Friday, February 7, 2020

Stipend Issue: Over 150 MBBS interns stage protest, suspend OPD services in Punjab

Stipend Issue: Over 150 MBBS interns stage protest, suspend OPD services in Punjab: bAmritsar:/b Aggrieved over low monthly stipend for the past ten years, more than 150 medical students and interns staged a protest at Government Medical College (GMC), Amritsar and suspended classes and ...

NEET 2020: NTA reopens Application window

NEET 2020: NTA reopens Application window: bNew Delhi/b: Giving the last opportunity to candidates who somehow could not submit their NEET 2020 application correctly; the National Testing Agency (NTA) has activated the application window again.Thi...
கல்விக் கட்டணம் 200 மடங்கு உயர்வு; துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்ட புதுச்சேரி மத்திய பல்கலை. மாணவர்கள்மாணவ, மாணவிகள் போராட்டம்
புதுச்சேரி  07.02.2020

200 மடங்குக்கு மேல் கல்விக் கட்டணம் உயர்ந்துள்ளதைக் கண்டித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை மாணவ, மாணவிகள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி காலாப்பட்டில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மாணவ, மாணவிகள் இன்று (பிப்.6) பேரணியாக வந்து, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அதையடுத்து தடுப்புகள் வைத்து மாணவர்கள் தடுக்கப்பட்டனர். ஆனால், தடுப்புகளை அகற்றியும் தூக்கியெறிந்தும் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் பரிட்சய் கூறுகையில், "புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் கல்விக் கட்டணம் 200 முதல் 300 மடங்கு வரை உயர்த்தப்பட்டது. அதனைக் கண்டித்து மாணவர் பேரவை மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பாக உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணம் மற்றும் புதுச்சேரி மாணவர்களின் இலவசப் பேருந்து சேவைக்குக் கட்டணம் நிர்ணயித்ததைத் திரும்பப் பெற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் தலையிட்டார். மாணவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க நிர்வாகம் மற்றும் மாணவர் பேரவை நிர்வாகிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் கூட்டம் 3 முறை நடைபெற்றது.

ஆனால், அக்குழு உயர்த்தப்பட்ட கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுவது குறித்து ஆக்கபூர்வமான முடிவை மேற்கொள்ளவில்லை. மாறாக, கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற முடியாது என்றனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவசப் பேருந்து சேவைக்குக் கட்டணம் வசூலிப்பதிலேயே குறியாக இருந்தனர். இதற்கு மேல் பல்கலைக்கழக நிர்வாகத் தரப்புடன் பேச்சுவார்த்தை என்பது கண்துடைப்பாகவே அமையும் என்பதால் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரி துணைவேந்தர் அலுவலகம் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் உள்ள கட்டிடத்தை முற்றுகையிட்டுள்ளோம்" என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ, மாணவிகள் கூறுகையில், "உயர்த்தப்பட்ட கட்டணங்களைக் குறைக்க வலியுறுத்தி கடந்த வருடம் முதல் போராடி வருகின்றோம். இதுவரை குறைக்கப்படவில்லை. தற்போது மீண்டும் பேருந்து கண்டனம் கூடாது, உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்க வேண்டும், எந்தவித புதிய கட்டணத்தையும் விதிக்கக்கூடாது என வலியுறுத்திப் போராடுகிறோம். இதை துணைவேந்தர் அறிவிக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்" என்றனர்.
சிலிண்டருக்கு சரியான விலை கிடைக்க டிஜிட்டல் பேமென்ட்

Added : பிப் 07, 2020 04:32

கோவை:இண்டேன் சிலிண்டருக்குரிய சரியான விலையை வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் பேமன்ட் மூலம் செலுத்தும்படி, இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.இதன்படி, சிலிண்டர் புக் செய்தவுடன், வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு, http://payit.cc/L1xxxxxx என்ற ஆன்லைனில், பணம் செலுத்துவதற்கான 'லிங்க்' அனுப்பி வைக்கப்படும். இந்த லிங்கை கிளிக் செய்து, சிலிண்டருக்கான சரியான தொகையை, நெட் பேங்கிங், இ - வாலட், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு போன்ற ஆன்லைன் பேமன்ட் வழிமுறைகள் வாயிலாக செலுத்தலாம். இதன்மூலம், சிலிண்டர் டெலிவரிக்கு பின் வாடிக்கையாளர்கள் எந்த விதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. மேலும் தகவல்களுக்கு, 0422 - 224 7396, 224 0696 ஆகிய எண்களில் அழைக்கலாம்.
தூக்கு தண்டனை நிறைவேறுமா?; 'நிர்பயா வழக்கு இன்று விசாரணை

Updated : பிப் 07, 2020 06:45 | Added : பிப் 07, 2020 06:41

புதுடில்லி: 'நிர்பயா' வழக்கில், குற்றவாளிகளுக்கான துாக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து, டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓடும் பஸ்சில் இருந்து துாக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த வழக்கில், முகேஷ் குமார் சிங், 32, பவன் குப்தா, 25, வினய் குமார் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டில்லி திகார் சிறையில், இவர்களுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற இரண்டு முறை, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

கருணை மனு, மறு சீராய்வு மனு என, நான்கு பேரும், மாறி மாறி மனு தாக்கல் செய்து வருவதால், தண்டனையை நிறைவேற்றுவது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. கருணை மனுஇது தொடர்பான வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவு: குற்றவாளிகளில் நான்கு பேருக்கும் ஒரே நேரத்தில் தான் துாக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மட்டும், முதலில் தண்டனையை நிறைவேற்றுவது, மற்றவர்களுக்கு அதன் பின் தண்டனையை நிறைவேற்றுவது என்பது, சட்ட ரீதியாக சரியாக இருக்காது. எனவே, அடுத்த ஏழு நாட்களுக்குள், குற்றவாளிகள் தரப்பிலிருந்து வேறு புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால், எந்தவித தாமதமும் இன்றி தண்டனையை நிறைவேற்றலாம். அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நிராகரிப்புஇதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், 'குற்றவாளிகளில் நான்கு பேரில், மூன்று பேரின் கருணை மனுக்கள், மறு சீராய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. 'ஆனாலும், இந்த மூன்று பேருக்கும் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, தண்டனையை தாமதமின்றி நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள், என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று பரிசீலனைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

சிறை அதிகாரிகள் மனு

குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள டில்லி திகார் சிறையின் அதிகாரிகள் சார்பில், டில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்ற, புதிய, 'வாரன்ட்' பிறப்பிக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது. இந்த மனு தொடர்பாக, இன்றுக்குள் பதில் அளிக்கும்படி, நான்கு குற்றவாளிகளுக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.
'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு

Added : பிப் 07, 2020 00:38

தேனி: 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், மேலும் ஒரு மாணவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு மூலம் நடக்கிறது.

இதில், ஆள்மாறாட்டம் செய்து, வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்து, கல்லுாரியில் சேர்ந்த முறைகேடு தெரியவந்தது. இத்தேர்வு முறைகேட்டில், தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த, மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை, டாக்டர் வெங்கடேசன் முதலில், தேனி, சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.இதை தொடர்ந்து, புரோக்கர்கள் மூலம், வெவ்வேறு கல்லுாரிகளில் சேர்ந்த பிரவின், ராகுல், இர்பான், பிரியங்கா ஆகிய, நான்கு மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்கள், ஜாமினில் உள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய, புரோக்கர் முருகன் மட்டும், தேனி சிறையில் உள்ளார்.

இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையில், சென்னையில் உள்ள, ஒரு தனியார் மருத்துவக் கல்லுாரியில் படித்த, மாணவர் பவித்திரன், 20, என்பவர், நேற்று கைது செய்யப்பட்டு, தேனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இவரது சொந்த ஊர், கிருஷ்ணகிரி. இவரும், 'நீட்' தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு, கல்லுாரியில் சேர்ந்தது, தெரிய வந்தது. மாணவரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.இவ்வழக்கில் முக்கிய புள்ளியான, ரஷீத்தை இன்னும் கைது செய்யவில்லை.

சம்பளம் கொடுக்க பணமில்லை திண்டாடும் வீட்டு வசதி வாரியம்

Added : பிப் 06, 2020 22:43

சென்னை; மாதச் சம்பளம் வழங்க பணம் இல்லாததால், வைப்பு நிதியை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு, வீட்டுவசதி வாரியம் தள்ளப்பட்டு உள்ளதாக, ஊழியர் சங்கங்கள் புகார் தெரிவித்து உள்ளன.

இதுகுறித்து, வீட்டு வசதி வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம், வாரிய நிர்வாக இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதம்:கடந்த இரண்டு ஆண்டுகளாக, 5,000 அரசு ஊழியர் குடியிருப்புகள் கட்டுவதற்கு, 1,200 கோடி ரூபாய் வாரிய நிதி செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியை அரசிடம் இருந்து திரும்ப பெற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வாரிய நிதி செலவிடப்பட்டதால், பொது மக்களுக்காக வாரிய இடத்தில், வீடு கட்டி விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முன் எப்போதும் இல்லாத வகையில், இம்மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய, வைப்பு நிதியை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மக்களிடம் நிலவும் தேவையை கருத்தில் கொள்ளாமல், பல இடங்களில் கட்டப்பட்ட, 2,800 வீடுகள் விற்கப்படாமல் உள்ளன. இவற்றை விற்கவும், அரசு நிதியை விரைந்து பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

NEWS TODAY 24.05.2026