Wednesday, October 1, 2025

Tamil Nadu government files review petition in apex court against mandatory TET order


Tamil Nadu government files review petition in apex court against mandatory TET order

Rule will affect 3 lakh teachers with over 5 yrs of service left and 67K nearing retirement: Anbil


Express News Service

Updated on:

01 Oct 2025, 8:38 am

TIRUCHY/NEW DELHI: The Tamil Nadu government filed a review petition on Monday in the Supreme Court seeking reconsideration of its September 1 order mandating all serving teachers to clear the Teacher Eligibility Test (TET) within two years to continue in service, School Education Minister Anbil Mahesh Poyyamozhi told media persons in Tiruchy on Tuesday.

The minister said the review petition challenged the apex court’s order and connected matters, stressing that retrospective application of the TET rule would adversely impact 3.28 lakh teachers with more than five years of service left and about 67,000 nearing retirement. “If these experienced teachers are declared unqualified or forced to retire, it will leave classrooms vacant across thousands of schools, jeopardising the future of millions of children,” he warned.

He said the state was also exploring all possibilities of introducing a special legislation in the forthcoming Assembly session to protect teachers and prevent disruption of the school education system. Referring to the National Council for Teacher Education (NCTE) notification dated August 23, 2010, which exempted teachers appointed before that date from the TET requirement, Poyyamozhi said the state has prayed that this exemption be upheld.

“We have sought clarity that pre-2010 appointees should continue to be eligible for promotion, while TET should apply prospectively only to new appointments and promotions after 2010,” he said.

The minister stressed that enforcing the order without modification could result in an unprecedented shortage of nearly four lakh teachers, which the state could not replace within two years. Such a scenario, he said, would gravely endanger the right to education of rural, hilly, and marginalised children who rely entirely on government schools.

Senior lawyer P Wilson told TNIE that the matter may be taken up for hearing in 10-15 days. The Supreme Court’s two-judge bench, headed by Justice Dipankar Datta and Justice Manmohan, had in its verdict held that the TET is a mandatory requirement to continue in teaching service or to seek promotion.

The top court passed the verdict after hearing a batch of petitions, including states from TN and Maharashtra, related to the issue of whether TET is mandatory for teaching service. The SC, in its verdict, had referred to larger bench the question of whether the state can mandate TET for minority institutions and how it would affect their rights.

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்


இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம். தினமணி செய்திச் சேவை Updated on: 01 அக்டோபர் 2025, 4:09 am

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், புதன்கிழமை (அக். 1) முதல் அக். 6 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வடக்கு அந்தமான் கடலில் செவ்வாய்க்கிழமை (செப். 30) நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், புதன்கிழமை (அக்.1) மத்திய வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடலில் வியாழக்கிழமை(அக்.2) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை(அக்.3) கரையை கடக்கக்கூடும். இதனால், வியாழக்கிழமை(அக்.2) செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், வெள்ளிக்கிழமை(அக்.3) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை (அக்.1) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரியையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றத்தில் 30 மி.மீ மழை பதிவானது.

மணலி(சென்னை), கத்திவாக்கம், அமைந்தகரை, மணலிபுதுநகரம், நுங்கம்பாக்கம், செங்குன்றம், திருவொற்றியூா், சோழவரம்(திருவள்ளூா்) -தலா 2 மி.மீ.மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:மத்திய- வடக்கு வங்கக்கடலின் பல பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும், மத்திய-வடக்கு வங்கக்கடலின் ஏனைய பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் பல பகுதிகள், ஆந்திரம்-ஒடிஸா-மேற்கு வங்க கடலோரப்பகுதிகள் மற்றும் அந்தமான் கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!


DINAMANI

மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!

அக்டோபர் 2- மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அந்த நாளை புனித நாளாக இந்தியாவில் கொண்டாடுகிறோம்.

தினமணி செய்திச் சேவை

Published on: 01 அக்டோபர் 2025, 2:55 am

முனைவர் அ.பிச்சை

அக்டோபர் 2- மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அந்த நாளை புனித நாளாக இந்தியாவில் கொண்டாடுகிறோம். உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள். மகாத்மாவின் சித்தாந்தங்களை நினைவுகூர்ந்து பேசுகிறார்கள். பேசுவதைவிட, அவற்றைக் கடைப்பிடிப்பதே மானுடம் வாழ்வதற்கான வழி என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள்! ஆனால், மகாத்மா தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி என்ன நினைத்தார்? என்ன சொன்னார் என்பதை அறிய வேண்டுமல்லவா?

மகாத்மா காந்தி 1915-இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அதுமுதல் ஓய்வில்லாத தேச ஒற்றுமைப் பணி- தொடர் போராட்டங்கள்; அடுத்த ஐந்து ஆண்டுகளில் (1915-1919) அவரது உடல் மெலிந்தது; நலிந்தது. அப்போது, அவர் வசித்த இடம் சபர்மதி ஆசிரமம்; 1919, அக்டோபர் 2-ஆம் தேதி அவரது 50-ஆவது பிறந்த நாள் வந்தது.

அன்று அவரது உடல் நிலை சரியில்லை. மோசமடைந்து வருகிறார்; தொடர்ந்து இருமுகிறார். உடனே வருமாறு அவரது மகன்களுக்கு தந்திகள் அனுப்பப்படுகின்றன. மகன் தேவதாஸ் வந்து தந்தையை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார். மகாத்மா காந்தி எதுவும் பேசவில்லை. ஆசிரமவாசிகளிடம் ஏன் இவ்வளவு பேர் இங்கே வந்தீர்கள்? அவரவர் பணியைச் செய்ய வேண்டாமா? என்றார்.

எந்நிலையிலும் தன் நலம் கருதாமல், பிறர் துயர் துடைப்பதே இறைப் பணி! இதுதான் அண்ணல் நமக்கு விட்டுச் சென்ற 50-ஆவது பிறந்த நாள் செய்தி!

1931 அக்டோபர் 2-ஆம் நாள். அது மகாத்மா காந்தியின் 62-ஆவது பிறந்த நாள். அப்போது, இரண்டாவது வட்ட மேசை மாநாடு லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக மகாத்மா பிரிட்டன் சென்றிருந்தார். அங்குள்ள காந்திய அன்பர்கள், அவரது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பினர். லண்டன் லைசெஸ்டர் சதுக்கத்தில் உள்ள விக்டரி ஹாலில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தியர்களும் ஐரோப்பியர்களும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

பிறந்த நாள் என்பதற்காக மகாத்மா காந்தி ஓய்வு எடுக்கவில்லை; வழக்கமான பணிகளை மேற்கொண்டார். எப்போதும்போல் வட்ட மேசை மாநாட்டுக்குக் கிளம்பிச் சென்று விட்டார். அங்கோ விவாதங்கள் நீடித்தன. மாநாட்டுப் பணிகள் அவரை மிகவும் களைப்பாக்கியிருந்தன. விழா அரங்குக்கு காந்தி வருவதற்கு, காலதாமதம் ஆகிவிட்டது. அது மகாத்மா காந்திக்கு மிகுந்த கவலையைத் தந்தது.

விழா அரங்கில் அவர் அதிகம் பேசவில்லை. பேச்சைத் தொடங்கி அவர் சொன்ன முதல் வாசகம்.

"தவிர்க்க இயலாத காரணத்தால், நான் இங்கே வருவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. காலதாமதத்துக்கு வருந்துகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்'

என்பதாகும். வந்திருந்த விருந்தினர்கள் அதைக் கேட்டு கண் கலங்கி நின்றனர்!

காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது மகாத்மா காந்தி கற்பித்த, கடைப்பிடித்த நெறிமுறைகளில் ஒன்றாகும்.

1935-இல் புதிய அரசியல் சீர்திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. 1937-இல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது. அன்றைய பிகார் காங்கிரஸ் அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அது-மகாத்மா காந்தியின் பிறந்த நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாள் என்பதாகும்.

இந்த அறிவிப்பு சரியா? முறையா என்று கேட்டு ஒரு பிகாரி (இஸ்லாமிய) இளைஞர் மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதினார். அதற்கு அவர், அந்த இளைஞருக்கே பதில் எழுதினார். பதிலின் வாசகம்- "என் பிறந்த நாளை விடுமுறை நாளாக அறிவிப்பது பிடி ஆணை இன்றியே கைது செய்யப்படுவதற்குரிய குற்றமாகும்' என்பதாகும்.

"அந்த நாளில் நூல் நூற்க வேண்டும்; பிரார்த்தனை செய்ய வேண்டும்; ஹரிஜன சேவையில் மக்கள் ஈடுபட வேண்டும்; அது உழைப்புக்கும், சேவைக்குமான நாள். கொண்டாட்டத்துக்கான நாள் அல்ல' என்பதே மகாத்மா காந்தி வெளியிட்ட கருத்து'. (ஹரிஜன் இதழ்: 15.10.1938) ஆகவே, அக்டோபர் 2-ஆம் தேதி நாம் ஜாதிமத பேதமற்ற சமுதாயம் காணும் பணியிலும், பிற தேசப் பணியிலும் ஈடுபட வேண்டும் என்பதே நாம் கடைப்பிடிக்க வேண்டிய முதல் கடமை.

அக்டோபர் 2, 1947. அதுதான் சுதந்திர இந்தியாவில் காந்தியின் முதல் பிறந்த நாள்; அதுவே அவரது கடைசிப் பிறந்த நாளாகவும் அமைந்து விட்டதே! அன்று தான் 78 வயதை நிறைவு செய்து, தனது 79-ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறார்!

125 வயது வரை வாழ வேண்டும்; மானுட நலனுக்காகவும் உயர்வுக்காகவும் ஓயாது உழைக்க வேண்டும் என்பது ஆரம்ப கால நம்பிக்கை. ஆனால், இன்றோ வாழ்ந்தது போதும் இந்த வாழ்க்கை என எண்ணத் தொடங்கி விட்டார். தேச விடுதலை மகிழ்ச்சியைத் தந்தது: ஆனால், தேசப் பிரிவினை துயரத்தில் தள்ளியது. "ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். ஒரே வீட்டில் வளர்ந்தவர்கள், பிரிந்து தனி வீடு கண்டார்கள். தவறில்லைதான். சகோதரர்களாக இருந்தவர்கள், நண்பர்களாக வாழ்வார்கள் என நம்பினேன். ஆனால், பகைவர்களாக மாறி விட்டார்களே! எங்கும் கலவரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, இடப் பெயர்ச்சியால் ஏற்பட்ட இன்னல்கள்; இதைக் காண்பதற்காகவா நான் வாழ்கிறேன்! இறைவா! என்னை நீ விரைவில் எடுத்துக் கொள்' என பிறந்த நாள் பிரார்த்தனைக் கூட்டத்தில் வேண்டினார். குறைந்தபட்சம் என் மக்களுக்கு நல்ல புத்தியைக் கொடு என்று மன்றாடினார்.

என்றும்போல் அன்றும் அண்ணல் அதிகாலையில் துயிலெழுந்தார்; காலைக் கடன்களை முடித்தார்; கைராட்டையில் நூல் நூற்றார்; கீதை சுலோகங்களைக் கேட்டார். பிரார்த்தனையில் ஈடுபட்டார். முதல் நாளிலேயே தொடங்கிய 24 மணிநேர உண்ணா நோன்பை அன்றும் தொடர்ந்தார். பார்வையாளர்களைச் சந்திக்க, அந்த சாந்த மூர்த்தி தன் இருக்கையில் அமர்ந்தார்.

முதலில் கவர்னர் ஜெனரல் மெüண்ட் பேட்டன் தன் துணைவியார் எட்வினாவுடன் வந்து இனிய வாழ்த்துக் கூறினார். பிரதமர் ஜவாஹர்லால், துணைப் பிரதமர் படேல், ஜி.டி. பிர்லா, கே.எம்.முன்ஷி, ராஜ்குமாரி அம்ருத கெüர், இன்னும் பலர் வந்து வாழ்த்துக் கூறினார்கள். சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது அறிவிப்புகள் அவருக்கு ஆறுதல் அளித்தன. மகிழ்ச்சியைத் தந்தன.

முதலாவதாக மதராஸ் மாகாணத்தில் அக்டோபர் 2-ஆம் நாள் முதல் மதுவிலக்கு திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பாகும். மது, போதைப் பொருள் மூலம் கிடைக்கும் வரி மிகவும் மட்டமானது. மதராஸ் மற்ற மாகாணங்களுக்கு வழிகாட்டுகிறது என்பதில் மகாத்மாவுக்கு மகிழ்ச்சி.

இரண்டாவதாக அவரது இளமைக்கால நண்பர் ஒருவர் பெயர் ராஞ்சோத் தாஸ் பட்வாரி. இவர் மகாத்மா காந்தி லண்டனில் படிப்புக்காக கப்பலில் பயணித்தபோது உதவியவர். அதன் பிறகு தொடர்பே இல்லை. அவர் மகாத்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். அதில், "சகோதரரே! நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும். உங்கள் மனிதநேயப் பணி தொடர வேண்டும்' என வாழ்த்தியிருந்தார்.

அதற்கு காந்தி உடனே அனுப்பிய பதில், "வாழ்த்துக் கடிதத்திற்கு நன்றி! ஆனால், நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசையை விட்டுவிட்டேனே! என்னை மகாத்மா என்கிறார்கள்: ஆனால், நான் இன்று ஒரு அல்பாத்மா ஆகிவிட்டேனே! நான் இருந்து என்ன பயன்?'

விலாசமில்லாத ஒரு நண்பனுக்கு உத்தமன் காந்தி எழுதிய அந்தக் கடிதம் நம் இதயத்தை நெகிழ வைக்கிறது.

மூன்றாவதாக மேலைநாட்டு வரலாற்று ஆய்வாளர் ஒருவர், இரண்டாவது உலகப் போரில் பிரிட்டனுக்கு வெற்றி தேடித் தந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். வெற்றிக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில், அதே சர்ச்சில் பெருமகனை தூக்கி எறிந்து விட்டார்களே பிரிட்டானிய பெருமக்கள்! அதே நிலைதான் சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்திக்கும் நிகழுமா என நான் அஞ்சுகிறேன் என்றார். உளவியல் ரீதியாக இது சரியான கணிப்பு என்று ஒரு பதிவு உள்ளது. இதை மகாத்மா காந்தி அறிந்த போதும் அது சரி என்னும் வகையில் தலை அசைத்தாராம்.

ஐந்தாவதாக, அண்ணலின் நண்பர் ஒருவர் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். அத்துடன் ஜார்ஜ் மாதிசன் எழுதிய கவிதை வரிகளையும் அனுப்புகிறார். அவ்வரிகள் இதோ!

என் கால் விலங்குகளைக் கொண்டே

என்னால் பறக்கமுடியும்!

எனது வருத்தங்களைக் கொண்டே

என்னால் வானளாவ உயர முடியும்!

எனது பின்னடைவுகளைக் கொண்டே

என்னால் ஓட முடியும்-!

எனது கண்ணீரிலேயே

என்னால் நீந்த முடியும்!

எனது சிலுவையைக் கொண்டே மானுட

சமுதாயத்தின் இதயத்தில் குடியேற முடியும்!

எனது சிலுவையைப் பெரிதாக்குங்கள்

இறைவா!

அவற்றை காந்திஜி மீண்டும் மீண்டும் படித்தார். எளிமையும், இனிமையும், அழகும், ஆன்மிக ஆழமும் கொண்ட இக்கவிதை அண்ணலின் இதயத்தைத் தொட்டது-. அந்தக் கடிதத்தை தன் அருகிலேயே வைத்துக்கொண்டார்-! மீண்டும், மீண்டும் அதைப் படித்துப் பார்த்தார்!

அண்ணலின் உள்ளுணர்வு அவரைத் தூண்டியது: உற்சாகம் மீண்டும் உயிர்த்து எழுந்தது; புத்துணர்வு பூத்தது; தனது லட்சியம் மட்டுமே தன் கண்ணுக்குத் தெரிந்தது.

எழுந்து நின்றார் எம்மான் காந்தி! தனது வேட்டியை இடுப்பில் இறுக்கிக் கட்டினார்! மணிகாட்டும் கடிகாரத்தை மடியில் தொங்கவிட்டார்! போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டார்! இறை நம்பிக்கையோடு மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கினார்! மண்ணுக்கும் மானுடத்துக்குமான தன் லட்சியம் மட்டுமே அவர் கண்ணுக்குத் தெரிந்தது! ஆனால் நான்குமாதம் தான் அப்பயணம் தொடர்ந்தது!

கோட்சே என்ற கொடியவன் அம் முனிவரின் பயணத்தை மூன்று குண்டுகளால் முடித்து வைத்தான்! காந்தி மறைந்து விட்டார்! ஆனால், காந்தியத்துக்கு மரணமில்லை!

(நாளை அக். 2 காந்தி ஜெயந்தி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


Tuesday, September 30, 2025

NEWS TODAY 30.09.2025






























 

How Karur medical college hospital rose to the occasion during stampede


How Karur medical college hospital rose to the occasion during stampede

The Hindu Bureau

Karur  30.09.2025tn

In the aftermath of the stampede at Tamilaga Vettri Kazhagam (TVK) president and actor Vijay’s rally, which killed 41 people, Karur Government Medical College Hospital turned into the nerve centre of an unprecedented emergency response.

Inside the hospital, doctors, nurses and staff worked on a war footing. Nearly 85 doctors reported within hours of the incident, and about 90% of the hospital staff turned up without being summoned, officials said.



“Our own team was enough to manage, yet doctors from Madurai and Tiruchi also rushed in to lend support,” a senior official noted.

Government and private ambulances also worked in tandem. “That night was a nightmare. I made three trips within a few hours. Despite the chaos, the public cooperated with us and cleared the way,” recalled R. Velayutham, a private ambulance driver.

The mortuary became the busiest section of the hospital. Nearly 20 postgraduate students from nearby medical colleges, including Salem, Tiruchi and Namakkal, were drafted in with police clearance to carry out post-mortems. Working through the night, they completed examinations of the 39 bodies by Sunday afternoon.

The pressure was not just medical. “Handling non-medical persons who accompanied the patients was a challenge. Emotions were high, and crowd control inside the premises was difficult,” a senior medical officer said.

“But with the help of the police and our staff, we managed,” he added.

Laboratory technicians, attendants and support staff worked alongside the doctors and the nurses to keep the operations running.

The hospital, the officials said, had not faced such a test in years after COVID, but rose to the occasion, with teamwork being the key.

பிறமொழி கலப்பின்றி பேசுவோம்!

DINAMANI

நடுப்பக்கக் கட்டுரைகள் 

பிறமொழி கலப்பின்றி பேசுவோம்!

தமிழ் மொழியில் பல்லாயிரம் வாா்த்தைகள் இருக்க, நாம் பிறமொழி வாா்த்தைகளை, குறிப்பாக ஆங்கில வாா்த்தைகளைப் பயன்படுத்தக் காரணம் அறியாமை அன்று; ‘ஆங்கிலத்தில் பேசுவது பெருமை, தமிழில் பேசுவது கேவலம்’ என்ற மனப்போக்கே காரணம்! மாணவா்களுக்கு ஆங்கில வாா்த்தைகளுக்குத் தமிழில் அா்த்தம் சொல்லிக் கொடுத்த நிலை மாறி, இன்று தமிழ் வாா்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் பொருள் சொல்லி விளக்க வேண்டியுள்ளது!

இரா. கற்பகம் Updated on:  30 செப்டம்பர் 2025, 3:25 am 

இன்று பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் பேசுவதும் எழுதுவதும் அரிதாகவும் கடினமாகவும் ஆகிவிட்டன. இருநூற்றி நாற்பத்தியேழு எழுத்துகள் ஒன்றோடொன்று சேரும்போது வாா்த்தைகளுக்குப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லையே! பிறகு ஏன் நாம் தனித் தமிழை விடுத்துப் பிறமொழிக் கலப்புடனேயே பேசுகிறோம்?, எழுதுகிறோம்?, அப்படியே தமிழில் பேசினாலும், எழுதினாலும் அதில் பிழைகள்?

ஒருவரைச் சந்தித்தால் முகமன் கூற, தமிழில் ‘வணக்கம்’ என்ற அழகிய வாா்த்தை இருக்கிறது. ஆனால், நாம் ‘குட்மாா்னிங்’ என்றுதான் பெரும்பாலும் கூறுகிறோம். ஒருவரிடம் விடை பெறும்போது ‘போய் வருகிறேன்’ என்று சொல்வதும், அவா் ‘போய் வாருங்கள்’ என்று சொல்வதும் வெறும் வாா்த்தைப் பிரயோகம் அன்று. ‘மீண்டும் உங்களைச் சந்திக்க வருகிறேன்’ என்று விருந்தினா் கூறுவதாகவும், ‘மீண்டும் எங்கள் வீட்டுக்கு வாருங்கள்’ என்று உபசரிப்பவா் கூறுவதாகவும் அமைந்து, தமிழரின் விருந்தோம்பல் பண்பாட்டினைப் பிரதிபலிக்கிறது. நாமோ இந்த நல்ல வாா்த்தைகளை விடுத்து ‘குட்-பை’, ‘டாட்டா’ என்று கூறுகிறோம்.

பஸ், பஸ் ஸ்டாண்ட், ட்ரெய்ன், ஸ்டேஷன், ஸ்கூல், காலேஜ் என்பன போன்ற நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பொருள்களையும் குறிக்க ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக, பேருந்து, பேருந்து நிறுத்தம், புகைவண்டி அல்லது (பேச்சுத் தமிழில்) ரயில், ரயிலடி, பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற தமிழ்ச் சொற்கள் இருந்தும் நாம் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குகிறோம். வீட்டிலுள்ள அறைகளுக்கும் இதே நிலைதான். கூடம், படுக்கையறை, சமையலறை, மாடிப்படி எல்லாம் மறந்து போய், ஹால், பெட்ரூம், கிச்சன், ஸ்டோ்ஸ் என்றுதான் குறிப்பிடுகிறோம்.

வீட்டிலோ வெளியிலோ பெரியவா்களை ‘ஐயா’ என்றும் ‘அம்மா’ என்றும் அழைக்கிறோமா? இல்லை! சாா் என்றும் மேடம் என்றும் தான் அழைக்கிறோம். அதிலும் இந்த ‘மேடம்’ என்னும் வாா்த்தை இருக்கிறதே, அது இன்று படும் பாடு! பெண்களில், படித்தவா்கள், படிக்காதவா்கள், பணியில் இருப்பவா்கள், பணியில் இல்லாதவா்கள், மரியாதைக்குரியவா்கள், அல்லாதவா்கள், பணக்காரா்கள், ஏழைகள் எல்லோருக்குமே ‘மேடம்’ என்ற ஒரே சொல்தான்! உறவு முறைகளைக் குறிக்கும் சொற்கள் - அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சித்தி, சித்தப்பா, பெரிம்மா, பெரியப்பா, மாமா, மாமி, அத்தை, என்றெல்லாம் வாா்த்தைகள் இருக்கின்றன. அதிலும் மாமாவின் மனைவி மாமி, அப்பாவின் சகோதரி அத்தை என்று உறவுகளைத் தெளிவாகக் குறிக்கின்றன. ஆனால் மம்மி, டாடி, ப்ரோ, சிஸ்டா், ஆண்ட்டி, அங்கிள் என்று நாம் ஏன் அழைக்க வேண்டும்?

பூங்கா, பொருட்காட்சி, நூலகம், அருங்காட்சியகம், அடுமனை, திரையரங்கம் போன்ற வாா்த்தைகளைத் தவிா்த்து பாா்க், எக்ஸிபிஷன், லைப்ரரி, மியூஸியம், பேக்கரி, சினிமா தியேட்டா் என்றுதான் குறிப்பிடுகிறோம். இந்த வாா்த்தைகளெல்லாம் சிறிது சிறிதாக மறக்கப்பட்டு வருகின்றன. பனிக்கூழ்- ஐஸ்க்ரீம்; கரிக்கோல்- பென்சில், அழிப்பான்-ரப்பா், எழுதுகோல்-பேனா என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களுக்கெல்லாம் அழகிய தமிழ்ப் பெயா்கள் உள்ளன; நாம்தான் அவற்றைக் கூறத் தயங்குகிறோம்.

நம் மொழியில் பல்லாயிரம் வாா்த்தைகள் இருக்க, நாம் பிறமொழி வாா்த்தைகளை, குறிப்பாக ஆங்கில வாா்த்தைகளைப் பயன்படுத்தக் காரணம் அறியாமை அன்று; ‘ஆங்கிலத்தில் பேசுவது பெருமை, தமிழில் பேசுவது கேவலம்’ என்ற மனப்போக்கே காரணம்! இப்படிப் பேசிப்பேசி, தமிழ் வாா்த்தைகளே மறந்துபோய் ஆங்கில வாா்த்தைகளையே பயன்படுத்தும் நிலைக்கு நாம் வந்து விட்டோம். மாணவா்களுக்கு ஆங்கில வாா்த்தைகளுக்குத் தமிழில் அா்த்தம் சொல்லிக் கொடுத்த நிலை மாறி, இன்று தமிழ் வாா்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் பொருள் சொல்லி விளக்க வேண்டியுள்ளது!

வட மாநிலத்தவா்கள் பலா் ஒன்று சோ்ந்தால், அவா்கள் தங்களது மொழியில்தான் பேசிக் கொள்கிறாா்கள். கேரளத்தைச் சோ்ந்தவா்கள் ஒன்றுகூடினால் மலையாளத்தில்தான் உரையாடுகிறாா்கள்; தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவா்கள் சேரும்போது தெலுங்கில்தான் பேசிக்கொள்கிறாா்கள்; தங்கள் தாய்மொழியில் பேசுவதைக் கௌரவக் குறைவாக அவா்கள் கருதுவதில்லை. தமிழா்களாகிய நாம்தான் தாய்மொழியில் பேசுவதைக் கேவலமாகக் கருதி ஆங்கிலத்தில் பேசுகிறோம். பிற மாநிலங்களில் அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் எல்லாவற்றிலும் அந்த மாநில மொழியிலேதான் பெயா்ப்பலகைகள் இருக்கும். கூடுதலாக ஆங்கிலத்திலும் இருக்கலாமேயன்றி, அவா்கள் மொழியை விடுத்து ஆங்கிலத்தில் மட்டும் பெயா்ப்பலகைகளைக் காணவே முடியாது. தமிழ்நாட்டில் பெயா்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியும் பல இடங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே காண முடிகிறது.

தமிழ்த் திரைப்படங்களை எடுத்துக் கொள்வோம். தமிழில் பெயா் வைத்தால் வரிச் சலுகை என்றெல்லாம் அரசு அறிவித்தும்கூட, பல திரைப்படங்கள் ஆங்கிலப் பெயா்களோடு வருகின்றன. அவற்றுக்கு நல்ல தமிழ்ப் பெயா்களைச் சூட்ட இயலாதா? தமிழில் வாா்த்தைப் பஞ்சமா அல்லது தமிழ்ப் பற்றுக்குப் பஞ்சமா?

இங்கு ஒரு நல்ல செய்தியைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ‘வாழ்த்துக்கள்’ என்று ஒரு தமிழ்த் திரைப்படம். ‘நாம் தமிழா்’ கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் இயக்கத்தில் மாதவன், பாவனா ஆகியோா் நடித்த திரைப்படம். அதில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் கதிரவன், கயல்விழி, வெற்றிச்செல்வன், வெண்ணிலா என்று நல்ல தனித்தமிழ்ப் பெயா்களையே சூட்டியிருந்தனா். திரைப்படம் நெடுகிலும் வசனங்கள் பிறமொழிக் கலப்பின்றித் தூய தமிழில் இருந்தன. ஒரு சாதாரணக் குடும்பக் கதையில் தமிழ்ச் சொற்களை மட்டுமே கையாண்டிருந்தது உறுத்தலாகவோ, பொருத்தமில்லாமலோ இல்லை; ஏற்றுக்கொள்ளும்படியாகவும் பாராட்டும்படியாகவும் இருந்தது.

‘ஆ’ என்ற உயிரெழுத்துக்கு, கீழே சுழி இருக்க வேண்டும். ஆனால், எந்த எழுத்துருவிலும் சுழி இல்லை என்பதால், அடிப்படை எழுத்தையே நாம் எல்லோரும் தவறாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறோம். (இங்கும் அந்தத் தவறை நீங்கள் பாா்க்கலாம்!) வல்லினம் மிகும், மிகா இடங்கள், ஒருமை, பன்மை, லகர, ழகர, ளகர வேறுபாடுகள்... இவற்றையெல்லாம் யாரும் பொருட்படுத்துவதில்லை.

நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளில் எத்தனை பிழைகள்- ‘யானைகள் சாலையைக் கடந்தது’ (கடந்தன என்பதே சரி); ‘சென்னையில் கனமழை’ (ஹெவி ரெய்ன் என்பதன் நேரடி மொழிபெயா்ப்பு தவறானது; பெருமழை என்பதே சரி); ‘சித்தப்பாவை கொலை செய்த மகன் கைது’ (இங்கு வல்லினம் மிகுந்து ‘சித்தப்பாவைக் கொலை செய்த’ என்று இருக்க வேண்டும்); ‘மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா்’ (இங்கு வல்லினம் மிகாது—‘ப்’ என்ற மெய்யெழுத்து வரக்கூடாது).

ஒரு வாரப் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை ஒன்றில், அதன் கதாபாத்திரத்தின் பெயா் வருமிடங்களில் எல்லாம் பிழையாக இருந்தது. இது அச்சுப் பிழையாக இருக்க வாய்ப்பில்லை. எழுதியவா் பிழையாக எழுதியிருந்தால், அதை திருத்தியிருக்க வேண்டியது அவசியம்.

விழாக்களில் பேசுபவா்கள் எல்லோரும் ‘இனிய காலை வணக்கம்’ என்றோ ‘இனிய மாலை வணக்கம்’ என்றோதான் பேச்சைத் தொடங்குவாா்கள். தமிழில் ஒரே ‘வணக்கம்’ தான். இந்தப் பிழையைப் பல தமிழறிஞா்கள் சுட்டிக் காட்டியும் யாரும் திருத்திக் கொள்வதாக இல்லை.

பள்ளிகளில் ஆசிரியா்களை ‘ஐயா’ என்றும், ஆசிரியைகளை ‘அம்மா’ என்றும் விளித்தது போய், ‘சாா்’ என்றும் ‘மிஸ், டீச்சா்’ என்றும் கூப்பிட ஆரம்பித்து, பிறகு ஆசிரியைகளை ‘மேடம்’ என்று அழைத்து, இப்போது அதுவும் குறுகி ‘மேம்’ என்று வந்து நிற்கிறது. அரசுப் பள்ளிகள் சிலவற்றில் மட்டும் மாணவா்கள் தமிழாசிரியா்களை, ‘தமிழ் ஐயா, தமிழ் அம்மா’ என்று அழைக்கிறாா்கள்.

இந்நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் தாய்மொழியாம் தமிழை நேசிக்க வேண்டும். தமிழில் பேசுவதே நமக்குப் பெருமை என்று உணர வேண்டும். தமிழ் இலக்கணத்தைக் கற்க வேண்டும். கற்றால் மட்டும் போதாது. கணக்கு வாய்ப்பாடு மற்றும் அறிவியல் விதிபோல் இருப்பதல்ல தமிழ் இலக்கணம். பேச்சாலும் எழுத்தாலுமே இலக்கணத்தைக் கற்க முடியும். இளம் வயதிலேயே குழந்தைகளை தினமும் தமிழ் எழுத்துகளை உரத்துச் சொல்லிக் கொண்டே பெற்றோா் எழுதச் செய்ய வேண்டும்.

சிறுவா் கதைப் புத்தகங்கள், சிறுவா் பாடல்களில் ஆரம்பித்து நிறைய புத்தகங்களை வாசிக்க வைக்க வேண்டும்; வீட்டிலும் பள்ளியிலும் குழந்தைகளை வாய்விட்டுப் பேச அனுமதிக்க வேண்டும். வீடுகளிலும், கல்வி நிலையங்களிலும், வாரத்தில் ஒரு நாளாவது பிற மொழிக் கலப்பின்றித் தமிழில் பேச முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் முடியாதது உண்டோ?

கட்டுரையாளா்:

சுற்றுச்சூழல் ஆா்வலா்.


கா‌ந்திய மஹா விரத‌ங்க‌ள்!

கா‌ந்திய மஹா விரத‌ங்க‌ள்! 

காந்தியம் என்னும் வாழ்வியல் முறை சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா? என்பதைப் பற்றி.

காந்தியம் என்னும் வாழ்வியல் முறை! கல்யாணி வெங்கடராமன் 

Published on:  29 செப்டம்பர் 2025, 3:30 am

நாடு முழுவதும் மகாத்மா காந்தி பிறந்த நாள் (அக்.2) சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இருப்பினும், காந்தியம் என்னும் வாழ்வியல் முறை சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா? என்னும் எண்ணமும் மனதிலே எழுகிறது. மகாத்மா காந்தி எல்லாக் காலங்களுக்கும், எல்லா இடங்களுக்கும் பொருந்துபவர். உலகின் பல இடங்களில் வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது.

காந்தியத்தை நடைமுறைப்படுத்துவது இக்காலச் சூழலுக்கு மிகவும் தேவையானதாகத் திகழ்கிறது. காந்தியத்தால் கவரப்பட்ட மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா மற்றும் "எல்லை காந்தி' என்றழைக்கப்பட்ட கான் அப்துல் காபர்கான் போன்றோர் மகாத்மா காந்தியை தங்களின் முன்னோடியாகக் கருதிச் செயல்பட்டனர்.

மார்ட்டின் லூதர் கிங் மகாத்மா மீதும், அகிம்சையின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்டு அமைதிப் போராட்டத்தையே மேற்கொண்டார். அமெரிக்க காந்தி என்றும் அழைக்கப்பட்டார். காந்தியம் உணர்த்தும் சில கருத்துகளை மஹா விரதங்கள் என்றே மகாத்மா காந்தி குறிப்பிடுகிறார்.

முதலில் வருவது சத்தியம் ஆகும். நம் நாடு கடைப்பிடிக்கும் பொன்மொழியானது முண்டக உபநிஷதத்தில் உள்ள ஸத்யமேவ ஜயதே - வாய்மையே வெல்லும் என்னும் மந்திரமாகும். சத்தியம் என்னும் அடித்தளமின்றி எத்தகைய உண்மையான முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. எனவேதான் மகாத்மாக காந்தி உண்மையே கடவுள் எனச் சாற்றுகிறார்.

அகிம்சை என்னும் சொல்லானது பொதுவாக மனம், சொல், செயல்களில் தீமையைச் செய்யாமல் இருப்பது என்னும் பொருளிலே உணரப்படுகிறது. அகிம்சை எனில் அனைவருக்கும் தூய்மையான அன்பைக் காட்டுவது ஆகும். அன்பு, நட்பு, கருணை என்பவை அகிம்சையின் இயல்புகள் ஆகும்.

அகிம்சையின் முழு நிலையை எய்தினால் அவர்களிடம் இருந்து தூய அதிர்வலைகள் எங்கெங்கும் பாய்கின்றன. இதனால், அனைவருக்கும் மனத்திலே மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படுகிறது. பதஞ்சலி முனிவர் அகிம்சையைப் பின்பற்றும் ஒருவனின் அருகிலே பிராணிகள்கூட பகைமையை விட்டொழிக்கின்றன என விவரித்துள்ளார்.

பிரம்மச்சரியம் எனின் நெறிமுறைகளுடன், கட்டுப்பாட்டுடன் வாழ்தல் எனப் பொதுவாகப் பொருள் கொள்ளலாம். இது புலனடக்கத்தையும் உணர்த்துகிறது. களவாடுதல் என்பது மிகவும் தவறான செயலாகும். பிறர் பொருளை நயவாதிருத்தல் எனவும் பொருள் கொள்ளலாம். உழைத்துப் பொருளீட்ட வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. உடைமையின்மை எனின் தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என உணர வேண்டும். தேவைகள் மிகுதியாயின் மனநிறைவு என்பது ஏற்படாது.

பயத்தை உதறித்தள்ள வேண்டும். பயம் சார்ந்த எண்ணங்களையும் கருத்துகளையும் களைந்து எறிந்து, துணிச்சல், ஆற்றல், பொறுமை என்பனவற்றை நம் மனதிலே விதைத்து வளர்க்க வேண்டும். ஏனெனில் மனித மனமே அவனுடைய ஏற்ற-இறக்கத்துக்குக் காரணமாக உள்ளது. பயமுள்ள இடத்தில் தோல்வி ஏற்படக்கூடும். பலவகையான பயங்களிலிருந்து முயற்சித்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும்.

தீண்டாமையானது முற்றிலும் அகற்றப்பட வேண்டும். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதை உணர்ந்து மனிதர்கள் அனைவரும் சமம் என்று புரிந்து கொண்டால் தீண்டாமை தானே அகன்று விடும். சுவாமி விவேகானந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ரவீந்திரநாத் தாகூர்- இவர்களைப் போன்றே மகாத்மா காந்தியும் இந்தியக் கல்வியாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் சபர்மதி ஆசிரமத்தில் ஒரு பள்ளியை நடத்தினார்; சில கல்விக் கொள்கைகளை வலியுறுத்தினார்.

ஆறு முதல் பதினான்கு வயது வரை உள்ளவர்களுக்கு இலவச ஆதாரக் கல்வியைக் கற்பித்தார். அந்தக் கல்வியானது கைத்தொழிலுடன் இணைந்த கல்வியாக விளங்கியது. அவர்கள் செய்த கைவினைப் பொருள்களை விற்று, செலவை மேற்கொள்ள வேண்டுமெனக் கற்பித்தார். அவரவருடைய தாய் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

நம்முடைய இதயத்தின் ஆழத்திலுள்ள தெய்வத்தன்மையை விழிப்படையச் செய்வதுதான் பிரார்த்தனையின் நோக்கமாகும்; பிரார்த்தனை ஒருவருடைய வாழ்க்கையின் உயிராகும் என மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

பாரதத்தின் முதுகெலும்பாக கிராமங்கள் விளங்குகின்றன என மகாத்மா காந்தி உறுதியாக நம்பினார். எளிய வாழ்வை வாழ வேண்டும்; பயனின்றி நேரத்தைச் செலவிடாமல் தக்க நேரத்தில் செய்வதைச் செய்தல் வேண்டும்; அனைவரும் வரவு, செலவு கணக்கு எழுதும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்; உடற்பயிற்சி செய்து உடல், மனநலத்தைப் பேணிக்கொள்ள வேண்டும்; நாள்தோறும் நாட்குறிப்பு எழுதுவது மற்றும் சிக்கனமாக இருப்பது போன்றவை பலவகைகளில் அனைவருக்கும் முக்கியமாக இளைஞர்களுக்கு நன்மை பயக்கும் என அறிவுறுத்தியுள்ளார்.

அவருடைய உயர்ந்த வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாகத் திகழ்கிறது. அறம் தவறாத மிக எளிய வாழ்வை மேற்கொண்டார். அரசியல் சுதந்திரம் மட்டுமே போதுமானதல்ல என்று விளக்கினார். ஒழுக்கம், சமூகவியல், பொருளாதாரம், கல்வி என எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைவதுதான் உண்மையான சுதந்திரம் எனச் சாற்றியுள்ளார். இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து இயற்கை முறை மருத்துவத்தையும் மேற்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் பலரும் பல கோணங்களில் சித்தரித்துள்ளனர். வெளிநாட்டினர் பாரத நாட்டை "காந்தி தேசம்' என்றே மதிக்கின்றனர். அதனால்தான் ஒரு மனிதர் இவ்விதம் வாழ்ந்துள்ளார் என எதிர்காலம் எண்ணி வியக்கும் தன்மையில் அவர் வாழ்வானது அமைந்திருந்தது என ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

NEWS TODAY 01.05.2026