Thursday, November 9, 2017


சோழன் எக்ஸ்பிரஸ் பெட்டியில் மாற்றம்



சென்னை: சோழன் எக்ஸ்பிரஸ்ரயிலில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 'சேர் கார்' பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.
சென்னை எழும்பூர் - திருச்சி இடையே, பகல் நேரத்தில், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது, 10 பெட்டிகள், படுக்கை வசதியுடன் இயக்கப்படுகிறது.
'பகல் நேர ரயிலில், படுக்கை வசதி பெட்டிகள் தேவையில்லை; இதற்கு பதிலாக, முன்பதிவு, சேர் கார் பெட்டிகள், இணைத்து இயக்க வேண்டும்' என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.
இதையொட்டி, இந்த ரயிலில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில், ஐந்து பெட்டிகள், முன்பதிவு, 'சேர் கார்' பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இவ்வசதி, 2018 ஜன., 20 முதல் அமல்படுத்தப்பட உள்ளது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

UGC Chairman Jagadesh Kumar says new foreign degree norms will align Indian education with global standards

UGC Chairman Jagadesh Kumar says new foreign degree norms will align Indian education with global standards  The University Grants Commissio...