Monday, June 11, 2018

DVAC smells scams in Jaya’s two pet projects

Siddharth.Prabhakar@timesgroup.com

Chennai: 11.06.2018


The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) has recently uncovered scams in two projects relating to tree plantation and solar-powered green houses that were launched by former chief minister J Jayalalithaa.

DVAC officials booked six forest department officials in Madurai on June 8 for irregularities and malpractices in the implementation of the ‘massive tree planting programme’ between 2013-14 and 2015-16. DVAC discovered that for raising a central nursery at Mattuthavani, three officials swindled ₹3.18 lakh by creating 19 forged vouchers. Only ₹40,025 was paid to the contractor. The state government decided in February 2014 to plant 66 lakh seedlings in 32 districts from 2013-16 to commemorate Jayalalithaa’s 66th birthday celebration.

6 BOOKED FOR CORRUPTION

Fake vouchers helped officials swindle ₹2 lakh seedlings fund

Allocation was to the tune of ₹49.18 crore.

The scheme was intended to increase the green cover, mitigate pollution and improve the environment. The Madurai division got ₹4.33 lakh every year, of which the social forestry department had recorded an expenditure of ₹3.59 lakh for preparing a nursery, procuring seeds and poly bags and the rest for buying soil nutrients.

Similarly, for planting seedlings, ₹1.99 lakh was swindled by the six officials by creating 23 forged vouchers, while only ₹25,849 was given to contractors, including for transportation and other works, DVAC said.

The accused have been booked for corruption, criminal conspiracy, breach of trust and forgery. In Tirunelveli, the DVAC on June 7 booked A Nagoor Kani, a former panchayat president of Veerasamuthiram village in Kadayam block, for misusing his powers to select three ineligible beneficiaries of the ‘solar powered green house scheme’.

The scheme was launched by Jayalalithaa in 2011 to help the poor in rural areas construct houses with their own solar-powered devices. The government was to give ₹1.8 lakh as per the scheme. The beneficiaries selected would be eligible only if they resided in the panchayat, were below the poverty line, owned a site not less than 300sqft in area and did not have any other pucca house in the village.

DVAC said Nagoor Kani had allegedly selected three beneficiaries who either had houses of their own or did not possess any land, thereby being ineligible under the scheme. They later refunded ₹38,002 each to the panchayat after this was discovered.

Kani has been booked for forgery and corruption by the DVAC.

`ரூ.2,000 கோடி வருமானம் என்பதை கனவிலும் நினைக்கவில்லை’

Published : 10 Jun 2018 09:21 IST
 
வாசு கார்த்தி



ஒரு தொழிலைத் தொடங்கி வெற்றியடைவதே மிகப்பெரும் சவாலாக இருக்கும் போது, நஷ்டத்தில் இருக்கும் குடும்பத்தொழிலை லாப பாதைக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதானது அல்ல. 1970களில் டிடிகே குழுமம் கடும் நிதி நெருக்கடியில் இருந்தது. நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு, குழுமத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியவர் டிடிகே குழுமத்தின் தலைவர் டிடி.ஜெகன்நாதன். அந்த குழுமத்தின் சிக்கல் என்ன, அதில் இருந்து எப்படி மீட்டு வந்தோம் என்பதை Disrupt and Conquer என்னும் புத்தகத்தில் டிடி. ஜெகன்நாதன் குறிப்பிட்டிருக்கிறார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இதற்காக சென்னை வந்திருந்தவரிடம் சில நிமிடங்கள் உரையாட முடிந்தது. உரையாடலுக்கு முன்பு புத்தகத்தை பற்றிய சிறு குறிப்பினைப் பார்க்கலாம்...

1972-ம் ஆண்டு ஜெகன்நாதன் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் படித்துகொண்டிருந்தார். திடீரென அவரது அப்பாவும் அம்மாவும் அமெரிக்கா சென்றனர். குடும்பத் தொழில் மிகவும் சிக்கலாக இருக்கிறது. நீதான் வந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என அப்பாவும் அம்மாவும் அழைக்கின்றனர். வழக்கமாக குடும்பத் தொழிலை மூத்த மகன் கவனித்து கொள்வது வழக்கம் என்பதால் அமெரிக்காவிலே செட்டில் ஆக நினைத்தார். ஆனால் மூத்த மகனால் முடியவில்லை என்பதால்தான் இங்கு வந்திருக்கிறோம் என பெற்றோர் கூறுகின்றனர். வேறு வழி இல்லாமல் 24-வயதில் இந்தியா திரும்புகிறார்.

இந்தியாவுக்கு வருவோம், பிரச்சினைகளை தீர்த்துவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பலாம் என்பதுதான் அவரது எண்ணம். இதற்கேற்ப, அவருடைய உடைமைகளை அங்கே வைத்து விடுகிறார். ஆனால் இந்தியாவுக்கு வந்து பார்த்தால் பிரச்சினை மிகப்பெரியதாக இருக்கிறது.

1928 டிடி கிருஷ்ணமாச்சாரி என்பவரால் டிடிகே அண்ட் கோ என்னும் நிறுவனம் தொடங்கப்பட்டது. வெளிநாட்டு பொருட்களை இந்தியாவில் விற்கும் நிறுவனம் இது. பல எப்எம்சிஜி பொருட்கள் இந்த நிறுவனம் மூலமாக விநியோகம் செய்யப்பட்டன. கிருஷ்ணமாச்சாரிக்கு அரசியல் ஆர்வம் உருவாகிறது. சுயேச்சையாக சென்னை மாகாண உறுப்பினராக தேர்வாகிறார். அதனைத் தொடர்ந்து ராஜாஜியுடன் நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பு நேருவிடம் கொண்டு சேர்க்கிறது. இதனால் நிறுவனத்தை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு கிருஷ்ணமாச்சாரியின் மூத்த மகன் டிடி நரசிம்மனுக்கு (டிடி ஜெகன்நாதனின் அப்பா) வருகிறது.

வெளிநாட்டு நிறுவனம் நேரடியாக விநியோகம் செய்ய முடிவெடுத்ததால் நிறுவனத்துக்கு பிரச்சினை ஏற்படுகிறது. கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த நிலைமையில் இந்தியாவின் வர்த்தக அமைச்சராக டிடி.கிருஷ்ணமாச்சாரி நியமனம் செய்யப்படுகிறார். அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டதால் எப்எம்சிஜி பொருட்களுக்கான இறக்குமதியை தடை செய்கிறார். இதனால் டிடிகே குழுமம் மேலும் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் எப்எம்சிஜி பொருட்களை ஏன் இறக்குமதி செய்ய வேண்டும், சொந்தமாக தயாரிக்கலாமே என்னும் திட்டத்தில் பல ஆலைகள் தொடங்கப்படுகின்றன.

வுட்வோர்ட்ஸ் கிரைப் வாட்டர், பாண்ட்ஸ், பிரஸ்டீஜ் குக்கர், வாட்டர் மேன் இங்க் ஆகியவை முதலில் தயாரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆணுறை, மேப்ஸ், அட்லஸ், டெக்ஸ்டைல் ஆகிய பல தொழில்கள் தொடங்கப்பட்டன. இவற்றை வழி நடத்த சரியான நிர்வாகிகள் இல்லாததால் நிறுவனத்தின் கடன் ரூ.10 கோடியாக அதிகரித்தது. இதனையடுத்து 1972-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த ஜெகன்நாதன் இந்த கடன்களை எப்படி அடைத்து, பில்லியன் டாலர் நிறுவனமாக மாற்றினார் என்பதே இந்த புத்தகம்.

இனி அவருடனான உரையாடல்...

அமெரிக்காவுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்னும் எண்ணத்தில்தான் இந்தியா வந்தீர்களா?

நிச்சயம் அந்த எண்ணத்தில்தான் இங்கு வந்தேன். நான் இன்ஜினீயர் எனக்குத் தொழில் தெரியாது. முடிந்தவரை இங்கு எதாவது செய்வோம். இல்லை எனில் அமெரிக்கா போய்விடலாம் என்னும் எண்ணத்தில்தான் இங்கு வந்தேன். காரணம் அமெரிக்காவில் வேலை இருந்தது.

நீங்கள் வரும் போது சூழல் எப்படி இருந்தது?

ஒரு நிறுவனத்தை தவிர மற்ற நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்தன. ஒவ்வொரு நிறுவனமாக மாற்றுவதற்கு முயற்சி செய்தேன். இப்போது போல நிறுவனங்களை வாங்குவதற்கு யாரும் இல்லை. வென்ச்சர் கேபிடல், பிரைவேட் ஈக்விட்டி போன்ற முதலீடுகளும் இல்லை. நிறுவனத்தை மூடலாம். ஆனால் கடனை யார் அடைப்பது. கடனை அடைப்பதற்காகவாவது நிறுவனத்தை லாபமீட்ட வைக்க வேண்டும்.

இவ்வளவு கடனுக்கு காரணம் என்ன?

நாங்களே ஆலை தொடங்க முயற்சி செய்தோம். வங்கியில் கடன் வாங்கிதான் நிறுவனத்தை நடத்தினோம். சொந்தமாக முதலீடு இருந்தாலே முதல் ஐந்தாண்டுகளில் எந்த நிறுவனமும் லாபம் ஈட்டாது. நாங்கள் கடன் வாங்கி நடத்தினோம். இதனால் அதிக கடன் உருவானது.

நான் இங்கு வரும் போது ஒரு நிறுவனம் மட்டுமே லாபத்தில் இயங்கியது. அதை வைத்து மற்ற கடனை அடைத்தோம். சில நிறுவனங்களை மூடினோம். சிலவற்றை விற்றோம். இப்போது நினைத்தால் எப்படி மீண்டு வந்தோம் என நினைக்க தோன்றுகிறது. எங்கள் வருமானம் ரூ.2,000 கோடி இருக்கும் என கனவில் கூட நினைக்க வில்லை.

அமெரிக்காவில் இருந்து ஏன் வந்தோம் என நினைத்தது உண்டா?

முதல் பத்து ஆண்டுகள் தினமும் இந்த எண்ணம் தோன்றும். 72-ல் இந்தியா வந்தாலும் 1985 ஆண்டுதான் லாபம் ஈட்ட தொடங்கினோம். 2001-ம் ஆண்டு வரைக்கும் கடனை அடைத்தோம். சொந்த முதலீடு இருந்தால் 5 ஆண்டுகளில் லாபம் ஈட்டியிருக்கலாம். கடன் என்பதால் அதிக காலம் தேவைப்பட்டது.

Gasket Release System. இதனை நீங்கள்தான் கண்டுபிடித்தீர்கள். ஏன் காப்புரிமை வாங்கவில்லை.?

குக்கர் சந்தையில் நாங்கள் முக்கிய இடத்தில் இருந்தோம். நாங்க கண்டுபிடிக்கும் முன்பு குக்கர் வெடிக்கும் நிலை இருந்தது. நாங்கள் கண்டுபிடித்த பிறகு யாருடைய குக்கர் வெடிக்க தொடங்கினாலும் குக்கர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும். அதனால் அதற்கு காப்புரிமை வாங்கவில்லை.

தற்போதைய தொழில்முனைவோர்களுக்கு சொல்ல விரும்புவது?

உங்களை நம்புங்கள், பிரச்சினைகளை சந்தியுங்கள், common sense-யை பயன்படுத்துங்கள்

டிடிகே குழுமத்தின் இலக்கு என்ன?

தற்போது ரூ.2,000 கோடி வருமானம் இருந்தாலும் இதில் ஏற்றுமதி ரூ.100 கோடி மட்டுமே. சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம். 2022-ம் ஆண்டு ரூ.5,000 கோடிக்கு வருமான இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம். இதில் ரூ.1,000 கோடி ஏற்றுமதியாக இருக்க வேண்டும் என திட்டமிட்டி ருக்கிறோம்.

karthikeyan.v@thehindutamil.co.in
எகிறப்போகிறது தங்கம் விலை: தீபாவளிக்குள் ஒரு பவுன் ரூ.34 ஆயிரமாக உயரலாம்

Published : 10 Jun 2018 13:49 IST

பிடிஐ மும்பை,



கோப்புப்படம்

சர்வதேச அரசியல் சூழல்கள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது உள்ளிட்ட பல காரணங்களால், தீபாவளிக்குள் தங்கம் ஒரு பவுன் ரூ.34 ஆயிரத்தை எட்டும் வாய்ப்புள்ளது எனத் தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வால்,அதை அதிகமான விலை கொடுத்து வாங்கும் பொருட்டு டாலரின் தேவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தேவை அதிகரித்து, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ரூ.67.53 காசுகளாக இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல், சர்வதேச அரசியல் சூழல் காரணமாகவும், ரூபாயின் மதிப்பில் நிலையற்ற தன்மை இல்லை. இதனால், தங்கத்தின் விலையிலும் அதிகமான ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
 
ஜூன் 1-ம் தேதி முதல் இன்று வரை ஆபரணத் தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.260 அதிகரித்துள்ளது. இதனால், 8 கிராம் கொண்ட ஆபரணத் தங்கத்தின் மதிப்பு ரூ.23,760 ஆக உள்ளது. இந்த மாதத்தில் குறைந்தபட்சமாக பவுனுக்கு ரூ.23,496 இருந்தநிலையில், இந்த விலை உயர்வு வந்துள்ளது.

இந்நிலையில், தீபாவளிக்கு முன்பாக தங்கத்தின் தேவை காரணமாகவும், டாலரின் மதிப்பு உயர்வாலும், தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.34 ஆயிரமாக அதிகரிக்கும்வாய்ப்பு இருக்கிறது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கமாடிட்டி டிரேட் ரிஸ்க் மேனேஜ்மென்ட் ஞானசேகர் தியாகராஜன் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சந்தையில் தங்கம் பவுனுக்கு ரூ.34 ஆயிரத்தை எட்டிவிடும் என்று கருதுகிறோம். சர்வதேச அளவில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1260 முதல் 1400 டாலர் வரை உயரக்கூடும்.

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி வீத உயர்வு, சர்வதேச அரசியல் சூழல்கள், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவு ஆகியவற்றால், தங்கத்தின் விலை உயரக் காரணமாக இருக்கும்.

கடந்த 8-ம் தேதி நிலவரப்படி 10 கிராம தங்கத்தின் விலை ரூ.31,10 ஆகவும், அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,302.70 டாலராகவும் இருக்கிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்தி, வலுப்படுத்தும் பட்சத்தில் தங்கத்தின் விலையை உள்நாட்டுச் சந்தையில் உயராமல் தடுக்கலாம். ஆனால், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புச் சரிவை தடுப்பது என்பது கடினமானதாகும். அதுமட்டுமல்லாமல், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும்பட்சத்தில் மக்களின் முதலீடு தங்கத்தை நோக்கித் திரும்பு அப்போது தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை உயரும். மேலும், பருவமழை சாதகமாக இருப்பது, பண்டிகை காலம், வேளாண்மை சிறப்பாக இருத்தல் போன்றவற்றால், மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.இதனால், தீபாவளி நேரத்தில் தங்கத்துக்கான தேவை உயர்ந்துவிலை அதிகரிக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.


கமாடிட்டி அன்ட் கரன்சி மேனேஜ்மென்ட் இயக்குநர் பிரித்தி ரதி கூறுகையில், சர்வதேச சந்தை சூழல்கள், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவு, பணவீக்கம் ஆகியவற்றைப் பார்க்கும் போது, தீபாவளிக்குள் தங்கம் ஒரு பவுன் ரூ.34 ஆயிரத்தை எட்டும் என நினைக்கிறேன். 2018-ம் ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ரூ.31,800 வரை உயர்ந்து நிலை பெறக்கூடும், அல்லது குறைந்த சராசரியாக ரூ.30,400 ஆக இருக்கும் எனத் தெரிவித்தார்.

ஏஞ்செல் புரோக்கிங் நிறுவனத்தின் தலைமை பொருளாதார ஆய்வாளர் பிரதமேஷ் மலையா கூறுகையில், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்துவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதைப் பார்க்கிறேன். இதனால், தங்கத்தின் விலையில் மிகப்பெரிய மாற்றம் வரலாம். தீபாவளிப்பண்டிகைக்குள் தங்கம் ஒரு பவுன் ரூ.31,500 முதல் ரூ.34 ஆயிரம் வரை உயரலாம். சராசரியாக ரூ.30 ஆயிரத்தில் இருக்கும். அதுமட்டுமல்லாமல், சர்வதேச அரசியல்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றில் சாதகமான போக்கு தென்பட்டால், இதில் மாற்றங்கள் நிகழலாம் எனத் தெரிவித்தார்
பேண்ட்டுக்குள் பாம்பு’ ஏறியது கூட தெரியாமல் 30 நிமிடம் பைக் ஓட்டிய இளைஞர் உயிர் தப்பிய அதிசயம்

Published : 10 Jun 2018 17:28 IST

கதக்
 

வீரேஷ் பயணம் செய்த பைக் - படம்: சிறப்பு ஏற்பாடு

பேண்ட்டுக்குள் பாம்பு ஏறியது கூடத் தெரியாமல் இளைஞர் 30 நிமிடம் பைக் ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பின் சுதாரித்து பேண்ட்டை கழற்றி வீசியதால், உயிர் தப்பியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம், கதக் மாவட்டம், நராகுண்ட் நகரைச் சேர்ந்தவர் வீரேஷ் கடேமணி(வயது32). இவர் சின்ன ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மார்க்கெட்டுக்கு சென்று தனது ஹோட்டலுக்கு தேவையான காய்கறிகள் வாங்க வீரேஷ் சென்றுள்ளார். அப்போது, பேண்டுக்குள் ஏதோ குளுகுளு என்று ஊர்வதுபோல் இருந்துள்ளது. தண்ணீர் ஏதும் பேண்டில் பட்டிருக்கும் என நினைத்து பைக் ஓட்டுவதிலேயே வீரேஷ் கவனமாக இருந்துவிட்டார்.
 
அதன்பின் மார்க்கெட்டுக்கு சென்ற வீரேஷ் தனது ஹோட்டலுக்கு தேவையான காய்கறிகள் அனைத்தையும் வாங்கிவிட்டு, நண்பர்களைச் சந்தித்துவிட்டு திரும்பு உள்ளார். அப்போது பைக்கில் வரும் போது, தனது கால் பகுதியில் பாம்பின் வால்பகுதி இருப்பதைக் கண்டு வீரேஷ் நடுங்கிப்போனார். உடனே பைக்கை கீழே போட்டுவிட்டு, அருகில் உள்ள ஒரு கடைக்குள் சென்று தனது பேண்ட்டை கழற்றி வீசியுள்ளார். அப்போது, அவரின் பேண்ட்டில் இருந்து 2 அடிநீளத்தில் ஒரு பழுப்பு நிறத்தில் பாம்பு ஒன்று ஓடியுள்ளது.

இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதை அடிக்க முற்பட்டபோது, அது அருகில் இருந்த கழிவுநீர் தொட்டிக்குள் சென்று மறைந்தது.

இது குறித்து வீரேஷ் கூறுகையில், என்னுடைய ஹோட்டல் சுனந்தா அகஸி பகுதியில் உள்ளது. அங்கு எப்போதும் கூட்டமாகஇருக்கும் என்பதால், எனது பைக்கை அருகில் உள்ள ஒரு மரத்தின் கீழ் நிறுத்தி இருந்தேன். நான் மார்க்கெட்டுக்கு புறப்படும் முன் மழை பெய்ததது. ஆனால், பைக்கில் சிறிது தொலைவு சென்றதும் மழை நின்றுவிட்டது. ஆனால், எனது பேண்ட்டுக்குள் மட்டும் குளுகுளு என்று இருந்ததால், மழைநீர் பட்டிருக்கும் என நினைத்துவிட்டேன். ஆனால், பாம்பின் வால் எனது பாதம் அருகே வந்தபோதுதான் ஆபத்தை உணர்ந்து பைக்கி்ல் இருந்து ஆலறி அடித்து, கீழே குதித்தேன். எனது நண்பரின் கடைக்குள் வேகமாக ஓடிச் சென்று பேண்ட்டை கழற்றிவீசினேன். அப்போது பேண்ட்டுக்குள் இருந்து பாம்பு ஓடியது. எப்படி வந்தது எனத் தெரியவில்லை.

என் பேண்ட் முழுவதும் மழைநீர் பட்டு ஈரமாக இருந்ததால், பாம்பு என் கால், பகுதியில் ஏறியபோது எனக்கு உணர்வில்லை. வால் பகுதி மட்டும் தெரியவில்லை என்றால், என் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்துக்கு பின் வீரேஷ் மிகவும் பயந்த நிலையில், பதற்றத்துடன் காணப்பட்டார். இதையடுத்து, வீரேஷை அவரின் நண்பர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அழைத்துச் சென்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
'ஆன்லைன்' கவுன்சிலிங் பி.ஆர்க்.,கிற்கு, இல்லை

Added : ஜூன் 11, 2018 00:30

தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட, பி.ஆர்க்., கல்லுாரிகளில், 3,500 இடங்கள் உள்ளன. இவற்றில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அண்ணா பல்கலை வாயிலாக, ஒற்றை சாளர முறையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க, இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் நடத்தும், 'நாட்டா' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, நாட்டா தேர்வு, ஏப்ரல், 29ல், நாடு முழுவதும் நடந்தது. இதற்கு, 49 ஆயிரத்து, 390 பேர் பதிவுசெய்திருந்தனர். தேர்வு முடிவுகள், ஜூன், 6ல், வெளியாகின. இதில், 69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 2017ஐ விட, 19 சதவீதம் குறைவாகும். மாநில அளவிலான தேர்ச்சியில், 84 சதவீதத்துடன், கோவா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில், 5,623 பேர், நாட்டா தேர்வில் பங்கேற்று, 3,364 பேர், அதாவது, 60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், 2,267 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.இந்த இடங்களில், நாட்டா தேர்ச்சி பெற்ற, 3,364 பேருக்கு, தரவரிசை அடிப்படையில், இடங்கள் ஒதுக்கப்படும்.இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், ஜூலையில் நடத்தப்பட உள்ளது.இன்ஜினியரிங் படிப்புக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பி.ஆர்க்., கவுன்சிலிங்கை, வழக்கம் போல, ஒற்றை சாளர முறையிலேயே நடத்த, உயர்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது. இதனால், மாணவர்கள் சென்னைக்கு வந்து, நேரில் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான விண்ணப்ப பதிவு மட்டும், ஆன்லைனில் நடத்தப்படும்.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, சில தினங்களில் அண்ணா பல்கலை வெளியிடும் என, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
- நமது நிருபர் -
மருத்துவ படிப்பு சேர்க்கை இன்று முதல் விண்ணப்பம்

Added : ஜூன் 11, 2018 00:36

சென்னை: தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, மாநில மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில், மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில், விண்ணப்பங்களை நேரடியாக பெறலாம். மேலும், www.tnhealth.org என்ற, இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம்செய்தும் பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்காக, 70 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 18ம் தேதிக்குள், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
மாவட்ட செய்திகள்

வல்லக்கோட்டை முருகன் கோவில் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்



வல்லக்கோட்டை முருகன் கோவில் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூன் 11, 2018, 05:30 AM

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தை அடுத்த வல்லக்கோட்டை ஊராட்சியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பிரசித்தி பெற்ற வஜ்ஜிர தீர்த்த குளம் உள்ளது. கடந்த மே மாதம் 19-ந் தேதி வைகாசி விசாக பிரம்மோற்சவவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 31-ந்தேதி விழா முடிவடைந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வஜ்ஜிர தீர்த்த குளத்தில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

தற்போது இந்த குளம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளாக மிதக்கிறது. வேண்டுதலுக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

எனவே குளத்தில் தேங்கி உள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றி சுத்தப்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என பக்தர்களும், பொதுமக்களும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

NEWS TODAY 21.07.2026