Tuesday, December 23, 2014

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை?....தினமலர்

புதுடில்லி: அடுத்த மாதம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் (பிரவசி பாரதிய திவாஸ்) கொண்டாடப்படுவதை ஒட்டி, அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்தியா வராமல் ஓட்டளிக்கும் திட்டத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,), இந்தியா வராமல், தாங்கள் வசிக்கும் நாடுகளிலிருந்தே ஓட்டளிக்கும் வசதியை ஏற்படுத்தி தர மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதுகுறித்து, தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தூதரகங்களில், ஓட்டு இயந்திரங்களை வைப்பது மற்றும் என்.ஆர்.ஐ.,க்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர், அவர்களுக்கு பதிலாக ஓட்டளிப்பது போன்ற ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. என்.ஆர்.ஐ.,க்கள் இந்தியா வந்து ஓட்டளிப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, விரைவில் இதற்கான தீர்வு காணப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

The Vijay phenomenon enters research circles as hot topic

The Vijay phenomenon enters research circles as hot topic  Kamini.Mathai@timesofindia.com  10.06.2026  Chennai : “Good morning, Professor. C...