Wednesday, August 1, 2018

குருவாயூர் ரயில் தாமதம்

Added : ஆக 01, 2018 00:10 | 

  நாகர்கோவில்: கேரள மாநிலம், குருவாயூரில் இருந்து, சென்னை செல்லும் விரைவு ரயில் நேற்று காலை, ஐந்து மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணியர் சிரமப்பட்டனர்.குருவாயூர் -- சென்னை இடையே ஓடும் விரைவு ரயில், நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு தினமும் அதிகாலை, 5:30 மணிக்கு வந்து, 5:55 மணிக்கு புறப்படும். நேற்று காலை இந்த ரயில், 10:30 மணிக்கு வந்து, 11:00 மணிக்கு புறப்பட்டு சென்றது. காலை நேரத்தில் நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை செல்லும் பயணியரும், சென்னை செல்ல வேண்டிய பயணியரும் சிரமப்பட்டனர்.கேரளாவில் மழை மற்றும் ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணத்தால் தாமதம் ஏற்பட்டதாக, ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...