Friday, June 15, 2018

கல்விக் கடனுக்காகத் திண்டாடிய சென்னை திவ்யா, இன்று ஜெனரல் மோட்டார்ஸின் சி.எஃப்.ஒ! #SuccessStory


FRIDAY, JUNE 15, 2018

Posted Date : 17:05 (15/06/2018

கல்விக் கடனுக்காகத் திண்டாடிய சென்னை திவ்யா, இன்று ஜெனரல் மோட்டார்ஸின் சி.எஃப்.ஒ! #SuccessStory

 ஆ.சாந்தி கணேஷ்

இந்தியாவில் மட்டுமன்றி, உலகம் முழுக்க உள்ள முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் இந்த நிமிடம் உச்சரித்துக்கொண்டிருக்கும் பெயர், திவ்யா சூர்யதேவரா

யார் இந்த திவ்யா சூர்யதேவரா? அமெரிக்காவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனம், ஜெனரல் மோட்டார்ஸ். சுருக்கமாக ஜி.எம். உலகப் புகழ்பெற்ற `செவர்லே' கார், இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான். இந்த நிறுவனத்தின் மிகமுக்கியமான பதவியான `தலைமை நிதி அதிகாரி'யாக (சிஎஃப்ஓ), செப்டம்பர் மாதம் பதவியேற்க உள்ளார் திவ்யா. இந்த அளவுக்குப் பெரிய மல்ட்டி நேஷனல் கம்பெனி ஒன்றில், முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்கப்போவது நம் திவ்யாதான். யெஸ்! திவ்யா நம்ம சென்னைப் பொண்ணு. சென்னையில் பிறந்து வளர்ந்து, இளநிலை மற்றும் முதுநிலை வணிகவியல் படிப்பையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முடித்தவர். 

இன்று உலகமே கொண்டாடும் திவ்யாவின் இளமைக் காலம் அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை. சிறு வயதில் தந்தையை இழந்தவர். அம்மாவின் அரவணைப்பில்தான் இத்தனை உச்சங்களையும் தொட்டிருக்கிறார். உடன்பிறந்த இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். அப்போதிருந்த குடும்பச் சூழ்நிலையால் சென்னையின் பெரிய கல்லூரிகளில் படிக்கமுடியவில்லை. பிறகு, கல்விக் கடன்பெற்று அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்கச் சென்றார். அங்கே  பட்டயக் கணக்காளராகவும், நிதி ஆய்வாளராகவும் பயிற்சிபெற்ற திவ்யா, யுபிஎஸ் மற்றும் பிரைஸ்வாட்டர் ஹவுஸ்கூப்பர்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார். உலகமே தன்னைத் திரும்பிப் பார்க்கக் காரணமாக இருக்கப்போகும் ஜெனரல் மோட்டார்ஸில் 2005-ம் ஆண்டில் இணைந்தார். அந்த நிறுவனத்தின் பல துறைகளிலும் பணியாற்றியவர், சென்ற வருடம் ஜூலை மாதம், நிறுவனத்தின் கார்ப்பொரேட் ஃபைனான்ஸ் துறையின் வைஸ் பிரசிடென்ட்டாக உயர்ந்தார். 

13 வருடங்கள் ஒரே நிறுவனத்தில் உழைப்பு... வெற்றி... கடுமையான உழைப்பு... அபாரமான வெற்றி எனத் தன் இலக்குகளை, வானத்துக்கு ஏணியாக்கி உழைத்ததன் பலன் ... இன்று, 39 வயதிலேயே, ஃபைனான்ஸியல் ஜாம்பவான்கள் எல்லோரும் அண்ணாந்து பார்ப்பவராக உயர்ந்துள்ளார் திவ்யா.

ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பாரா, ``திவ்யாவின் அனுபவம், இதுவரை எங்கள் நிறுவனத்தின் நிதித் துறையிலும் தொழில் வளர்ச்சியிலும் மிகச்சிறந்த மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. நிதித் துறையின் தலைமைப் பொறுப்புக்குத் திவ்யாவின் வருகை, எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை இன்னும் அதிகப்படுத்தும்'' என்று இப்போதே திவ்யாவின் திறமைக்கு சர்ட்டிஃபிகேட் கொடுத்துவிட்டார்.

திவ்யா, அடிக்கடி நிறுவனங்களை மாற்றும் இயல்பில்லாதவர். பர்சனல் விஷயங்களை வெளியே பகிர்ந்துகொள்கிற இயல்பு திவ்யாவிடம் சுத்தமாகக் கிடையாது.  சமூக வலைதள நடமாட்டமும் இவரிடம் கிடையாது. அமெரிக்காவில் செட்டிலானாலும், இந்திய உணவுகளின் மேல் காதலாக இருப்பவர். திவ்யா பயணங்களின் காதலியும். பணிச் சுமைகளுக்கு மத்தியிலும் சின்ன சின்னப் பயணங்களை ஆரம்பித்துவிடுகிறார்.

பேட்டி ஒன்றில், ``நான் அமெரிக்காவுக்குப் படிக்க வந்தபோது, என் குடும்பம் என்னைவிட்டு வெகுதூரத்தில் இருந்தது. படிக்கவந்த இடத்தில் எனக்கு ஏற்பட்ட கலாசார அதிர்வுகளை என்னால் அம்மாவுடன் பகிர்ந்துகொள்ள முடியாத தூரம். அமெரிக்காவில் படித்த காலத்தில் என்னிடம் தேவைக்கு மிஞ்சி பணம் இருக்காது. மற்றவர்கள் எல்லோரும் ஜாலியாகச் சுற்றுலா போவார்கள். என்னால் அவர்களின் சந்தோஷங்களை பார்க்க மட்டுமே முடியும். அவர்களுடன் இணைந்து செல்ல முடியாது. நான் படிப்பதற்காக வாங்கிய லோனை அடைக்க வேண்டும். அதற்குப் படித்துக்கொண்டே வேலை பார்க்க வேண்டும் என்கிற நிலை'' எனத் தன் ஆரம்ப காலத்தை, மென் சோகத்துடன் நினைவுகூர்கிறார் திவ்யா.

கல்வியும் கடுமையான உழைப்பும் ஒரு பெண்ணை எந்த உயரத்துக்கும் கொண்டுசெல்லும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் நம்ம சென்னை திவ்யா!

வெளிநாடுவாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்திற்குள் திருமணத்தை பதிய வேண்டும்: மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: வெளிநாடுவாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்திற்குள் திருமணத்தை பதிய வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறும்பட்சத்தில் பாஸ்போர்ட், விசா வழங்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹைதராபாத்தில் 10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்

அன்றாடம் 3 வேளை உணவுக்கு பலர் திண்டாடும் நிலையில், 10 ரூபாய்க்கு 2 வேளை உணவும், தங்குமிடமும் ஹைதராபாத்தில் அளிக்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் உள்ள சேவா பாரதி என்ற அமைப்பு, நோயாளிகளைக் காண வரும் உறவினர்கள், குடும்பத்தாருக்கு 10 ரூபாய்க்கு உணவும், தங்குமிடத்தையும் மக்களுக்கு அளித்து வருகிறது.

இது குறித்து சேவா பாரதி அமைப்பின் செயலாளர் நரசிம்ம மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:

நாங்கள் இந்தச் சேவை அமைப்பைத் தொடங்கி இருக்கும் நோக்கமே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் காண வரும் உறவினர்கள், அவரின் குடும்ப உறவினர்களுக்காகத்தான். இதே வர்த்தக நோக்கில் தொடங்காமல் சேவை நோக்கில் தொடங்கி கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து நடத்தி வருகிறோம்.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் எங்களிடம் வந்து, நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக ஒரு சிறிய ஓய்விடம் அமைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி நாங்கள் சிறிய அளவிலான தங்குமிடத்தை அடுத்த 3 மாதங்களில் அமைத்துக் கொடுத்தோம். அப்போது 10 பேர் மட்டுமே வந்து தங்கினார்கள்.

ஆனால், இப்போது நாள் ஒன்றுக்கு 250பேர் வரை தங்குகிறார்கள். வாரத்துக்கு 7 ஆயிரம் பேர்வரை வருகிறார்கள். இன்று முதல் நாங்கள் 10 ரூபாயில் மதிய உணவும், காலை உணவும் வழங்குகிறோம். வெகுதொலைவில் இருந்து வரும் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் இங்குத் தங்கி, 10 ரூபாயில் இரு வேளை உணவு சாப்பிடலாம் எனத் தெரிவித்தார்.

இங்குத் தங்கி இருக்கும் விஜய லட்சுமி என்ற பெண் கூறுகையில், நான் ராமோஜி திரைப்பட நகரில் இருந்து வருகிறேன். இது ஹைதராபாத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. எனக்கு முதுகு தண்டுவடத்தில் வலி இருப்பதால், தொடர்ந்து மருத்துசிகிச்சை எடுக்க வேண்டியது இருக்கிறது. என்னால் ஹோட்டலில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்க வசதியும் இல்லை. ஆனால், இங்கு இலவசமாகத் தங்குமிடமும், 10 ரூபாய்க்கு இரு வேளை உணவும் கிடைக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது. 2 நாட்களாகத் தங்கி இருக்கிறேன் எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.

இங்குத் தங்கிக்கொள்கிறேன், குளிப்பது, சாப்பிடுவதும் சுத்தமாக இருக்கிறது, பாதுகாப்பாகவும் இருக்கிறது. நாட்டில் நீண்ட தொலைவில் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு வரும் மக்கள் இங்கு வந்து தங்குகிறார்கள். 10ரூபாய்க்கு சாப்பாடும், தங்குமிடமும் கிடைப்பதால், வேறு எதைப்பற்றியும் யோசிக்கத் தேவையில்லை எனத் தெரிவித்தார்

பேரறிவாளனை விடுவிக்க முடியாவிட்டால் கருணைக் கொலை செய்து விடுங்கள்: அற்புதம்மாள் உருக்கம்

சென்னை

Published :  15 Jun 2018  17:41

பேரறிவாளனை விடுவிக்கமுடியாவிட்டால் அவரை நீங்களே கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று அவரது தாயார் அற்புதம்மாள் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 1991-ம் ஆண்டு முதல் 27 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனில்லாமல் போனது.

உச்ச நீதிமன்றம், தமிழக அரசு, மத்திய அரசு இறுதியில் குடியரசுத் தலைவர் என கோரிக்கைகள் பல இடங்களில் வைக்கப்பட்டும் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. தற்போது நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுவிக்குமாறு தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் நேற்று நிராகரித்துள்ளார்.

இது குறித்து ராம்நாத் கோவிந்த், "ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசு உடன்படவில்லை. குடியரசுத் தலைவர் என்ற முறையில் இதுபோன்ற விஷயங்களில் நான் எனது அமைச்சர்களின் ஆலோசனைப்படிதான் நடக்க இயலும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

குடியரசுத் தலைவர் நிராகரித்ததால் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மனம் உடைந்தார். பேரறிவாளன் விடுதலையை என் வாழ்நாளில் பார்ப்பேனா? என்று சமீபத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் பேரறிவாளன் விடுதலை குறித்து உருக்கமாக வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்நிலையில் அற்புதம்மாள் வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தினம் தினம் துடிப்பதை விட மத்திய அரசே அவரைக் கருணைக் கொலை செய்யலாம். மத்திய அரசின் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம்” என்று அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

மேலும், குடியரசுத் தலைவர் இந்த வழக்கில் இப்போது வருவது ஏன்? என கேள்வி எழுப்பிய அற்புதம்மாள், குடும்பத்துடன் கருணைக் கொலை செய்யுமாறு மத்திய அரசிடம் மனு அளிக்க முடிவெடுத்துள்ளார்.

நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


சாதி பெயரில் ஓட்டல் நடத்துவதில் தவறில்லை; அரசியலமைப்பு சட்டத்தில் இடமுண்டு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை

Published :  14 Jun 2018  07:59 IST

சாதி பெயர்களில் ஓட்டல்கள் இருப்பது தவறில்லை. கடைகளுக்கு விரும்பிய பெயர்களை சூட்டுவதற்கு உரிமையாளர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ கிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே என்ற பெயரில் ஓட்டல் செயல்படுகிறது. இந்த கடையின் பெயர் பலகையை அகற்றக்கோரி பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் 2012-ல் போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக 112 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 112 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

கடைகளுக்கு தாங்கள் விரும்பும் பெயர்களை சூட்டுவதற்கு உரிமையாளர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் 19(1) (ஏ) மற்றும் 19 (1) (ஜி) பிரிவு உரிமை வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமையில் தலையிட முடியாது.

இந்த உரிமையின் அடிப்படையில் கடையின் உரிமையாளர் தனது ஓட்டலுக்கு ஸ்ரீ கிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே என பெயர் சூட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட கடைகளில் தீண்டாமை பின்பற்றப்பட்டால், குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அனுமதிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடலாம். ஆனால். இந்த ஓட்டலில் அவ்வாறு இல்லை.

மதுரையில் கோனார் மெஸ், முதலியார் இட்லி கடை என குறிப்பிட்ட சமூகங்கள், சாதிகளை குறிப்பிடும் வகையில் பல ஓட்டல்கள் உள்ளன. சாலையோரங்களில் பல்வேறு இடங்களில் ஐயங்கார் பேக்கரி என்ற பெயரில் பேக்கரி, காபி கடைகள் இருக்கின்றன. புதுச்சேரியில் ரெட்டியார் மெஸ் உள்ளது. இந்த மெஸ்சில் கல்லூரியில் பயிலும் காலங்களில் சாப்பிட்டுள்ளேன். இதனால் சாதி பெயர்களில் ஓட்டல்கள் இருப்பது தவறில்லை.

மனுதாரர்கள் பெரியாரின் கொள்கை மீதான பற்றுதலால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்று ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாகிறது. மனுதாரர்கள் வன்முறையில் இறங்கவில்லை. இதனால் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டியதில்லை. வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

HC quashes MG varsity VC appointment

Press Trust of India | Kochi Last Updated at February 19, 2018 19:40 IST

The Kerala High Court today set aside the appointment of Babu Sebastain as the vice chancellor of the Mahatma Gandhi University holding that he lacked requisite qualifications required for the post.

A division bench comprising Chief Justice Antony Dominic and justice Dama Sheshadri Naidu found that Sebastian was not qualified to be the vice chancellor as he lacked the requisite qualifications prescribed for the post as stipulated by the University Grants Commission.

The court gave the order on a public interest litigation by one Prem Kumar challenging the appointment.

As per the requirement, 10 years teaching experience and professorship, besides research experience was required for the appointment.

Sebastian was only an associate professor in an aided college.

The qualification considered for his appointment was his 10-and-a-half years experience in the state institute of education technology.

The court found that it cannot be considered as a qualification for the appointment of Vice Chancellor.

(This story has not been edited by Business Standard staff and is auto-generated from a syndicated feed.)
Madras high court sets aside appointment of VC to Madurai Kamaraj University

DECCAN CHRONICLE.

PublishedJun 15, 2018, 2:59 am IST

The petitioner also alleged that a criminal case against the VC was pending.


Madras high court.

Chennai: Finding fault with the convener of the Search Committee which nominated Dr P.P. Chellathurai for the post of Vice-Chancellor of the Madurai Kamaraj University, the Madras High Court on Thursday set aside his appointment as VC. Dr. P. P. Chellathurai was appointed as VC of the prestigious University in May last year.

When the petitions filed by M. Lionel Antony Raj and 'Traffic' Ramaswamy challenging his appointment as VC came up for hearing, the first bench comprising Chief Justice Indira Banerjee and Justice M.Sundar said “We set aside the appointment of Dr. P.P. Chellathurai, as VC of MKU on the ground that the proceedings of the Search Committee are flawed without expressing any opinion on eligibility and noticing that Dr.P.P.Chellathurai has been dropped/deleted from the criminal case/charge sheet after Dr C. Murukadas, Convener, Vice-Chancellor Search Committee for Madurai Kamaraj University, acted in a highhanded manner. Opposing his behaviour, a member had resigned. The final meeting of the Committee was held on May 19, 2017 at a hotel near Raj Bhavan.

The process of elimination of names and inclusion of three names was hurriedly thrust upon two members by the Convenor in the fifth and final meeting. 

The Convenor abruptly mentioned and insisted that the name of Dr. Chelladurai should be included in the panel. In the first four meetings, the process of selection or evaluation of the merits and demerits of the various applicants had not commenced. There was virtually no meeting as on May 19, 2017 when the selection committee hurriedly proceeded to Raj Bhavan and handed over a panel of three names. The petitioner also alleged that a criminal case against the VC was pending.

The bench said “a University is a seat of learning and the highest seat in a University is so sanctus that the selection process cannot just be a routine, but should be a rigour by itself. Universities are prime movers, which catalyse the ever expanding vistas of knowledge and learning. Such institutions are not limited to literacy programmes, but are crucial components of the machinery of nation building education, as they define, develop and decide the destiny of generations to come. Perceived from this point of view, this court is of the considered opinion that offices of such nature are so sanctus that when there are statutory violations in selection procedure, the curative response is non-negotiable and inevitable.”

Recommending constitution of a fresh Search Committee for nominating VC to the Varsity, the bench said “Considering the high office that is in question, the VC of a reputed University like MKU, wherein the Vice-Chancellor shall not only be the academic head, but also the Chief Executive Officer of the entire University, we consider it necessary to take a view that the Search Committee has to be constituted afresh and the process of selection has to be redone”.

There is a clear violation of statute of Madurai Kamaraj University Act 1965 and, more importantly, such violation pertains to the selection process and procedure, the bench said. While unseating the VC, the bench issued certain directions for redoing the selection process and appointment of VC of MKU in accordance with the statute and by following the process and procedure for selection in letter and spirit. The process shall be completed within a period of three months.

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...