Monday, May 14, 2018


ஏற்காட்டில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்
 
தினகரன் 17 hrs ago


ஏற்காட்டில்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் விடுமுறை தினம் என்பதால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய மலர் கண்காட்சியை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் பாதிலேயே திரும்பியதாக தெரிவித்தனர்.
கேரள மாணவிக்கு வலுக்கட்டாயமாக டி.சி!’ - பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சுற்றும் அடுத்த சர்ச்சை
 
விகடன் 12 hrs ago

 

கோவை பாரதியார் பல்கலைகழக, உளவியல் துறை தலைவர் தகாத வார்த்தைகளால் பேசியதாக, மாணவி ஒருவர் புகார் கூறியுள்ளார்.

கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், முதுகலை உளவியல் அறிவியல் முதலாமாண்டு படித்து வந்தார். பல்கலைகழகத்தின் பெண்கள் விடுதியில் தங்கி, தனது படிப்பை ஹரிதா தொடர்ந்து வந்தார். இந்நிலையில், தன்னைத் தகாத வார்த்தைகளில் திட்டி, வலுக்கட்டாயமாக டி.சி வாங்க வைத்ததாக துறைத் தலைவர் வேலாயுதம் மீது அடுக்கடுக்காக புகார்களை முன்வைத்துள்ளார் ஹரிதா.

இதுகுறித்து ஹரிதாவிடம் பேசினோம். "கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை மோசமானது. இதையடுத்து,அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென விடுதி காப்பாளர் பிரேமாவிடம் கேட்டோம். ஆனால்,மருத்துவமனை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்ததுடன், பிரேமா விடுதியையும் பூட்டிவிட்டார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால், மீண்டும் ஹாஸ்டலுக்கு வந்தபோது, கதவை மூடிவிட்டனர். நாங்கள் எவ்வளவு முயற்சித்தும், கதவை திறக்கவில்லை. இரவு முழுவதும், நாங்கள் வெளியேதான் இருந்தோம். பின்னர், விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் எங்களது துறைத் தலைவர் வேலாயுதம் ஆகியோர் சக மாணவிகள் முன்னிலையில் வகுப்பறையில் என்னை அவமானப்படுத்தினர். குறிப்பாக, துறைத் தலைவர் வேலாயுதம், என்னை அவரது அறைக்கு அழைத்து சென்று, அறையினை பூட்டி, மிகவும் ஆபாசமாக தகாத வார்த்தைகளில் பேசினார். மேலும், வலுக்கட்டாயமாக மாற்று சான்றிதழ் அளித்து, பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றிவிட்டார்" என்றார்.

இந்நிலையில், வேலாயுதம், விடுதி காப்பாளர் பிரேமா மற்றும் தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக ஆளுநர், காவல்துறை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் ஆகியோரிடம் ஹரிதா புகார் அளித்தார். மேலும், கோவை வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, வடவள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி ஹரிதா புகார் அளித்துள்ள விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ், பல்கலைகழக துணை வேந்தருக்கு லஞ்சம் பெற்று தந்த புகாரில், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புழுதிப் புயல்: 2 தனியார் விமானங்கள் ரத்து
 
தினகரன் 37 mins ago

  சென்னை: புழுதிப் புயல் காரணமாக டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் 2 தனியார் நிறுவன விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் இண்டிகோ விமானம் 5 மணி நேரம் தாமதமாக வரவுள்ளது. சென்னையில் இருந்து டெல்லி மற்றும் அந்தமானுக்கு புறப்படும் 2 விமானங்கள் 5 மணி நேரம் தாமதமாக புறப்படவுள்ளது.

Recovery After Retrospective Pay Revision Post-Retirement/Superannuation Not Permissible Under Law: Bombay HC [Read Judgment] | Live Law

Recovery After Retrospective Pay Revision Post-Retirement/Superannuation Not Permissible Under Law: Bombay HC [Read Judgment] | Live Law: The Bombay High Court has held that recovery of money after retrospective pay revision after retirement or superannuation is not permissible in law and granted relief to a retired teacher of a municipal school.

Making Of Fake Document Is Different Than Causing It To Be Made; Only Maker Can Be Charged With Forgery: SC [Read Judgment] | Live Law

Making Of Fake Document Is Different Than Causing It To Be Made; Only Maker Can Be Charged With Forgery: SC [Read Judgment] | Live Law: It is imperative that a false document is made and the accused person is the maker of the same, otherwise the accused person is not liable for the offence of forgery, the bench said.

பார்மஸி படிப்புகளில் ஆர்வம்காட்டும் மாணவர்கள்!


அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடமிருந்து (ஏஐசிடிஇ) பொறியியல், கட்டடக்கலை, மேலாண்மை மற்றும் ஹோட்டல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங் போன்ற துறைகளுக்கு இந்தாண்டு ஒப்புதல் பெற்ற கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்தத் துறைகளில் ஒவ்வொன்றிலும், பல கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவில்லை மற்றும் இடங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது.

கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் 35,52,199 இடங்கள் இருந்தன, ஆனால், இந்தாண்டு 32,62,262 இடங்கள் மட்டுமே உள்ளன. 239 கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதற்கு ஒப்புதல் பெற்றுள்ளன.

ஏஐசிடிஇ தலைவர் அனில் டி.சஹஸ்ரபுத்தே, கடந்த வாரம் சென்னையில் இருந்தபோது, தமிழகத்துக்குத் தேவையான தரவுகள் தொகுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். ஆனால், உயர் கல்வி அமைச்சர் அன்பழகன், இந்தாண்டு 567 கல்லூரிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால், கடந்தாண்டு 587 கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்றது. 2017-18ஆம் ஆண்டில் 2,67,651 இடங்களில் 1,52,704 இடங்கள் நிரப்பப்பட்டன எனத் தெரிவித்தார்.

டிப்ளோமா, இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் பாடத் துறைகளை நீக்குவதற்கு தமிழ்நாட்டிலிருந்து 94 கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளன. சில கல்வி நிறுவனங்கள் பல பாடத் துறைகளை மூடுவதற்கு முயன்று வருகின்றன. அதாவது, சிவில் இன்ஜினீயரிங், ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங், (யுஜி) எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் (டிப்ளோமா) மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் போன்ற பாடத் துறைகளை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளன. பெரும்பாலான கல்லூரிகளில் முதுகலை படிப்புகள் நீக்கப்பட்டன.

தற்போது, மருந்தகப் படிப்புகளில் மாணவர்கள் அதிகளவில் விருப்பம் காட்டுகின்றனர். இந்தக் கல்வியாண்டில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், 1,055 கல்லூரிகளுக்கு டிப்ளோமா படிப்புகள் மற்றும் 1,204 கல்லூரிகளுக்கு டிகிரி படிப்புகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 338 கல்லூரிகளில் மருந்தகத்தில் டிப்ளோமா படிப்புகளுக்கும், கூடுதலாக 212 கல்லூரிகளில் டிகிரி படிப்புகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பார்மஸி கவுன்சில் பதிவாளர் டி.இளங்கோ, “மருந்தகப் படிப்பு மாணவர்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதால், மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் ஆர்வம்காட்டுவதில்லை. மருந்தகப் படிப்புகள் வழங்கும் தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் 47 முதல் 65 வரை அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Give grace marks to NEET Tamil candidates’ 

Staff Reporter 

 
COIMBATORE, May 13, 2018 00:00 IST




G. Ramakrishnan

The Central Board of Secondary Education (CBSE) should grant grace marks to candidates who took the National Eligibility cum Entrance Test (NEET) in Tamil, CPI(M) Polit Bureau member G. Ramakrishnan has said.

Addressing reporters in Coimbatore on Saturday, he claimed that the Tamil paper had 68 questions that were wrong, including some that were poorly translated, causing confusion among candidates.

Therefore, the CBSE should grant grace marks, he said, pointing out that mistakes had recurred despite the CBSE’s assurance to the Madras High Court last year that it would ensure error-free question papers for 2018.

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...