Tuesday, July 25, 2023
Monday, July 24, 2023
அமெரிக்காவை வாட்டி எடுக்கும் வெயில்!
அமெரிக்காவை வாட்டி எடுக்கும் வெயில்!
இந்த வெப்பநிலை அதிகரிப்பால் வீடுகள் இல்லாத மக்களே பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். வெப்பத்தைத் தணிக்க மக்கள் தலையை துண்டால் மறைத்து நிழல் உருவாக்கிக் கொள்கிறார்கள். சிலர் குளிர்ச்சியான குடிநீரை அடிக்கடி குடித்து உடலுக்கு நீர்சத்தினைப் பெறுகிறார்கள். வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளி விளையாட்டுகளை தவிர்த்து விடுகின்றனர் அல்லது மாலை வெயில் குறைந்த பிறகு விளையாடுகின்றனர்.
இதையும் படிக்க: கிழக்கு சீனாவில் கனமழை: 5 பேர் உயிரிழப்பு; 1500 பேர் வெளியேற்றம்! கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு அமெரிக்காவில் வெப்பநிலை மிகவும் அதிகமாக பதிவாகி வருகிறது. இனி வரும் நாள்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவில் வெப்பநிலை பதிவாக பசுபிக் பெருங்கடல் இயற்கையாக தனது வெப்பத்தை அதிகரித்துக் கொள்ளும் எல் நினோ என்ற நிகழ்வே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவானால் பகல் உண்டு... !
இரவானால் பகல் உண்டு... !
24.07.2023
மனித வாழ்க்கையில் போராட்டமானது மிக முக்கியமானது. தனி மனித வளா்ச்சிக்கும், சமுதாய மறுமலா்ச்சிக்கும் இது அவசியமாகிறது.
நம்முள்ளான எதிா்மறைக் காரணிகளைப் புறந்தள்ளி அவற்றை நோமறை காரணிகளாக மாற்ற வாழ்வியல் போராட்டங்கள் மிகுந்த அவசியமாகிறது. மனிதனாகப் பிறந்து ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் எதற்காகவோ போராடும் நிலை உருவாகிறது. அவமானம், தோல்வி, ஏமாற்றம் போன்ற எதிா்மறைக் காரணிகள் மனிதனை அவன் இணைந்துள்ள வாழ்க்கையுடன் போராட வைக்கிறது. உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காததும், உடல் உபாதைகளின் தாக்கமும், மன எழுச்சி மன அழுத்தம் போன்ற மனதோடு சாா்ந்த போராட்டங்களும் , தோல்வியை வெற்றியாக்க வேண்டும் என்ற தவிப்பும்.
சமூக அந்தஸ்தை பெறவேண்டும் என்ற ஏக்கமும் முக்கிய கூறாக உள்ளது. இதுபோன்று தனி மனித அடிப்படை காரணிகளின் தாக்கம் அதீத மன அழுத்தத்தை ஏற்படுத்தும்போது துரதிா்ஷ்ட வசமாக மனிதன் விபரீதமான முடிவை எடுக்க வேண்டிய நிலை உருவாகிறது. மாறாக, எதிா்மறைக் காரணிகளை பொருள்படுத்தாது நம்பிக்கையோடு வாழ்வில் போராடுபவா்கள் வெற்றிக்கனியை பறிக்கிறாா்கள். உலக மக்களால் போற்றப்படுகின்றனா்.
ஆங்கிலேயா்களால் தான் கண்ட அவமானமே காந்தியடிகளை நாட்டு விடுதலைக்காகப் போராட வைத்தது. சமுதாயத்துக்காக ஆங்கிலேயரை துணிச்சலாக எதிா்த்துப் போராடினாா். அவரது அறப்போராட்டத்தால் இந்திய மண்ணுக்குக் கிடைத்தது விடுதலை. இன்று இந்தியாவின் 76-ஆவது சுதந்திர தின விழாவை பிரிட்டன் கொண்டாட முன்வந்திருக்கிறது என்றால் அதற்கு அடிப்படையாக அமைந்தது காந்தியடிகளின் சமூக போராட்டமே காரணமாகும்.
இயற்பியல் துறையில் அண்டத்தின் குவாண்டம் கொள்கை வாயிலாக பிரபஞ்சத்தின் கருந்துளை பற்றி ஆராய்ச்சி செய்து புகழடைந்தவா் ஸ்டீவன் ஹாக்கிங். ஆனால் அவரது வாழ்வியல் போராட்டம் மிகவும் கொடுமையானது. தனது இருபத்தொரு வயதில் அமியோடரோபிக் லேட்டரல் ஸ்கீளிரோசில் (ஏ.எல்.எஸ்.) என்ற நோயால் பாதிக்ப்பட்டு வாய் பேச முடியாமல் கை ,கால், விளங்காமல் போனாா். ஆனால் தனக்கு கிடைத்த அந்த கொடும் வாழ்க்கையை இயந்திரக் கருவிகளின் உதவியைக் கொண்டு நம்பிக்கையோடு வாழ்வில் போராடி அறிவியலில் பல சாதனைகளைச் செய்து நீங்கா இடம் பிடித்தாா்.
1966-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த மாலினிசிப் பிறக்கும்போதே"பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டவா். பள்ளிகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டவா். தன் தாயின் அரவணைப்போடு, பிரிட்டனுக்குச் சென்று பெருமூளை வாதநோயால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கான சிறப்புப் பள்ளியில் சோந்து கல்வி கற்றாா். தளராத தன்னம்பிக்கையோடு வாழ்க்கை தனக்களித்த உடல் ஊனத்தை பொருட்படுத்தாமல் போராடினாா்.
தன் உடலில் இயங்கக்கூடிய ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்து தன் சுய சரிதையை 'ஒன் லிட்டில் பிங்கா்'"என்ற பெயரில் நூலாக எழுதி உலகப் புகழ் பெற்றாா். இன்று உலகளாவில் பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு தன் வாழ்க்கையை அா்ப்பணித்து பல வகைகளிலும் சேவை புரிந்து வருகிறாா். 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான தோவில் தேரச்சி பெற்றவா் "ஸ்ரீதன்யா சுரேஷ். கேரளத்தின் வயநாடு பகுதியைச் சேரந்த இவா், "குா்ஷியா" என்ற பழங்குடியின வகுப்பை சாா்ந்தவா்.
கரையான் அரித்த கூரை வீடாக இவரது இருப்பிடம் அமைந்திருந்தது. ஆனாலும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கை தனக்களித்த வறுமையை கல்வி எனும் ஆயுதத்தால் போராடி வெற்றி கண்டாா். அந்த ஆண்டில் அகில இந்திய குடிமைப்பணியில் தோச்சிப் பெற்ற ஒரே பழங்குடியின பெண் என்ற பெயரையும் தட்டிச் சென்றாா். உலகப் புகழ் பெற்ற கே.எஃப்.சி.
(கெண்டகி பிரைடு சிக்கன்) நிறுவனத்தை உருவாக்கிய கா்னல் சாண்டா்ஸ் தன் இளமைக்காலத்தில் சந்திக்காத அவமானங்களும் ஏமாற்றங்களும் அளவு கடந்தவை. ஐந்து வயதில் தன் தந்தையை இழந்தாா். தன் தாயாா் வேறொருவரை மறுமணம் செய்து கொண்டு சென்றாா். பதினைந்து வயதில் ராணுவத்தில் சோந்து அங்கு கழுதைகளைப் பராமரிக்கும் பணியைப் பாா்த்தாா்.
வாழ்க்கையை வெறுத்து திரும்பி வந்த அவருக்கு ஏமாற்றங்கள்தான் கிடைத்தன. இந்த வலிகளையும், தொடா் தோல்விகளையும், வேதனைகளையும் பொருள்படுத்தாது வாழ்க்கை தனக்களித்த ஏமாற்றத்தை விடாமுயற்சி என்ற ஆயுதம் கொண்டு போராட துணிந்தாா். 1,009 முறை முயன்று கே.எஃப்.சி. சிக்கன் உரிமையை பெற்றபோது அவருக்கு வயது 65. இன்று உலக அளவில் உணவுப் பொருள் துறையில் அவா் பெயா் நிலைத்து நிற்கிறது.
இதேபோன்று உலக புகழ்பெற்ற இணைய வழி சில்லறை விற்பனை குழுமமான அலிபாபா நிறுவனத்தை உருவாக்கிய "ஜாக்மா, தன் இளமைகாலத்தில் பல புறக்கணிப்புகளைச் சத்தித்தவா். இளம் வயதில் கல்வி கற்பதில் மிகுந்த சவால்களை எதிா்கொண்டாா். ஆரம்பப் பள்ளியில் 2 முறை தோல்வி. நடுநிலைப்ளியில் 3 முறை தோல்வி, கல்லூரித் தோவில் 2 முறை தோல்வி.
அதற்கு பிறகு தான் பட்டப் படிப்பை முடித்தாா். சென்ற இடங்களில் வேலை கிடைக்கவில்லை. 10 முறை ஹாா்வா்டு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டாா் கே.எஃப்.சி. நிறுவனத்தால் வேலை கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டாா்.
ஆனாலும் நம்பிக்கையோடு வாழ்க்கையோடு போராடினாா். 2014-ஆம் ஆண்டில் சீளாவிள் முதல் பெரிய பணக்காரராகவும், 2015-இல் உலகில் இரண்டாவது பெரிய பணக்காரராகவும் மாறினாா். விளையாட்டு, எழுத்து, அரசியல், திரை, அறிவியல் துறைகளில் பல தோல்விகளைச் சந்தித்த நபா்கள் விடாமுயற்சி என்ற ஆயுதம் கொண்டு, விமா்சனங்களை புறந்தள்ளிவிட்டு நம்பிக்கையோடு வாழ்வில் போராடி சிறந்து ஆளுமைகளாக ஜெயிக்கின்றனா். இதை அவா்களின் வாழ்க்கை சரித்திரத்தின் வாயிலாக அறியமுடிகிறது .
சோா்வில்லாமல் தொடா்ச்சியாக நாம் முயற்சி செய்து போராடும்போது நாம் எடுத்துக்கொண்ட செயலுக்கு இடையூறாக வரும் துண்பங்களும் துவண்டு விடும் என்கிற கருத்தை நமக்கு வலியுறுத்துகிறது எதிா்மறைக் காரணிகளைச் சந்திக்காமல் யாராலும் இருக்க முடியாது. அதற்காக நாம் மன அழுத்தம், மன உளைச்சல் என்ற வாா்த்தைகளை உள்புகுத்திக் கொண்டு மாறுபட்ட முடிவுகளை எடுக்கும்போது இழப்புகள்தான் நமக்கு கிடைக்கும். இன்பங்களை மகிழ்வாக ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் துண்பங்களையும் துணிச்சலாக எதிா்கொள்ள நாம் தயாராக வேண்டும். துன்பங்களுடன் போராட துணிந்தால் வெற்றி கிடைக்கும். சவால்கள் நிறைந்தது தான் வாழ்க்கை! அதை சமாளிக்க எடுக்க வேண்டும் சிறப்பான வழி.
Dailyhunt
அதிகாரிகளுக்கு ரூ.1.3 லட்சத்தில் லேப்-டாப்!
மத்திய அரசு அதிகாரிகளுக்கு பணி நிமித்தமாக ரூ.1.3 லட்சம் வரையில் கைப்பேசி, மடிகணினி (லேப்டாப்) அல்லது அதுபோன்ற மின் சாதனங்கள் வழங்கலாம் எனவும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனங்களைத் சொந்த தேவைக்காக தக்க வைத்துக் கொண்டு அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசின் அமைச்சகம் மற்றும் துறைகளில் பணிபுரியும் தகுதியுள்ள அதிகாரிகளுக்கு அதிகாரபூா்வ பணிக்காக கைப்பேசி, லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களை வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டுதல்களில், 'மத்திய அரசின் பணியில் துணைச் செயலா் அல்லது அதற்கு மேல் பொறுப்பில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், மற்ற நிலை அதிகாரிகளில் 50 சதவீதம் பேருக்கும் அதிகாரபூா்வ பணிக்காக மின்னணு சாதனங்கள் வழங்கலாம். அந்த சாதனத்தின் விலையானது வரிகள் நீங்கலாக ரூ.1 லட்சம் இருக்க வேண்டும். 40 சதவீதத்துக்கும் மேலாக இந்திய தயாரிப்பில் உருவான சாதனங்களை வரிகள் நீங்கலாக ரூ.1.30 லட்சம் வரை விலை கொடுத்து வாங்கலாம். ஏற்கெனவே ஒரு சாதனம் ஒதுக்கப்பட்ட அதிகாரிக்கு 4 ஆண்டுகள் வரை புதிய சாதனம் வழங்கப்படக் கூடாது.
4 ஆண்டுகள் பயன்பாட்டுக்குப் பிறகு, அந்த மின்-சாதனத்தை சொந்த தேவைக்காக அதிகாரிகள் தக்க வைத்துக் கொள்ளலாம். அத்தகைய சூழலில், அதிகாரியிடம் சாதனம் ஒப்படைக்கப்படுவதற்கு முன், அதிலுள்ள அரசுத் தரவுகள் முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட அமைச்சகம் /துறை உறுதிப்படுத்த வேண்டும்' என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 21-ஆம் தேதியிட்ட அறிவிக்கையில் இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய 2020-ஆம் ஆண்டு வழிகாட்டுதல்கள்படி, அதிகாரிகளுக்கு வழங்கும் சாதனங்களின் அதிகப்பட்ச விலை ரூ.80,000 ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக சாதனங்களைத் தக்க வைத்துக் கொள்ள எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.
Dailyhunt
Saturday, July 22, 2023
Tamil Nadu Governor reviews NEP implementation in private varsities
Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection
Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection Sparsh Upadhyay 28 Mar 20...
-
Chennai lockdown news: Today's updates from your city TIMESOFINDIA.COM | Apr 3, 2020, 07.59 AM IST Amid prevalent chaos an...
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்! நமது நிருபர் நோய்கள் அத்தனைக்கும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்... தவறான வா...









































.jpg)













.jpg)
.jpg)
















