Wednesday, November 1, 2017


ரயில்களின் நேரம் மாற்றம் இன்று முதல் அமல்

சென்னை: தெற்கு ரயில்வே கால அட்டவணை, நேற்று வெளியிடப்பட்டது. சென்னை, சென்ட்ரல் - பழநி எக்ஸ்பிரஸ் உட்பட, மூன்று ரயில்கள், முக்கிய நகரங்கள் இடையே நீட்டிக்கப்பட்டுள்ளன. இவை, இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

நீட்டிக்கப்பட்டுள்ள ரயில்கள்:

 சென்னை, சென்ட்ரலில் இருந்து பழநிக்கு இயக்கப்படும், எக்ஸ்பிரஸ் ரயில், கேரள மாநிலம், பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், சென்ட்ரலில் இருந்து, இரவு, 9:40 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் காலை, 11:00 மணிக்கு, பாலக்காடு சென்றடையும். அங்கிருந்து, மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 4:15 மணிக்கு, சென்ட்ரல் வந்தடையும்
 எழும்பூர் - திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், எழும்பூரில் இருந்து, இரவு, 7:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 1:00 மணிக்கு, கொல்லம் சென்றடையும். அங்கிருந்து மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 8:05 மணிக்கு, எழும்பூர் வந்தடையும்
 திருவனந்தபுரம் - பாலக்காடு அமிர்தா எக்ஸ்பிரஸ், பொள்ளாச்சி, பழநி வழியாக, மதுரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், திருவனந்த புரத்தில், இரவு, 10:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 1:10 மணிக்கு, மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து, மாலை, 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 6:25 மணிக்கு, திருவனந்தபுரம் சென்றடையும்
 தஞ்சாவூர் - கும்பகோணம் பயணியர் ரயில், மயிலாடுதுறை வரையும், நாகூர் - திருச்சி பயணியர் ரயில், காரைக்கால் வரையும், திருச்செந்துார் - பழநி பயணியர் ரயில், பாலக்காடு வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் - மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ், மார்ச், 1 முதல் பாதை மாற்றி, திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி வழியாக, இயக்கப்பட உள்ளது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...