Wednesday, November 8, 2017


'கடம்' மீனாட்சி அம்மாள் மறைவு


   'கடம்' மீனாட்சி அம்மாள் மறைவு

மானாமதுரை,சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த கடம் தயாரிப்பாளர் மீனாட்சி அம்மாள், 75, நேற்று மாரடைப்பால் காலமானார்.மானாமதுரையில் நான்கு தலைமுறைகளாக கடம் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி அம்மாள். கடம் வித்வான்கள் விக்கு விநாயக்ராம், உமாசங்கர், கிரிதர் உடுப்பா, சிவன்யா ராஜகோபால் மற்றும் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இவரிடம் கடம் வாங்கி கச்சேரிகளில் பயன்படுத்தியுள்ளனர். இவருக்கு 'நிர்மல் புரஷ்கார்' விருதை 2014ல் ஜனாதிபதி பிரணாப் வழங்கினார்.
நேற்று அதிகாலை மீனாட்சி அம்மாளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது உடலுக்கு மண்பாண்ட கலைஞர்கள், கடம் வித்வான்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலையில் உடல் தகனம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...