Thursday, October 20, 2016

6.5 லட்சம் ஏ.டி.எம்., கார்டுகளுக்கு தடை :
மோசடியை தடுக்க எஸ்.பி.ஐ., அதிரடி


மோசடியை தடுத்து நிறுத்தும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள, 6.5 லட்சம் வாடிக்கையாளர் களின், 'டெபிட் கார்டு' எனும் வங்கி பரிவர்த் தனை அட்டைகளை, பாரத ஸ்டேட் வங்கி தடை செய்துள்ளது.

இதுகுறித்து, எஸ்.பி.ஐ., வங்கி வட்டாரம் கூறியதாவது: சமீபத்தில், ருமானியா நாட்டை  சேர்ந்த சிலர், இங்குள்ள ஏ.டி.எம்., மையங்களில் இருந்து,பணத்தை திருடினர்.கேரளாவில், பெண் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயை, வெளிநாட்டில் இருந்த படி  யாரோ எடுத்துள்ளனர். இது போன்ற மோசடிகள் தொடர்கின்றன. மோசடி நபர்கள், நுாதன மென் பொருளை பயன்படுத்து கின்றனர்; ரகசிய எண்ணை பிரதி எடுக்கும் வகையிலான, கண்ணுக்கு தெரியாத, 'ஸ்டிக்கரை' ஏ.டி.எம்., இயந்திரத்தில் ஒட்டி, மோசடி செய்கின்றனர்.

எனவே, மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்ட காலமாக, ரகசிய எண்ணை மாற்றாமல் இருக்கும், 6.5 லட்சம் பேரின் டெபிட் கார்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

அதுபற்றி அவர்களுக்கும், அவர்களது கிளைகளுக் கும் கடிதம்எழுதப் பட்டுள் ளன; அவர்களுக்கு, புதிய கார்டு விரைவில் வழங்கப்படும். எனவே, இதுவரை ரகசிய எண்ணை மாற்றாதவர்கள்,உடனடியாக மாற்ற வேண்டும். இவ்வாறு வங்கி வட்டாரம் தெரிவித்தது.

எச்சரிக்கை! :

டெபிட் கார்டு ரகசிய எண்களை மாற்றும்படி,

பெரும்பாலான தேசிய வங்கிகள், வாடிக்கை யாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளன. ஏ.டி.எம்., மையங்களிலேயே, டெபிட் கார்டு
ரகசிய எண்ணை எளிதாக மாற்றலாம் என, அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதை பெரும்பாலானவர்கள் கண்டுகொள்வதில்லை.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...