Wednesday, November 8, 2017

சோழன் விரைவு ரயிலில் 50 சதவீத பெட்டிகள் முன்பதிவு இருக்கை பெட்டிகளாக மாற்றம்
சோழன் விரைவு ரயிலில் உள்ள தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 50 சதவீத பெட்டிகள் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் முன்பதிவு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளாக மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - திருச்சி இடையே சோழன் விரைவு ரயில் (16853/54) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் உள்ள தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 50 சதவீதப் பெட்டிகள் வரும் டிச.1-ம் தேதி முதல் முன்பதிவு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளாக மாற்றப்படுகிறது.
சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்-கொல்லம் இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06045) வரும் 19-ம் தேதி முதல் 2018 ஜனவரி 21-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து மதியம் 12.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06046) வரும் 20, 27 மற்றும் டிச. 4,11,18 மற்றும் ஜன.8, 22-ம் தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில் கொல்லத்தில் இருந்து மதியம் 2.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இதேபோல், சென்னை சென்ட்ரல்-கொல்லம் இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06051) வரும் 21-ம் தேதி முதல் 2018 ஜனவரி 16-ம் தேதி வரை வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து மாலை 6.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06052) வரும் 22-ம் தேதி முதல் ஜனவரி 17-ம் தேதி வரை வாரம்தோறும் புதன்கிழமைகளில் இயக்கப்படும். கொல்லத்தில் இருந்து மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு இன்று (8-ம் தேதி) தொடங்குகிறது.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...