Tuesday, August 7, 2018

ரயில்வே ஊழியர்கள் 'பாஸ்' பெற புது வசதி

Added : ஆக 07, 2018 05:01


சென்னை: ரயில்வே ஊழியர்கள், ரயில் பயணத்திற்கான, 'பாஸ்' பெற, இணைய தளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை, தெற்கு ரயில்வே நேற்று அறிமுகம் செய்தது.ரயில்வே ஊழியர்கள், ஓய்வூதியர்கள், ரயில் பயண, 'பாஸ்' வாங்கவும், அதை பயன்படுத்தி, டிக்கெட் வாங்கவும், ரயில்வே அலுவலகத்திற்கு, இரண்டு முறை வந்து செல்ல வேண்டியிருந்தது. அலைச்சலை தவிர்க்க, இணைய தளம் வாயிலாக, விண்ணப்பிக்கும் வசதி, நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.இந்த வசதியை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷ் ரேஸ்தா, சென்னையில் உள்ள, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.இதன்படி, ரயில்வே ஊழியர்கள், ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே, ரயில் பயண, 'பாஸ்' பெற, ரயில்வே இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 'பாஸ்' தயாரானதும், நிலையத்திற்கு வந்து, 'பாஸ்' பெற்று, டிக்கெட் கவுன்டரில், உரிய டிக்கெட்டை பெறலாம்.நேரில் வந்து, 'பாஸ்' பெற முடியாதவர்கள், அவர்களின் அனுமதி பெற்றவர்களை ரயில்வே அலுவலகத்திற்கு அனுப்பி, 'பாஸ்' பெற்றுக்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...