Friday, September 21, 2018

கோவை கல்லூரி அதிபர், 'செக்ஸ் டார்ச்சர்' பரவும் ரகசிய வீடியோ: புகார் கூறிய பெண் மாயம்

Added : செப் 20, 2018 21:42

கோவை, கோவை, தனியார் கல்லுாரி தாளாளர் மீது பாலியல் புகார் அளித்த பெண் ஊழியர், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து திடீரென மாயமானார். தாளாளரின் பாலியல் சீண்டல், 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள தனியார் கல்லுாரியின் தாளாளர், தன் கல்லுாரியில் பணியாற்றும் பெண் ஊழியரை முத்தமிடும் வீடியோ காட்சிகள், நேற்று முன்தினம், சமூக வலைதளங்களில் பரவியது.அதில், தாளாளர், தன் அலுவலக அறையில் ஒருவித பரபரப்புடன் நடமாடுகிறார். அடுத்த சில விநாடிகளில், கல்லுாரி ஊழியரான இளம்பெண் ஒருவர் உள்ளே நுழைகிறார். கைநீட்டி அருகில் அழைக்கும் தாளாளர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சுவற்றோரம் தள்ளி, கட்டிஅணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு, சில்மிஷத்தில் ஈடுபடுகிறார். சற்று போராடியது போல, மறுப்பு தெரிவித்த அந்த பெண், அவரை விலக்கி விட்டு, வெளியேறுகிறார்.

இதேபோன்ற மற்றொரு காட்சி, மற்றொரு நாளில் நடந்தது போன்று, வெவ்வேறு உடைகளில் அந்த பெண் வந்து போகிறார். இவ்வாறு, மூன்று வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகின.இதற்கிடையே, பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த இளம்பெண், நேற்று முன்தினம், துடியலுார் பெண் போலீசில் புகார் அளித்தார்.அவரிடம் போலீசார், ஒரு மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், வீட்டிற்குச் செல்ல நேரமாகி விட்டதாகக் கூறி அப்பெண், அங்கிருந்து மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.துடியலுார், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை கூறியதாவது:புகார் அளிக்க வந்த பெண்ணிடம் விசாரித்தோம். பாலியல் ரீதியிலான புகார் என்பதால், நேரடியாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய முடிவு செய்தோம்.ஆனால், அந்த பெண், தன் பெற்றோரிடம் கலந்தாலோசித்து வருவதாக சொல்லி, புகார் மனுவை திரும்ப பெற்று சென்றுவிட்டார்.இவ்வாறு, அவர் கூறினார்.புகாரில் சிக்கியுள்ள கல்லுாரி தாளாளரின் மகன் கூறியதாவது:எங்கள் நிறுவனத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக, சிலர் செயல்படுகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவிற்கும், எங்கள் கல்லுாரிக்கும், எந்த தொடர்பும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

ஆர்.டி.ஓ., அதிகாரி மனைவியின் வங்கி லாக்கர்கள் 25ல் மதிப்பீடு

Added : செப் 20, 2018 21:37

விழுப்புரம், லஞ்சம் வாங்கி, கைதாகி உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர், மனைவியின் வங்கி லாக்கர்கள் வரும், 25ல், அரசு நகை மதிப்பீட்டாளர் மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது..விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றியவர், பாபு, 55. இவர், 11ம் தேதி சுற்றுலா வேனிற்கு தகுதி சான்று வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஆய்வு

கடலுாரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார், 32.50 லட்சம் ரூபாய் ரொக்கம், வங்கி பாஸ் புக், தங்கம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். இதையடுத்து அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இந்நிலையில், கடலுார் மஞ்சக்குப்பம் ஸ்டேட் வங்கியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாபுவின் மனைவி மங்கையர்கரசி பெயரில் இருந்த மூன்று லாக்கர்களுக்கு, 'சீல்' வைத்தனர்
.
ஜாமின் மனு

இது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு மனைவியின் வங்கி லாக்கர்களில் நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் உள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளது.அந்த லாக்கர்களை அரசு நகை மதிப்பீட்டாளர் மூலம் திறந்து, மதிப்பீடு செய்ய முடியும். வரும், 25ல் லாக்கர்கள் திறந்து ஆய்வு செய்யப்பட உள்ளன. அப்போது தான் பாபுவிடம் இருந்து கைப்பற்றப்படும் நகை, வெள்ளி மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்த முழு விபரங்கள் தெரியவரும்.இவ்வாறு, அவர் கூறினார்.
சிறையில் உள்ள பாபு, புரோக்கர் செந்தில்குமார் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனு வரும், 24ல் விசாரணைக்கு வருகிறது.மேலும், ஆத்துார் கூட்டுறவு நகர வங்கியில் உள்ள செந்தில்குமாரின், வங்கி லாக்கரை ஆய்வு செய்ய, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில், போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவம் சார் படிப்புகள் 134 இடங்கள் நிரம்பின

Added : செப் 20, 2018 23:32


சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், பி.எஸ்சி., அவசர கால சிகிச்சை, ரேடியாலஜி போன்ற, மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, 390 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கவுன்சிலிங், பல்கலை வளாகத்தில், நேற்று துவங்கியது. இதில், 134 இடங்கள் நிரம்பின. முதல், 10 இடங்கள் பெற்ற, மாணவர்களுக்கு, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
சிவகங்கையில் மர்ம காய்ச்சல் பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு

Added : செப் 20, 2018 22:30

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில், பல கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. எந்த வகை காய்ச்சல் என்பதை அறிய, நான்கு மண்டல பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்கின்றனர்.சிவகங்கை, சாக்கோட்டை, தேவகோட்டை, கல்லல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர் காய்ச்சலும், கை, கால் மூட்டுகளில் வலியும் ஏற்பட்டன.சிக்குன்குனியா, டைபாய்டாக இருக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.சுகாதாரத் துறையினர் முகாமிட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர். இருந்தபோதிலும் காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. பக்கத்து கிராமங்களுக்கும் காய்ச்சல் பரவியது.எந்த வகை காய்ச்சல் என்பதை அறிய திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர் மண்டல பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்கின்றனர். அவர்கள் கொசு, வைரஸ் வகைகளை கண்டறிதல், காய்ச்சல் பரவும் விதம் ஆகியவற்றை வைத்து, ஆய்வு செய்கின்றனர்.சுகாதாரத் துறையினர் கூறியதாவது:குடிநீரை குளோரினேட் செய்யாதது, கழிவு கலந்தது, தண்ணீரை தேக்கி வைத்தது, குளத்து நீரை அருந்தியது போன்ற காரணங்களால், காய்ச்சல் பரவியுள்ளது.ஒரே வகையான காய்ச்சலாக இருந்தால் எளிதில் கட்டுப்படுத்தலாம். ஆனால், ஒரே கிராமத்தில் பலவகை காய்ச்சல் பாதிப்பு இருப்பது போல் தெரிகிறது. அதனால், பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
28ம் தேதிமருந்து கடைகள்அடைப்பு

Added : செப் 20, 2018 20:53

சென்னை, :மருந்து, மாத்திரையை,'ஆன்லைனில்' வாங்கிக்கொள்ள வழி செய்யும் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மருந்துக் கடைக்காரர்கள், தங்களின் வணிகம் பாதிக்கப்படும் என்கின்றனர்.மத்திய அரசு, அதை திரும்ப பெறக்கோரி, 28ம் தேதி நாடு முழுவதும், மருந்துக் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். தமிழகத்தில் மருந்து கடைகள் மூடப்படும் என, தெரிகிறது.
விமானத்தில் பறக்க ஊழியர்களுக்கு சலுகை

Added : செப் 20, 2018 19:56


புதுடில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை கால பயணச்சலுகை கட்டணத்தில், ஜம்மு - காஷ்மீர், அந்தமான் தீவுகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு, விமானத்தில் சென்று வர, இரண்டு ஆண்டுகளுக்கு சலுகை நீட்டிக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு, எல்.டி.சி., எனப்படும், விடுமுறை கால பயணச்சலுகை கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது.இதன்படி, அவர்கள் வசம் உள்ள, சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினத்தை ஒப்படைத்து, அவர்கள், குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளலாம். இதற்கான பயணச் செலவை, அரசு ஏற்கும்.இந்த திட்டத்தில், 2014ல், புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. அதன்படி, வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் அந்தமான் தீவுகளுக்கு சென்று வர, விமான கட்டணம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.இந்த சலுகை, 2018 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த மாதத்துடன், இந்த சலுகை முடிவடையும் நிலையில், அதை மேலும் இரண்டு ஆண்டு களுக்கு நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.விடுமுறை கால பயணச்சலுகை கட்டணத்தில் மோசடி செய்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நர்சிங்கிற்கு, 'நீட்' கிடையாது அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

Added : செப் 20, 2018 22:10 | கருத்துகள் (1)

சென்னை, ''பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு அடிப்படையில் நடைபெறாது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்தார்.சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், தமிழகம் - புதுச்சேரி மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான, 'மெட்ரனலைன் - 18' என்ற, கருத்தரங்கை துவக்கி வைத்து, அவர் கூறியதாவது:தமிழக மாணவர்களுக்கு, நீட் தேர்வில்இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான், அரசின் நிலைப்பாடு. எனவே, பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு, நீட் தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறாது. இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு, சுகாதாரத் துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். தேவைப்பட்டால், முதல்வர் தலைமையில் கூட்டம் நடத்தி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்.இவ்வாறு, விஜயபாஸ்கர் கூறினார்.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...