Friday, February 10, 2017

எம்.எல்.ஏ.,க்களை காணோம்; போலீசில் குவியும் புகார்

ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.,வும், இந்து அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனை காணவில்லை' என, ஆரணி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அம்பேத்கர் நகர் பகுதி மக்கள், நேற்று மதியம், 2:00 மணிக்கு, ஆரணி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் அலுவலகத்திற்கு மனு கொடுக்கச் சென்றனர். அங்கு அவர் இல்லாததால், ஆரணி டவுன் காவல் நிலையத்திற்கு சென்று, 'அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை காணவில்லை; அவரை கண்டுபிடித்து தர வேண்டும்' என, புகார் அளித்தனர். போலீசார், புகாரை பெற்று, அதற்கான ரசீது மட்டும் கொடுத்து அனுப்பினர்.

மதுரை :

மதுரை, அவனியாபுரம் அ.தி.மு.க., மாணவரணி பகுதி செயலர் தினேஷ் போஸ், போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவிடம், நேற்று புகார் அளித்தார்.

பின், தினேஷ் போஸ் கூறியதாவது: திருப்பரங்குன்றம் தொகுதி, மதுரை மாநகராட்சி, 61வது வார்டில் உள்ளது. அ.தி.மு.க.,வில் பொறுப்பில் இருப்பதால், என்னிடம் பொதுமக்கள், பல்வேறு பிரச்னைகளை தெரிவிப்பர். நான் அவற்றை, எம்.எல்.ஏ., போஸிடம் கொண்டு செல்வேன். ஆனால், 10 நாட்களாக அவரை காண முடியவில்லை; எங்கு சென்றார் எனவும் தெரியவில்லை. எனவே, அவரை கண்டுபிடித்து தரக்கோரி மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

பெரம்பலுார்:

பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் என்பவர், ஏ.டி.எஸ்.பி.,யிடம் அளித்த புகார்: குன்னம் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. தமிழகத்தில், சட்டசபை உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக, செய்திகள் வருவதை பார்த்த போது, எங்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஒருவேளை, எங்கள் தொகுதி உறுப்பினரையும், சமூக விரோதிகள் கடத்தியிருப்பரோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், அவரை காணவில்லை என, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், செய்திகள் வருகின்றன. எனவே, அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் பீமரத சாந்தி பங்கேற்காத எம்.எல்.ஏ.,

சசிகலா கும்பல் கட்டுப்பாட்டில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் பலரை, யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வமும் ஒருவர்.பண்ருட்டியில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில், சத்யா பன்னீர்செல்வத்தின் பெற்றோர் காத்தவராயன் - கஸ்துாரி தம்பதியின், பீமரத சாந்தி எனும், 70வது பிறந்த நாள் விழா நடந்தது.
இந்த விழாவுக்கான அழைப்பிதழ்களை, சத்யா பன்னீர்செல்வம், ஒரு மாதத்துக்கும் மேலாக அனைவருக்கும் வழங்கினார். ஆனால், பெற்றோரின் பீமரத சாந்தி விழாவில், அவராலேயே நேற்று கலந்து கொள்ள முடியவில்லை. இதனால், எம்.எல்.ஏ.,வின் பெற்றோர் சோகத்துடன் காணப்பட்டனர்.




- நமது நிருபர் குழு -

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...