Thursday, December 13, 2018

'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தில் பங்கேற்க அழைப்பு

Added : டிச 13, 2018 02:04

புதுச்சேரி:உன்னத் பாரத் அபியான்' திட்டத்தை செயல்படுத்த ஜிப்மர் மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஜிப்மர் இயக்குனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சுற்றியுள்ள கிராமங்களை உயர்கல்வி நிறுவனங்களோடு இணைக்கும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 'உன்னத் பாரத் அபியான்' (யு.பி.ஏ.) திட்டத்தின் கீழ் ஜிப்மர் தெரிவு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது. இதற்காக, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையுடனான ஒரு ஒப்பந்தம், ஜிப்மர் இயக்குனரால் கையெழுத்திடப் பட்டது.கிராம சமுதாயங்களின் நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்த முன்னேற்றத்திற்கான சவால்களை அடையாளம் கண்டு, அதற்குப் பொருத்தமான தீர்வுகாண உயர்கல்வி நிறுவனங்கள், கிராமப்புற மக்களோடு சேர்ந்து உழைக்க வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.ஜிப்மரின் நோய்த்தடுப்பு - சமூக மருத்துவ துறைத் தலைவர் சோனாலி சர்க்கார், டாக்டர் பழனிவேல், ஜிப்மரில் உன்னத் பாரத் அபியான் திட்டத்தை செயல்படுத்துவற்கான ஏற்பாடுகளை செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்காக பல்வேறு கிராமப் பகுதிகள், நோய்த்தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் கல்வியாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் முன்வந்து முனைப்புடன் பங்குபெற வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...