Friday, November 10, 2017


ஜெயா டிவியில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் : ஐ.டி., அதிகாரிகள்


 ஜெயா,டிவியில்,முக்கிய,ஆவணங்கள்,பறிமுதல், ஐ.டி., அதிகாரிகள்
Share this video : 
spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
ஜெயா டி.வி., ரெய்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்
சென்னை: ஜெயா டிவியில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். 
சென்னை, தஞ்சாவூர் ,திருச்சி உள்ளிட்ட இடங்களில் சசிகலா குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று நவ.,9 காலை 6 மணியில் இருந்து 14 மணிநேரமாக சோதனை நடந்து வருகிறது. சோதனையில் ஆந்திரா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சோதனை குறித்து ஐ.டி. அதிகாரிகள் கூறுகையில் ஜெயா டிவியில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெறுவருகிறது, தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அறந்தாங்கி அருகே தினகரன் ஆதரவாளர் வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்துள்ளது. 
60 போலி நிறுவனங்கள்

இன்று தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஐ.டி., அதிகாரிகள் நடத்திவரும் ரெய்டில் இது வரை 60 போலி நிறுவனங்களுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

விடிய விடிய ரெய்டு

ஜெயா டி.வி., நிர்வாக இயக்குநரும், இளவரசியின் மகனுமான விவேக் வீட்டில் நடந்து வரும் சோதனை இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடநாடு எஸ்டேட்டில் நாளையும் சோதனை

கோடநாடு எஸ்டேட்டில் இன்று சோதனை நடத்திய அதிகாரிகள், தற்காலிகமாக எஸ்டேட்டிற்கு சீல் வைத்துள்ளனர். மேலும் இன்றும் சோதனை தொடரும் என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026