Wednesday, November 8, 2017


பிறந்த குழந்தையை பார்க்க வசூல் நெல்லையில் 2 நர்ஸ், 'சஸ்பெண்ட்'

திருநெல்வேலி, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டில் குழந்தையை பார்க்க பணம் வசூலித்த இரண்டு நர்சுகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர்.இங்குள்ள பிரசவ வார்டில் பணிபுரியும், மகப்பேறு மருத்துவ பணியாளர்கள் பேச்சியம்மாள், செல்வி ஆகியோர், பிரசவித்த பெண்ணின் உறவினர்களிடம், பிறந்த குழந்தையை பார்க்க, பணம் பெறுவதை வாடிக்கையாக வைத்திருத்தனர். ஆண் குழந்தை என்றால், ஒரு 'ரேட்', பெண் குழந்தை என்றால் ஒரு ரேட் என நிர்ணயித்து, பணம் வசூலித்து வந்தனர்.இது குறித்து, பல்வேறு தரப்பில் புகார்கள் எழுந்தன. டீன் சித்தி அத்திய முனவரா விசாரணை நடத்தினார். இதில், இருவரும் பணம் வாங்கியது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை, சஸ்பெண்ட் செய்து டீன் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...