Friday, August 10, 2018

'டிஜிட்டல்' ஆவணங்கள்: மத்திய அரசு உத்தரவு

Added : ஆக 09, 2018 23:09 |



புதுடில்லி : 'டிஜிட்டல்' வடிவில் உள்ள, ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு ஆவணங்களை ஏற்கும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு ஆவணங்களை சரிபார்க்கும் போக்குவரத்து போலீசார், டிஜிட்டல் வடிவில் உள்ள ஆவணங்களை ஏற்க மறுப்பதாக, புகார் எழுந்தது. 'டிஜிலாக்கர்' மற்றும் 'எம்பரிவாஹன் ஆப்' களில், டிஜிட்டல் வடிவில், தாங்கள் வைத்துள்ள ஆவணங்களை, அசல் சான்றிதழுக்கு நிகராக ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதையடுத்து, டிஜிலாக்கர் அல்லது எம்பரிவாஹன் ஆப்களில், டிஜிட்டல் வடிவில் காண்பிக்கப்படும் ஓட்டுனர் உரிமம், ஆவணங்களை ஏற்கும்படி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்க, இந்த சான்றிதழ்களை, மோட்டார் வாகன சட்டம், 1988ன் படி ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களாக கருத வேண்டும் என்றும், மத்திய அரசு, அதன் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...