Sunday, December 30, 2018


ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது நவபிருந்தாவன யாத்திரை ரயில்

Added : டிச 29, 2018 23:17

சென்னை: மார்கழியில், நவபிருந்தாவன கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., நவபிருந்தாவன யாத்திரை சிறப்பு ரயிலை இயக்குகிறது.இந்த சிறப்பு ரயில், மதுரையில் இருந்து, வரும், 10ல் புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக செல்லும். இப்பயணத்தில், கர்நாடகா மாநிலம், நவபிருந்தாவனத்தில், ராகவேந்திரரின் குருநாதரான சுதீந்திர தீர்த்தர் மற்றும் எட்டு குருக்களின் ஜீவ சமாதிகளையும் தரிசிக்கலாம். ஆந்திராவில், மந்த்ராலயம் மற்றும் அகோபிலம் நரசிம்மர் கோவில்களுக்கும் சென்று வரலாம். ஐந்து நாட்கள் சுற்றுலாவுக்கு, ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்ய, ஒருவருக்கு, 6,160 ரூபாய் கட்டணம்.மேலும் தகவலுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., உதவி மையத்தை, 90031 40680, 90031 40681 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.irctctourism.com என்ற, இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...