Tuesday, May 15, 2018
முடிந்தது பரோல் :சிறைக்கு சென்றார் லாலு
Added : மே 15, 2018 02:59
ராஞ்சி: பரோல் காலம் நிறைவடைந்ததையடுத்து மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார் லாலு.
பீஹாரில். கால்நடை தீவன ஊழல் வழக்குகளில், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத், ஜார்க்கண்ட் தலைநகர், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.லாலுவின் மூத்த மகன், தேஜ் பிரதாபுக்கும் சக எம்.எல்.ஏ. மகள் ஐஸ்வர்யா ராய்க்கும், பீஹார் தலைநகர் பாட்னாவில், திருமணம் நடந்தது. .
இதில் பங்கேற்பதற்காக, 10 நாள், 'பரோல்' வழங்கும்படி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில், லாலு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 11-ம் தேதி மூன்று நாட்கள் மட்டும் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதைஅடுத்து, சிறையிலிருந்து வெளியே வந்த லாலு, பாட்னாவில் உள்ள தன் வீட்டுக்குச் சென்றார்.
இந்நிலையில் திருமணம் நடந்ததையடுத்து அவரது பரோல் காலம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து மீண்டும் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.
Added : மே 15, 2018 02:59
ராஞ்சி: பரோல் காலம் நிறைவடைந்ததையடுத்து மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார் லாலு.
பீஹாரில். கால்நடை தீவன ஊழல் வழக்குகளில், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத், ஜார்க்கண்ட் தலைநகர், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.லாலுவின் மூத்த மகன், தேஜ் பிரதாபுக்கும் சக எம்.எல்.ஏ. மகள் ஐஸ்வர்யா ராய்க்கும், பீஹார் தலைநகர் பாட்னாவில், திருமணம் நடந்தது. .
இதில் பங்கேற்பதற்காக, 10 நாள், 'பரோல்' வழங்கும்படி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில், லாலு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 11-ம் தேதி மூன்று நாட்கள் மட்டும் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதைஅடுத்து, சிறையிலிருந்து வெளியே வந்த லாலு, பாட்னாவில் உள்ள தன் வீட்டுக்குச் சென்றார்.
இந்நிலையில் திருமணம் நடந்ததையடுத்து அவரது பரோல் காலம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து மீண்டும் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.
மாநில செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு 18–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் இந்த ஆண்டு முதல் வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது.
மே 15, 2018, 04:05 AM
கோவை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் இந்த ஆண்டு முதல் வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. இதற்கு 18–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 13 இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் உள்ளன. 14 உறுப்பு கல்லூரிகளும், 26 இணைப்பு கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2018– 2019–ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப வினியோகம் 18–ந்தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு முதல் ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவ–மாணவிகள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். வருகிற 18–ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 17–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மாணவ– மாணவிகள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யப்படும். இதை பெற்றோர்களும், மாணவ–மாணவிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், தியாகிகளின் வாரிசுகள் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 18–ந்தேதி தொடங்கி ஜூன் 20–ந்தேதி வரை நடைபெறும். மாணவ–மாணவிகளின் விண்ணப்பங்கள் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஜூன் 22–ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
இதைத்தொடர்ந்து முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 9–ந்தேதி முதல் 13–ந்தேதி வரை இணையதள வழியாக நடைபெறும். மாணவ– மாணவிகள் தங்கள் அருகிலேயே உள்ள கல்லூரிகளுக்கு சென்றோ அல்லது ஸ்மார்ட் போனிலோ, இணையதளத்தை தேர்வு செய்து எந்தப் பாடப்பிரிவுக்கு தாங்கள் தகுதியானவர்கள் என்று முடிவு செய்து தங்களுக்கு வேண்டிய பாடப்பிரிவுகளையும், விருப்பமான கல்லூரிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு ஜூலை 7–ந்தேதியும், தொழிற்கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 16–ந்தேதியும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 மற்றும் 18–ந்தேதிகளிலும் நடக்கிறது. 2–ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23–ந்தேதி தொடங்கி 27–ந்தேதி வரை நடைபெறும். கலந்தாய்வுக்காக மாணவர்களும் பெற்றோர்களும், கோவைக்கு வந்து அலைய வேண்டியதில்லை. இருந்த இடத்தில் இருந்தே தங்கள் அனுமதி கடிதத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் கலந்தாய்வு முறை இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு விண்ணப்ப படிவத்திலேயே 46 விருப்ப பிரிவு (ஆப்சென்ஸ்) கொடுக்கப்பட்டுள்ளது. தேவையானவற்றை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதில் சிறந்த 5 கல்லூரிகளையும் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மாணவர்கள் ஒரு கல்லூரியை விரும்பி, அது கிடைக்காமல் போகும்போது, கிடைக்கும் கல்லூரியில் சேர்ந்து பின்னர் விரும்பிய கல்லூரியில் சேரும் ‘ஸ்லைடிங் சிஷ்டம்’ அறிமுகப்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி ஆன்லைன் முறையில் கலந்தாய்வு, ‘ஸ்லைடிங் சிஸ்டம்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 17–ந் தேதி ஆகும். முக்கியமாக பெற்றோர்களும் மாணவர்களும் ஒன்றுக்கு இரண்டு முறை விண்ணப்பங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்ய வேண்டும். பல்கலைக்கழக வலைத்தளத்தில் www.tnau.ac.in/admission.html அனைத்து விவரங்களும் தரப்பட்டு உள்ளன. ஒரு மாத காலத்தில் பொறுமையாக படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கடைசிநேரத்தில் பதிவேற்றம் செய்து நெருக்கடிக்கு ஆளாக வேண்டாம்.
26 தனியார் கல்லூரிகள், 14 அரசு கல்லூரிகள் இருக்கின்றன. இதில், புதிதாக இந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட 3 கல்லூரிகள் உள்ளன. பட்டுப்புழு வளர்ப்பு, உயிரிதொழில்நுட்பம், அக்ரி பிஸினஸ் இந்த மூன்று பாடப்பிரிவுகளும் தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. வேளாண் பொறியியலில் புட்பிராசசிங் என்பது மத்திய அரசின் வேண்டுதலுக்கு இணங்க பி.டெக் புட்டெக்னாலஜி என்றும் பி.டெக் தோட்டக்கலை என்பது பி.எஸ்சி ஹானர்ஸ் தோட்டக்கலை எனவும் மாற்றப்பட்டுள்ளது.
அரசு கல்லூரிகளில் மதிப்பெண் சார்ந்த இடங்கள் மட்டுமே கிடைக்கும். தனியார் கல்லூரிகளில் 65 சதவீத இடங்கள் மதிப்பெண் அடிப்படையில் கிடைக்கும். மீதி 35 சதவீதத்தை இந்த பதிவேற்றம் செய்த விண்ணப்பங்களில் இருந்து தான் தனியார் கல்லூரிகள் வழங்கவேண்டும். இதில் தவறு ஏற்பட்டால் அக்கல்லூரி முதல்வரும், தாளாளரும் தான் பொறுப்பாவார்கள். தனியார் கல்லூரிகளில் இடம் வேண்டுபவர்கள் அவர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
இதுதவிர மத்திய அரசின் சார்பில் தேசிய அளவில் வேளாண் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வென்றவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மட்டும் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இந்த தேர்வு எழுதியும் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேரலாம். ஆகஸ்டு மாதம் 1–ந் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். ஆகஸ்டு 31–ந்தேதி மாணவர் சேர்க்கை முடிவடையும்.
இந்த விவரங்கள் குறித்தும் பட்டப்படிப்புகளின் வகைகள் குறித்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்வதற்காக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மே 21–ந்தேதி திறந்தவெளி கண்காட்சி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது டீன் மகிமைராஜா, வேளாண் என்ஜினீயரிங் பிரிவு டீன் வரதராஜன், முதுநிலை கல்வி டீன் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு 18–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் இந்த ஆண்டு முதல் வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது.
மே 15, 2018, 04:05 AM
கோவை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் இந்த ஆண்டு முதல் வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. இதற்கு 18–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 13 இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் உள்ளன. 14 உறுப்பு கல்லூரிகளும், 26 இணைப்பு கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2018– 2019–ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப வினியோகம் 18–ந்தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு முதல் ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவ–மாணவிகள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். வருகிற 18–ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 17–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மாணவ– மாணவிகள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யப்படும். இதை பெற்றோர்களும், மாணவ–மாணவிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், தியாகிகளின் வாரிசுகள் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 18–ந்தேதி தொடங்கி ஜூன் 20–ந்தேதி வரை நடைபெறும். மாணவ–மாணவிகளின் விண்ணப்பங்கள் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஜூன் 22–ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
இதைத்தொடர்ந்து முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 9–ந்தேதி முதல் 13–ந்தேதி வரை இணையதள வழியாக நடைபெறும். மாணவ– மாணவிகள் தங்கள் அருகிலேயே உள்ள கல்லூரிகளுக்கு சென்றோ அல்லது ஸ்மார்ட் போனிலோ, இணையதளத்தை தேர்வு செய்து எந்தப் பாடப்பிரிவுக்கு தாங்கள் தகுதியானவர்கள் என்று முடிவு செய்து தங்களுக்கு வேண்டிய பாடப்பிரிவுகளையும், விருப்பமான கல்லூரிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு ஜூலை 7–ந்தேதியும், தொழிற்கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 16–ந்தேதியும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 மற்றும் 18–ந்தேதிகளிலும் நடக்கிறது. 2–ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23–ந்தேதி தொடங்கி 27–ந்தேதி வரை நடைபெறும். கலந்தாய்வுக்காக மாணவர்களும் பெற்றோர்களும், கோவைக்கு வந்து அலைய வேண்டியதில்லை. இருந்த இடத்தில் இருந்தே தங்கள் அனுமதி கடிதத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் கலந்தாய்வு முறை இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு விண்ணப்ப படிவத்திலேயே 46 விருப்ப பிரிவு (ஆப்சென்ஸ்) கொடுக்கப்பட்டுள்ளது. தேவையானவற்றை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதில் சிறந்த 5 கல்லூரிகளையும் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மாணவர்கள் ஒரு கல்லூரியை விரும்பி, அது கிடைக்காமல் போகும்போது, கிடைக்கும் கல்லூரியில் சேர்ந்து பின்னர் விரும்பிய கல்லூரியில் சேரும் ‘ஸ்லைடிங் சிஷ்டம்’ அறிமுகப்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி ஆன்லைன் முறையில் கலந்தாய்வு, ‘ஸ்லைடிங் சிஸ்டம்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 17–ந் தேதி ஆகும். முக்கியமாக பெற்றோர்களும் மாணவர்களும் ஒன்றுக்கு இரண்டு முறை விண்ணப்பங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்ய வேண்டும். பல்கலைக்கழக வலைத்தளத்தில் www.tnau.ac.in/admission.html அனைத்து விவரங்களும் தரப்பட்டு உள்ளன. ஒரு மாத காலத்தில் பொறுமையாக படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கடைசிநேரத்தில் பதிவேற்றம் செய்து நெருக்கடிக்கு ஆளாக வேண்டாம்.
26 தனியார் கல்லூரிகள், 14 அரசு கல்லூரிகள் இருக்கின்றன. இதில், புதிதாக இந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட 3 கல்லூரிகள் உள்ளன. பட்டுப்புழு வளர்ப்பு, உயிரிதொழில்நுட்பம், அக்ரி பிஸினஸ் இந்த மூன்று பாடப்பிரிவுகளும் தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. வேளாண் பொறியியலில் புட்பிராசசிங் என்பது மத்திய அரசின் வேண்டுதலுக்கு இணங்க பி.டெக் புட்டெக்னாலஜி என்றும் பி.டெக் தோட்டக்கலை என்பது பி.எஸ்சி ஹானர்ஸ் தோட்டக்கலை எனவும் மாற்றப்பட்டுள்ளது.
அரசு கல்லூரிகளில் மதிப்பெண் சார்ந்த இடங்கள் மட்டுமே கிடைக்கும். தனியார் கல்லூரிகளில் 65 சதவீத இடங்கள் மதிப்பெண் அடிப்படையில் கிடைக்கும். மீதி 35 சதவீதத்தை இந்த பதிவேற்றம் செய்த விண்ணப்பங்களில் இருந்து தான் தனியார் கல்லூரிகள் வழங்கவேண்டும். இதில் தவறு ஏற்பட்டால் அக்கல்லூரி முதல்வரும், தாளாளரும் தான் பொறுப்பாவார்கள். தனியார் கல்லூரிகளில் இடம் வேண்டுபவர்கள் அவர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
இதுதவிர மத்திய அரசின் சார்பில் தேசிய அளவில் வேளாண் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வென்றவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மட்டும் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இந்த தேர்வு எழுதியும் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேரலாம். ஆகஸ்டு மாதம் 1–ந் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். ஆகஸ்டு 31–ந்தேதி மாணவர் சேர்க்கை முடிவடையும்.
இந்த விவரங்கள் குறித்தும் பட்டப்படிப்புகளின் வகைகள் குறித்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்வதற்காக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மே 21–ந்தேதி திறந்தவெளி கண்காட்சி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது டீன் மகிமைராஜா, வேளாண் என்ஜினீயரிங் பிரிவு டீன் வரதராஜன், முதுநிலை கல்வி டீன் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தலையங்கம்
நல்ல திட்டம்; ஆனால் வட்டி போதாது
வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானதாகும். அதனால்தான் அந்தக்காலங்களில் இருந்தே பெரியவர்கள் சின்னஞ்சிறு வயதில் இருந்தே சேமிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தார்கள்.
மே 15 2018, 03:00 வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானதாகும். அதனால்தான் அந்தக்காலங்களில் இருந்தே பெரியவர்கள் சின்னஞ்சிறு வயதில் இருந்தே சேமிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தார்கள். சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும் என்பதுதான் வாழ்க்கையின் ஒரு முக்கியமான நெறியாகும். எதிர்பாராத செலவுகளுக்காகவும், முதிர் வயதிற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் பணம் வேண்டுமென்றால் சேமிப்பு இருந்தால்தான் முடியும். அந்தவகையில் எல்லோருமே வங்கி டெபாசிட்களை பெரிதும் நம்பிக்கொண்டிருந்தார்கள். வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் நிரந்தர டெபாசிட்களில் பணம்போட்டு தேவைப்படும் நேரத்தில் அந்தப்பணத்தை எடுத்துக்கொள்வதோ? அல்லது அதிலிருந்து வரும் வட்டியில் செலவுகளை சமாளிப்பதோ? வழக்கமாக இருந்தது. ஆனால், சமீபகாலங்களாக வங்கிகளிலுள்ள பிக்சட் டெபாசிட்களின் வளர்ச்சிவிகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம், வங்கியில் டெபாசிட்களுக்கான வட்டிவிகிதம் குறைந்து கொண்டே போவதுதான். அதனால்தான் மக்களின் பார்வை வங்கி டெபாசிட்களை விட்டுவிட்டு, மியூச்சுவல்பண்டு போன்ற முதலீடுகளை நாடிச்செல்ல வைத்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மியூச்சுவல் பண்டுகளில் ரூ.7 லட்சம் கோடிகளுக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மியூச்சுவல் பண்டுகளிலும் போட்ட தொகைக்கும் மேல் அதிகதொகை கிடைக்கவும், ஒரு சில நேரங்களில் பெரியசரிவை சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், பெரும்பாலான மியூச்சுவல் பண்டுகள் பங்குமார்க்கெட்டை சார்ந்தே இருக்கும். இந்தநிலையில், வயதான காலத்திற்காக சேமித்து வைக்க விரும்புபவர்கள் அதிலும் குறிப்பாக பென்சன் இல்லாத அதாவது மத்திய–மாநில அரசு பணிகளைத் தவிர, மற்ற பணிகளில் உள்ளவர்கள் தங்கள் சேமிப்புகளை நம்பித்தான் முதிர்வயதை ஓட்ட வேண்டும். மூத்த குடிமக்களின் சேமிப்புக்கான ஒரு நல்ல திட்டத்தை 2017–ம் ஆண்டு மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. ‘பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா’ என்ற மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.7½ லட்சம் வரையில் சேமிக்கலாம். இதற்கு 8 சதவீத வட்டி வழங்கப்படும். ரூ.7½ லட்சம்வரை முதலீடு செய்தவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த ரூ.7½ லட்சம் உச்சவரம்பு ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உறுதியாக கிடைக்கும். 60 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் இந்தத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்தத்திட்டத்தில் சேரவிரும்புபவர்கள் வங்கிகளிலோ, தபால் அலுவலகங்களிலோ போய் இந்த முதலீட்டை செய்து கொள்ளலாம். ஆயுள் காப்பீட்டுக்கழகம் மூலமாக இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இடையில் உடல்நலக்குறைவு போன்ற கஷ்டமான நேரங்களில் பணம் தேவைப்பட்டால் 98 சதவீத பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். இதுபோல, 3 ஆண்டுகள் கழித்து மொத்தபணத்தில் 75 சதவீதம் கடனாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்தத்திட்டம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பயனளிக்கும் திட்டம்தான். ஆனால் மூத்த குடிமக்கள் தங்கள் சேமிப்பையெல்லாம் போட்டு அன்றாட வாழ்க்கைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பணம் என்பதால், இந்த 8 சதவீத வட்டியை உயர்த்தி கூடுதலாக கொடுக்கலாம். இது மூத்த குடிமக்களின் நலனில் அக்கறைக்கொண்டு அரசு எடுக்கும் கருணை நடவடிக்கையாகவே கருதப்படும். எனவே, இந்தத்திட்டத்தின்கீழ் கூடுதல் வட்டிதர அரசும், அரசியல்கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் மூத்த குடிமக்களின் மனமும் குளிரும்.
நல்ல திட்டம்; ஆனால் வட்டி போதாது
வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானதாகும். அதனால்தான் அந்தக்காலங்களில் இருந்தே பெரியவர்கள் சின்னஞ்சிறு வயதில் இருந்தே சேமிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தார்கள்.
மே 15 2018, 03:00 வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானதாகும். அதனால்தான் அந்தக்காலங்களில் இருந்தே பெரியவர்கள் சின்னஞ்சிறு வயதில் இருந்தே சேமிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தார்கள். சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும் என்பதுதான் வாழ்க்கையின் ஒரு முக்கியமான நெறியாகும். எதிர்பாராத செலவுகளுக்காகவும், முதிர் வயதிற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் பணம் வேண்டுமென்றால் சேமிப்பு இருந்தால்தான் முடியும். அந்தவகையில் எல்லோருமே வங்கி டெபாசிட்களை பெரிதும் நம்பிக்கொண்டிருந்தார்கள். வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் நிரந்தர டெபாசிட்களில் பணம்போட்டு தேவைப்படும் நேரத்தில் அந்தப்பணத்தை எடுத்துக்கொள்வதோ? அல்லது அதிலிருந்து வரும் வட்டியில் செலவுகளை சமாளிப்பதோ? வழக்கமாக இருந்தது. ஆனால், சமீபகாலங்களாக வங்கிகளிலுள்ள பிக்சட் டெபாசிட்களின் வளர்ச்சிவிகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம், வங்கியில் டெபாசிட்களுக்கான வட்டிவிகிதம் குறைந்து கொண்டே போவதுதான். அதனால்தான் மக்களின் பார்வை வங்கி டெபாசிட்களை விட்டுவிட்டு, மியூச்சுவல்பண்டு போன்ற முதலீடுகளை நாடிச்செல்ல வைத்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மியூச்சுவல் பண்டுகளில் ரூ.7 லட்சம் கோடிகளுக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மியூச்சுவல் பண்டுகளிலும் போட்ட தொகைக்கும் மேல் அதிகதொகை கிடைக்கவும், ஒரு சில நேரங்களில் பெரியசரிவை சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், பெரும்பாலான மியூச்சுவல் பண்டுகள் பங்குமார்க்கெட்டை சார்ந்தே இருக்கும். இந்தநிலையில், வயதான காலத்திற்காக சேமித்து வைக்க விரும்புபவர்கள் அதிலும் குறிப்பாக பென்சன் இல்லாத அதாவது மத்திய–மாநில அரசு பணிகளைத் தவிர, மற்ற பணிகளில் உள்ளவர்கள் தங்கள் சேமிப்புகளை நம்பித்தான் முதிர்வயதை ஓட்ட வேண்டும். மூத்த குடிமக்களின் சேமிப்புக்கான ஒரு நல்ல திட்டத்தை 2017–ம் ஆண்டு மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. ‘பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா’ என்ற மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.7½ லட்சம் வரையில் சேமிக்கலாம். இதற்கு 8 சதவீத வட்டி வழங்கப்படும். ரூ.7½ லட்சம்வரை முதலீடு செய்தவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த ரூ.7½ லட்சம் உச்சவரம்பு ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உறுதியாக கிடைக்கும். 60 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் இந்தத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்தத்திட்டத்தில் சேரவிரும்புபவர்கள் வங்கிகளிலோ, தபால் அலுவலகங்களிலோ போய் இந்த முதலீட்டை செய்து கொள்ளலாம். ஆயுள் காப்பீட்டுக்கழகம் மூலமாக இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இடையில் உடல்நலக்குறைவு போன்ற கஷ்டமான நேரங்களில் பணம் தேவைப்பட்டால் 98 சதவீத பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். இதுபோல, 3 ஆண்டுகள் கழித்து மொத்தபணத்தில் 75 சதவீதம் கடனாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்தத்திட்டம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பயனளிக்கும் திட்டம்தான். ஆனால் மூத்த குடிமக்கள் தங்கள் சேமிப்பையெல்லாம் போட்டு அன்றாட வாழ்க்கைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பணம் என்பதால், இந்த 8 சதவீத வட்டியை உயர்த்தி கூடுதலாக கொடுக்கலாம். இது மூத்த குடிமக்களின் நலனில் அக்கறைக்கொண்டு அரசு எடுக்கும் கருணை நடவடிக்கையாகவே கருதப்படும். எனவே, இந்தத்திட்டத்தின்கீழ் கூடுதல் வட்டிதர அரசும், அரசியல்கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் மூத்த குடிமக்களின் மனமும் குளிரும்.
மாநில செய்திகள்
9 லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு
தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது.
மே 15, 2018, 05:30 AM
சென்னை,
பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர்.
அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள்.
விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. நாளை (புதன் கிழமை) பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.
முதல் முதலாக தேர்வு முடிவு வெளியிடும் தேதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பே பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், www.dge.tn.nic.in,www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம்.
9 லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு
தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது.
மே 15, 2018, 05:30 AM
சென்னை,
பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர்.
அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள்.
விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. நாளை (புதன் கிழமை) பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.
முதல் முதலாக தேர்வு முடிவு வெளியிடும் தேதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பே பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், www.dge.tn.nic.in,www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம்.
கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? இன்று பகல் 12 மணிக்கு முடிவு தெரியும்

கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார் என்று இன்று பகல் 12 மணிக்கு முடிவுகள் தெரியவரும்.
மே 15, 2018, 05:00 AM
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணி அளவில் தெரியவரும்.
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணப்படும் அரங்கத்தில் தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணிக்கு தெரிந்துவிடும்.
தேர்தல் முடிவுகளை அறிய கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவு தான் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். இந்த தேர்தலில் பா.ஜனதா வென்றால், அது பிரதமர் மோடியின் கரங்களை மேலும் பலப்படுத்துவதாக இருக்கும்.
ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்றால், கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளின் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்காது எனவும், மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் தெரிவித்துள்ளன. இதனால் கர்நாடகத்தில் 2004-ம் ஆண்டை போல் மீண்டும் கூட்டணி அரசு அமைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 3 கட்சிகளும் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன.
சித்தராமையா ரகசிய உத்தரவின்பேரில் மாநில உளவுத்துறையும் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்றும், காங்கிரஸ் அதிகபட்சமாக 95 முதல் 102 இடங்களில் வெற்றிபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 70 இடங்களிலும், ஜனதாதளம்(எஸ்) 28 இடங்களிலும் வெற்றிபெறும். 30 தொகுதிகளில் 3 கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி உள்ளது, அதில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
உளவுத்துறை ஆய்வு முடிவுகளால் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது

கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார் என்று இன்று பகல் 12 மணிக்கு முடிவுகள் தெரியவரும்.
மே 15, 2018, 05:00 AM
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணி அளவில் தெரியவரும்.
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணப்படும் அரங்கத்தில் தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணிக்கு தெரிந்துவிடும்.
தேர்தல் முடிவுகளை அறிய கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவு தான் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். இந்த தேர்தலில் பா.ஜனதா வென்றால், அது பிரதமர் மோடியின் கரங்களை மேலும் பலப்படுத்துவதாக இருக்கும்.
ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்றால், கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளின் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்காது எனவும், மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் தெரிவித்துள்ளன. இதனால் கர்நாடகத்தில் 2004-ம் ஆண்டை போல் மீண்டும் கூட்டணி அரசு அமைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 3 கட்சிகளும் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன.
சித்தராமையா ரகசிய உத்தரவின்பேரில் மாநில உளவுத்துறையும் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்றும், காங்கிரஸ் அதிகபட்சமாக 95 முதல் 102 இடங்களில் வெற்றிபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 70 இடங்களிலும், ஜனதாதளம்(எஸ்) 28 இடங்களிலும் வெற்றிபெறும். 30 தொகுதிகளில் 3 கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி உள்ளது, அதில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
உளவுத்துறை ஆய்வு முடிவுகளால் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது
Monday, May 14, 2018
`கூலித் தொழிலாளிகள் எல்லோருக்கும் மருந்து கொடுத்து கொன்னுடுங்க!’ - சேலத்தில் கொந்தளித்த பெண்கள்
வீ கே.ரமேஷ்
எம்.விஜயகுமார் vikatan
``மழை இல்லாமல் காட்டில் விவசாயம் இல்லை. விவசாயிகளே வீதிக்குப் போராட வந்துட்டாங்க. விவசாயக் கூலிகளான நாங்க விவசாயத்தை மறந்து பல வருடம் ஆயிடுச்சு. ஓட வேலையை நம்பி வாழ்ந்துட்டு இருக்கிறோம். கடந்த 6 மாதமாக எங்களுக்கு ஓட வேலையும் கொடுப்பதில்லை. சோத்துக்கு நாங்க படும் கஷ்டம் தாங்க முடியல. இந்த வயிற்றுப் பசியை யாரு கண்டுகொள்ளுகிறார்கள்.
கலெக்டர் அம்மாவைச் சந்தித்து எங்களுக்கெல்லாம் மருந்து வைத்துக் கொன்று விடுங்கள் என்று சொல்லிட்டு எங்க ரேஷன் கார்டுகளை கொடுத்து விட்டு செல்லுவதற்கு வந்திருக்கிறோம்' என்று 100க்கும் மேற்பட்ட வயதான மற்றும் இளம் பெண்களும் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.
இதுகுறித்து அங்கு வந்திருந்த பார்வதியிடம் பேசினோம், ``நாங்க எல்லோரும் ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டி முகில் நகரிலிருந்து வந்திருக்கிறோம். நான் மல்லிகை பறிக்க, கடலைக் காட்டுக்குக் களை எடுக்கப் போவேன். அதில் கிடைக்கிற வருமானத்தை வைத்து வயிற்றைக் கழுவிட்டு வந்தேன். கடந்த 5 வருடமாக மழை இல்லாததால் விவசாயத் தொழிலே அழிந்து விட்டது. விவசாயிகளே வேலை இல்லாமல் வீதிக்கு
ப் போராட வந்துட்டாங்க. எனது கணவரும் இறந்துவிட்டதால், நான் ஏதாவது வேலைக்குப் போனால் மட்டுமே சாப்பிட முடியும். ஆனால், எந்த வேலையும் கிடைக்கவில்லை. பஞ்சாயத் ஆபீஸ்ல நூறு நாள் வேலை கொடுத்தாங்க. கடந்த 6 மாதமாக அந்த வேலையும் கொடுக்காததால் சாப்பாட்டிற்கு காசு இல்லாமல் பரிதவிக்கிறேன். இதை ஏன்னு கேட்பதற்கு கூட ஆள் இல்லை'' என்று கதறி அழுதார்.
சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னர், ``அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க வரட்டும் அவங்களுக்குப் புத்தி புகட்டுறேன். எனக்கு முதியோர் ஓய்வூதியமும் இல்லை.100 நாள் வேலையும் இல்லை நான் எப்படி பிழைப்பது. ஒரே அடியாக எங்களுக்கெல்லாம் மருந்து வாங்கிக் கொன்று விடுங்கள். உங்களுக்குப் புண்ணியமாக இருக்கும் என்று கேட்பதற்காக கலெக்டர் அம்மாவைப் பார்க்க வந்திருக்கிறோம்'' என்று குமுறினார்.
ஈஸ்வரியோ, ``நாங்க எல்லோரும் கூலி ஜீவன்கள். பத்து ரூபாய் சம்பாதித்தால்தான் எங்க வீட்டு அடுப்புல விறகு எரியும். 6 மாதமாக ஓடை வேலைக்குக் கூப்பிடுவதில்லை. நாங்க என்ன தொழில் செய்து சாப்பிட முடியும்?. இந்த வயதான காலத்தில் எங்களுக்கு யார் வேலை கொடுப்பாங்க?. இளம் வயதில் காட்டுக்கு வேலைக்குப் போனோம். இப்ப கூட காட்டு வேலை கிடைத்தால் போகலாம். ஆனால், காடெல்லாம் அழிச்சுட்டு வீட்டு மனை போட்டுட்டாங்க. நாங்க எந்த வேலைக்குப் போக முடியும். அரசாங்கம் எங்க மேல கருணை கொண்டு நாங்க உயிரோடு இருக்கும் வரை ஏதாவது வேலை கொடுக்க வேண்டும்'' என்றார்.
வீ கே.ரமேஷ்
எம்.விஜயகுமார் vikatan
``மழை இல்லாமல் காட்டில் விவசாயம் இல்லை. விவசாயிகளே வீதிக்குப் போராட வந்துட்டாங்க. விவசாயக் கூலிகளான நாங்க விவசாயத்தை மறந்து பல வருடம் ஆயிடுச்சு. ஓட வேலையை நம்பி வாழ்ந்துட்டு இருக்கிறோம். கடந்த 6 மாதமாக எங்களுக்கு ஓட வேலையும் கொடுப்பதில்லை. சோத்துக்கு நாங்க படும் கஷ்டம் தாங்க முடியல. இந்த வயிற்றுப் பசியை யாரு கண்டுகொள்ளுகிறார்கள்.
கலெக்டர் அம்மாவைச் சந்தித்து எங்களுக்கெல்லாம் மருந்து வைத்துக் கொன்று விடுங்கள் என்று சொல்லிட்டு எங்க ரேஷன் கார்டுகளை கொடுத்து விட்டு செல்லுவதற்கு வந்திருக்கிறோம்' என்று 100க்கும் மேற்பட்ட வயதான மற்றும் இளம் பெண்களும் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.
இதுகுறித்து அங்கு வந்திருந்த பார்வதியிடம் பேசினோம், ``நாங்க எல்லோரும் ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டி முகில் நகரிலிருந்து வந்திருக்கிறோம். நான் மல்லிகை பறிக்க, கடலைக் காட்டுக்குக் களை எடுக்கப் போவேன். அதில் கிடைக்கிற வருமானத்தை வைத்து வயிற்றைக் கழுவிட்டு வந்தேன். கடந்த 5 வருடமாக மழை இல்லாததால் விவசாயத் தொழிலே அழிந்து விட்டது. விவசாயிகளே வேலை இல்லாமல் வீதிக்கு
ப் போராட வந்துட்டாங்க. எனது கணவரும் இறந்துவிட்டதால், நான் ஏதாவது வேலைக்குப் போனால் மட்டுமே சாப்பிட முடியும். ஆனால், எந்த வேலையும் கிடைக்கவில்லை. பஞ்சாயத் ஆபீஸ்ல நூறு நாள் வேலை கொடுத்தாங்க. கடந்த 6 மாதமாக அந்த வேலையும் கொடுக்காததால் சாப்பாட்டிற்கு காசு இல்லாமல் பரிதவிக்கிறேன். இதை ஏன்னு கேட்பதற்கு கூட ஆள் இல்லை'' என்று கதறி அழுதார். சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னர், ``அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க வரட்டும் அவங்களுக்குப் புத்தி புகட்டுறேன். எனக்கு முதியோர் ஓய்வூதியமும் இல்லை.100 நாள் வேலையும் இல்லை நான் எப்படி பிழைப்பது. ஒரே அடியாக எங்களுக்கெல்லாம் மருந்து வாங்கிக் கொன்று விடுங்கள். உங்களுக்குப் புண்ணியமாக இருக்கும் என்று கேட்பதற்காக கலெக்டர் அம்மாவைப் பார்க்க வந்திருக்கிறோம்'' என்று குமுறினார்.
ஈஸ்வரியோ, ``நாங்க எல்லோரும் கூலி ஜீவன்கள். பத்து ரூபாய் சம்பாதித்தால்தான் எங்க வீட்டு அடுப்புல விறகு எரியும். 6 மாதமாக ஓடை வேலைக்குக் கூப்பிடுவதில்லை. நாங்க என்ன தொழில் செய்து சாப்பிட முடியும்?. இந்த வயதான காலத்தில் எங்களுக்கு யார் வேலை கொடுப்பாங்க?. இளம் வயதில் காட்டுக்கு வேலைக்குப் போனோம். இப்ப கூட காட்டு வேலை கிடைத்தால் போகலாம். ஆனால், காடெல்லாம் அழிச்சுட்டு வீட்டு மனை போட்டுட்டாங்க. நாங்க எந்த வேலைக்குப் போக முடியும். அரசாங்கம் எங்க மேல கருணை கொண்டு நாங்க உயிரோடு இருக்கும் வரை ஏதாவது வேலை கொடுக்க வேண்டும்'' என்றார்.
Subscribe to:
Comments (Atom)
-
Chennai lockdown news: Today's updates from your city TIMESOFINDIA.COM | Apr 3, 2020, 07.59 AM IST Amid prevalent chaos an...
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்! நமது நிருபர் நோய்கள் அத்தனைக்கும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்... தவறான வா...