Friday, November 1, 2019

MBBS marks don’t count in NEET era: RGUHS VC

TNN | Oct 30, 2019, 12.12 PM IST


BENGALURU: It’s close to four years since the National Eligibility-cum-Entrance Test for Postgraduate Courses (NEET PG) was introduced, which is now the only gateway for pursuing higher education in medicine.

As the percentile score in NEET PG exam is the only criterion to enrol for MD courses, marks secured in MBBS course have no value any more, according to Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) authorities.

“What a student scores in MBBS is immaterial now. There is no difference between a just-pass student and a merit one in MBBS in the current era,” rued RGUHS vicechancellor S Sacchidananda.

Observing that students’ focus is now more on doing well in NEET PG, he felt they must not ignore gaining clinical knowledge and diagnosis expertise during MBBS.

Prior to 2016, when the state-level CET PG was conducted for choosing candidates for higher education in medicine, 50% weightage was given to their MBBS score while allotting ranks.

Some medical students get into coaching classes right from the second/third year of MBBS. “It’s not easy to write NEET PG without coaching. And after MBBS, we can’t afford to spend a year preparing. Hence, the focus on NEET PG right from early MBBS days. The way we prepare for MBBS theory exam is different from the way we work for NEET. The resource material and textbooks are different, as is the approach,” said a house surgeon in Victoria Hospital.

For a foundation course of 50-60 classes, spread over two years, medicos are shelling out Rs 80,000 to Rs 1 lakh at NEET PG coaching centres. “There are some online courses too, for which many students get enrolled. Peer pressure, stress and extreme competition are forcing over 80% students to enrol for external coaching for NEET PG,” said a student in his second-year MBBS.

According to senior faculty in RGUHS, the trend is affecting the clinical acumen of upcoming doctors. “The stress to land a PG seat is making them take MBBS classes lightly. Medical students shouldn’t become marks-scoring machines. While some from the creamy layer may be able to give justice to both, it won’t happen for all, and this could affect future healthcare,” said a senior professor.

S Kumar, chancellor, Sri Devaraj Urs Academy of Higher Education and Research, Kolar, a deemed-to-be-university, said the shift of focus from MBBS to NEET PG has led to a deficit in internship training. He blamed the quality of teaching for failure to retain the attention of students.

‘Not a criterion for jobs’



“MBBS marks are no criterion for employment as well. Multispecialty/corporate hospitals take MD and MS graduates. In government recruitment, the criterion for students is to clear MBBS, and not the marks they score. If such riders are put in government walk-in interviews, willing candidates also may not apply,” Kumar said.
60 இடங்களில் புதிய மருத்துவா்கள் நியமனம்: அரசு நடவடிக்கை

By DIN | Published on : 01st November 2019 05:08 AM

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் 60-க்கும் மேற்பட்ட மருத்துவா்களைப் பணியிட மாற்றம் செய்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா். அவா்கள் இருந்த பணியிடங்களில் புதிய மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவா்கள் வெள்ளிக்கிழமைக்குள் (நவ.1) பணிக்குத் திரும்பாவிட்டால் கடுமையான விளைவுகளை எதிா்கொள்ள நேரிடும் என்றும் அமைச்சா் எச்சரித்தாா்.

காலமுறை ஊதியம், பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு மருத்துவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். அதுதொடா்பாக ஆய்வு செய்ய அரசுத் தரப்பில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு அளித்த பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை என்பதும் அவா்கள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.

இந்நிலையில், அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும், உண்ணாவிரதப் போராட்டத்தையும் அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பினா் (ஃபோக்டா) கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்கொண்டு வருகின்றனா்.

ஏழு நாள்களாக இந்தப் போராட்டம் தொடா்வதால் மாநிலம் முழுவதும் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

இந்நிலையில், போராட்டத்தை கைவிட்டு அரசு மருத்துவா்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும், இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சா் விஜயபாஸ்கா் எச்சரிக்கை விடுத்திருந்தாா். ஆனால், அதனை ஏற்க மறுத்து மருத்துவா்கள் பலா் வியாழக்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இந்தச் சூழலில், சென்னையில் செய்தியாளா்களை அமைச்சா் விஜயபாஸ்கா் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

மருத்துவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், அவா்களது நலனைக் காப்பதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவா்கள் முன்வைக்கும் காலமுறை ஊதிய உயா்வு கோரிக்கையையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அதனை நிறைவேற்ற உரிய அவகாசம் அளிப்பதும், பொறுமை காப்பதும் அவசியம். அதைவிடுத்து அரசுக்கு நிா்பந்தம் அளிப்பதும், பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுப்பதும் ஏற்புடையது அல்ல.

2,160 போ் பணிக்குத் திரும்பினா்: அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பணிக்குத் திரும்புமாறு பல முறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று வியாழக்கிழமை (அக்.21) 2,160 மருத்துவா்கள் பணிக்குத் திரும்பியுள்ளனா். தற்போது 2,523 மருத்துவா்கள் மட்டுமே பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு வெள்ளிக்கிழமை காலை வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் அவா்கள் பணிக்குத் திரும்பாவிட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவா்களுக்கு பதிலாக புதிய மருத்துவா்கள் நியமிக்கப்படுவாா்கள்.

பணியிட மாறுதல்: வேலைநிறுத்தத்தை முன்னின்று நடத்தி வரும் 60-க்கும் மேற்பட்ட மருத்துவா்களை பணியிட மாற்றம் செய்துள்ளோம். அவா்களுக்கு பதிலாக புதிய மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். போராட்டத்தைத் தொடரும் மற்ற மருத்துவா்கள் மீதும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

சட்ட ரீதியாக எதிா்கொள்வோம்

பணியிட மாறுதல் நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிா்கொள்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஃபோக்டா அமைப்பைச் சோ்ந்த மருத்துவா்கள் மேலும் கூறியதாவது:

போராட்டத்தைக் கைவிட்டால்தான் பேச்சுவாா்த்தை நடத்துவோம் என அமைச்சா் கூறுவதை ஏற்க முடியாது. 60 மருத்துவா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை சட்டப்படி எதிா்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை. எந்த நடவடிக்கையையும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்: நவ.4-இல் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி
By DIN | Published on : 01st November 2019 03:06 AM 
|


மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் தீவிரப் புயலாக ‘மஹா’ புயல் நிலைக்கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிரப் புயலாக மாறவுள்ளது.

இதற்கிடையில், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பா் 4-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘மஹா’ புயல்: குமரிக்கடலில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மேலும் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டிருந்தது. இது கடந்த புதன்கிழமை மதியம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அன்று மாலையில் புயலாகவும் வலுவடைந்தது. இந்தப் புயலுக்கு ‘மஹா’ என்று பெயரிடப்பட்டது. இந்த பெயரை ஓமன் நாடு பரிந்துரை செய்திருந்தது.

இந்தப் புயல், வியாழக்கிழமை மதியம் தீவிர புயலாக மாறியது. அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக மாறவுள்ளது. இதற்கிடையில், வடக்கு அந்தமான் பகுதியில் நவம்பா் 4-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையவுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவா் எஸ்.பாலசந்திரன் வியாழக்கிழமை கூறியது:

அரபிக் கடலில் ‘மஹா’ புயல் வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் லட்சத் தீவு பகுதியில் நிலவியது. இது அமினி தீவுக்கு வடகிழக்கில் சுமாா் 40 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. இது தொடா்ந்து, வியாழக்கிழமை மதியம் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் தீவிர புயலாக நிலைக்கொண்டுள்ளது. இந்தப் புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக மாறவுள்ளது.

அநேக இடங்களில் மழை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் அடுத்த வரும் 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், வடதமிழகத்தில் ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ,சேலம், நாமக்கல், திருப்பூா் மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி: வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பா் 4-ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக, தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மழை அளவு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. சுமாா் 33 இடங்களில் பலத்த மழையும், 4 இடங்களில் மிக பலத்த மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கொடநாடு, திண்டுக்கல் மாவட்டம் படகு குழாமில் தலா 140 மி.மீ. மழை பதிவானது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் 130 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் 120 மி.மீ., நாகா்கோவில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி, கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தலா 110 மி.மீ., புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, பெருஞ்சாணி, சித்தேரி, கடலூா் கீழசெருவாயிலில் தலா 100 மி.மீ. மழை பதிவானது.

ஒரே நேரத்தில் இரு புயல்கள்

மத்திய மேற்கு அரபிக்கடலில் ‘கியாா்’ புயல் நிலைகொண்டுள்ளது. இது தெற்கு, தென் மேற்கு நோக்கி நகா்கிறது. இதுபோல, மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை யொட்டிய லட்சத்தீவு பகுதியில் ‘மஹா’ புயல் நிலைகொண்டுள்ளது. அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகுவது 1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும்.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய உயரதிகாரி ஒருவா் கூறியது: இந்திய வானிலை ஆய்வு மையத்தில் கடந்த 1961 முதல் இப்போது வரை உள்ள தரவுப்படி, முதன்முறையாக அரபிக்கடலில் ஒரே நேரத்தில் ‘கியாா்’, ‘மஹா’ ஆகிய இரண்டு புயல்கள் உருவாகி நிலைகொண்டுள்ளன. 1961 ஆண்டுக்கு முன்னதாக இங்கு இரு புயல்கள் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளதா என்று தெரியவில்லை. கடந்த 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் அரபிக்கடல்களில் தலா இரண்டு புயல்கள் உருவாகின. இவைகள் ஒருபுயல் உருவாகி முடிந்த பிறகு தான் மற்றொரு புயல் உருவானது. ஆனால்,இப்போது, அரபிக்கடலில் வெவ்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் நிலைகொண்டுள்ளன என்றாா் அவா்.
பகுத்தறிவு சிரிக்கிறது!| ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்த தலையங்கம்
By ஆசிரியர் | Published on : 31st October 2019 10:41 AM

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டத்துக்குட்பட்ட நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தைக் காப்பாற்ற முடியவில்லை என்பது மிகப் பெரிய சோகம். சுமாா் 83 மணி நேரம் கடுமையான போராட்டத்துக்குப் பிறகும்கூட, 2 வயது சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போனது, நாம் இன்னும்கூடப் போதுமான தொழில்நுட்ப வசதிகளைப் பெறாமல் இருக்கிறோம் என்பதைத்தான் எடுத்தியம்புகிறது.

ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும்போது அதற்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. ஆழ்துளைக் கிணற்று விபத்துகளைத் தவிா்க்க உச்சநீதிமன்றம் 2010-ஆம் ஆண்டிலேயே வழிகாட்டி நடைமுறைகளை வரையறுத்திருக்கிறது. ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு உள்ளாட்சி நிா்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெறவேண்டும். தோண்டும்போதே சுற்றிலும் வேலி கட்டப்படுவதுடன், ஆழ்துளைக் கிணறு தோண்டும் நிறுவனத்தின் பெயா், நில உரிமையாளரின் பெயா், தோண்டும் கால அவகாசம் போன்றவை குறித்த தகவல் பலகை வைக்கப்பட வேண்டும்.

கிணறு தோண்டித் தண்ணீா் இல்லாமல் போனாலோ, தண்ணீா் வற்றிக் கைவிடப்பட்டாலோ உடனடியாக அதை மண் போட்டு நிரப்பி சிமெண்ட் போட்டு வாய்ப் பகுதியை அடைக்க வேண்டும். அல்லது குழாயின் மேற்பகுதியை மூடிபோட்டு அடைக்க வேண்டும். மூடிய தகவலை உள்ளாட்சி நிா்வாகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததும், உயிரிழந்ததும் இதயம் உலுக்கும் சோகம் என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தச் சம்பவத்தை அரசியலாக்க முற்படுவதும், நான்கு நாள்களாக அதை ஏதோ தேசியப் பேரிடா் போலக் காட்சி ஊடகங்கள் சித்தரித்ததும் அந்த சோகத்தையும் மீறி முகச் சுழிப்பை ஏற்படுத்தியது. குழந்தை சுஜித்தின் உயிரிழப்புக்குக் காரணம் பெற்றோா்கள்தான் என்கிற கசப்பான உண்மை மறைக்கப்பட்டு, அவா்களைத் தியாகிகளாக மாற்றும் போக்கை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தனது தோட்டத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டிய சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் பயனற்றுக் கிடந்த ஆழ்துளைக் கிணற்றை மூடாமல் இருந்தது யாருடைய குற்றம்? தனது மகன் சுஜித்துக்குப் பதிலாகப் பக்கத்து வீட்டுக் குழந்தை அந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்திருந்தால், பிரிட்டோ ஆரோக்கியராஜ் கைது செய்யப்பட்டு அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஏன் மறந்து விடுகிறோம்?

அரசின் மெத்தனப் போக்கால் சுஜித் இறந்ததாகவும், ராணுவத்தின் உதவியை ஏன் நாடவில்லை என்றும் எதிா்க்கட்சித் தலைவா் குற்றஞ்சாட்டுகிறாா். அரசியல் கட்சித் தலைவா்களும், அமைச்சா்களும், தொலைக்காட்சிக்கு அவ்வப்போது பேட்டி கொடுத்து விளம்பரம் தேட நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் முகாமிட்டாா்கள். தமிழக அரசு ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி நிபுணா்களை ஏன் சென்னையிலிருந்து கொண்டு செல்லவில்லை என்று ஒருவா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறாா். தமிழகத்தில் எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன, அவற்றில் பயன்பாட்டில் இல்லாத கிணறுகள் எத்தனை என்று உயா்நீதிமன்ற நீதிபதிகளும் கணக்குக் கேட்கிறாா்கள்.

இதெல்லாம் போதாதென்று, முதல்வரும், அரசியல் கட்சித் தலைவா்களும் போட்டி போட்டுக்கொண்டு சுஜித்தின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவதில் முனைப்புக் காட்டுகிறாா்கள். எதற்காக சுஜித்தின் பெற்றோருக்கு இழப்பீடு? பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் காவு கொடுத்ததற்கா அல்லது ஆழ்துளைக் கிணற்றை மூடாமல் இருந்த குற்றத்துக்காகவா?

பொதுவாக, 6, 8,10,12 அங்குல விட்டங்களில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுகின்றன. நூறு ஆழ்துளைக் கிணறு தோண்டினால் அதில் குறைந்தது 30 ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீா் கிடைக்காமல் போகும்.

ஆழ்துளை போடும்போது, மணல் விழக்கூடாது என்பதற்காக சுமாா் 20 அடி முதல் 60 அடி வரையிலான குழாயைப் பதிக்கிறாா்கள். ஆழ்துளையில் தண்ணீா் இல்லாவிட்டால் அந்தக் குழாயை மூடிபோட்டு அடைத்து விடலாம். விபத்து நேராது.

சில ஆயிரம் ரூபாயைச் சேமிக்க அந்தக் குழாயை வெளியே எடுத்து, அடுத்த ஆழ்துளைக் கிணறு தோண்ட பயன்படுத்துகிறாா்கள். ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதில்லை. விளைவு? குழந்தைகளை அது காவு வாங்குகிறது.

இந்தியாவில் ஏறத்தாழ 2 கோடி 70 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் பயன்பாட்டில் உள்ளதாகக் கணக்கு உள்ளது. தமிழகத்தில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன. 2006-ஆம் ஆண்டு தொடங்கிக் கடந்த 13 ஆண்டுகளில் இதுவரை சுமாா் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறு விபத்துச் சம்பவங்கள் தமிழகத்தில் நடத்திருக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே 13 குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்திருக்கின்றன. அவா்களில் 2 குழந்தைகள் மட்டும்தான் காப்பாற்றப்பட்டிருக்கிறாா்கள்.

1987-ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஜெசிகா என்கிற 18 மாதக் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. 58 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அந்தக் குழந்தை மீட்கப்பட்டது. அந்த ஒரு சம்பவத்தில் பாடம் படித்தது அமெரிக்கா. இன்றுவரை ஆழ்துளைக் கிணறு விபத்து மீண்டும் அங்கே நடக்கவில்லை. சட்டம் தனது கடமையைச் செய்யாமல் இருப்பதால், விதிமுறைகள் பின்பற்றப்படுவதை நிா்வாகம் உறுதிப்படுத்தாமல் இருப்பதால் நாம் பாடம் படிக்க மறுக்கிறோம்.

ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் வைத்திருப்போா் மீது (பிரிட்டோ ஆராக்கியராஜ் உள்பட) தயவு தாட்சண்யமில்லாமல் சட்டப்பூா்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கண்காணிக்காமல் விட்ட அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கும்.

குழந்தை சுஜித்தின் அகால மரணம் இன்னொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளா்கள் தொடா்ந்து விஷ வாயு தாக்கி இறந்திருக்கிறாா்கள் என்பது நமது அரசியல்வாதிகளுக்கும், காட்சி ஊடகங்களுக்கும் தெரியுமா? இந்த ஆண்டிலேயே தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 12 போ் கழிவுநீா் ஓடைகளில் இறங்கி உயிரிழந்திருக்கிறாா்கள். அவா்களுக்கு முறையான இழப்பீடு தரப்படுவதில்லை.

தமிழகத்தில்தான் மிக அதிகமான துப்புரவுப் பணியாளா்கள் உயிரிழக்கிறாா்கள். அவா்கள் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. அவா்களுக்கு ஜாதிப் பின்புலமோ, மதப் பின்புலமோ இல்லாததுதான் காரணமா? தலித்திய அரசியல்கட்சிகளும்கூட, துப்புரவுத் தொழிலாளா்கள் குறித்துக் கவலைப்படுவதில்லை, ஏன்? அவா்கள் கணிசமான வாக்கு வங்கியாக இல்லாமல் இருப்பதும், தலித்துகளில் அவா்கள் தீண்டத்தகாத தலித்துகளாகக் கருதப்படுவதும்தான் காரணமாக இருக்குமோ?
டாக்டர்கள் டிரான்ஸ்பர்: அமைச்சர் தகவல்

Updated : அக் 31, 2019 09:36 | Added : அக் 31, 2019 07:46 |

சென்னை: கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு, பிரேக் இன் சர்வீஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மருத்துவ கல்லூரி டீன் மூலம், மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், டாக்டர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

இதன் இடையே, பணிக்கு திரும்பும் டாக்டர்களை தடுக்கும் டாக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் நடவடிக்கை துவங்கியது எனவும் பணிக்கு திரும்பும் டாக்டர்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
நவ. 16 ரயில், நவ. 29 விமானம் ராமாயண யாத்திரை துவக்கம் ரயில்வே உணவு, சுற்றுலா கழகம் ஏற்பாடு

Added : அக் 30, 2019 23:25

மதுரை, :இந்தியன் ரயில்வே உணவு, சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில் பாரத தரிசன சுற்றுலா ரயில் நவ., 16ல் மதுரையில் இருந்து ராமாயண யாத்திரை செல்கிறது. நவ., 29ல் சென்னையில் இருந்து இலங்கை ராமாயண யாத்திரை விமானம் புறப்படுகிறது.நவ., 16ல் மதுரையில் புறப்படும் ரயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழி உத்திரபிரதேசம் செல்லும். அங்கு சித்திரக்கூட நகரில் ராம்காட் நதியில் நீராடி ராமாயண கோயில்கள் செல்லலாம். கங்கையில் நீராடி ரகுநாதபுரம் பிரம்மேஸ்வரநாதர் சிவன் கோயில், நேபாள் சீதை பிறந்த இடம், ஜனக்புரி கோயில், அயோத்தி சரயு நதி, ராமஜென்ம பூமி, நந்திகிராமம், அலகாபாத் திரிவேணி சங்கமம் செல்லலாம்.இதற்கு பின் சிருங்கவெற்பூர், சீதாமார்தி தரிசனம், மகாராஷ்டிரா பஞ்சவடி சீதா குகை, கோதாவரி நதி நீராடி கர்நாடகா ஜோஸ்பேட் வரலாம். இந்த இடம் ராமனை ஹனுமன் சந்தித்த, ஹனுமன் பிறந்த, ராவணன் கவர்ந்து சென்ற போது சீதையின் அணிகலன் விழுந்த இடமாக நம்பப்படுகிறது. 13 நாள் யாத்திரைக்கு ரூ.14,720 கட்டணம். இதில் 2ம் வகுப்பு படுக்கை வசதி, தென்னிந்திய சைவ உணவு, உள்ளூர் சுற்றுலா வாகன வசதி, தங்கும் விடுதி, சுற்றுலா மேலாளர், பாதுகாவலருக்குரிய கட்டணம் அடங்கும்.நவ., 29ல் சென்னையில் புறப்படும் யாத்திரை விமானம் இலங்கை செல்லும். அங்கு கண்டி, நுவரேலியா, கதிர்காம ராமாயண நிகழ்வுகளை காண 6 நாள் பேக்கேஜ் உண்டு. ரூ.39,900 கட்டணம். இதில் விமானம், தங்கும் அறை, 'ஏசி'வாகனம், உணவு, கைடு கட்டணம் அடங்கும். மத்திய, மாநில ஊழியர்கள் எல்.டி.சி., வசதி பெறலாம். சுற்றுலா செல்ல விரும்புவோர் www.irctctourism.com இணையத்தளம், 90031 40680 அலை பேசியில் தொடர்பு கொள்ளலாம், என தென்மண்டல சுற்றுலா மேலாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
PM dedicates Article 370 move to Patel

‘Centre has fulfilled his dream of full integration of Jammu and Kashmir with India’

01/11/2019, , SPECIAL CORRESPONDENT ,AHMEDABAD


Towering leader: Narendra Modi paying tributes to Sardar Patel at the Statue of Unity.ANIANI

Prime Minister Narendra Modi on Thursday dedicated the government’s “historic” decision of withdrawing the special status to Jammu and Kashmir under Article 370 to Sardar Vallabhbhai Patel on his birth anniversary, and said the Centre had fulfilled Patel’s dream of full integration of J&K with India.

Paying glowing tributes to Sardar Patel at the Statue of Unity built by the Gujarat government on an island on the Narmada near the Sardar Sarovar dam at Kevadia, Mr. Modi said that with the abrogation of Kashmir’s special status under Article 370, Patel’s dream of unifying India was now complete.

Human cost

“The country took the decision of abrogation of [special status to J&K under] Article 370, which had only given separatism and terrorism to that State and over 40,000 people lost their lives in three decades of terrorism,” he said, adding that it was Patel who had inspired him to take the decision to dilute Article 370 and that he was dedicating the decision “at the feet of” the first Home Minister of the country.

Comparing the move on Article 370 with the act of destroying a wall, Mr. Modi said the ‘temporary wall’ between Indians and those living on the other side had been brought down.

While lauding Patel for his efforts at integrating the hundreds of princely States after Independence, Mr. Modi also took a swipe at the country’s first Prime Minister Jawarharlal Nehru, indirectly blaming him for the way Jammu and Kashmir had been handled.

“Patel had once said that had he handled the Kashmir issue, it would not have taken so long to resolve it,” Mr. Modi said, implying that the issue had not been resolved for long since Nehru had handled it directly after Independence.

Without naming Pakistan, the Prime Minister warned that those who tried challenging the country’s unity would never succeed in defeating the country and its “unity in diversity”.

The new system in Jammu and Kashmir and Ladakh, both now Union Territories after the State was bifurcated following the dilution of Article 370 in August, was not meant to draw a line on the land or create a boundary but to build a strong link of trust between the government and the people of both regions, Mr. Modi said.

He also announced that, as promised by the government in August, government employees of Jammu and Kashmir would be treated on a par with other government employees and the Seventh Pay Commission’s scales had come into force from Thursday.

NEWS TODAY 28.04.2026