Friday, January 18, 2019


எய்ம்ஸ் மருத்துவமனை 27ல் அடிக்கல் நாட்டு விழா

Added : ஜன 17, 2019 22:17

தமிழகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள, மூன்று பல்நோக்கு மருத்துவமனைகளின் திறப்பு விழா மற்றும் மதுரையில் அமைய உள்ள, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என, 2015ல், மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, மதுரை, தோப்பூரில், 200 ஏக்கர் பரப்பளவில், 1,264 கோடி ரூபாய் செலவில், 750 படுக்கைகளுடன், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இதற்கான பூர்வாங்க பணிகள் முடிந்துள்ளன. மருத்துவமனை கட்டடங்களுக்கான பணிகள் துவங்க உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, வரும், 27ல் நடக்கிறது. அதில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்ட உள்ளார்.இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மதுரை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, ஜன., 27ல், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும், மத்திய - மாநில அரசு பங்களிப்புடன், தலா, 150 கோடி ரூபாய் செலவில், தஞ்சை, நெல்லை, மதுரை ஆகிய, மூன்று நகரங்களில், உயர்தர பல்நோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மூன்று மருத்துவமனைகளையும், பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், முதல்வர், மத்திய - மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -




பள்ளிகள் இன்று திறப்பு மாணவர் வருகை, 'டவுட்'

Added : ஜன 17, 2019 22:14 

சென்னை, பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.கடந்த, 12ம் தேதி முதல், பொங்கல் தொடர் விடுமுறை துவங்கியது; நேற்றுடன் முடிந்தது. ஆறு நாள் விடுமுறையை முடிந்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களின் பெற்றோருக்கு, குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.'இன்று, மாணவர்கள் கட்டாயம் வகுப்புகளுக்கு வர வேண்டும்; விடுமுறை எடுக்க கூடாது' என, அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வெளியூர் சென்றோர் பலர், இன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்து, சனி, ஞாயிறு விடுமுறையிலும், சொந்த ஊரில் இருக்க முடிவு செய்துள்ளனர். அதனால், பள்ளிகளில், மாணவர்களின் வருகை, இன்று குறைவாகவே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பரிசு வாங்காதோருக்கு ரூ.1,000 வழங்குவதில் குழப்பம்

dinamalar 18.01.2019

ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு வாங்கா தோருக்கு, 1,000 ரூபாய் வழங்குவதில் குழப்பம் நிலவுகிறது.



தமிழக ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலக்காய், கரும்பு துண்டு, 1,000 ரூபாய் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

நிறுத்தம்

இவை, முதல் முறையாக, அரிசி, சர்க்கரை, எந்த பொருளும் வாங்காத கார்டு என, பாரபட்சம் இல்லாமல், மொத்தம் உள்ள, 2.02 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்கும் பணி, 7ம் தேதி துவங்கியது.

அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க

எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.பின், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, எந்த பொருளும் வாங்காத, 42 ஆயிரம் கார்டுகளுக்கு மட்டும், 1,000 ரூபாய் வழங்குவது நிறுத்தப் பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பை, 14ம் தேதி வரை வழங்க, கூட்டுறவு மற்றும் உணவு துறை அறிவுறுத்தியது. அதன்படி, அன்று வரை, 1.95 கோடி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில், 'ரேஷனில், 1,000 ரூபாய் பரிசு வாங்காதோர், பொங்கலுக்கு பின் வாங்கி கொள்ள லாம்' என, உணவு துறை அமைச்சர், காமராஜ், திருவாரூரில்,தெரிவித்தார். அதன்படி, நேற்று, ரேஷன் கடைகள் திறந்ததும், பொங்கல் பரிசு வாங்காதோர், கடை களில் சென்று கேட்டனர்; ஆனால்,ரூ. 1,000 தர வில்லை.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு ரேஷன் கடையிலும், 95 - 97 சதவீதம் வரை, பொங்கல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது.

இடைத்தேர்தல் அறிவிப்பால், திருவாரூர் தொகுதி யில் மட்டும், 7ம்தேதியில் இருந்து, 1,000 ரொக்கம் வழங்கவில்லை. பின், தேர்தல் ரத்து செய்யப்பட்ட தும், 9ம் தேதியில் இருந்து, அந்த தொகுதியிலும், பணம் வழங்கப்பட்டது.பொங்கல் கொண்டாடவே, பரிசு வழங்கப்பட்டது. வசதியா னோர், விருப்பப்

பட்டு, ரூ.1,000வாங்கவில்லை. இந்த சூழலில், அமைச்சர், பொங்கலுக்கு பின், பரிசு தொகுப்பு வாங்கலாம் என, வாய்மொழியாக தெரிவித்து உள்ளார்.

அறிவிப்பு

இதனால், வீட்டு வேலையாட்கள், 1,000 ரூபாய் வாங்காதோரின் கார்டை எடுத்து வந்து, பணம் கேட்கின்றனர்.அமைச்சரின் அறிவிப்பிற்கு ஏற்ப, எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. இதனால், ரேஷனில், பொங்கல் பரிசு வாங்கா தோர், தற்போது, வந்து கேட்கும்போது, 1,000 ரூபாய் தரவில்லை. இது தொடர்பாக, உயர திகாரிகள், தெளிவான அறிவிப்பு வெளி யிட்டால், 1,000 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். 

- நமது நிருபர் -
தொண்டு நிறுவனங்களுக்கு விதிகள் தளர்வு

Added : ஜன 18, 2019 04:51



புதுடில்லி: 'வெளிநாடுகளில் இருந்து நிதி பெற, 'நிடி ஆயோக்' அமைப்பின், 'தர்பன்' இணையதளத்தில், தங்கள் நிறுவனத்தை பதிவு செய்திருக்க வேண்டும்' என, தொண்டு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 'தர்பன் இணையதளத்தில், தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை' என, மத்திய அரசு தரப்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.
'வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை

Added : ஜன 18, 2019 03:47 |




நாக்பூர்: மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில், ஒரு தம்பதிக்கு, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம் மூலம் விசாரணை நடத்தி, விவாகரத்து வழங்கப்பட்டது.

பிரச்னை:

மஹாராஷ்டிராவிலுள்ள நாக்பூர் குடும்ப நீதிமன்றத்தில், விவாகரத்து கோரி, ஒரு தம்பதி மனு தாக்கல் செய்திருந்தது. நாக்பூரைச் சேர்ந்த, 37 வயதான கணவன் மற்றும் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாதைச் சேர்ந்த, 35 வயதாகும் மனைவி, அமெரிக்காவின் மிச்ஸிகனில் வசித்து வந்தனர். அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர்களுக்கு, 2013ல், திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பின், நாக்பூரில் உள்ள கணவனின் வீட்டுக்கு வந்தபோது, மாமியார் உள்ளிட்டோருடன், அந்த பெண்ணுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது, கணவன், மனைவிக்கு இடையேயான பிரச்னையாக மாறியது. இதையடுத்து, விவாகரத்து கோரி, நாக்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, சமீபத்தில் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, விடுமுறையில் வந்த கணவன், நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், தற்போது, கல்வி, 'விசா'வில் சென்று உள்ளதால், மனைவியால் நேரில் ஆஜராக முடியவில்லை.

இழப்பீடு:

இதையடுத்து, வாட்ஸ்ஆப் சமூக வலைதளத்தில், வீடியோ அழைப்பு மூலம் விசாரணை நடத்தக் கோரப்பட்டது. அதை ஏற்று, வீடியோ அழைப்பு மூலம், மனைவியிடம் விசாரணை நடத்திய, நாக்பூர் நீதிமன்றம், விவாகரத்து வழங்கியது. 'கணவர், 10 லட்சம் ரூபாயை, மனைவிக்கு இழப்பீடாக அளிக்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Not our job to help lotus bloom, says M Thambidurai

DECCAN CHRONICLE.

PublishedJan 18, 2019, 4:45 am IST

Meanwhile, speaking to reporters here Jayakumar said the decision on an alliance cannot be taken instantly and that it ought to be deliberated.



AIADMK leader M. Thambidurai

Chennai: As speculation grows over a possible AIADMK-BJP tie-up for the upcoming Lok Sabha elections, Lok Sabha Deputy Speaker and AIADMK senior M. Thambidurai has averred there is no need for the AIADMK to help the lotus (BJP symbol) bloom in Tamil Nadu. However, without replying in the negative and almost sounding optimistic on the alliance issue, Fisheries Minister D. Jayakumar said a decision on poll ties would be taken only after “consensus” within the party.

Blowing hot over the saffron party, Mr. Thambidurai said it is not the task of the AIADMK, founded by late Chief Minister M. G. Ramachandran (MGR), to help the BJP to grow.

“We will strive hard for further development of our party and shall not give room for the BJP or any other party to grow, nor shall we go with them (BJP)” he told reporters. Thambidurai was in Coimbatore on Thursday to pay tributes along with his party members, to MGR on his 102nd birth anniversary.

He said it was ridiculous on the part of auditor S. Gurumurthy to say that AIADMK should align with the BJP to help it gain a foothold in

Tamil Nadu. “When we are trying to grow, there is no chance for the AIADMK to take the BJP on its shoulders and allow it to gain a foothold,” Thambidurai thundered.

Meanwhile, speaking to reporters here Jayakumar said the decision on an alliance cannot be taken instantly and that it ought to be deliberated.

“There is still time for poll alliance. The decision can be taken only after consensus within the party,” the minister said in reply to a query on electoral pact with the BJP. “That may be his desire. Even we should also desire for alliance with the BJP. That is, we should consent and there should be consensus within the party. Let the election schedule be announced, then we will announce,” Jayakumar said reacting to Gurumurthy’s view.
Chennai: Withdraw 2017 regulations, says engineering students

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN

PublishedJan 18, 2019, 5:12 am IST

Another student attributed the poor results to the strict evaluation of answer scripts.



Anna University has declared the November-December 2018 exam results on Monday.

Chennai: After witnessing a big drop in pass percentage in third-semester results, the engineering students now plan to hold a major protest across the state on Friday demanding withdrawal of 2017 regulations which introduced several restrictions including appearing for arrears exam.

Anna University has declared the November-December 2018 exam results on Monday. According to the affiliated colleges, the results of the third semester are down by 15% compared to the previous semester.

“Of 55 students in our college, only two cleared all the subjects in November 2018 exams. In the previous semester, 22 students cleared all subjects. Half of our class have arrears in more than five subjects,” a student from Madurai zone said.

“If we pursue our engineering course in 2017 regulations, we may not able to get our degrees,” he added.

Replacing arrears system with the reappearance registration system, Anna University had introduced the Choice Based Credit System (CBCS) to the affiliated colleges in the previous academic year (2017-18).

As per 2017 regulations, the students who fail in theory course can only reappear along with regular students when that course is offered next time. It means if a student could not clear a course in an odd semester, he or she can only reappear for the exam when the course is offered next year.

Further, the total number of credits that a student is allowed to register per semester cannot exceed 36. It would limit their number of arrears appearance to only two or three subjects along with the regular subjects.

“With the cap in the maximum number of credits, if we have more than three arrears in one semester we may not able to clear it and finish our degrees. We are in danger of accumulating our arrears,” another student said.

Another student attributed the poor results to the strict evaluation of answer scripts.

“In many colleges, students with 8 CGPA (Cumulative Grade Point Average) also could not clear the exams this year. The students plan to protest peacefully at Anna University in Chennai and inside their college campuses. Our association supports this protest,” said K.M. Karthik, president of Private Educational Institutions Employees Association.

The students are also planning to meet Anna University authorities demanding the withdrawal of the 2017 regulations.

When enquired, a principal from the city-based engineering college accepted that the exam results dropped in the November 2018 exams.

“We had more than 70% results in the previous semester exams. But, in this semester, our overall results have dropped to less than 60%,” he said. A majority of the third-semester students could not clear the exams, he added.

After the revaluation scam, Anna University has brought stringent measures to prevent any malpractices during an evaluation and it seems to have affected the results of the affiliated engineering colleges.

NEWS TODAY 28.08.2026