Saturday, December 12, 2020

Allopathy and ayurveda: A brief study in difference

Allopathy and ayurveda: A brief study in difference

Rema.Nagarajan@timesgroup.com

12.12.2020

Ayurveda practitioners are seeking equivalence with allopathic doctors in doing certain surgeries, but there seems to be a vast difference in the amount of training received in the systems. Everything from minimum number of beds in teaching hospitals to bed occupancy and the outpatient attendance required in a medical college to be allowed to do undergraduate and postgraduate training is much less for ayurveda colleges than for allopathic ones.

Barely a quarter of the 414 ayurveda colleges have 100 seats. Nearly two-thirds (64%) of UG ayurveda seats are in colleges with 60 seats or less, which need to have just a 60-bedded teaching hospital with 40% occupancy, or about 24 beds occupied. Of the 60 beds, beds that must be kept aside for shalakya tantra and shalya tantra (surgeries) are just 25.

In comparison, almost all MBBS colleges have at least 100 MBBS seats and for that they need a 500-bed teaching hospital with 75% occupancy (375 beds) and 120 beds kept aside for general surgery. Thus students who join for postgraduation in surgical specialties in ayurveda would have seen fewer patients and would have had much fewer opportunities to be trained in surgery.

Postgraduation in the surgical disciplines of shalya tantra and shalakya tantra are taught in the same colleges with stipulation of just marginal augmentation of beds, patients, faculty and support staff. If a college has more than ten PG seats in clinical subjects, additional beds in the student-bed ratio of 1:4 will have to provided, unlike at UG level when the ratio is 1:1. Also, the college will have to show 50% bed occupancy the previous . But colleges which have less than ten PG seats can make do with the same facilities as stipulated for undergraduate teaching. Thus clinical material is less in ayurvedic colleges than in allopathic ones.

The outlay required to start an ayurveda college is much less than that for an allopathy college for which the facilities and training mandated are much higher.

Full report on www.toi.in

Wednesday, December 9, 2020

Prior Environmental Clearance Not Required For Notifying Acquisition Of Land For National Highway: Supreme Court

Prior Environmental Clearance Not Required For Notifying Acquisition Of Land For National Highway: Supreme Court: 'Prior EC is required to be taken before commencement of the 'actual construction or building work''

Supreme Court Upholds Land Acquisition Notifications For Chennai-Salem 8 Lane Expressway

Supreme Court Upholds Land Acquisition Notifications For Chennai-Salem 8 Lane Expressway: The Supreme Court on Tuesday upheld the notifications issued for acquiring land for the Chennai-Salem eight-lane greenfield expressway project.Partly allowing the appeals of the Union of India and the...

SC gives go-ahead to acquire land for Chennai-Salem NH


SC gives go-ahead to acquire land for Chennai-Salem NH

The court rejected the challenge made to the notifications under Section 2(2) (declaration of land as NH) and 3A (issuance of notification intimating intent to acquire land) of the NH Act, 1956. 


Published: 09th December 2020 04:48 AM |


Image for representational purpose only. ( File | EPS)

By Express News Service

NEW DELHI: The Supreme Court on Tuesday gave a green signal to the Central Government to carry forward the land acquisition process for the Rs 10,000-crore eight-lane Chennai-Salem Green Field Corridor project. The top court also dismissed the appeal of land owners against the acquisition.

The apex court’s verdict came on a batch of appeals filed by the Centre and the National Highways Authority of India (NHAI), and a few land owners and others, including PMK leader Anbumani Ramadoss.

“The Centre is not required to obtain ‘prior environmental or forest clearance’ under the laws before declaring a stretch as national highway and expressing its intention to acquire the land for building, maintenance or operating such roads,” the apex court held.

Justices AM Khanwilkar, B R Gavai and Krishna Murari, partly allowed the appeals by the Centre and the National Highways Authority of India (NHAI) against a 2019 Madras High Court judgment which set aside the land acquisition process.

The court rejected the challenge made to the notifications under Section 2(2) (declaration of land as NH) and 3A (issuance of notification intimating intent to acquire land) of the NH Act, 1956. 

The project

The eight-lane corridor is part of the Centre’s Bharatmala Pariyojana project, and aims to cut the travel time between Chennai and Salem by half, to about two hours and 15 minutes

'மனித நேயம் மிக முக்கியமானது': மூக்குக் கண்ணாடி திருடப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கண்டனம்


'மனித நேயம் மிக முக்கியமானது': மூக்குக் கண்ணாடி திருடப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கண்டனம்

09.12.2020

மும்பை தலோஜா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட சமூக ஆா்வலா் கௌதம் நவலகாவின் கண்ணாடி திருடப்பட்ட விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்த மும்பை உயா்நீதிமன்றம், மனிதநேயத்தை உணா்த்தும் வகையில் சிறைத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது.

எல்கா் பரிஷத்-மாவோயிஸ்ட் இணைப்பு வழக்கில் கௌதம் நவலகா குற்றம் சாட்டப்பட்டு மும்பை தலோஜா சிறையில் கைதியாக அடைக்கப்பட்டுள்ளாா். இவரது கண்ணாடி கடந்த நவ. 27-ஆம் தேதி சிறைச்சாலைக்குள் திருடப்பட்டதாக நவலகாவின் குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா். கண்ணாடி இல்லாமல் நவலகா 'கிட்டத்தட்ட பாா்வையற்றவராக'வே இருப்பாா் என்பதால், அவருக்கு ஒரு ஜோடி புதிய கண்ணாடிகளை கூரியா் தபால் மூலம் அவரது குடும்பத்தாா் இம்மாத தொடக்கத்தில் அனுப்பி வைத்தனா். இந்த தபாலை ஏற்க மறுத்த சிறை அதிகாரிகள், அதனை திருப்பி அனுப்பி விட்டனா்.

கண்ணாடி இல்லாததால் நவலகா கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அவரைச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் காண முடியாததால் ரத்த அழுத்தம் அதிகரித்து விட்டதாகக் கூறி திங்கள்கிழமை மாலை நவலகாவின் வழக்குரைஞா்கள் மும்பை உயா்நீதிமன்றத்தில் நவலகாவின் மனைவி சஹ்பா ஹுசைன் சாா்பில் மனுத்தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, எம்.எஸ்.காா்னிக் ஆகியோா் அடங்கிய அமா்வு கூறுகையில், சிறைச்சாலைக்குள் நவலகாவின் கண்ணாடிகள் திருடப்பட்டிருப்பது ஆச்சா்யம் அளிக்கிறது. அவரது கண்ணாடிக்கு பதிலாக அவரது வீட்டாா் கூரியா் மூலம் அனுப்பிய கண்ணாடியை ஏற்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனா்.

'மனிதநேயம் என்பது மிக முக்கியமானது. இதனையொட்டியே மற்ற அனைத்தும் பின்பற்றப்படும். நவலகாவின் பாா்வை குறித்த பிரச்னையை நீதிமன்றம் புரிந்து கொண்டுள்ளது. சிறை அதிகாரிகள் மனித நேயத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும். அவா்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறை நடத்த இதுவே சரியான நேரம்.

இந்த சிறிய பொருளை மறுப்பதன் மூலம் எல்லாம் மாறி விடுமா? இதுபோன்ற மனிதாபிமான உதவிகளை அளிக்க அதிகாரிகள் மறுக்கக் கூடாது' என்று சிறைத்துறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு டிச. 31-ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் எல்கா் பரிஷத் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவோயிஸ்ட்டுகள் நிதியளித்ததாக போலீஸாா் குற்றம் சாட்டி கௌதம் நவலேகா மீது வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ முன்னிலையில், கடந்த ஏப். 14-ஆம் தேதி நவலகா சரணடைந்தாா்.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைக்கு அனுமதி!

சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைக்கு அனுமதி!

Updated : டிச 08, 2020 23:13 | Added : டிச 08, 2020 22:59 |

சென்னை: சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட, இத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை, மத்திய அரசும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் தொடரலாம் என, பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

சென்னை - சேலம் இடையே, 277 கி.மீ., துாரத்துக்கு, எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை, 1௦ ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு, நிலங்கள் கையகப்படுத்த, மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

மக்கள் நலன்

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, காங்., வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம், பா.ம.க., - எம்.பி., அன்புமணி, வழக்கறிஞர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தேசிய நெடுஞ்சாலையாக கட்டமைக்க, பராமரிக்க, நிர்வகிக்க, காலியிடங்களை கையகப்படுத்த, மத்திய அரசுக்கு போதிய அதிகாரங்கள் உள்ளன.

தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக, நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன், சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவையில்லை என்ற, மத்திய அரசு வழக்கறிஞரின் வாதங்களை, நாங்கள் ஏற்கவில்லை. பொருளாதார நலனை விட, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு, அதிக முக்கியத்துவம் உள்ளது. விவசாயத்தை பாதுகாப்பதும், மக்கள் நலன் தான் என்பதை, மறந்து விடக்கூடாது. எனவே, சுற்றுச்சூழல் ஒப்புதல் இன்றி, திட்டத்தை அமல்படுத்த அனுமதிப்பது, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும்.இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, மத்திய அரசு இன்னும் கருதினால், தேவையான நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

கருத்து கேட்பு

சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விரிவான ஆய்வை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் ஒப்புதல் கோருவதற்கு முன், பொது மக்கள் கருத்து கேட்பும் அவசியம்.எனவே, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன. தனியார் நிலங்களை, அரசு நிலங்களாக, வருவாய் ஆவணங்களில் குறிப்பிட்டிருந்ததை மாற்றி, புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதை, நில உரிமையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் மேல்முறையீடு செய்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகள், அன்புமணி தரப்பிலும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்களை, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், பி.ஆர்.கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் மாற்றம் செய்து, மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, 140 பக்கங்கள் அடங்கிய உத்தரவை பிறப்பித்தது.

தீர்ப்பின் முக்கிய அம்சம்:

தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, நிலங்கள் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை பிறப்பிக்கும் வரை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதலை, மத்திய அரசோ, தேசிய நெடுஞ்சாலை ஆணையமோ பெற தேவையில்லை.தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலை அமைக்கும் பணிகளை துவங்குவதற்கு முன்னே, சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முடிந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் நிலம் ஒப்படைக்கும் வரை அல்லது ஒப்படைத்த பின்னே, இது நடக்கும்.

எனவே, நிலத்தை மத்திய அரசு ஒப்படைத்த பின்னே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணிகளை துவக்க முடியும். அவ்வாறு நிலம் ஒப்படைக்கப்பட்ட பின், சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உரிய அனுமதி பெறுவதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விண்ணப்பிக்க முடியும்.

அதனால், நெடுஞ்சாலை அமைப்பதற்கான இடத்தை கண்டறியும் வரை, சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி அனுமதி கேட்டு, விண்ணப்பிக்க வேண்டும் என்ற, கேள்வி எழாது.

சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு சட்டப்படி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை பரிசீலித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி செல்லுமா, சரிதானா என்பது பற்றி, நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஏனென்றால், இதுகுறித்த பிரச்னையை, உயர் நீதிமன்றத்தில் வைக்கவில்லை. அதனால், உரிய நீதிமன்றத்தில், இதுகுறித்து கேள்வி எழுப்புவது, பாதிக்கப்படுபவர்களை பொறுத்தது.
எனவே, நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை சட்டப்படி, மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ளலாம்.

அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டதால் மட்டுமே, அரசு வசம் நிலங்கள் வந்து விடாது. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முடியும் வரை, நிலங்களை அரசு வசம் எடுக்கும் வரை, வருவாய் துறை ஆவணங்களில் மாற்றம் செய்ததை ஏற்க முடியாது என்ற, உயர் நீதிமன்ற உத்தரவில், நாங்கள் உடன்படுகிறோம். இதில், குறுக்கிட தேவையில்லை. நில உரிமையாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

போராட்டம் தொடரும்!

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக, போராட்டத்தை தொடர, விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை மறுவரையறை செய்து செயல்படுத்த, நேற்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த தீர்ப்பு, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம், ராமலிங்கபுரத்தில், எட்டு வழிச்சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகள், நேற்று மதியம், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.பின், விவசாயிகள் கூறியதாவது:தீர்ப்பு தற்காலிகமாக மகிழ்ச்சியை அளித்தாலும், மறைமுக ஆதரவு அளித்தது போன்றே உள்ளது.

ஏற்கனவே, சேலம் - சென்னை இடையே, பல்வேறு சாலைகள் உள்ள நிலையில், இந்த திட்டம் தேவையில்லாதது.மத்திய, மாநில அரசுகள், இந்த திட்டத்தை, ஒருபோதும் செயல்படுத்தக் கூடாது. விவசாயிகளின் நலன் கருதி, நீதிமன்றமும் இதில் தலையிட்டு, விவசாயிகள் நலனை காக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு எதிராக, தொடர் காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

திருப்பதி லட்டு பிரசாதம் 'டோர் டெலிவரி'யா?

 திருப்பதி லட்டு பிரசாதம் 'டோர் டெலிவரி'யா?

Updated : டிச 09, 2020 04:49 | Added : டிச 09, 2020 04:46

திருப்பதி: ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை உலகம் முழுதும், 'டோர் டெலிவரி' செய்வதாக, சமூக வலை தளங்களில் விளம்பரம் வெளியாகும் போலி இணையதளம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.

திருப்பதி, திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதத்திற்கு என தனி சிறப்பு உள்ளது. திருமலையில் கோவிலுக்குள் தயாரிக்கப்படும் பிரசாதத்திற்கு மதிப்பும் உள்ளது. அதனால், ஏழுமலையான் தரிசனத்திற்கு அடுத்தபடியாக, அனைவரும் வாங்கி உண்டு, மற்றவர்களுக்கும் வழங்குவது லட்டு பிரசாதம்.தற்போது, திருமலையில் இந்த லட்டு பிரசாதத்தை, பக்தர்கள் தேவையான அளவில் வாங்கி கொள்ளும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது

.இந்நிலையில், இந்த லட்டு பிரசாதத்தை உலகத்தின் உள்ள மூலை முடுக்குகளுக்கும் டோர் டெலிவரி செய்வதாக, www.balaji prasadam.com என்ற போலி இணையதளம் குறித்த விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனால், அந்த இணையதளத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

தேவஸ்தானத்தின் தொழில்நுட்பத்துறை வாயிலாக, இந்த இணையதளத்தை முடக்க வேண்டும் என்றும், அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். பக்தர்கள் இதுபோன்ற போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று அவர், வலியுறுத்தி உள்ளார்.
......................................................................................................................................................................

 பொருட்கள் வாங்காத கார்டுகளை அரிசி கார்டாக மாற்ற வலியுறுத்தல்

Added : டிச 08, 2020 23:29

சென்னை:எந்த பொருளும் வாங்காதோர், தங்கள் ரேஷன் கார்டுகளை, அரிசி கார்டாக மாற்றித்தரும்படி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், முன்னுரிமை, முன்னுரிமை அந்தியோதயா, முன்னுரிமையற்ற அரிசி, முன்னுரிமையற்ற சர்க்கரை, எந்த பொருளும் வாங்காதது என்ற பிரிவுகளில், ரேஷன் கார்டு வழங்கப்படுகின்றன. அவை, விண்ணப்பதாரரின், விருப்பத்தின் பேரில் வழங்கப்படுகிறது.எந்த பொருளும் வாங்காத கார்டுதாரர், ரேஷன் கார்டை முகவரி சான்றாக மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, 5.80 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள், இலவச அரிசி பெறும் வகையில், அரிசி கார்டாக மாற்றிக் கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.அதற்காக, சர்க்கரை கார்டுதாரர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எந்த பொருளும் வாங்காத, 50 ஆயிரம் கார்டுதாரர்களும், தங்களின் கார்டை, அரிசி கார்டாக மாற்றி தரும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, எந்த பொருளும் வாங்காத கார்டுதாரர்கள் கூறியதாவது:நல்ல வருவாய் ஈட்டும் நிலையில் இருந்து, எந்த பொருளும் வாங்காத கார்டை வாங்கினோம். ஓய்வு பெற்றதால் வருவாய் குறைந்து, ஏழைகளாகி விட்டோம். எனவே, சர்க்கரை கார்டுதாரர்களை போல, எந்த பொருளும் வாங்காத கார்டுதாரர்களையும், அரிசி அல்லது சர்க்கரை கார்டாக வகை மாற்றம் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
......................................................................................................................................................................

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவுக்கு 11ல் மருத்துவ கவுன்சிலிங்

Added : டிச 09, 2020 00:03

சென்னை:பட்டியல் இனத்தவர்கள்; பழங்குடிஇனத்தவருக்கான மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை, வரும், 11ம் தேதி துவங்குகிறது.

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. நேற்றைய கவுன்சிலிங்கில், பொது பிரிவில், 594 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில், 502 பேர் பங்கேற்று, அரசு கல்லுாரிகளில், 46 எம்.பி.பி.எஸ்., - 19 பி.டி.எஸ்., இடங்களை பெற்றனர். சுயநிதி கல்லுாரிகளில், 116 எம்.பி.பி.எஸ்., - 17 பி.டி.எஸ்., இடங்களில் மாணவர்கள் சேர்ந்தனர். மொத்தம், 198 இடங்கள் நிரம்பின.

தற்போது, அரசு கல்லுாரிகளில், 367 எம்.பி.பி.எஸ்., - 78 பி.டி.எஸ்., இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், 314 எம்.பி.பி.எஸ்., - 949 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், நாளை முடிய உள்ளது.இதைத் தொடர்ந்து, பட்டியலினத்தவர்கள், அருந்ததியினர், பழங்குடியினருக்கு, 11, 12, 14ம் தேதிகளில் கவுன்சிலிங் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 26.01.2026