tambaram with Jodhpur

Chennai: 13.05.2018 TOI

Indian Railways has announced a new weekly express train between Bhagat ki Kothi (Jodhpur) and Tambaram.

The inaugural fully air-conditioned Humsafar Express will leave Bhagat Ki Kothi at 1pm on May 14 and reach Tambaram at 10.00am on May 16. It has 16 AC-three tier coaches and will stop at Jodhpur, Phulera, Jaipur, Sawai Madhopur, Kota, Guna, Ashok Nagar, Bina, Bhopal, Itarsi, Nagpur, Balharshah, Warangal, Vijayawada, Gudur and Chennai Egmore.

Services will commence from Tambaram on May 18 and from Bhagat ki Kothi on May 23 with train no.14815 Bhagat Ki Kothi – Tambaram Humsafar weekly express leaving Bhagat Ki Kothi at 3.30pm on Wednesdays to reach Tambaram at 10.45am on Fridays. Train no.14816 Tambaram – Bhagat Ki Kothi will leave Tambaram at 7.15pm on Fridays and reach Bhagat Ki Kothi at 7.30pm on Sundays. Advance reservations will start on May 13. TNN
Pay traffic fine in 48 hours or have cop on your doorstep

A.Selvaraj@timesgroup.com

Chennai: 13.05.2018


The next time you are booked and fined for a traffic violation and fail to pay the required sum within 48 hours, you could see a posse of men or women in khaki knocking on your door armed with summons. The police plan to introduce the system from Sunday evening.

The cashless mode of paying up fines for traffic violations has become a hit with police data saying more than 50% of the offenders have completed the transaction online within 24 hours. “The feedback has been positive,” said a senior officer.

Now, with a 48-hour deadline set to pay fines, the police expect more to comply. “We are going a little slow in booking cases as our personnel have to adopt the new system,” said and officer.

A system to identify and track defaulters has been created. As soon as a field officer enters details of the violator, the data will feed into a computer at the control room and an e-challan will be spewed out in a few minutes. A police officer said, “The computer will prepare a list of defaulters who failed to pay their fine amount within 48 hours.”

The list will be generated every day and a deputy commissioner and an assistant commissioner in the traffic planning cell will keep tabs. The traffic planning cell will prepare summons to be served to all defaulters. Law and order personnel will be roped in to identify regular defaulters. “We are working in tandem with the transport department to bring in the default list along with their licensing data, so that more defaulters can be dealt with separately by suspending their licenses too for making frequent offences.”
தலப்பாகட்டி பிரியாணி வெற்றிக்கு பின்னால் இருக்கும் நாகசாமி.. 200 கோடி ரூபாய்க்கு அதிபதி..!

 Posted By: Prasanna VK Updated: Sunday, May 13, 2018, 16:24

l 8 வருடங்களுக்கு முன்பு பிரிட்டனில் ஒரு அலுவலகத்தில் வரவேற்பாளராக அதாவது receptionistஆக பணியாற்றி வந்த நாகசாமி தனபாலன் இன்று 200 கோடி ரூபாய் வர்த்தகத்தை செய்து வருகிறார். 35 வயதாகும் இவர் பிரிட்டனில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் போது, வெளிநாட்டில் சாதிப்பத்தை விட நமம் ஊரில் நம் மக்கள் முன் சாதிக்க வேண்டும் என வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு தாய் நாட்டுக்கு புறப்பட்டார். இப்போது துவங்கியது இந்த 200 கோடி ரூபாய் வர்த்தகத்தின் துவக்கம்.

2009ஆம் ஆண்டு.. 2009ஆம் ஆண்டு.. பல்வேறு சூழ்நிலைக்கு மத்தியில் நாகசாமியின் தந்தைக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது, இதனால் 2009ஆம் பிரிட்டனில் தான் செய்துகொண்டு இருந்த வரவேற்பாளர் வேலையை விட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். திண்டுக்கல் திண்டுக்கல் தனது சொந்த ஊரான திண்டுக்கல் வந்த உடன் சில நாட்களில் நாகசாமி தனது தாத்தா நடத்தி வரும் பிரியாணி கடையை நிர்வகிக்க துவங்கினார். தற்போது இதன் பெயர் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி. 40 கடைகள் 40 கடைகள் இந்த சிறிய பிரியாணி கடையை நிர்வாகம் செய்த சில நாட்களிலேயே நாகசாமி தனபாலன் சென்னைக்கு தனது கிளையை விரிவாக்கம் செய்தார்,

 வெளிநாட்டு அனுபவம், படிப்பு ஆகியவை இவருக்கு பெரிய அளவில் உதவியது. இதன் காரணமாக இன்று உலகளவில் 40 கிளை கொண்டு இயங்கி வருகிறது திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி. 1957இல் துவக்கம்.. 1957இல் துவக்கம்.. 1957ஆம் ஆண்டல் நாகசாமியின் தாத்தா திண்டுக்கல் பகுதியில் ஆனந்த விலாஸ் என்ற சிறிய ஹோட்டலை நடத்தி வந்தார். இப்போது அக்கவுண்டட் ஆக இருந்த நாகசாமியின் மனைவி சமைத்த பிரியாணி தனிப்பட்ட சுவையாக இருந்தது. இந்த சுவை மக்களுக்கு மிகவும் பிடித்துப்போன காரணத்தால், திண்டுக்கல் பகுதியை சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து ஆனந்த விலாஸ் கடையை தேடி வந்து சாப்பிட துவங்கினார்கள்.

இதுவே முக்கியமாக கொண்டு அடுத்தகட்ட திட்டத்தில் களமிறங்கினார் நாகசாமி. மக்கள் வரவேற்பு மக்கள் வரவேற்பு ஆனந்த விலாஸ் கடையில் பில் கவுன்டரில் எப்போது தலைப்பாகை கட்டிக்கொண்டு ஓருவர் பணத்தை வசூல் செய்வார், பிரியாணியின் சுவை மட்டுமல்லாமல் தலைப்பாகை மனிதரையும் மக்கள் கவனித்தனர். இதனால் ஆனந்த விலாஸ் பெயரை மறந்து மக்கள் தலைப்பாகட்டி பிரியாணி என அழைக்க துவங்கினர். கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 1957 முதல் 2009ஆம் ஆண்டு வரை தலைப்பாகட்டி பிராயாணி ஆன ஆனந்த விலாஸ் கடை ஒரேயொரு கிளையுடன் திண்டுக்கலில் மட்டும் இருந்து வந்த நிலையில், நாகசாமியின் சோதனை திட்டமாக கோயம்புத்தூரில் 2வது கிளை திறக்கப்பட்டது. ஆனால் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை.

விரிவாக்கம்
 இதன் பின் திண்டுக்கல் பகுதியிலேயே இன்னொரு கடையை திறக்கலாம் என கூறிய நாகசாமி, குடும்பம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. ஆனாலும் விடா முயற்சியுடன் பல தரப்பட்ட திட்டங்களை வகுத்தார் நாகசாமி. சென்னை விரிவாக்கம் சென்னை விரிவாக்கம் கோயம்புத்தூரில் தோல்வியை கண்ட நாகசாமி, பல குழப்பங்கள், பயத்தை கடந்து உறுதியான முடிவுடன், தனது தந்தைக்கு நம்பிக்கை அளித்து சென்னைக்கு திண்டுக்கல் தலைப்பாகட்டி பிராயாணியை கிளையை விரிவாக்கம் செய்தார். முதலீடு முதலீடு துவக்கத்திலேயே சென்னை அண்ணா நகர் பகுதியில் முதல் கிளையை அமைத்தார். நாகசாமி, இதற்கான முதலீட்டை தனது தந்தையுடன் சேர்த்து திரட்டினார்.

 வெற்றியின் ரகசியம்.. வெற்றியின் ரகசியம்.. கிளை விரிவாக்கம் துவக்கத்தில் இருந்தே நாகசாமி ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருந்தார், பணத்தைவிடவும் வாடிக்கையாளர்களை சம்பாதிப்பதே முதல் நோக்கமாக கொண்டு இருந்தார் நாகசாமி. உதவி உதவி சென்னை வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்ய நாகசாமி தமிழ்நாட்டையே கலக்கும் இரண்டு ஹோட்டல் நிறுவன தலைவர்களின் உதவியை நாடினார். ஆம், சரவண பவன் மற்றும் அடையார் ஆனந்த பவன் நிறுவனங்களின் மூலம் சென்னை வர்த்தகம் மற்றும் கிளையை விரிவாக்கம் செய்தார் நாகசாமி. குடும்ப வர்த்தகம் குடும்ப வர்த்தகம் பொதுவாக தொழிற்துறை, தொழில்நுட்பம் மூலம் பல வகையில் வளர்ந்துள்ள மக்கள் மத்தியில் வர்த்தகம் செய்வது மிகவும் கடினம் தான். இக்காலக்கட்டத்தில் தந்தை வர்த்தகத்தை மகன் புதிய பாதையில் கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் உள்ளது. இப்படி அடுத்த தலைமுறையிடம் மாறிய வர்த்தகத்தில் 50 சதவீத வர்த்தகங்கள் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. இதில் நாகசாமி வெற்றி அடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.


 மண் வாசனை இந்தியாவில் பல வகையான பிரியாணிகள் உண்டு லக்னாவி பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, கொல்கத்தா பிரியாணி என பல உள்ளது. இவை அனைத்திற்கும் ஒரு தனிப்பட்ட சுவை மற்றும் சிறப்பு உள்ளது. அதேபோல் தலப்பாகட்டி பிரியாணிக்கும் ஒரு தனிப்பட்ட சுவை இருக்கும், ஆதாவது நமம் ஊர் ருசி வட நாட்டு வாசம் இல்லாமல் தமிழ்நாட்டு சுவையை தொட்டு இருக்கும் தலப்பாகட்டி பிரியாணி. இதுவே மக்களை ஈர்க்க முக்கிய காரணமாக இருக்கிறது. வளர்ச்சியை நோக்கி பயணம் வளர்ச்சியை நோக்கி பயணம் சென்னை வர்த்தகம் வெற்றிப்பெற்ற நிலையில், அடுத்த கட்டத்திற்கு வர்த்தகத்தை நகர்த்த நாகசாமி தனது தாய்வழி மாமாக்களான சுப்பராஜ் ராமசாமி மற்றும் ரவி ஆகியோரை தனது வர்த்தகத்தில் சேர்த்துக்கொண்டார்

நாகசாமி. பிராண்டு போட்டி.. பிராண்டு போட்டி.. திண்டுக்கல் தலப்பாகட்டி வெற்றியை தொடர்ந்து இதற்கு போட்டியாக சென்னையில் தலப்பாகட்டு மற்றும் ராயல் தலப்பாகட்டு என பல பெயர்களின் உணவகங்கள் திறக்கப்பட்டது. பல பிரச்சனைகளுக்கு பின் தனது பிராண்டை மீட்டார் நாகசாமி. இதற்காக பல வழக்குகளையும் சந்தித்தார். இதன் பின் இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் தனது திண்டுக்கல் தலப்பாகட்டி பெயரை முறையாக பதிவு செய்தார். படிப்படியாக மாற்றங்கள் படிப்படியாக மாற்றங்கள் விரிவாக்கம் மற்றும் வெற்றியை தொடர்ந்து கிளையின் இன்டிரீயர் ஆகியவற்றையும் மாற்றி புதிய வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்த்தார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திண்டுக்கலில் இருக்கு கடை பல ஆண்டு காலமாக குடிசையிலேயே இருந்தது அதனை தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்தார் நாகசாமி.

பிரியாணி வகைகள் பிரியாணி வகைகள் மட்டன் பிரியாணிக்கு பெயர் போன் திண்டுக்கல் தலப்பாகட்டி தற்போது சிக்கன், பன்னீர், காளான் பிரியாணி என பல வகையான பிரியாணிகளை வழங்கி வருகிறது. இதேபோல் பல தரப்பட்ட தென் இந்திய உணவுகள் பார்பிக் உணவுகள் என பலவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. 40 கிளைகள் 40 கிளைகள் கடந்த 8 வருடத்தில் நாகசாமியின் நிர்வாகத்திற்கு கீழ் வெறும் 2 கிளையாக இருந்த ஆனந்த விலாஸ் தற்போது உலகளவில் சுமார் 40 கிளைகளாக விரிவாக்கம் அனைத்துள்ளது. இந்தியாவை தாண்டி தற்போது பாரீஸ், துபாய், கோலாலம்பூர் மற்றும் கலிபோர்னியா ஆகிய நாடுகளில் கிளையை அமைந்துள்ளது.

அடுத்தகட்டமாக சிட்னி, அபுதாபி, மஸ்கட் ஆகிய பகுதிகளில் கிளையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார் நாகசாமி. இந்தியாவில் அடுத்தக்கட்டமாக பெரிய நகரங்களை தாண்டி, 2வது மற்றும் 3ஆம் தர நகரங்களில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார் நாகசாமி. ஆன்லைன் வர்த்தகம் ஆன்லைன் வர்த்தகம் இந்த 8 வருடத்தில் நாகசாமி ஆன்லைன் வர்த்தகத்திலும் இறங்கியுள்ளார். சென்னையில் மட்டுமே ஆன்லைன் சேவை அளிக்கப்படும் நிலையில் இதில் மாதம் 1.5-2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பெறுகிறது திண்டுக்கல் தலப்பாகட்டி. 200 கோடி ரூபாய் 200 கோடி ரூபாய் இன்றைய நிலையில், திண்டுக்கல் தலப்பாகட்டி நிறுவனத்தின் மொத்த மதிப்பு 200 கோடி ரூபாய். இதுவெறும் 8 வருடத்தில் நடந்த வளர்ச்சி என்பது தான் வியப்பாக உள்ளது. தமிழ் குட்ரிட்டன்ஸ் சார்பாக நாகசாமி தனபாலன் அவர்களுக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற வாழ்த்துக்கள். விடா முயற்சி விடா முயற்சி இந்த துறை, அந்த துறை என்று இல்லை. விடா முயற்சி மற்றும் சரியான திட்டமிடல் இருந்தால் போது அனைவரும் இதுப்போது வெற்றியை அடைய முடியும்.

Read more at: https://tamil.goodreturns.in/news/2017/07/23/nagasamy-owns-south-india-famous-biriyani-shop-worth-200-crore/articlecontent-pf38695-008475.html
காலம் கனிய காத்திருக்கிறாரா? காலாவை ஓட்ட காய் நகர்த்துகிறாரா?: ரஜினியைச் சுழற்றும் சர்ச்சைகள்!

Published : 13 May 2018 09:43 IST

குள.சண்முகசுந்தரம்



ரஜினி | கோப்புப் படம்: ஆர்.ரகு.

தன்னுடைய ‘தனிக்காட்டு’ ராஜா படத்தில் ரஜினிக்கு அப்பாவாக வரும் மேஜர் சுந்தர்ராஜன், “நீ தேர்ந்தெடுத்திருக்கிறது காந்தி வழியா... சுபாஷ் சந்திரபோஸ் வழியா?” என்று மகன் ரஜினியைப் பார்த்துக் கேட்பார். அதற்கு, “நான் யார் வழியிலும் போக விரும்பல... நான் போறதே ஒரு வழியா இருக்கணும்னு நினைக்கிறேன்...” என்பார் ரஜினி. அநேகமாக, முதன்முதலில் ரஜினி பேசிய அரசியல் கலப்பு வசனம் இதுவாகத்தான் இருக்கும். ‘தனிக்காட்டு ராஜா’ வெளிவந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னமும் தன் வழி எதுவென்று ரஜினிக்கும் புலப்படவில்லை; அவரை அறிந்தவர்களாலும் அந்த வழியை அறிய முடியவில்லை!

கட்டாயத்துக்கு ஆளான ரஜினி

தேர்தல் சமயத்தில், தான் கொடுத்த கடைசி நேர ‘வாய்ஸ்’கள் கலகலத்துப்போனதால், சிறிது காலம் அரசியல் பேசாமல் இருந்தார் ரஜினி. அந்தக் காலகட்டத்தில்தான் அவரது ‘கோச்சடையான்,’ ‘லிங்கா’, ‘கபாலி’ படங்கள் வெளிவந்தன. ‘கோச்சடையான்’ எடுபடாமல் போன ஃபார்முலா என்பதை ரஜினியே ஒப்புக்கொண்டார். எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடாததால், ‘லிங்கா’ படத்தின் விநியோகஸ்தர்கள் பலரும் நிதி கேட்டு ரஜினி வீட்டுக்குப் படையெடுத்தார்கள். பஞ்சாயத்துப் பேசி அவர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளானார் ரஜினி. ‘கபாலி’ தொடர்பாகவும் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை.

இதோ, ‘காலா’ வருகிறது. இப்போதும் அமைதியாக இருந்தால் மறுபடியும் பஞ்சாயத்துப் பேச வேண்டிய நிலை வந்துவிடும் என ரஜினி பயந்தாரோ என்னவோ, முன்கூட்டியே அரசியல் வசனம் பேச ஆரம்பித்துவிட்டார். “போர் வரட்டும் பார்க்கலாம்” என்று முதலில் சூசகமாய்ச் சொன்னார். கடந்த ஆண்டின் இறுதி நாளில், “நான் அரசியலுக்கு வருவேன்... சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவேன்” என்று சொன்னார். இந்த நிமிடம் வரை, ‘நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என்று ரஜினியால் அறிவிக்க முடியவில்லை!

ஆனால், அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ, அவரது அரசியல் வசனங்கள், ‘காலா’வை வெற்றிமுகம் நோக்கி இழுக்கத் தொடங்கிவிட்டன. கூடவே, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இன்னொரு படத்திற்கும் கோடிகளில் சம்பளம் பேசி ‘ஸ்டார்ட்... கேமரா... ஆக்‌ஷன்!’ ஆகிவிட்டார் ரஜினி. அவரது முகாம் எதிர்பார்த்ததும் இந்த ரிசல்ட்டைத்தானே!

இனி, வந்தா என்ன வராட்டா என்ன?

இதையெல்லாம் சுட்டிக்காட்டும் ரஜினியால் வாழ்க்கையைத் தொலைத்த அவரது ஆரம்ப காலத்து ரசிகர்கள், “தன்னுடைய ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில், ‘நாற்பது ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை இது’ எனத் தன்னைப் பற்றி ரஜினி பெருமையாகக் குறிப்பிட்டார். கடந்த 20 ஆண்டுகளாக அந்தக் குதிரை இப்படியேதான் அரசியல் வசனம் பேசி ஓடிக்கொண்டிருக்கிறது. எங்களுக்குத் தெரிந்தவரை அது அவ்வளவு சீக்கிரம் அரசியலுக்கு வரப்போவதில்லை. அப்படியே வந்தாலும் அதனால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்கப்போவதுமில்லை”என்கிறார்கள்.

மூச்சுக்கு முந்நூறு தரம், “மொதல்ல அப்பா - அம்மா, குடும்பத்தைப் பாருங்க” என்கிறார் ரஜினி. ஆனால், என்றைக்காவது அவர் அரசியலுக்கு வருவார், நமக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைத்து ரசிகர்கள் பல ஆயிரம் பேர் தங்களது வாழ்க்கையைத் தரிசாக்கி நிற்கிறார்கள். ‘ரஜினி இனி அரசியலுக்கு வந்தா என்ன... வராட்டா என்ன?’ என்று விரக்தியின் விளிம்பில் நிற்கும் இவர்களை வைத்துக்கொண்டு தனது அடுத்தடுத்த படங்களை ரஜினி ஓட்ட முடியாது.

இதை நினைத்துத்தானோ என்னவோ, பழையவர்களை ஓரங்கட்டிவிட்டு புதியவர்களை முன்வரிசைக்குக் கொண்டுவருகிறார்கள். ஏனென்றால், ரஜினி பேசும் சினிமா வசனத்தை நிஜமென்று நம்பி விசிலடிக்கவும் பாலாபிஷேகம் செய்யவும் அவர்களுக்குப் புதிதாக ஒரு கூட்டம் தேவைப்படுகிறது. அதற்காக ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணாவிலிருந்தே இந்த ஓரங்கட்டல் தொடங்கிவிட்டது. அரசியல் அறிவிப்புகள் வந்த நேரத்தில் சத்யநாராயணா, ராகவேந்திரா மண்டபத்தில் இல்லை. இதுபற்றி வதந்திகள் பரவியதும், அடுத்தடுத்த நாட்களில் பேருக்கு அவரையும் அழைத்து உட்காரவைத்தார்கள். ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் பத்தோடு பதினொன்றாய்வந்து, நின்றபடியே எல்.இ.டி. திரையில் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுப் போனார் சத்தி!

அரசியலுக்கு சாதி பார்க்கிறார்கள்!

ரஜினியைவிட அவரது ரசிகர்களை நன்கு அறிந்தவர் சத்யநாராயணா. அவருக்கு நெருக்கமாக இருந்த ரசிகர் மன்றத்துப் பிள்ளைகளில் பெரும் பகுதியினர் இப்போது ஒதுக்கப்பட்டு நிற்கிறார்கள். இதுகுறித்துப் பேசிய தென்மாவட்ட முன்னாள் ரசிகர் மன்றத் தலைவர் ஒருவர், “ரசிகனாக இருந்தால் சாதி, மதம், பண வசதி இதெல்லாம் பார்க்க மாட்டார்கள்; எப்படியாவது கூட்டம்கூட்டிப் படத்தை ஓட்டினால் போதும். அதுவே, இப்போது அரசியல் என்றதும் சாதி பார்க்கிறார்கள். உதாரணத்துக்கு, ராமநாதபுரத்தில் ஆரம்பத்திலிருந்தே ரஜினி மன்றத்தைக் கட்டிக்காத்தவர் பாலநமச்சி. அவரை ஓரங்கட்டிவிட்டு, புதிதாக ஒருவரை மாவட்டப் பொறுப்பில் நியமிக்கிறார்கள். கேட்டால், ‘அது முக்குலத்தோர் மாவட்டம், அங்கே அந்த சாதிக்குத்தான் முக்கியத்துவம்’ என்கிறார்கள்.

தமிழகத்தைத் தலைகீழாக மாற்றவே அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் ரஜினி, எல்லா அரசியல் கட்சிகளும் செய்யும் அதே சாதி அரசியலைத்தானே தானும் முன்னெடுக்கிறார். அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் நிலையில், ‘வேங்கையன் மகன் வந்துருக்கேன்’ என்று வசனம் பேசுகிறார். வேங்கையன் யாருடைய அடையாளத்தை நினைவூட்ட? அப்படியானால் தன்னை யாருடைய பிம்பமாகக் காட்ட நினைக்கிறார் ரஜினி? ‘தென்னக நதிகளை இணைப்பதுதான் எனது கனவு’ என்று சொல்லும் இவர், நதிகள் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன? அதற்காக இவர் எடுத்த அடுத்தகட்ட முயற்சி என்ன? ‘நதிகளை இணைத்துவிட்டால், அடுத்த நாளே நான் கண்ணை முடினாலும் பரவாயில்லை’ என்று இப்போது டயலாக் பேசும் நீங்கள், மோடி உங்களைத் தேடிவந்தபோது இதுபற்றிப் பேசி ஒரு தீர்வை அறிவிக்க வைத்திருந்தால், நாடே உங்களைக் கொண்டாடியிருக்குமே!” என்று ஆதங்கப்பட்டார்.

இதுதான் ரஜினியின் ஸ்டைல்!

தொடர்ந்து பேசிய அவர், “இப்படித்தான், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு ஒரு ஏழை ஜோடிக்கு திருமணம் செய்துவைப்பேன் என்றார் ரஜினி. மூன்று ஆண்டுகள் மட்டும்தான் அதைச் செய்தார். அத்தோடு அதை மறந்துவிட்டார். இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதாகச் சொன்னார். அதுவும் மூன்று ஆண்டுதான் நடந்தது. ‘புதிதாக மன்றங்களைத் தொடங்காதே’ என்பார். ஆனால், ராகவேந்திரா மண்டபத்துக்குப் போனால், புதிய மன்றத்துக்கு தாராளமாய்ப் பதிவெண் கொடுப்பார்கள். இப்படி, ஆதியிலிருந்தே, சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றும்தான் ரஜினியின் ஸ்டைல்; சொல்வதைச் செய்வது இல்லை” என்று சொன்னார்.

எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினி, ‘தனக்காகப் பெண் வீட்டில் பேசி தனது திருமணம் நடக்கக் காரணமாக இருந்ததே எம்.ஜி.ஆர்.தான்’ என்று ஒரு வசனத்தையும் உதிர்த்தார். அதுவும் இப்போது அவரது ரசிகர்களாலேயே விமர்சிக்கப்படுகிறது. இதுகுறித்தும் பேசிய தென் மாவட்ட மூத்த ரசிகர்கள், “ ‘சங்கர் சலீம் சைமன்’ படத்தில் நடித்த விஜயகுமாரும் மஞ்சுளாவும் பிற்பாடு திருமணம் செய்து கொண்டார்கள். அதேபோல், இணைந்து நடித்த இன்னொரு ஜோடியும் திருமணம் செய்துகொள்ள நினைத்தார்கள். கடும் நெருக்கடி கொடுத்து அந்தத் திருமணத்தைத் தடுத்தது யார்?

மறைக்கிறாரா மறந்துவிட்டாரா?

எம்ஜிஆர் அதிகாரத்தில் இருந்த அந்தச் சமயத்தில் ரஜினியின் உடல் நிலையைப் பற்றி தாறுமாறாகத் தகவல் பரப்பியதன் பின்னணியில் இருந்தது யார்? ‘பில்லா’வில் ஜெயலலிதாவை ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிடாமல் தடுத்த சக்தி எது? இதையெல்லாம் ரஜினி மறைக்கிறாரா அல்லது மறந்துவிட்டாரா? நேர்மையுடன் அரசியலுக்கு வருபவராக இருந்தால், இதையெல்லாம் அந்தக் கூட்டத்தில் சொல்லியிருக்க வேண்டும்.

இப்படி, முரண்பாடுகளின் மொத்த உருவமாய் நிற்கும் ரஜினிதான், அரசியலுக்கு வந்து தமிழகத்தை தலைநிமிர்த்தப்போவதாகச் சொல்கிறார். அவரைப் பொறுத்தவரை ரூ.360 கோடிக்கு படத்தை விற்று முடித்துவிட்டார்கள். அதை ஓட்டி முடிப்பதற்கு சில விளம்பர உத்திகள் தேவைப்படுகின்றன. அதைத் தான் இப்போது அற்புதமாய் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று குமுறினார்கள்.

“பணம் சம்பாதிக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு; ஆயிரம் தொழில் இருக்கு... அதுக்கு இந்தப் புனிதமான அரசியலைப் பயன்படுத்தாதீங்க...” ‘அண்ணாமலை’ படத்தில் ரஜினி பேசிய வசனம் அரசியலுக்கு வரும் அனைவருக்கும் பொருந்தும்தானே!

(முழு கட்டுரையையும் படிக்க நாளை

‘காமதேனு’ வாங்குங்கள்…)

- குள.சண்முகசுந்தரம், தொடர்புக்கு: shanmugasundaram.kl@kamadenu.in
காலா ஓடியதும் ரஜினியும் ஓடிவிடுவார்!:அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Published : 13 May 2018 09:44 IST
 
டி.எல்.சஞ்சீவிகுமார்
 


தினகரன், ரஜினி, கமல் தொடங்கி ஆடிட்டர் குருமூர்த்தி வரையில் எவரையும் விட்டுவைக்காமல் பட்டாசாக வெடிக்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். சமீபத்திய வெடி ரஜினிக்கு!

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து..?

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஜனநாயக நாடு இது. ஆனால், அவர்களை அங்கீகாரம் செய்ய வேண்டியது மக்கள்தான். ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவரை உசுப்பேற்றி விடுவதற்கென்றே ஒரு கும்பல் இருக்கிறது. அவர்கள் மூலம் ரஜினி அரசியலுக்கு வந்தாலும், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். சிலைக்கு ரஜினி மாலை அணிவித்தார். ‘எனக்குத் திருமணத்துக்குப் பெண் பார்த்ததே எம்.ஜி.ஆர். தான்’ என்றார். ஒருவேளை, எம்.ஜி.ஆரை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறாரா ரஜினி?

ஆமாம், கூடவே ‘எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொண்டுவருவோம்’ என்றும் சொல்கிறார். வருவோர் போவோர் எல்லாம் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்த முடியாது. ரஜினி அரசியலுக்கு வந்தால், தன்னுடைய ஆட்சியைக் கொண்டு வருவேன் என்று சொன்னால் அதில் நியாயம் இருக்கிறது. அதை விடுத்து, எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பது அவரது இயலாமையையும் தன்மீதான நம்பிக்கையின்மையையும்தான் காட்டுகிறது.

ஆடிட்டர் குருமூர்த்தி, ‘அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்’ என்று சொல்லியிருக்கிறார், அப்படியானால் பாஜக-தான் பின்னிருந்து ரஜினியை இயக்குகிறதா?

முதலில் தமிழக அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை. அரசியல் வெற்றிடம் என்பதே ஒரு மாயை. அதுபோலவே ரஜினியை யார் இயக்கினாலும், அதுபற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நீந்தத் தெரிந்தவர்களுக்கு ஆழத்தைப் பற்றிய பயம் இருக்காது.

(இன்னும் ஏராளமான கேள்விகள்...

முழு பேட்டியும் படிக்க... ‘காமதேனு’!)
13 வயது சிறுவனுக்கு 23 வயது பெண்ணுடன் திருமணம்: பெற்ற தாயே நடத்தி வைத்த அவலம்

Published : 13 May 2018 12:41 IST



படம்: சிறப்பு ஏற்பாடு

ஆந்திர மாநிலத்தில் 13 வயது சிறுவனுக்கும் 23 வயது இளம் பெண்ணுக்கு நடந்த ரகசிய திருமணம் புகைப்பட்டத்தால் அம்பலமானது. இது குறித்து தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்தச் சிறுவனின் தாய் நோயுற்று இருக்கிறார். தனக்குப் பின் தனது மகனை யாரும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என நினைத்ததால் மகனுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார். சொந்த பந்தகள் வாயிலாக 23 வயது பெண் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளார்.

தாயின் முழு சம்மதத்தோடு திருமணமும் நடந்துள்ளது. திருமண நிகழ்வில் உறவினர்களில் யாரோ ஒருவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக போலீஸார் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போலீஸ் விசாரணை குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களும், பெண் வீட்டாரும் தலைமறைவாகிவிட்டனர். போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர். இதற்கிடையில் துணை ஆட்சியர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
கொடைக்கானலில் கூட்டம் : சுற்றுலா பயணியர் ஏமாற்றம்

Added : மே 14, 2018 02:51

கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று சுற்றுலா பயணியர் அதிகளவில் குவிந்ததால், இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல், பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.கோடை விடுமுறையை தொடர்ந்து, கொடைக்கானலில் பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஸ்தம்பித்தது. சுற்றுலா இடங்களுக்கு செல்லும் அப்சர்வேட்டரி ரோட்டில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல இடங்களை பார்க்க முடியாமல், பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.'கூட்டத்தை முறைப்படுத்த, போக்குவரத்து போலீசாருடன், தன்னார்வ அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும். கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்' என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

NEWS TODAY 24.4 2026