Saturday, November 3, 2018

ஆன்மீகம்

தாயார் பிரசாதம் இனி அஞ்சலில் கிடைக்கும்

பதிவு செய்த நாள்: நவ 03,2018 00:18

திருப்பதி: திருச்சானுார் பத்மாவதி தாயார் பிரசாதத்தை, அஞ்சல் மூலம் அனுப்பும் திட்டத்தை, திருமலை தேவஸ்தானம் துவக்கி உள்ளது.திருமலை ஏழுமலையான் கோவிலில், தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியதாவது: திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, டிசம்பரில், வருடாந்திர பிரம்மோற்ஸவம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திருமலை ஏழுமலையானுக்கு, 500 ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு, ஆசீர்வாதம் திட்டத்தின் கீழ், ஏழுமலையான் பிரசாதம், அட்சதை உள்ளிட்டவை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.அதேபோல், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு நன்கொடை வழங்குவோருக்கும், அதே திட்டத்தை தேவஸ்தானம் துவக்கி உள்ளது. இதற்கு பக்தர்களிடம் வரவேற்பும் அதிகரித்து
உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...