Sunday, November 12, 2017


புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வந்த விமானம்

 நவ 12, 2017 00:37

பாட்னா, டில்லியில் இருந்து, பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு புறப்பட்டு சென்ற விமானம், மீண்டும் டில்லிக்கே திரும்பியதால், பயணியர் ஆத்திரம்அடைந்தனர்.

பீஹார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில்,
டில்லியில் இருந்து, பயணியருடன், ஜெட் ஏர்வேஸ் விமானம், பாட்னாவுக்கு புறப்பட்டது. பாட்னா விமான நிலையத்தில் தரையிறங்க இடம் இல்லாததால், வாரணாசிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அங்கும் தரையிறங்க முடியாததால், வேறு வழியின்றி, விமானம், டில்லி விமான நிலையத்திற்கே திரும்பியது. தாங்கள் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்ததை அறிந்து, பயணியர் ஆத்திரமடைந்தனர்; பின், அனைவரும் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW  TIMES OF INDIA 02.02.2026 The slab rates for individuals under both the old and new tax regimes rem...