Tuesday, August 13, 2019

Collector clarifies on outburst

13/08/2019

Kancheepuram District Collector P. Ponniah has clarified that his outburst against a police inspector was not intentional, but only in the interest of proper conduct of the ongoing Athi Varadar festival at the Sri Devarajaswamy temple. He also said that his outburst was not aimed at any individual or department and that the police and the district administration were working in tandem to ensure safety and well-being of the devotees visiting the temple.
5 lakh expected to visit Kanchi temple every day

13/08/2019,CHENNAI

With just four days left, over 5 lakh devotees are expected to visit Kancheepuram   every day to have a darshan of Athi Varadhar in the Devarajaswamy temple.

The police and the district administration have made elaborate arrangements.

Jio Fiber

Monday, August 12, 2019

முடக்கம்!  பெரும்பாக்கம் இணைப்பு சாலை திட்டம்...12 கி.மீ., சுற்றி செல்லும் 6 லட்சம் மக்கள்... முதல்வர் தலையிட பொதுமக்கள் கோரிக்கை

Added : ஆக 12, 2019 04:59



-நமது நிருபர் --பெரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதியை, மற்ற பகுதிகளுடன் இணைக்கும், முக்கிய இணைப்பு சாலை திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனால், தினமும், ஆறு லட்சம் பேர், 12 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது.

குடிசை மாற்று வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்க, பெரும்பாக்கத்தில், 200 ஏக்கர் இடம் அரசு ஒதுக்கியது. அதில், 1,200 கோடி ரூபாயில், 2009ல், எட்டு மாடி கொண்ட, 20 ஆயிரத்து, 376 வீடுகள் கட்டும் பணிகள் துவங்கின; தற்போது, 17 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. அபார வளர்ச்சிஇதில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 14 ஆயிரம் பேர், மறு குடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர். மருத்துவமனை, பேருந்து நிலையம், பள்ளி, அரசு கல்லுாரி என, பெரும்பாக்கம் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த குடியிருப்பை சுற்றி, பொலினினி, ஆர்மி, டி.எல்.எப்., உள்ளிட்ட பிரமாண்டமான தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சிறிய அளவில், 40க்கும் மேற்பட்ட, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் என, பெரும்பாக்கத்தைச் சுற்றி, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர்கள், மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு, ஓ.எம்.ஆர்., வழியாக, 12 கி.மீ., சுற்றி செல்ல வேண்டி உள்ளது.ஓ.எம்.ஆரில், குமரன் நகர், ஆவின் மற்றும் சோழிங்கநல்லுார் சிக்னல்களில், நெரிசல் அதிகமாக இருப்பதால், சோழிங்கநல்லுார் வழியாக தாம்பரம் செல்ல, இரண்டு மணி நேரம் வரை ஆகிறது. துரித பயணத்திற்கு, பெரும்பாக்கத்தில் இருந்து, மேடவாக்கம் - சோழிங்கநல்லுார் சாலையுடன் இணைக்கும் வகையில், 3.5 கி.மீ., துாரத்தில், இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

நான்கு ஆண்டுகளுக்கு முன், குடிசை மாற்று வாரியம் சார்பில், 6 கோடி ரூபாயில், 1.5 கி.மீ., நீளத்தில், 100 அடி அகலத்தில், இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.நெரிசல் குறையும்மீதமுள்ள, 2 கி.மீ., துாரத்தில், சதுப்பு நிலமாக உள்ளது. அதில், நீரோட்டம் பாதிக்காத வகையில், பாலம் அமைத்து, சாலையை இணைக்க வேண்டும். இத்திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், 12 கி.மீ., சுற்றி செல்வது தடுக்கப்பட்டு, 5 கி.மீ., துார பயணத்தில், மேடவாக்கத்தை அடைய முடியும். இதன் மூலம், ஓ.எம்.ஆரில் நெரிசல் கணிசமாக குறையும்.குடிசை மாற்று வாரியம் போட்ட, 100 அடி சாலை, பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மீதமுள்ள, 2 கி.மீ., துாரத்தை இணைக்க, ஊராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டவில்லை. வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அனுமதியுடன் தான், சாலையை இணைக்க முடியும்.இந்த சாலையை, நெடுஞ்சாலைத் துறை தான், முறையாக பராமரிக்கும். பாதியில் நிற்கும் சாலையை இணைக்க, முனைப்பு காட்ட வேண்டியது, நெடுஞ்சாலைத் துறை தான்.ஆனால், 100 அடி அகல சாலை, ஊராட்சி நிர்வாகத்தில் இருப்பதால், நெடுஞ்சாலைத் துறை, தானாக முன்வந்து, எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழலில் உள்ளது. 

இங்குள்ள பிரச்னையே, சாலையை இணைக்க, முதலில் எந்த துறை முயற்சி எடுக்க வேண்டும் என்பது தான். துறைகள் ஒருங்கிணைப்பு இல்லாத இந்த இழுபறி, இரண்டு ஆண்டுகளாக நீடிக்கிறது. பெரும்பாக்கம் அபார வளர்ச்சி அடைந்து வருவதால், போக்குவரத்து நெரிசல், மக்கள் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, முதல்வர் தலையிட்டு, துறைகளை ஒருங்கிணைய செய்து, சாலையை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெரும்பாக்கம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இணைப்பு சாலை இல்லாததால், அவசர தேவைக்கு, பொலினினி குடியிருப்புக்குள் புகுந்து செல்கிறோம். நுாறடி சாலையை, சோழிங்கநல்லுார் -- மேடவாக்கம் பிரதான சாலையுடன் இணைத்தால், ஓ.எம்.ஆர்., சுற்றி செல்லும் அலைச்சல் தவிர்க்கப்படும். எங்களை, அவசரமாக மறுகுடியமர்வு செய்த அரசு, அடிப்படை கட்டமைப்புகளை செய்து தருவதில், முனைப்பு காட்டுவதில்லை. முதல்வர் தலையிட்டு, சாலையை இணைக்க வேண்டும்.குடிசை மாற்று வாரிய மக்கள்பெரும்பாக்கம்எங்கள் எல்லைக்கு உட்பட்ட இடத்தில், 100 அடி அகலத்தில் சாலை அமைத்துள்ளோம். வேறு துறை இடத்தில், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அனுமதி இல்லாமல், சாலையை இணைக்கவும் முடியாது. உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்
-நமது நிருபர் --
மனிதனை புனிதனாக்கும் பயணம்

Added : ஆக 12, 2019 02:17

இஸ்லாமிய மார்க்கத்தில், ஐந்து கடமைகள் முக்கியமானவை.கலிமா எனும் இறை நம்பிக்கை. தினமும் ஐந்து வேளை தொழுகைகள், வருடத்தில் ஒரு மாதம் ரம்ஸான் மாதத்தில், நோன்பு வைப்பது. அந்த ரம்ஸான் மாதத்தில், வசதி படைத்தவர்கள், இல்லாதவர்களுக்கு தரும், ஜகாத் உதவி. ஐந்தாவது கடமை, ஹஜ் எனும் மெக்காவிற்கு செல்லும், புனித பயணம்.இந்த புனித பயணத்தை, வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும், தன் வாழ்நாளில் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும்.'ஜில்ஹஜ்' மாதத்தில் மெக்காவிற்கு செல்வதே, 'ஹஜ்' எனும் புனிதப் பயணம்.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், முதல் இறை இல்லத்தை இப்ராஹிம் நபி கட்டினார்.இஸ்லாமிய மார்க்கத்தின் கடைசி இறைத்துாதரான முஹம்மத் நபி (ஸல்) இந்த இறை இல்லத்தை சீரமைத்தார். மக்களுக்கு, தொழுகைக்கு இங்கு இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.'ஜில்ஹஜ்' மாதத்தில் மெக்காவிற்கு புனிதப் பயணம் சென்றால், ஹஜ் என்று அழைக்கப்படும்.மற்ற மாதங்களில் சென்றால், அதை 'உம்ரா' என்று சொல்வர்.தன்னுடைய சுக போகங்களை துறந்து, உற்றார் உறவினரை பிரிந்து, வியாபாரம், வேலை போன்றவற்றை விட்டுச் செல்வதால் ஏற்படும் நஷ்டங்களையும், கஷ்டங்களையும் ஏற்று, மனமுவந்து பொருள் செலவு செய்து, இறைவனுடைய நாட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன், மேற்கொள்ளப்படும் தியாகப் பயணமே 'ஹஜ்' எனும் பனிதப் பயணம் ஆகும்.

இந்த ஹஜ் பயணத்தை நிறைவேற்றும் மனிதன் புனிதம் அடைகிறான். கோபம், எரிச்சல், பேராசை, ஏமாற்றுதல், புறம் பேசுதல், வஞ்சகம் போன்ற தீய குணங்களை கடைப்பிடிக்காமல், அமைதி, அன்பு, நட்பு, உதவும் மனப்பான்மை போன்ற நல்ல விஷயங்களில் ஈடுபடுகிறான்.பாவங்கள் நீங்கப்பெற்று, அன்று பிறந்த பச்சை பிள்ளையைப்போல மாறுகிறான். 'ஹஜ்' பயணம் முடிந்து திரும்புகையில், புனிதனாகவும், துாயவனாகவும் திரும்புகிறான்.மக்கா நகரத்திற்குள் நுழையம் முன், 'இஹ்ராம்' எனும் வெண்ணிற ஆடையை அணிந்து கொள்கின்றனர். எல்லாருக்கும் ஒரேவிதமான ஆடை தான். எவ்வளவ பெரிய பணக்காரர்கள் என்றாலும், இந்த ஆடையை தான் அணிய வேண்டும். இது, அவர்களை பணிவுள்ளவர்களாக மாற்றுகிறது.ஜாதி, மொழி, தேசம், நிறம் பாகுபாடின்றி, எல்லாரும் கூடும் ஒரு மாநாடாக 'ஹஜ்' பயணம் திகழ்கிறது.நபிகள் நாயகம் இறுதி சொற்பொழிவு நிகழ்த்திய அரபா மைதானத்தில், தங்கி தொழுகையை நிறைவேற்றுவர்.

ஹாஜிரா அம்மையார் தன் குழந்தை இஸ்மாயிலின் தாகத்தை தீர்க்க, ஸபா, மருவா எனும் இரு குன்றுகளுக்கிடையே ஓடியதை நினைவுகூரும் வகையில் ஓடுவது, பிராணிகளை குர்பானி கொடுப்பது, நம்மை திசை திருப்பி, தீய வழியில் செலுத்தும் ஷைத்தானை, மினா எனுமிடத்தில் கல் எறிவது, ஹஜ் பயணியர் செய்கிற நற்காரியங்களாகும்.'இதோ வந்துவிட்டோம் இறைவா! உன் அழைப்பை ஏற்று, உன் இடத்திற்கு... இதோ வந்துவிட்டோம் இறைவா... உன் அருட் கொடைகளுக்கு நன்றி கூற...' என்று கூறிக்கொண்டே, ஹாஜிகள் மெக்காவை வலம் வருவர்.இந்த குறுகிய உலக வாழ்வில், நாம் இந்த கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு காரணம் உள்ளது. ஏனென்றால், நாம் இறந்த பிறகு, மறுமை எனும், நீண்ட முடிவே அற்ற வாழ்க்கை உள்ளது. அங்கே நமக்கு இறைவன் சொர்க்கத்தை அளிக்க வேண்டும் என்ற தவிப்பு தான்.இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறலாம்...ஒரு நாட்டில் வினோதமான வழக்கம் இருந்தது. அந்த நாட்டு அரசனை, மக்களே தேர்வு செய்வர். அவனுக்கு வயது ஆகி, ஆளத் தகுதியில்லாத நிலை வரும்.அந்த சமயத்தில் அந்த அரசனை காட்டில் விட்டுவிடுவர். அந்த காடு, புதர்களும், விஷச் செடிகளும், பாம்புகளும், புலி, சிங்கங்களும் வாழும் இடம்.சாப்பிட எதுவும் இல்லை. குடிக்க எதுவுமில்லை.அப்படித்தான் அந்த அரசனையும், மக்கள் காட்டில் விடுகின்றனர். மக்களின் கண்ணுக்கு, ஒரு பிச்சைக்காரன் தென்படுகிறான். அவனையே புதிய அரசனாக முடிவு செய்து, அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.அந்தப் பிச்சைக்காரனுக்கு அதிர்ச்சி. 'நானா இந்த நாட்டின் அரசன்?' பழைய அரசனுக்கு ஏற்பட்ட கதி அவனுக்கு தெரியும். அவனுடைய முதல் உத்தரவு, அந்த காட்டை சுத்தப்படுத்துவதாக இருந்தது.காய், கனி தரும் மரங்களை நடுவது, நீரோடைகளை அமைப்பது, விஷச் செடிகளை அகற்றுவது, ஆபத்தான மிருகங்களை வேட்டையாடுவது என்று, புதிய அரசாணைகளை பிச்சைக்காரன் செயல்படுத்தினான்.நாம் இறுதியில் செல்லப்போகும் இடம் எங்கே? அதை எப்படி வைத்துக்கொள்வது என்று, சரியாக புரிந்து கொண்டான், அந்த புதிய அரசன். இதில் அறிந்து கொள்ள நமக்கும் ஏராளமான பாடங்கள் உள்ளன.இறைவன் நம் அனைவருக்கும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை தருவானாக...ஆமின்!
- மொட்பில்லைசுஹைல் அஹ்மத்பக்ரீத்
அரசு மருத்துவமனைகளில் 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு: உயர்நீதிமன்றம் அவகாசம்

Added : ஆக 12, 2019 04:27

மதுரை:அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவை அமல்படுத்துவது தொடர்பானஅவமதிப்பு வழக்கில், அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை6 மாதங்கள் அவகாசம் அளித்தது.ம

துரை ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனு:அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 'பயோ மெட்ரிக்' (கைரேகை) வருகைப் பதிவு முறையை அமல்படுத்த தமிழக அரசு 2012 செப்.,20 உத்தரவிட்டது. அதை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. டாக்டர்கள், ஊழியர்கள் தாமதமாக வருவது தொடர்கிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளில் 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு முறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.2017 ஜன.,25 நீதிபதிகள், 'அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை 4 மாதங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்,' என்றனர். 

இதை நிறைவேற்றாததால் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக இருந்தராதாகிருஷ்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஆனந்தராஜ் மனு செய்தார். நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்திஅமர்வு விசாரித்தது.அரசுத்தரப்பில், 'படிப்படியாக பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையைஅமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.100 சதவீதம் நடைமுறைப்படுத்த 6 மாதங்கள் அவகாசம் தேவை,' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள், '2020 ஜன.,21வரை அவகாசம் அளிக்கப்படுகிறது,' என்றனர்.
AICTE to modernise facilities in rural engineering colleges, technical institutions

The technical education regulator under the HRD Ministry will be providing grants under the Modernisation and Removal of Obsolescence (MODROBS) scheme.

Published: 11th August 2019 03:00 PM |



Image of engineering students used for representational purpose 

(File Photo | Shriram BN, EPS)
By PTI

NEW DELHI: Laboratories in engineering colleges and other technical institutions operational in rural areas are all set to get a makeover, with the All India Council of Technical Education (AICTE) deciding to provide grants to institutions for procuring modern equipment.

The technical education regulator under the HRD Ministry will be providing grants under the Modernisation and Removal of Obsolescence (MODROBS) scheme.

"A special drive is being undertaken by AICTE under MODROB scheme for modernising laboratories in technical institutions operating in rural areas and approved by AICTE by providing grants for procuring modern equipments. The institutions can apply under the scheme till August 28," a senior AICTE official said.

The MODROB scheme aims to modernise and remove obsolescence in laboratories, workshops, computing facilities excluding libraries, so as to enhance the functional efficiency of technical institutions for teaching, training and research purpose.


"It also supports new innovations in classroom and laboratory, teaching technology, development of lab instructional material and appropriate technology to ensure that practical work and project work to be carried out by students is contemporary and suited to the needs of the industry.

"The equipment financed under the scheme could be ideally used for up-gradation of equipment in existing laboratories, enhancement of performance parameter specification of existing equipment, incorporation of latest development in the field and replacement of old depreciated equipment by modern equipment," the official said.

The equipment installed through MODROBS can also be used for indirect benefit to faculty or students through continuing education programmes, training programmes for local industry and consultancy work.

Only institutions that have been in existence for at least 10 years can apply for the scheme and get funding up to Rs 20 lakh.

Duration of the project will be two years from the date of receipt of funds in the institute's account.

"100 per cent grant of sanctioned amount will be released to government and government aided institutes. To private institutions, grants will be sanctioned in the form of per cent of the sanctioned amount as advance followed by 20 per cent as reimbursement on submission of the utilisation certificate and other supporting documents as specified in terms and conditions of MODROB," the official said.

NEWS TODAY 24.4 2026