Thursday, December 13, 2018

வரும் 15, 16ல் கனமழை

Added : டிச 12, 2018 23:01

சென்னை: 'வரும், 15ம் தேதி முதல், இரண்டு நாட்கள், கனமழை கொட்டும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.இது, படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. அடுத்த, 24 மணி நேரத்தில், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.இது குறித்து, சென்னை மண்டல வானிலை மைய துணை பொது இயக்குனர், பாலசந்திரன் அளித்த பேட்டி:தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த மண்டலம், தமிழக, வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் தெற்கு மாவட்டங்கள் இடையே கரையை கடக்கும்.இதனால், 15, 16ம் தேதிகளில், தமிழக, வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில், கனமழை அல்லது மிக கனமழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், நாளை இரவு முதல், வங்க கடலை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும். மணிக்கு, 75 கி.மீ., வேகம் வரை, சூறாவளி காற்று வீசவும் வாய்ப்புள்ளது.எனவே, வங்க கடலின் தெற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு பகுதிகளுக்குள், 16ம் தேதி வரை செல்ல வேண்டாம் என, மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் டாக்டர் வேலை

Added : டிச 12, 2018 22:33

சென்னை: சவுதி அரேபியா அமைச்சகத்தின், அரசு மருத்துவமனைகளில் பணி புரிய, டாக்டர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தீவிர சிகிச்சைப் பிரிவு, இன்டர்னல் மெடிசன், பொது அறுவை சிகிச்சை, குடும்ப மருத்துவம், மகப்பேறு போன்ற பிரிவுகளில், அனுபவமிக்க அலோபதி மருத்துவர்கள் தேவை.இதற்கான நேர்முகத் தேர்வு, 17 முதல், 19ம் தேதி வரை கொச்சி; 21, 22ம் தேதிகளில், கோல்கட்டா; 24 முதல், 26ம் தேதி வரை டில்லியில் நடக்க உள்ளது.விருப்பம் உள்ளவர்கள், ovemcldr@gmail.com என்ற, இ - மெயில் முகவரிக்கு, அனுப்பி வைக்கவும்.மேலும் விபரங்களை அறிய, 044 - 22502267, 95662 39685 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தைப்பூசம் விழாவுக்கு மலேஷிய சுற்றுலா

Added : டிச 12, 2018 22:29

சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யானது, மலேஷியா, கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு, விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஜனவரி மாதம் வரும் தைப்பூசத்தை முன்னிட்டு, மலேஷியாவில் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் உட்பட, முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று வர, சென்னையில் இருந்து, ஜன., 20ம் தேதி, விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நான்கு நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 33 ஆயிரம் ரூபாய் கட்டணம்.கம்போடியா, வியட்நாம் மற்றும் லாவோஸ் செல்லவும், விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து, பிப்., 13ல் புறப்படும், எட்டு நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 1.30 லட்சம் ரூபாய் கட்டணம்.இதில், விமான கட்டணம், மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கும் செலவு, முக்கிய இடங்களில் நுழைவு கட்டணம், உணவு மற்றும் சுற்றுலா வழிகாட்டி கட்டணங்கள் அடங்கும்.மேலும் தகவலுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவகத்தை, 90031 40718, 90031 40682, 90030 24169 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.irctctourism.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தில் பங்கேற்க அழைப்பு

Added : டிச 13, 2018 02:04

புதுச்சேரி:உன்னத் பாரத் அபியான்' திட்டத்தை செயல்படுத்த ஜிப்மர் மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஜிப்மர் இயக்குனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சுற்றியுள்ள கிராமங்களை உயர்கல்வி நிறுவனங்களோடு இணைக்கும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 'உன்னத் பாரத் அபியான்' (யு.பி.ஏ.) திட்டத்தின் கீழ் ஜிப்மர் தெரிவு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது. இதற்காக, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையுடனான ஒரு ஒப்பந்தம், ஜிப்மர் இயக்குனரால் கையெழுத்திடப் பட்டது.கிராம சமுதாயங்களின் நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்த முன்னேற்றத்திற்கான சவால்களை அடையாளம் கண்டு, அதற்குப் பொருத்தமான தீர்வுகாண உயர்கல்வி நிறுவனங்கள், கிராமப்புற மக்களோடு சேர்ந்து உழைக்க வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.ஜிப்மரின் நோய்த்தடுப்பு - சமூக மருத்துவ துறைத் தலைவர் சோனாலி சர்க்கார், டாக்டர் பழனிவேல், ஜிப்மரில் உன்னத் பாரத் அபியான் திட்டத்தை செயல்படுத்துவற்கான ஏற்பாடுகளை செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்காக பல்வேறு கிராமப் பகுதிகள், நோய்த்தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் கல்வியாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் முன்வந்து முனைப்புடன் பங்குபெற வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மனைவியை கைவிட்ட என்.ஆர்.ஐ.,க்களின் பாஸ்போர்ட்கள் ரத்து

Added : டிச 12, 2018 22:39 |






புதுடில்லி: மனைவியரை கைவிட்ட, என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், 33 பேரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்திய பெண்களை திருமணம் செய்யும், என்.ஆர்.ஐ., கணவர்கள், அவர்களை பாதியிலேயே கைவிட்டு விடுவதாக, வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.இதன்படி, கணவர்களால் கைவிடப்பட்ட இந்திய பெண்கள் அளித்த புகார்களில், இதுவரை, 33 என்.ஆர்.ஐ.,க்களின் பாஸ்போர்ட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும், என்.ஆர்.ஐ., திருமணங்களை ஒரு வாரத்தில் பதிவு செய்தல் மற்றும் பதிவு செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.


காலியாகிறது தினகரன் கூடாரம்  dinamalar 13.12.2018
கரூர் : அ.ம.மு.க., விலிருந்து, கட்சி நிர்வாகிகள் பலர் கட்சி தாவி வருவதால், தினகரன் கூடாரம் காலியாக துவங்கியுள்ளது.




சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தும் நியாயம் கிடைக்கவில்லை. தகுதி நீக்கம் சரியே என தீர்ப்பு வந்ததால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வர் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு பின், தினகரனின், அ.ம.மு.க., ஆட்டம் கண்டு இருந்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களில் சிலர், தி.மு.க., பக்கம் தாவ இருப்பதாக செய்திகள் வெளியாகின. இடைத்தேர்தலை தள்ளிப்போட, ஆளுங்கட்சி தீவிரமாக உள்ளது. இதற்காக, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் சிலரை இழுக்கும் முயற்சியில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், செந்தில்பாலாஜி, அ.ம.மு.க.,விலிருந்து விலகி, தி.மு.க.,வில் சேரவுள்ளதாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்படுகிறது.

இதை, அ.ம.மு.க., சார்பில் கொள்கை பரப்பு செயலர், தங்கதமிழ்ச்செல்வன் மறுத்த போதிலும், செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து எவ்வித மறுப்பும் வரவில்லை.

கரூரில் தன் ஆதரவாளர்களுடன் சந்தித்து பேசிய செந்தில் பாலாஜி, தி.மு.க.,வில் இணைவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என கூறப்ப்டுகிறது. இது உண்மையா என்பது, வரும், 16ல் தெரிந்துவிடும். இதற்கிடையில், தி.மு.க.,வில் சேர விரும்பாத அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆளுங்கட்சியில் மீண்டும் தங்களை இணைத்து கொள்ள களம் இறங்கிவிட்டனர்.

இதில், முதலாவதாக செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தை சேர்ந்த, அ.ம.மு.க., பாசறை செயலர் ராமச்சந்திரன், அரவக்குறிச்சி ஒன்றியச் செயலர் மணிகண்டன், பேரூர் செயலர் செந்தில்குமார் உள்பட, 50க்கும் மேற்பட்டோர், அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில், நேற்று, அ.தி.மு.க.,வில் சேர்ந்தனர்.

அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: தி.மு.க.,வுக்கு செல்பவர்கள் கடைசி பெட்டியில் தான் ஏற வேண்டும். அந்த கட்சியில் இருந்து வந்தவர்தான், செந்தில் பாலாஜி. அவர் மீண்டும் அங்கே செல்வதாக தகவல் வருகிறது. ஓராண்டுக்கு முன்பே, நான் சொன்னது போல், தினகரனையும், பதவி நீக்கம் செய்யப்பட்ட, 17 எம்.எல்.ஏ.,க்களையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டார் செந்தில் பாலாஜி. ஆந்திராவில் அமைச்சர் பதவி கொடுத்தால் கூட, அவர் அங்கே சென்று விடுவார்.

இன்னும், ஒரு சில நாட்களில், அ.ம.மு.க.,வில் உள்ளவர்கள் அனைவரும் தினகரன் கூடாரத்தை காலி செய்து, அ.தி.மு.க.,வில் சேர்ந்து விடுவர். அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும். சிறிது காலம் மாற்று இயக்கத்தில் இருந்தீர்கள். இனி, தாய் கழகமான, அ.தி.மு.க.,வுக்கு அனைவரும் திரும்பி வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கரூர் மாவட்டத்தை தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும், அ.ம.மு.க.,வை கைகழுவ தொண்டர்கள், நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், தினகரன் கூடாரம் கதிகலங்கிப் போய் உள்ளது.

அ.தி.மு.க.,வில் ஐக்கியம்:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலரான, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், முதல்வர் பழனிசாமியை, நேற்று அவரது வீட்டில் சந்தித்து, அ.தி.மு.க.,வில் இணைந்தார். அப்போது, ராமநாதபுரம், எம்.பி., அன்வர்ராஜா, மாவட்ட செயலர் முனியசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மாவட்ட செய்திகள்

நர்சிங் மாணவி மர்ம சாவு: காதலன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்வேன், பெண்ணின் தந்தை மிரட்டல்



தன் மகளின் மர்ம சாவுக்கு காரணமான காதலன் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்லூரி முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று நர்சிங் மாணவியின் தந்தை கூறினார்.

பதிவு: டிசம்பர் 12, 2018 04:30 AM

திருப்போரூர்,

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் கிராமம் புதிய காலனியை சேர்ந்தவர் பரந்தாமன். கூலி தொழிலாளி. இவருடைய மகள் மோனிஷா (வயது 18). தாழம்பூர் பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் மோனிஷா நர்சிங் படித்து வந்தார்.


அதே கல்லூரியில் காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த கேப்ரியேல் காயன் (18) நர்சிங் படித்து வருகிறார். மோனிஷாவுக்கும், கேப்ரியேல் காயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

கடந்த 3-ந் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மோனிஷா மாலையில் வீடு திரும்பவில்லை. மோனிஷாவை எங்கு தேடியும் கிடைக்காததால் 4-ந் தேதி கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மகள் காணவில்லை என பரந்தாமன் புகார் அளித்தார். மாயமான மோனிஷாவை போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் 5-ந் தேதி செங்கல்பட்டு அருகே உள்ள குளவாய் ஏரியில் மோனிஷாவின் உடல் கிடந்தது தெரியவந்தது. அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து தனது மகளின் மர்ம சாவுக்கு காதலன் கேப்ரியேல் காயன் தான் காரணம் என செங்கல்பட்டு போலீசில் பரந்தாமன் புகார் அளித்தார். எனினும் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பரந்தாமன் குற்றம்சாட்டினார். மேலும் தனது மகள் படித்த அதே கல்லூரியில் படிக்கும் கேப்ரியேல் காயன் விவரம் குறித்து கல்லூரி நிர்வாகம் முறையாக பதிலளிக்காததால் மோனிஷாவின் தந்தை மற்றும் உறவினர்கள் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேப்ரியேல் காயன் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்லூரி முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என பரந்தாமன் கூறினார்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...