Monday, May 14, 2018

PG girl student alleges use of abusive words by Department head

A PG girl student at Bharathiyar University alleges department head and hostel officials used foul language when she questioned their refusal to provide an ambulance for her sick room mate.

Published: 14th May 2018 12:45 AM | Last Updated: 
By PTI

COIMBATORE: A PG girl student at Bharathiyar University has lodged a complaint with the Tamil Nadu Governor against her department head and hostel officials, alleging they used foul language when she questioned their refusal to provide an ambulance for her sick room mate.

The girl, hailing from Malappuram in Kerala, also sent a complaint to the DGP, state human rights commission and Kerala Chief Minister over the incident, which occurred about six months back, police said.

The Governor is the chancellor of state run universities.

The post graduate girl student alleged that the pyschology department head Velayutham used abusive language and asked her to leave the university when she questioned the woman hostel warden's decision on November 14 last year not to provide ambulance to take her sick room mate to a hospital.

Both he and hostel head Dharmaraj asked her to stand up on the bench in class, she said.

Velayutham then called her to his room, locked the door from inside and again used foul language, she said.

Police said they are investigating the matter and if there was a prima facie, a case would be registered.
மனமே நலமா? - கனவு: புதிரா, தொந்தரவா?

Published : 25 Feb 2017 11:01 IST


டாக்டர் ஆ. காட்சன்
 



‘கனவு, ஆழ்மனதுக்கு நம்மை இட்டுச் செல்ல உதவும் ராஜபாதை’ என்று சிக்மண்ட் ஃபிராய்ட் கூறிய ‘கனவுகளின் விளக்கம்’ (The Interpretation of Dreams) என்ற புத்தகம் 1900-ல் வெளியானாலும், இன்றுவரையிலும் உலகை உலுக்கிய முக்கியப் புத்தகங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கனவுத் தொழிற்சாலை

கனவுகள் என்பது மும்முரமான மனத் தொழிற்சாலையின் தயாரிப்புதான். நம் தூக்கத்தில் மாறிமாறி வரும் NREM (Non-rapid eye movement),REM (Rapid eye movement) என்ற இரண்டு தூக்க நிலைகளில் வரும் கனவுகள் வெவ்வேறு தன்மையைக் கொண்டவை.

முதல் வகைத் தூக்கத்தில் வரும் கனவுகளை நம்மால் திரும்பவும் நினைவுபடுத்திப் பார்க்க முடியாது. ஆனால், இரண்டாம் வகை தூக்க நிலையில் வரும் கனவுகளைக் காலையில் நினைவுபடுத்திப் பார்க்க முடியும். ஆனால், அப்படி நினைவில் இருக்கும் கனவுக் காட்சிகளின் படிமங்கள் சூரியனைக் கண்ட பனி போல மெல்ல மெல்ல நம் நினைவு அடுக்குகளிலிருந்து மறைந்துவிடும். எனவேதான் காலையில் ஒரு கனவை ஞாபகப்படுத்தி எழுதி வைக்காவிட்டால், மாலையில் அதன் ஒரு துளியைக்கூட மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்க்க முடியாது.

எப்படி உருவாகிறது?

கனவில் வரும் காட்சிகள், சம்பவங்கள் பெரும்பாலும் நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் படிமங்களிலிருந்தே உருவாகின்றன. இல்லையென்றால் நம் ஆழ்மனதில் அடக்கி வைக்கப்பட்டுள்ள ஆசைகள், வெளிப்படுத்த முடியாத எண்ணங்கள், அப்படியே வெளிப்படாமல் வேறு உருவத்தைப் பெற்றுக் கனவாக வெளிப்படுகின்றன. இப்படி உருமாறி வருவதால்தான் அதன் நேரடி அர்த்தத்தை எளிதில் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

மூல வியாதியால் அவதிப்படும் ஒருவர், குதிரைப் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றிபெறுவது போலக் கனவு காணலாம். உட்காரும்போது வலிக்கவே கூடாது என்ற அவருடைய ஆழ்மனதின் ஆசை கனவின் மூலமாக நிறைவேறுவதாக இதைப் புரிந்துகொள்ளலாம்.

நமக்கு முக்கியமில்லாத, என்றோ நடந்த சில சம்பவங்கள், நம் கவனத்தில்கூட வராமல் போன அனுபவங்கள்கூடக் கனவில் முக்கியத்துவம் பெற்றவையாக வெளிப்படுவதுதான் ஆச்சரியமான ஒன்று. என்றோ ஒரு நாள் பேருந்தில் செல்லும்போது கடந்து சென்ற கட்டிடம்கூட, கனவில் முக்கியப் களமாகத் தோன்றலாம்.

எப்படி வெளிப்படுகிறது?

கனவுகள் வெளிப்படும் தன்மைகள் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சில வேளைகளில் பல நிகழ்வுகளின் ஒரு சில காட்சி படிமங்கள் ஒன்றாக அடுக்கப்பட்டு ஒரு கனவு நிகழ்வாக வெளிப்படலாம். ஒரு இயக்குநர் எடுத்த பல படங்களிலிருந்து ஆங்காங்கே சில காட்சிகளை மட்டும் வெட்டி எடுத்து ஒன்றாகக் கோத்து வெளியிட்டால் எப்படி இருக்குமோ, அதுபோன்றது இந்த வகை.

சில நேரங்களில் ஒரே கருத்து அல்லது ஆழ்மனதின் விருப்பம், ஒரே கர்ப்பத்திலிருந்து மூன்று ஆட்டுக்குட்டிகள் வெளிவருவது போலப் பல வகைகளில் வெளிப்படவும் செய்யலாம். ஒரு மரத்தில் ஏறுவது போலவோ, ஆழமான படிக்குள் இறங்கிச் சென்றுகொண்டே இருப்பது போலவோ கனவு வருவது ஆழ்மனதில் அடக்கிவைக்கப்பட்ட பாலியல் விருப்பங்களின் அடையாளக் குறியீடாகவும் (Symbolic) இருக்கலாம்.

சில நேரம் உடலின் வெளிப்புறத்திலோ, உள் உறுப்புகளிலோ ஏற்படும் மாற்றங்கள் கனவில் அடையாளமாக வெளிப்படும். தூக்கத்தில் சிறுநீர் முட்டிக்கொண்டு நிற்பது பெரிய நீர்த்தொட்டி நிரம்பி உடையும் தறுவாயில் இருப்பது போலவும், அதிகாலையில் அடிக்கும் அலாரம், ஊட்டி மலை ரயிலில் செல்லும்போது குழல் ஊதிக்கொண்டு செல்வதைப் போலவும் கனவில் வரலாம்.

கனவுகளும் மனநலமும்

கனவு தூக்கத்தைப் பாதுகாக்கிறது என்ற வாதம் ஒருபுறம் இருக்க, ‘மனநோய் என்பது விழிப்புநிலையில் ஏற்படும் கனவு’ அல்லது ‘கனவு ஒரு குறுகிய கால மனநோய்’ என்று க்ராஸ் என்ற ஆராய்ச்சியாளர் கூறினார், பல கனவுகள் மனநோய்களின் அறிகுறிகளாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மனப் பதற்ற நோய், மன அழுத்தங்கள், பாலியல் பிரச்சினைகள், தூக்கத்தின் தரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் கனவுகள் போன்றவை சம்பந்தப்பட்டவருடைய பிரச்சினையை அதிகரிப்பதுடன், மனநோய்களின் அறிகுறிகளாகவும் வெளிப்படுகின்றன.

இயற்கைச் சீற்றங்கள், விபத்துகளில் குடும்ப நபர்களைப் பறிகொடுத்தவர்களுக்கு அந்தக் காட்சிகள் கனவில் ஃபிளாஷ்பேக் போலத் திரும்பத் திரும்ப வரலாம். ரத்த அழுத்த நோய், அலர்ஜிகளுக்குப் பயன்படுத்தப்படும் சில மாத்திரைகள்கூடத் திகிலூட்டும் கனவுகளை உண்டாக்க வல்லவை. தூக்கத்தில் அதிக அசைவு, உதைத்தல், வீறிட்டு அலறுதல் போன்றவற்றுக்கும் கனவுகளுக்கும் தொடர்பு உண்டு.

தூக்கத்தைப் பாதுகாக்குமா?

பொதுவாகக் கனவுகள் நம் தூக்கத்தைக் கெடுப்பதாகவே நம்புகிறோம். ஆனால், அணைத்து வைக்கப்பட்டிருக்கும் மனசாட்சியால் தடுக்க இயலாத ஆழ்மனத் தொந்தரவுகள், தூக்கத்திலிருந்து ஒருவரை எழுப்பாமல் பாதுகாக்கவே கனவுகள் உதவுகின்றன என்பது ஃபிராய்டின் கருத்து. மனதில் தேவையில்லாமல் சேர்ந்துகொண்டிருக்கும் கழிவை அகற்றும் வடிகாலாகவும் கனவு உதவலாம். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நிகழ்வுகள் கனவில் வருவதும், அதன் கோர்வையையும் அர்த்தத்தையும் பிரித்து அறிவதில் அதிகச் சிக்கலை ஏற்படுத்துவதுமே பலருக்கும் கனவுகள் புரியாத புதிராக உள்ளதற்கான அடிப்படைக் காரணம். இதை மீறிக் கனவை ரசிக்க ஆரம்பியுங்கள். கனவுகளைக் காதலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.


கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி
உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com
ராக யாத்திரை 03: மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்…

Published : 04 May 2018 10:01 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்

 


சென்ற வாரம் கேட்ட கேள்வியோடு தொடங்குவோம். ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…’ (அபூர்வ ராகங்கள் 1975) என்ற பாடல் வாணி ஜெயராமுக்குத் தேசிய விருது வாங்கித் தந்தது. சரணங்களில் வேறு வேறு ராகங்கள் வந்தாலும் அப்பாடல் ஆரம்பிக்கும் ராகம் ‘பந்து வராளி’(ரங்கீலா ஹாய் ராமா நினைவுக்கு வருகிறதா?). சரியான பதிலை முதலில் அனுப்பிய கோவை உஷாவுக்குப் பாராட்டுகள். பின்னர் அந்த ராகத்தைப் பற்றி அலசுவோம். இப்போது அதன் நெருங்கிய உறவான இந்த ராகத்தில்தான் கர்னாடக இசையின் தொடக்கப் பாடங்களைக் கற்றுத் தருவார்கள். ஆகவே, இந்த ராகத்திலேயே நமது பயணத்தைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும். அதற்கு முன் இசை இயலின் நுட்பமான சில அம்சங்களைப் பார்க்கலாம்.

மறுபடியும் முதல்லேர்ந்தா?

முதலில் இசையில் எத்தனை ஸ்வரங்கள் இருக்கின்றன? என்ன சார்! போன வாரம்தானே ஏழு ஸ்வரங்கள் என்று பாட்டெல்லாம் பாடி முடித்தீர்களே எனக் கேட்கிறீர்களா? அது போன வாரம். நான் சொல்வது இந்த வாரம். ஒரு வாரத்தில் எத்தனையோ விஷயங்கள் மாறும். ஏழு சுரங்கள்தாம் என்றாலும் அவற்றில் ஸா, பா மட்டுமே மாறாத சுரங்கள். ஆகவேதான் ஸ்ருதி சேர்ப்பதற்காகத் தொடக்கத்தில் ‘ஸா… பா… ஸா…’என அந்த சுரங்களைப் பாடுகிறார்கள். ரி,க, ம,த,நி ஆகிய சுரங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு வகைகள் உள்ளன. எப்படி என்கிறீர்களா? சின்ன ரி, பெரிய ரி அல்லது ரி1, ரி2 என்பார்கள். அடுத்து சின்ன க (க1), பெரிய க (க2). எண்கள் உதாரணத்தையே எடுத்துக் கொண்டால் 1,2 ,3 என எண்கள் இருந்தாலும். ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடையே ஒன்றே கால், ஒன்றரை எல்லாம் இருக்கிறதல்லவா? அதே போல் தான். ஸாவை விட ரி 1-ன் அதிர்வெண் பெரியது. அதைவிட ரி2 பெரிது.

கீ போர்டு, பியானோ போன்றவற்றில் பார்த்தீர்களானால் வெள்ளை, கறுப்பு என இரண்டு நிறங்களிலும் கட்டைகள் இருக்கும் அல்லவா? இரண்டு வெள்ளைக் கட்டைகளுக்கு இடையே கறுப்பு இருக்கும். உதாரணதுக்கு. ஸாவுக்கும் ரி2-க்கும் இடையே மேலே உள்ள கறுப்புக் கட்டை ரி1. இப்படி ஏழு சுரங்களைப் பன்னிரண்டாகப் பிரித்துள்ளனர். மனிதன் செவியால் இந்த பன்னிரண்டு சுரங்களைத்தான் பிரித்து உணர முடியும். மேற்கத்திய இசையிலும் இதே 12 தான். (நிபுணர்களால் 22 கூட பிரித்தறிய முடியுமாம்)

இப்படி ரி,க,ம,த,நி யில் வரும் வேறுபாடுகளை வைத்துக் கொண்டுதான் 72 தாய் ராகங்கள் உருவாகின்றன. ஒரு ராகத்தில் ரி,க,ம,த,நி ஆகிய சுரங்களில் ஒவ்வொன்றிலும் இரண்டு உள்ளன அல்லவா? ஒரு தாய் ராகம் (மேள கர்த்தா ராகம் எனவும் அழைக்கப்படும்) என்றால் அதில் ஏதேனும் ஒன்றுதான் வரும். க1 வந்தால் க2 வராது. உதாரணம் சங்கராபரணம் (வரிசையில் 29 ஆவது ராகம்) ஸ,ரி2,க2,ம1,ப,த2, நி2. கல்யாணி (65-வது ராகம் ) ஸ,ரி2,க2,ம2,ப,த2, நி2. கவனித்தால் இரண்டுக்கும் மா மட்டுமே வித்தியாசம். இப்படித்தான் 72 வகையான தாய் ராகங்கள் அமைகின்றன. வேதியியலில் பீரியாடிக் டேபிள் எனப்படும் தனிம அட்டவணை போன்றது இது.

தமிழிசைப் பண்களே அடிப்படை!

முதல் கட்டுரையில் சொன்னதுபோல் இசைத் தமிழில் ஏராளமான பண்கள் இருந்திருக்கின்றன. பரிபாடல். சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள், இலக்கணங்கள் உள்ளன. தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரந்தங்களும் குறிப்பிட்ட பண்ணோடு இசைக்கப்பட்டன. பண்களே பின்னர் ராகமாயின. அப்படி வழங்கப்பட்ட ராகங்களையெல்லாம் வேங்கிடமகி என்பவர் 16-ம் நூற்றாண்டில் தொகுத்து 72 மேளகர்த்தா ராகங்கள் என்னும் அட்டவணை வகுத்ததே கர்னாடக இசை வரலாற்றில் முக்கிய நிகழ்வு.

அப்படி வந்த ராக வரிசையில் பதினைந்தாவதைத்தான் நாம் பார்க்கப் போகிறோம். தமிழ்ப் பண் மரபில் இந்தளப் பண் என அழைப்பார்கள். (இந்தோளம் என்னும் ராகத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை). கர்னாடக இசையில் தொடக்கப் பாடங்களை இந்த ராகத்தில்தான் சொல்லித் தருவார்கள். இதன் சுரங்கள் ஸ,ரி1,க2,ம1,ப,த1,நி2. ஸாவும் பாவும் எல்லா ராகங்களுக்கும் ஒன்றுதான் என்பது நினைவிருக்கிறதா?

தமிழிசை மூவருள் மூத்தவர், தற்கால பல்லவி- அனுபல்லவி- சரணம் எனப்படும் கீர்த்தனை வடிவத்தின் முன்னோடியான முத்துத்தாண்டவர். அவர் எழுதிய ‘ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காண’ என்ற பாடல் அமைந்த ராகம் இது. திரையிசையில் இளையராஜா ஒரு சாம்ராஜ்ஜியமே இந்த ராகத்தில் நடத்தியிருக்கிறார். உதாரணம் ‘முதல் இரவு’ (1979) திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்’ என்னும் அருமையான பாடல். அந்த ராகம்?

தொடர்புக்கு: ramsych2@gmail.com
ராக யாத்திரை 04: அலிபாபாவும் ஆலய மணியும்

Published : 11 May 2018 10:27 IST


டாக்டர் ஜி. ராமானுஜம்




‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?’ பாடல் காட்சியில் சிவாஜி, சரோஜாதேவி

சென்ற வாரம் கேட்ட கேள்வியோடு தொடங்குவோம். ‘மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்’ பாடல் அமைந்த ராகம் ‘மாயா மாளவ கௌளை’. சரியாகச் சொன்ன பலரில் முதல்வரான ஏ.சிவகுமாருக்கு வாழ்த்துகள். சென்ற வாரம் தாய் ராகங்கள் 72 எனக் கொஞ்சம் கொட்டாவிவிடும் சமாச்சாரம் பற்றி விளக்கியிருந்தேனே. அந்தப் பட்டியலில் பதினைந்தாவது ‘மாயா மாளவ கௌளை’. பழந்தமிழில் ‘இந்தளப் பண்’.

எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்கள் பலதரப்பட்டவை. தாத்தா ஈஸிச்சேரில் சாய்ந்துகொண்டு ஆழ்வார்களைப் பற்றி சுஜாதா எழுதியதைப் படித்துக்கொண்டிருப்பார். பேரன் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைப் பற்றிப் படித்து ரசித்துக்கொண்டிருப்பான். அவரா இது என்று வியக்கவைக்கும். அதுபோல் சில ராகங்களையும் இசை அமைப்பாளர்கள் வேறு வேறு இடங்களில் பயன்படுத்தி இருப்பார்கள். ஒரே ராகத்தில் அமைந்த இரண்டு பாடல்களைக் கேட்கும்போது அதுவா இது என்று வியக்கவைப்பதே ஒரு இசையமைப்பாளருடைய படைப்புத்திறனின் வெளிப்பாடு.

கற்பனையும் ராகமும்

படைப்பாளியின் கற்பனையோடு ராகமும் வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாக இருந்தால் நமக்குக் கிடைப்பவை விதவிதமான விருந்துகள் தாம். அப்படி ஒரு ராகம்தான் மாயா மாளவ கௌளை. தமிழ் இலக்கண நூல்களில் இன்னின்ன திணைகளுக்கு இன்னின்ன பண்கள் என இலக்கணம் வகுத்திருப்பார்கள். ஒவ்வொரு ராகமும் ஒவ்வொரு விதமான உணர்வை மனத்தில் தோற்றுவிக்கக்கூடியது. சில ராகங்கள் சோகத்துக்கானவை. உதாரணம் முகாரி, சுபபந்துவராளி போன்றவை.

‘மாயா மாளவ கௌளை’ ராகம் பக்தி உணர்வுக்கும், மெல்லிய சோகத்துக்கும் ஏற்ற ராகம். மெய்மறக்கச் செய்யும் ராகம். வேகமாகவும் விறுவிறுப்பாகவும் பாடவும் ஏற்றது. ‘உடல் பொருள் ஆனந்தி’ என்றொரு நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த ராகம் வீணையில் வாசிக்கப்படுவது எப்படி உள்ளத்தை உருக்கும் விதமாக உள்ளது என்று விலாவாரியாக விவரித்திருப்பார்.

கர்னாடக சங்கீதம் படிப்பவர்களுக்கான பால பாடங்கள் மாயா மாளவ கௌளை ராகத்தில்தான் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. இந்த இடத்தில் ஒரு சின்ன தொழில்நுட்ப சமாச்சாரம். இந்த ராகத்தின் ஏழு சுரங்களையும் மா வை மையமாக (கமல் ரசிகர்களுக்கு மய்யமாக) வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் மூன்று அந்தப் பக்கம் மூன்று எனப் பிரித்தால் ஸ் ரி1 க2 ம1 பத1நி2 என இரண்டு பக்கங்களிலும் சமமாக இருக்கும். அதாவது ஸ ரி க -வில் ஒவ்வொரு சுரத்துக்கும் இடையே உள்ள இடைவெளி போன்றே ப த நி-யிலும் இருக்கும். அதனாலேயே இதை ஆரம்பப் பாடங்களில் சொல்லித் தருகிறர்கள்.

மாயம் செய்யும் மாயா!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் ‘ஸ்ரீ நாதாதி குரு குஹோ’ என்று இந்த ராகத்தில் தான் தன் முதல் பாடலை இயற்றினார். தியாகய்யர் ‘துளசி தளமுலசே’ என்று ஒரு இனிமையான கீர்த்தனையை அமைத்திருக்கிறார். பக்தியும் சோகமும் கலந்த மெட்டு. முத்துத்தாண்டவரின் ‘ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ?’ என்ற பாடல், இந்த ராகத்தில் அமைந்த சிறந்த செவ்வியல் பாடல்களுள் ஒன்று.

இத்தனை சிறப்புமிக்க மாயா மாளவ கௌளையில் தொடக்க காலத்தில் அமைந்த திரைப்பாடல்கள் குறைவுதான். மாயா மாளவ கௌளையை மிக வித்தியாசமாக அரேபிய இசை பாணியில் தந்தவர் தட்சிணாமூர்த்தி.(ராஜாவின் குரு அல்ல. இவர் வேறு). படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ (1956). பாடல் ‘அழகான பொண்ணுதான் அதற்கேற்ற கண்ணுதான்’. பானுமதி அருமையாகப் பாடியிருப்பர்.

‘துளசி தளமுலசே’ மெட்டிலேயே பட்டினத்தார் (1962) படத்தில் ‘நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ’ என்று ஜி.ராமனாதன் அற்புதமான பாடல் ஒன்றை அமைத்திருப்பார். ‘கோடிச் செல்வம் நிறைந்தாலும் என்ன அதைக் குலவிக் கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ... ஓடி வந்து விளையாட இங்கு ஒரு பாலன் வேண்டுமென வேலன் தந்தையிடம் (நிலவே)’ என்று மருதகாசி உருக்கமாய் எழுதியிருப்பார்.


மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பில் ஒலித்தது ‘ஆலய மணி’ (1962). அரிதாக ஒலித்தாலும் அருமையான மாயா மாளவ கௌளையை அளித்திருப்பார்கள் இரட்டையர்கள் . அதுதான் டி.எம்.எஸ். கணீர்க் குரலில் பாடிய ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?’ என்ற பாடல். இடையில் வரும் ஹம்மிங் (ஹம்மிங் அரசி எல்.ஆர்.ஈஸ்வரிக்குக் கேட்கணுமா!) மெல்லிசையாய் ராகத்தைக் கோடிட்டுக் காட்டுவது மிக இனிமையாக இருக்கும்.

அவ்வளவாகப் பிரபலமாகாத ‘வெள்ளி ரதம்’ (1979) என்ற படத்திலும் எம்.எஸ்.வி. ஓர் அருமையான பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார். சுசீலாவின் குரலில் ‘கலைமகள், அலைமகள், மலைமகள் மூவரும் சந்திக்கும் ராத்திரி’ என ஒரு இனிய பாடலைத் தந்திருப்பார். இவர்கள் போட்டதெல்லாம் கோடுதான். அதன்பின் இந்த ராகத்தில் தேசிய நெடுஞ்சாலையே போட்டவர் இசைஞானிதான்.

ராஜாவுக்குப் பிடித்த ராகம்

திரையிசையில் மாயா மாளவ கௌள ராகத்தை மிக அதிகமாகப் பயன்படுத்தியது இளையராஜாதான். எனக்குத் தெரிந்தே ஐம்பது பாடல்கள்வரை இந்த ராகத்தில் இசைத்திருக்கிறார். பல்வேறு விதமான உணர்வுகளுக்கும் பல்வேறு விதமான தளங்களில் இந்த ராகத்தைப் பயன்படுத்தினார். 1977-ல் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் இந்த ராகத்தில் ஒரு பாடலை முதன்முதலாகப் பயன்படுத்துகிறார். ராகநதி பிரவாகமாக எடுத்து ஓடப்போவதன் முதல் ஊற்று அப்பாடல். டி.எம்.எஸ் - ஜானகி குரலில் அமைந்த இப்பாடலுடன் படத்தின் பிற பாடல்களையும் கேட்டுவிட்டுத்தான் இயக்குநர் ஸ்ரீதர் தனது ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ என்னும் இசை ஓவியம் வரையும் தூரிகையை இளையராஜாவிடம் கொடுத்தாராம். அது என்ன படம், என்ன பாடல்?

தொடர்புக்கு: ramsych2@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

ஏற்காட்டில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்
 
தினகரன் 17 hrs ago


ஏற்காட்டில்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் விடுமுறை தினம் என்பதால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய மலர் கண்காட்சியை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் பாதிலேயே திரும்பியதாக தெரிவித்தனர்.
கேரள மாணவிக்கு வலுக்கட்டாயமாக டி.சி!’ - பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சுற்றும் அடுத்த சர்ச்சை
 
விகடன் 12 hrs ago

 

கோவை பாரதியார் பல்கலைகழக, உளவியல் துறை தலைவர் தகாத வார்த்தைகளால் பேசியதாக, மாணவி ஒருவர் புகார் கூறியுள்ளார்.

கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், முதுகலை உளவியல் அறிவியல் முதலாமாண்டு படித்து வந்தார். பல்கலைகழகத்தின் பெண்கள் விடுதியில் தங்கி, தனது படிப்பை ஹரிதா தொடர்ந்து வந்தார். இந்நிலையில், தன்னைத் தகாத வார்த்தைகளில் திட்டி, வலுக்கட்டாயமாக டி.சி வாங்க வைத்ததாக துறைத் தலைவர் வேலாயுதம் மீது அடுக்கடுக்காக புகார்களை முன்வைத்துள்ளார் ஹரிதா.

இதுகுறித்து ஹரிதாவிடம் பேசினோம். "கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை மோசமானது. இதையடுத்து,அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென விடுதி காப்பாளர் பிரேமாவிடம் கேட்டோம். ஆனால்,மருத்துவமனை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்ததுடன், பிரேமா விடுதியையும் பூட்டிவிட்டார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால், மீண்டும் ஹாஸ்டலுக்கு வந்தபோது, கதவை மூடிவிட்டனர். நாங்கள் எவ்வளவு முயற்சித்தும், கதவை திறக்கவில்லை. இரவு முழுவதும், நாங்கள் வெளியேதான் இருந்தோம். பின்னர், விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் எங்களது துறைத் தலைவர் வேலாயுதம் ஆகியோர் சக மாணவிகள் முன்னிலையில் வகுப்பறையில் என்னை அவமானப்படுத்தினர். குறிப்பாக, துறைத் தலைவர் வேலாயுதம், என்னை அவரது அறைக்கு அழைத்து சென்று, அறையினை பூட்டி, மிகவும் ஆபாசமாக தகாத வார்த்தைகளில் பேசினார். மேலும், வலுக்கட்டாயமாக மாற்று சான்றிதழ் அளித்து, பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றிவிட்டார்" என்றார்.

இந்நிலையில், வேலாயுதம், விடுதி காப்பாளர் பிரேமா மற்றும் தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக ஆளுநர், காவல்துறை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் ஆகியோரிடம் ஹரிதா புகார் அளித்தார். மேலும், கோவை வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, வடவள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி ஹரிதா புகார் அளித்துள்ள விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ், பல்கலைகழக துணை வேந்தருக்கு லஞ்சம் பெற்று தந்த புகாரில், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புழுதிப் புயல்: 2 தனியார் விமானங்கள் ரத்து
 
தினகரன் 37 mins ago

  சென்னை: புழுதிப் புயல் காரணமாக டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் 2 தனியார் நிறுவன விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் இண்டிகோ விமானம் 5 மணி நேரம் தாமதமாக வரவுள்ளது. சென்னையில் இருந்து டெல்லி மற்றும் அந்தமானுக்கு புறப்படும் 2 விமானங்கள் 5 மணி நேரம் தாமதமாக புறப்படவுள்ளது.

NEWS TODAY 24.4 2026