Thursday, October 20, 2016

திருமலையில் முன்பணம் வசூல் ரத்து

திருப்பதி: திருப்பதி திருமலையில், பக்தர்கள், தங்குவதற்காக 7,000 வாடகை அறைகள் உள்ளன. கவுண்டரில் முன்பணம் செலுத்தி, அறையை பெறலாம். அறையை, மூன்று நாட்கள் வரை நீட்டித்து கொள்ளலாம். அறையை திரும்ப அளிக்கும் போது, வாடகையை எடுத்து கொண்டு, முன் பணம் திரும்ப அளிக்கப்படும். பக்தர்கள், முன் பணத்தை திரும்ப பெற, அதிக நேரம் காத்திருக்கின்றனர். இதனால், முன் பணம் வசூலிக்கும் முறையை, தேவஸ்தானம், நேற்று முதல் ரத்து செய்தது.இனிமேல், வாடகை மட்டும் செலுத்தி, அறையை பெற்று கொள்ளலாம். 24 மணி நேரத்துக்குள் அறையை காலி செய்ய வேண்டும். தரிசனம் தாமதமானால், தரிசன டிக்கெட்டை ஆதாரமாக காட்டி, அறையை நீட்டித்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

பணம் உள்ளே... ஜனம் வெளியே...

DINAMANI  பணம் உள்ளே... ஜனம் வெளியே...  ஐந்தாண்டு பட்ஜெட் வருவாயில் இரண்டாண்டு பட்ஜெட் ஆட்சி செய்வோரின் கஜானாவுக்கு எந்தெந்த வழிகளிலோ போய்வி...