Saturday, August 11, 2018


மீண்டும் தூசி தட்டப்படும் ஆருஷி வழக்கு: தல்வார் தம்பதிக்கு சிக்கல்

Added : ஆக 11, 2018 06:44



புதுடில்லி: உ.பி., மாநிலம், நொய்டாவை சேர்ந்த டாக்டர் தம்பதி, ராஜேஷ், நுபுர் தல்வார். 2008ல், தங்கள், 14 வயது மகள், ஆருஷியும், வீட்டு வேலைக்காரர் ஹேமராஜும், ரகசிய உறவு வைத்திருந்ததாக, ராஜேஷ், நுபுர் தல்வார் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், 2008, மே மாதம், தன் வீட்டு அறையில், ஆருஷி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்;
அந்த வீட்டு மொட்டை மாடியில், ஹேம்ராஜ் இறந்து கிடந்தார்.இந்த வழக்கை, உ.பி., போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்ற புகார் எழுந்ததால், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 2013ல், ராஜேஷ் மற்றும் நுபுருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இருவரும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தனர். 2017ல், ராஜேஷ், நுபுர் தல்வாரை விடுவித்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து, ஹேம்ராஜின் மனைவி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.இந்நிலையில், ராஜேஷ், நுபுர் விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ.,யும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தது.'ஹேம்ராஜ் மனைவி தாக்கல் செய்துள்ள மனுவுடன், சி.பி.ஐ.,யின் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும்' என, நீதிபதி, ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...